Jump to content

இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா?

இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.
அந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் உணர்வாளர்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் தமது உணர்வுகளை மதிக்காத வங்கி கணக்கினை மூடி வருகின்றனர்.
இதனால் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள மேற்படி வங்கியில் இருந்து யாழில் மட்டும் இதுவரை 812 பேர் கணக்கை மூடியுள்ளதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாவட்டத்திலும், ஏனைய சில பிரதேசங்களிலிருந்தும் வாடிக்கையாளர் வெளியேறிவருவதாக முகநூல் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை ழுழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் சுமார் 17000 கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார்ஙகள் தெரிவிக்கின்றது.

 

http://lankapuri.com/இதுவரையில்-எத்தனைப்பேர்/

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா?

இலங்கை ழுழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் சுமார் 17000 கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார்ஙகள் தெரிவிக்கின்றது.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையென்று யார் சொன்னது...?? :innocent:

 

Link to comment
Share on other sites

23 hours ago, விசுகு said:

இலங்கை ழுழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் சுமார் 17000 கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக

 இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை!

ஆனால் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழின விரோதிகளை அடக்குவதில் சிரமம் இருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதியாத, காப்பிரேட் முட்டாள்தனம் என சாடியுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

http://colombogazette.com/2018/05/26/mano-slams-bank-for-suspending-employees-over-event/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலம் பொருந்திய நாடுகளில் கூட பாமரமக்களுக்கு வங்கிக்கணக்கு பலமானது. அதை உதறித்தள்ள கையிலிருக்கும் காப்பை அடகு வைக்கும் வறிய மக்கள் சிந்திப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களில் புறக்கணிப்பு என்று பதிவிட்டவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். 2009- 2011 காலப்பகுதியில் பலர் சிறிலங்கா டில்மா தேயிலை, சிறிலங்கா துடுப்பாட்ட அணியினைப் புறக்கணிப்பதாக தங்களது முக நூல்களில் கருத்துக்கள் எழுதியதினைப் பார்த்திருக்கிறேன். அக்காலப்பகுதியில் சிட்னியில் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. வேடிக்கை என்ன வென்றால் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் வெறும் 100 பேர். ஆனால் சிங்களக் கொடியுடன் துடுப்பாட்டம் பார்க்கச்சென்றவர்கள் பல மடங்குபேர்கள். இவர்களில் சிலர் தங்களது முகனூல்களில் சிங்கள துடுப்பாட்டத்தினைப் புறக்கணிப்பதாகப் பதிவு இட்டவர்கள்.  உண்மையில்ஹற்றன் நஷனல் வங்கியினைப் புறக்கணித்தால் நல்லது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.