Jump to content

காலக்கூத்து திரைவிமர்சனம்


Recommended Posts

காலக்கூத்து திரைவிமர்சனம்

 

காலக்கூத்து திரைவிமர்சனம்
 
 

காலக்கூத்து திரைவிமர்சனம்

காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது.

அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது.

என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா..

கதைக்களம்

நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆனது சோக சம்பவத்தால் தான்.

ஒன்று சேர்ந்திருக்கும் இவர்களுக்கு தனித்தனியே காதல் பக்கங்களும் இருக்கிறது. சில விசயங்களால் விரக்தியில் இருக்கும் பிரசன்னாவின் மீது சிருஸ்டி டாங்கேவுக்கு காதல் வருகிறது.

பெண் கேட்க வீட்டிற்கு செல்லும் போது எதிர்பாராத சம்பவம் நடந்தேறுகிறது. இன்னொரு பக்கம் கலையரசனுக்கு தன்ஷிகாவின் மீது காதல். இவர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வீட்டை விட்டு பிரிகிறார்கள். இதற்கிடையில் சாலையில் வந்த பகையால் பிரச்சன்னாவின் உயிருக்கு ஆபத்து.

தன்ஷிகா கலையரசன் ஜோடி ஒன்று சேர்ந்தற்கு வீட்டில் எதிர்ப்பு. கலையரசனின் உயிருக்கும் ஆபத்து நேர்கிறது. கலையரசனுக்கு என்ன நடந்தது? பிரசன்னாவுக்கு வந்த ஆபத்து யாரால்?

மூவரும் பிழைத்தார்களா? காலப்போக்கில் நடக்கும் கூத்துக்கள் இவர்களை என்ன செய்தது என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

நடிகர் பிரசன்னா வில்லனாக நடித்து அசத்தியவர். ஹீரோவாக அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் அவருக்கு கைகொடுக்கவில்லை. சமீபகாலமாகவே அவர் சில படங்களில் முக்கியமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

கடைசிவரை கதையுடன் பயணித்தலும் அவர் ஒரு செகண்ட் ஹீரோ போல தான். ஆனால் அவர் வந்து போகும் காட்சிகள் முக்கியத்துவம் பெருகிறது. பிரசன்னா உங்க திறமைக்கு இது சாதாரணமாக தான் படுகிறது.

கலையரசன் ஏற்கனவே கபாலி படத்தின் மூலம் பாராட்டை வாங்கினார். இவர் தான் காலக்கூத்தின் மெயின் ஹீரோ. ஒரு சாதாரண இளைஞனுக்குள் காதல் வந்தால் அவன் எப்படி இருப்பான் என ஸ்மார்ட்டாக காட்டியிருக்கிறார். திறமையான நடிகரான உங்களுக்கு படங்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் தேவை.

தன்ஷிகா படத்தின் ஹீரோயின். மதுரை பெண்ணாக அப்படியே மாறியிருக்கிறார். பேச்சில் அவர் அந்த தனி பாஷையை அப்படியே உள்வாங்கியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு கெமிஸ்ட்டிரி சூப்பர். அதிலும் குறிப்பாக அந்த முதலிரவு பாடல் கூடுதல் இம்பிரஷன்.

சிருஸ்டி டாங்கே எப்பவும் போலவே இந்த படத்திலும் சில காட்சிகள் தான். ஆனால் அவருக்கு கதாபாத்திரம் ஒட்டவில்லையோ என தோன்றுகிறது. பிரசன்னா சிருஸ்டி ஜோடியை பார்க்கையில் ஏதோ மிஸ் ஆன ஃபில்.

முழுக்க முழுக்க மதுரையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை கொஞ்சம் மெதுவாக நகர்வது போல தான் இருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் மட்டுமே கொஞ்சம் ஸ்பீடு.

திறமையான பிரபலங்கள் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம் இயக்குனரே. கதையை கரெக்ட்காக சொல்லியிருக்கிறீர்கள். கதைக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவு என்றாலும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

கண்ண கட்டி பாடலால் மனதை ஈர்க்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

கிளாப்ஸ்

கலையரசன், தன்ஷிகா பேசும் பாஷைகள். சின்ன சின்ன ரொமான்ஸ் இண்ட்ரஸ்டிங்.

காமெடி பிரபலங்கள் இல்லாத குறையை நட்புவட்டார காமெடிகள் நிவர்த்தி செய்கிறது.

இனிமையான கேட்கும் படியான பாடல்கள்.

பல்ப்ஸ்

வந்த ஜோரில் அடுத்தடுத்த பாடல்களால் கொஞ்சம் இடஞ்சல்.

பிரசன்னா, சிருஷ்டி காட்சிகள் வந்த வேகத்தில் பிரேக் அவுட்டானது திருப்தியாகல.

மொத்தத்தில் காலக்கூத்து காதலர்கள் மனதில் இடம் பிடிக்கும்.

http://www.cineulagam.com/films/05/100936?ref=reviews-feed

Link to comment
Share on other sites

மதுரை சம்பந்தப்பட்ட படம்னாலே இப்படித்தான் எடுக்கணுமா இயக்குநரே..!? - 'காலக்கூத்து' விமர்சனம்

 
 

ஒரே வருடம் ஒரே நாளில் பிறந்த வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள இருவரின் கதைதான் இந்த 'காலக்கூத்து'.

தாய் தந்தையை இழந்த ஈஸ்வரன் (பிரசன்னா) தன் தாத்தாவால் அரசுப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். எப்போதும் தனிமையில் விரக்தியுடன் இருக்கும் இவனுக்கு தனக்கு பிறந்தநாள் என்று ஹரி (கலையரசன்) மிட்டாய் கொடுக்கிறான். அதற்கும் அவனிடமிருந்து நோ ரியாக்‌ஷன் என்பதால் கோபமடைந்த ஹரி வார்த்தைகளை விட, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்தச் சண்டை எப்படி சரியாகி இவர்களுக்குள் நட்பு மலர்கிறது? அந்த நட்பில் காலம் எப்படி விளையாடுகிறது என்பதே 'காலக்கூத்து' படத்தின் கதை. 

 

காலக்கூத்து

பள்ளியில் இருந்த அதே லந்தோடு வேலைக்கு செல்லாத இளைஞனாக மதுரையை வலம் வருகிறார் கலையரசன். தன் காதலி தன்ஷிகாவை பார்க்க எந்நேரமும் கல்லூரிக்கு முன்னிருக்கும்  டீக்கடையில் அலப்பறை செய்துகொண்டு சிகரெட் பிடிப்பதுதான் இவரது ஹாபி. இவருக்கு நேர்மாறாக ஆட்டோ மொபைல் வொர்க் ஷாப்பில் வேலை பார்த்து வரும் பிரசன்னாவை, மறைந்திருந்து சைட் அடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே என கதை நகர்கிறது. ஸ்ருஷ்டி பிரசன்னா மீது வைத்திருக்கும் காதலை கலையரசன் சொல்ல, 'சின்ன வயசுல இருந்து எனக்குன்னு யார் இருந்தாலும் அவங்க இறந்துடுறாங்க. ஏன் இந்தப் புள்ள நல்லாயிருக்குறது பிடிக்கலையா?' என்று கேட்க, 'உனக்கு பிடிச்சுதுனா, சொல்லு என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்' என்கிறார் கலையரசன். மறுநாள், பயந்து பயந்து தன் காதலை நேரடியாக பிரசன்னாவிடம் சொல்லும் ஸ்ருஷ்டியிடம் 'பிடிச்சிருக்கு' என்று சட்டென ரிப்ளை செய்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.  இந்த இரண்டு காதல் ஜோடிகளுக்கும் என்ன மாதிரியான பிரச்னைகள் வருகிறது, அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதற்கிடையில், கவுன்சிலர் மகனுக்கும் பிரசன்னாவுக்கு ஏற்படும் வாய்க்கால் தகராறு, இறுதியில் அவர்கள் தங்கள் காதலியை கரம் கோர்க்கிறார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. 

காலக்கூத்து

மண் வாசம் வீச வேண்டும் என்று நினைத்து மதுரை பேச்சு வழக்கை திணித்திருக்கிறார் இயக்குநர்  நாகராஜன். வசனங்களை கேட்கும்போது 'அதான் எல்லாரும் வந்துட்டாய்ங்கல்ல... அப்புறம் என்ன ஏஏஏ...னு இழுத்துட்டு இருக்க' என்ற 'மாயி' பட காமெடி வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மதுரை சம்பந்தப்பட்ட படம் என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. யாருக்கு என்ன நடந்தா நமக்கு என்ன, குடிப்பதிலும் வெட்டி பந்தாவிடுவதுமாக ஒரு கேரக்டர் படம் முழுக்க கலையரசனுடனே வருகிறது. ஸ்ருஷ்டியின் ரோல் எதற்கு என்றே தெரியவில்லை. இருந்தாலும், அவர் சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனில் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். பல இடங்களில் டிவி சீரியல் சாயலை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கர். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பாடல்களுக்காக மட்டும் பல நாடுகளுக்கு செல்லும் இயக்குநர்களுக்கிடையே ஒரு தெரு, ஒரு கோவில், பெட்ரூம் என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு இடத்தில் மட்டுமெடுத்து தயாரிப்பாளருக்கு மிச்சபடுத்திக் கொடுக்கும்  இயக்குநரும் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பது நல்ல செய்திதான். ஆனால், அதற்கும் கொஞ்சம் மெனக்கெட்டு சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் கூடுதல் பாராட்டுகள் கிடைத்திருக்கும். படத்தின் இறுதியில் வரும் மெசேஜிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லையே என நினைக்க வைக்கிறது.  பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா மூவரும் படத்தின் க்ளைமாக்ஸில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நல்ல நடிகர்களை வைத்து படமெடுத்த இயக்குநர், அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. அடுத்த முறையாவது நடிகர்களுக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் இயக்குநரே!

இந்தப் படத்தைப் பார்க்க வந்ததும் ஒரு வேளை 'காலக்கூத்து'தானோ ? 

https://cinema.vikatan.com/movie-review/126056-kaalak-koothu-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.