Jump to content

ஆசையும் துயரங்களும்


Recommended Posts

ஆசையும் துயரங்களும்
 
 

 “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”.  

மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்ட விடயமாகும். ‘வலுசக்தியைப் பாதுகாக்கும் இலங்கை’ எனும் தலைப்பில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.  

ஆயினும், கடந்த 10ஆம் திகதி, எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லீற்றர் பெற்றோலின் விலை, 137 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

மக்களுக்கு இந்த விலையேற்றம், பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. பெற்றோல் விலையேற்றத்துக்கு முன்னராக, சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்தது.  

இவ்வாறானதொரு நிலையில், பெற்றோலை 90 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கின்றார். “உலக சந்தையில், தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 67 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், பெற்றோலின் விலையை அரசாங்கம் 137 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருந்த போது, ஒரு லீற்றர் பெற்றோல் 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது” என்று கம்மன்பில விளக்கியிருந்தார்.  

எரிபொருள் மீது, இறக்குமதி வரி, உள்நாட்டு வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய நான்கு வகையான வரிகளை அரசாங்கம் விதிப்பதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.  

இதேவேளை, “சகல விதமான செலவீனங்களும் உள்ளடங்கலாக, தற்போதைக்கு ஒரு லீற்றர் பெற்றோலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்” என்று ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் கூறியிருக்கின்றார்.   

அப்படியென்றால், ‘எரிபொருளுக்கு அரசு அறவிடும் வரி நீக்கப்பட்டு, எரிபொருளுக்கான விலை குறைக்கப்படும்’ என்று, மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, மீறப்பட்டுள்ளதா என்கிற கேள்வி, இங்கு எழுகிறது.  

மேலேயுள்ளது, மக்களுக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டமைக்கு ஓர் உதாரணமாகும். மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிப்பதற்காக,  மக்களுக்கு வழங்கிய இதுபோன்ற ஏராளமான உறுதிமொழிகளைத் தற்போதைய ஆட்சியாளர்கள் கைவிட்டுள்ளனர்; அல்லது அவற்றுக்கு எதிர்மாறாக நடந்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மைகளாகும்.  

இது போன்ற பல விடயங்கள், மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில் ‘எனது தொலைநோக்கு’ எனும் தலைப்பில்  கூறப்பட்டிருந்தன. அதன் ஓரிடத்தில், ‘கடந்த சில வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற ஊழல்களின் அளவு, வரலாற்றில் என்றுமே நாம் கேள்விப்படாதவை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்தே, மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

“ராஜபக்‌ஷக்கள், நாட்டின் செல்வங்களை விழுங்கி விட்டார்கள்” என்று, தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் காலங்களில் கோஷமிட்டுத் திரிந்தனர். ஆனாலும், ‘வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்திராதவை’ என்று மைத்திரி கூறிய அந்த ஊழல்களைப் புரிந்த எவரும், இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது மக்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகும்.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கிட்டத்தட்ட ‘ஓர் அரசியல் துறவி’ போல, தன்னைக் காட்டிக் கொண்டு களமிறங்கிய மைத்திரி, இப்போது ஒரு ‘மாமூல்’ அரசியல்வாதியாக மாறிவிட்டதன் விளைவுதான், மேற்படி ஏமாற்றங்களாகும் என்பதைப் புரிந்து கொள்ளுதல், அத்தனை சிரமமல்ல. 

‘என்ன ஆனாலும், நான் இவற்றைச் செய்தே ஆவேன்’ என்றிருந்த மைத்திரி, இப்போது ‘இவற்றையெல்லாம் செய்தால், எனது அரசியலுக்கு என்ன ஆகி விடுமோ’ என்று பயம் கொள்கின்றமையால்தான், வரலாற்றில் என்றுமே நடந்திராத ஊழல்களைப் புரிந்தவர்கள் மீது, கைவைக்க முடியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதித்  தேர்தல் காலத்தில் தனது மக்களுக்கு, எழுத்து மூலம் வழங்கிய மேற்கண்டவாறான பல வாக்குறுதிகள், தடம்புரண்டு போயுள்ளன.   

மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில், ‘ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகம்’ எனும் தலைப்பின்கீழ் ஓரிடத்தில், ‘தீவிரவாத மதக் கும்பல்களின் நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் மத அமைதியின்மை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலைமையின் கீழ், தீவிரவாதக் கும்பல்கள் பரஸ்பரம் போதித்து, தமது நடவடிக்கைகளை விரிவாக்கி வருகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, ‘நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் அவ்வாறான நடவடிக்கைகளை மாற்றியமைக்க, உடனடி நடவடிக்கை எடுப்பேன்’ எனவும் கூறப்பட்டிருந்தது.  

முஸ்லிம் மக்கள் மீது, மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த இனவாதத் தாக்குதல்கள் பற்றியே, மேற்படி வரிகள் பேசியிருந்தன. ஆனாலும், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த பௌத்த பேரினவாதத் தாக்குதல்கள், மைத்திரி ஆட்சியில் தீவிரமடைந்துள்ளனவென முஸ்லிம் மக்கள் விசனப்படுகின்றனர்.  

அம்பாறையிலும் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு ‘கதவுகள்’ திறந்து கொடுக்கப்பட்டிருந்ததாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

திகன தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கூறப்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மீது, எந்தவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, முஸ்லிம் மக்கள் விசனத்தோடு இருந்த சந்தர்ப்பத்தில், ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி, அங்கு கலந்து கொண்ட நிகழ்வொன்றில், ஞானசார தேரரும் கலந்து கொண்டமை, இலங்கை முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் பெருத்த ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தன.   

தீவிர பௌத்த செயற்பாட்டாளர்களின் கோபத்துக்கு, தான் ஆளாகி விடக் கூடாது என்பதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமாக இருக்கின்றார். அவர்களின் கோபம் தனது அரசியலைக் கடுமையாகப் பாதித்து விடும் என்று அவர் அச்சப்படுகிறார் போல் தெரிகிறது. அதனால்தான், ஞானசார தேரரைக் கூட, அவர் சமரசம் செய்ய வேண்டிய நிலைவரம் ஏற்பட்டுள்ளது.  

இதற்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற கோசத்துடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி களமிறங்கினார். இந்த அறிவிப்பின் மூலம், ‘தனது ஜனாதிபதிப் பதவி நிறைவுடன், அரசியலில் இருந்து மைத்திரி ஓய்வு பெற்றுவிடுவார்’ என, மக்கள் புரிந்து கொண்டனர்.

ஆனாலும், “அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதில்லை” என்று, தனது மேதின உரையில், ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்தார். இதன் மூலம், அவருக்குள் இன்னுமிருக்கும் அரசியல் ஆசையை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.  

‘ஆசைதான் துயரங்களுக்கெல்லாம் காரணமாகும்’ என்றார் கௌதம புத்தர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவதற்கும், அதனால் ஏற்பட்டுள்ள துயரங்களுக்கும் காரணம், அவருக்குள் எஞ்சியிருக்கும் அரசியல் ஆசையாகும்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவும், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களாக உள்ளமையும் அந்தக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. 

‘வரலாற்றில் என்றுமே நடந்திராத ஊழல்களைப் புரிந்தவர்களுக்கு’ எதிராக, ஜனாதிபதி மைத்திரியால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதற்கு, இது போன்ற அரசியல் சூழ்நிலைகள்தான் காரணமாகியுள்ளன. 

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்திருக்க வேண்டும் என்கிற ஆசையும் அரசியல் சுகபோகங்களை இன்னும் அனுபவிக்க வேண்டும் என்கிற அவாவும்தான், மைத்திரியின் கொள்கைப் பிரகடனங்களை நிறைவேற்றுவதற்குப் பிரதான தடைகளாக உள்ளன.  

இவ்வாறானதொரு நிலையில்தான், புதிய அரசமைப்பின் முதலாவது வரைவு, வழிநடத்தல் குழுவிடம் வியாழக்கிழமை (24) வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் 
எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.  

‘ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்புத் திருத்தம்’ என்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடனத்திலுள்ள முதலாவது விடயமாகும். 

அதில் அவர் குறிப்பிட்டிருந்த சில விடயங்களை, நிறைவேற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். விருப்பு வாக்கு முறையை நீக்கும் வகையில், தேர்தல் முறையைத் திருத்தியமைப்பது, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  

இவ்வாறானதொரு நிலையிலேயே, புதிய அரசமைப்பின் முதலாவது வரைவு, வழிநடத்தல் குழுவிடம் நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளது.

புதிய அரசமைப்புக் குறித்து, அனைத்துச் சமூகங்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன. புதிய அரசமைப்பு, நாட்டுக்குத் தேவையில்லை என்று, மகாநாயக்கர்கள் தெரிவித்திருந்த நிலையில், வழங்கப்படும் அரசமைப்பின் முதல் வரைவு, சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்குமா என்கிற கேள்வி முக்கியமானதாகும்.  

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆனதும், பாற்சோறு சமைத்துப் பகிர்ந்து, அதைக் கொண்டாடிய முஸ்லிம் மக்களிடம், இப்போது அதற்கு எதிரான மனநிலைதான் அதிகமுள்ளது. 

நல்லாட்சியில் பொருட்களுக்கு விலைகள் குறையும், நாட்டில் ஊழல் மறைந்து விடும், இனவாதச் செயற்பாடுகள் இல்லாமல் போகும் என்று நம்பியிருந்த மக்கள், ஏமாந்து போயுள்ளனர்.

ஊழல் செய்தவர்களைப் பிடிக்கப் போவதாக ஆட்சி பீடம் ஏறியவர்களே, மத்திய வங்கியின் பிணைமுறியில் மோசடி செய்து விட்டதாகக் கூறப்படுவது வெட்கக் கேடாகும். 

பிணைமுறி விவகாரத்தில் பாரிய மோசடி நடந்துள்ளதாக ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும், அதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக, எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத நிலையில், மைத்திரி இருக்கின்றமை கவலைக்குரியதாகும்.  

ஒரேயொரு தடவை ஜனாதிபதியாகி, இந்த நாட்டிலுள்ள களைகளையெல்லாம் பிடுங்கி, சுத்தப்படுத்தப் போவதாகக் கூறிய மைத்திரியின் ஆட்சியிலும், மக்கள் தொடர்ந்தும் துயரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பது வேதனையாகும்.  

மக்கள் மீது சுமைகளை ஏற்றும் போதெல்லாம், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துவதும், கடன்பொறியில் நாடு சிக்கித் தவிப்பதாகக் கூறுவதும், மக்களின் கோபத்திலிருந்து நல்லாட்சியாளர்களைக் காப்பாற்றி விடப் போவதில்லை.  

யுத்தகாலத்தில் பொருட்களுக்கு விலைகள் அதிகரிக்கப்பட்டமை போல், தற்போது விலையேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படியென்றால், ஆயுத மோதலல்லாத ஒரு யுத்தம், நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வியும் இங்கு முக்கியமானதாகும்.   

உறைப்புச் சாப்பிடாதவன், தனது தோட்டத்தில் விளைந்த இஞ்சியைச் சந்தையில் கொடுத்து விட்டு, பச்சை மிளகாயை வாங்கிக்கொண்ட கதையாகத் தமது நிலை மாறி விட்டதோ என்று, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியமை குறித்து, மக்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.  

இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் மக்களின் இந்தக் கவலை, துயரம், கோபம் போன்றவற்றை எல்லாம், நல்லாட்சியாளர்கள் சீர்செய்யலாமா என்று தெரியவில்லை.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆசையும்-துயரங்களும்/91-216320

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.