Jump to content

`கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்!


Recommended Posts

`கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்!

 
 

கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பாராட்டு தெரிவித்துள்ளார். 

ரஷீத் கான்

 

நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தவர் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். ஸ்பின்னர் என்ற பார்வையில் ஐபிஎல்லில் நுழைந்த ரஷீத் கான் தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதனை உலகுக்குக் காட்ட பல போட்டிகளில் முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து போரடிய அவருக்கு, நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டி கைகொடுத்தது. நேற்றைய போட்டியில் தவான், கேப்டன் வில்லியம்சன் விரைவில் அவுட் ஆனதால் ஒருகட்டத்தில் ஹைதராபாத் அணி தடுமாறியது. ஆனால், கடைசி கட்டத்தில் களமிறங்கிய ரஷீத் அணிக்கு தெம்பூட்டினார். 10 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் விளாசினார். இதனால் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு 174 ரன்கள் என்ற கவுரமான இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து பந்துவீசிய 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 

 

போதாக்குறைக்கு இரண்டு கேட்ச், ஒரு ரன் அவுட் என கொல்கத்தா அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக ரஷீத் விளங்கினார். இவருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தற்போது பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஷ்ரப் கானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,  ``நமது ஹீரோவான ரஷீத்தால் ஆப்கன் பெருமைகொள்கிறது. ஆப்கன் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தச் சிறந்த தளத்தை வழங்கிய எனது இந்திய நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானின் பெருமை என்ன என்பதை ரஷீத் நமக்கு எடுத்துரைத்துள்ளார். அவர் கிரிக்கெட் உலகுக்குச் சொத்தாக இருக்கிறார். நாம் அவரை எப்போதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/126012-rashid-khan-an-asset-wont-give-him-away-says-afghanistan-president-ashraf-ghani.html

 

 

நாங்கள் ராஷித்கானை விட்டுக் கொடுக்கவில்லை: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி

 

 
lkjpg

நாங்கள் ராஷித்கானை  விட்டுக் கொடுக்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழையும் இரண்டாவது அணிக்கான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன் ரைசர்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 
 

சன் ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணி வீரர் ராஷித்கான் ( ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்) முக்கிய காரணமாக விளங்கினார். 10 பந்துகளில் ராஷித்கான் எடுத்த 34 ரன்கள்தான் சன் ரைசர்ஸ் அணியின் கவுரவமான இலக்கை எட்ட வழி செய்தது.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் 3 விக்கெட்டுகள், இரண்டு கேட்சுகள், ஒரு ரன் என நேற்றைய போட்டியின் நாயகனாக ராஷித் வலம் வந்தார்.

ராஷித்கானின் நேற்றைய ஆட்டத்தைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது ட்விட்டர் பக்கத்தில்,  "நமது கதாநாயகன் ராஷித்கானை நினைத்து ஆப்கன் முழு பெருமை கொள்கிறது.  எங்கள் நாட்டு வீரர்கள் அவர்கள் திறமையைக் காட்ட தளம் அளித்துக் கொடுத்த இந்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராஷித் ஆப்கானிஸ்தானின் சிறந்தவற்றை நினைவுபடுத்துகிறார். அவர் கிரிக்கெட் உலகிற்கு சிறந்த சொத்தாக இருப்பார்.  நாங்கள் அவரை விட்டுக் கொடுக்கவில்லை" என்று பதிவிட்டு இருக்கிறார்.

http://tamil.thehindu.com/world/article23998915.ece

Link to comment
Share on other sites

20 ஓவர் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர்- டெண்டுல்கர் பாராட்டு

 
அ-அ+

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.#SachinTendulkar #RashidKhan #Afghanistanspinner

 
 
 
 
20 ஓவர் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர்- டெண்டுல்கர் பாராட்டு
 
மும்பை:

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷீத்கான். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அவர் இதுவரை 21 விக்கெட் கைப்பற்றினார்.
 
இந்த நிலையில் ரஷீத்கான் 20 ஓவரில் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
 
201805261057276813_1_998cmoxk._L_styvpf.jpg

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-

19 வயதான ரஷீத்கான் சிறந்த சுழற்பந்து வீரர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் 20 ஓவர் போட்டிகளில் அவர் தான் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவரிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது கவனித்து கொள்ளவும்.

இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.#SachinTendulkar #RashidKhan #Afghanistanspinner

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26105523/1165762/Rashid-Khan-is-worlds-best-spinner-in-T20-cricket.vpf

Link to comment
Share on other sites

ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை- வலியுறுத்திய ரசிகர்களுக்கு அமைச்சர் பதில்

 
அ-அ+

ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். #IPL2018

 
ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை- வலியுறுத்திய ரசிகர்களுக்கு அமைச்சர் பதில்
 
ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அசத்தினார்.

10 பந்தில் 34 ரன்கள் குவித்த ரஷித் கான், 3 விக்கெட், 3 கேட்ச் மற்றும் ஒரு ரன்அவுட் செய்ய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். ரஷித் கானின் ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை குறித்து பாராட்டி டுவிட் செய்திருந்ததார்.

201805271508409730_1_rashidkhan002-s._L_styvpf.jpg

ஏராளமான ரசிகர்கள் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கி, இந்தியாவிற்காக விளைாட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘‘நான் அனைத்து டுவிட்டர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். குடியுரிமை சம்பந்தான நடைமுறைகளை உள்துறை அமைச்சகம்தான் பார்த்து வருகிறது’’ என்று டுவிட் செய்திருந்தார். பின்னர் இந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/27150841/1165998/India-citizenship-for-Afghanistan-Rashid-Khan-here.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.