Jump to content

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். 

66_22544.jpg

கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, அவரைப் பார்த்துவந்தார். 

20dc8d1e-aef6-4dea-8cc8-a1ec3fab2284_220

மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸும், மருத்துவமனைக்குச் சென்று குருவைப் பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நலம் நன்கு தேறிவந்தது என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்று காலை அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது குருவின் உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளது தெரியவந்தது. இந்தச் சூழலில் தான், காடு வெட்டி குரு இறந்து விட்டதாக இரவு 8.35 மணியளவில் டாக்டர்கள்  அறிவித்தனர். இதனால் பா.ம.க தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். குருவின் உடல் அவரது சொந்த ஊரான ஜெயம்கொண்டத்துக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது.

-  விகடன்

யார் இந்த குரு?

பாம.க.வின் வன்னியர் சங்கத்தலைவர் குருநாதன் என்கிற குரு. அவரது சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி தான் . 1986-ல் காடு வெட்டியில் தி.மு.கவின் கிளைச் செயலாளராக இருந்தவர் இந்த குரு. தி.மு.கவில் வன்னியர்களுக்கு அவர்களது பகுதியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதாலும் வன்னியர் சங்கத்தை விரிபடுத்துவதற்காக எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் அகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இனைக்கிறார்கள். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகிக்றார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பிறகு நடந்த 2006 சட்டமன்ற தேர்தல், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். மீண்டும் , 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். 

விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை..... கலங்க வைக்கும்......   ஒரு, அரசியல்வாதி. 

ஆழ்ந்த, அனுதாபங்கள்  ஐயா..............

Link to comment
Share on other sites

 

அன்னாருக்கு அஞ்சலிகள்.. 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

 

Link to comment
Share on other sites

சம்பந்தமே இல்லாமல் பேருந்துகளை எரிக்கும் காடைத்தனம் பா.ம.கட்சியினரின் ஒழுக்கமின்மையை தெளிவாக காட்டுகிறது.

இது ஆரோக்கியமானது அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.