Jump to content

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் செய்திகள்.


Recommended Posts

ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக்

 

 

தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK

 
ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக்
 
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 2006-ல் அலஸ்டைர் குக் அறிமுகமானார். இந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த டெஸ்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விளையாடவில்லை.

201805241847132289_1_allanborder-s._L_styvpf.jpg

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அவரின் 155-வது டெஸ்ட். அதற்குப்பிறகு தொடர்ச்சியாக 153 டெஸ்டில் விளையாடியுள்ளார். 155 டெஸ்டில் 12078 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 294 ரன்னாகும்.

இடது கை பேட்ஸ்மேன் ஆன ஆலன் பார்டர் 156 டெஸ்டில் 27 சதத்துடன் 11174 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/24184713/1165414/Alastair-Cook-Matches-Allan-Border-Record-of-Playing.vpf

 

1.png&h=42&w=42

184/9 * (58.1 ov)
 

184/10 * (58.2 ov)
Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்

அ+

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.

201805242150585290_1_engvpak003-s._L_styvpf.jpg

அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.

201805242150585290_2_engvpak002-s._L_styvpf.jpg

தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

201805242150585290_3_engvpak004-s._L_styvpf.jpg
பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/24215058/1165427/Lords-Test-England-184-all-out-against-pakistan.vpf

 

7.png&h=42&w=42

50/1 * (23 ov)
 
Link to comment
Share on other sites

ஸ்மார்ட் வாட்ச் அணிய வேண்டாம்: பாக்.வீர்ர்களுக்கு ஐசிசி எச்சரிக்கை

 

 
hasan%20ali

படம். | கெட்டி இமேஜஸ்

பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் விளையாடும்போது ஸ்மார்ட் வாட்ச்களை அணிய வேண்டாம் என்று ஐசிசி பாக்.வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் அணிய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது, காரணம் அது சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

 
 

ஸ்மார்ட் வாட்ச்கள் ஸ்மார்ட் போன்கள் போலவே செயல்படுவதால் அதிலிருந்து டெக்ஸ்ட் மெசேஜ் உள்ளிட்டவைகளை அனுப்ப முடியும் எனவே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அணிவதை தவிர்ப்பது நல்லது என்று எச்சரித்துள்ளது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆடிவருகிறது, லார்ட்ஸ் டெஸ்ட் முதல்நாள் ஆட்டத்தில் பாக். பந்து வீச்சில் 184 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் 70 ரன்களை அதிகபட்சமாக எடுக்க பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிவரும் பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டத்தில் 69/1 என்று ஆடிவருகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் பாபர் ஆஸம், ஆசாத் ஷபிக் ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்திருந்தனர். தவறுகள் நடக்கவில்லை என்றாலும் ஸ்மார்ட் வாட்ச்கள் அவர்கள் ஸ்மார்ட் போன்களுடன் இணைக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

இதனை ஹசன் அலி உறுதி செய்தார், “யார் அணிந்திருந்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு எங்களிடம் பேசி ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவுறுத்தியது.

சல்மான் பட், மொகமது ஆமிர், மொகமது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்று மீண்ட பிறகே பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் கண்காணிப்புகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

http://tamil.thehindu.com/sports/article23989191.ece

Link to comment
Share on other sites

பந்தை கொஞ்சம் முன்னால் பிட்ச் செய்யுங்கள் எட்ஜ் செய்வோம்: இங்கிலாந்து சரிவு குறித்து டேவிட் லாய்ட் விமர்சனம்

 

 
Root

ஜோ ரூட் அவுட் ஆன காட்சி.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் ஸ்விங் சாதக பிட்சில் இங்கிலாந்து 184 ரன்களுக்குச் சுருண்டது.

பாகிஸ்தானின் மொகமத் அப்பாஸ், ஹசன் அலி ஆகிய ஸ்விங் பவுலர்கள் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் மட்டுமே அதிகபட்சமாக 70 ரன்களை கடினமான பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தார், இவருக்கு அடுத்த படியாக பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார், ஜானி பேர்ஸ்டோ 27 ரன்களுக்கு சிறப்பாக ஆடினார், ஆனால் ஃபாஹிம் அஷ்ரபின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார்.

 

இந்நிலையில் இங்கிலாந்தின் டேவிட் லாய்ட் தனது பத்தி ஒன்றில் கூறியதாவது:

இன்னொரு இங்கிலாந்து சரிவு. மூவ் ஆகும் பந்துகளுக்கு தங்களை திறம்பட தயார் செய்து கொள்ளவில்லை இங்கிலாந்து வீரர்கள். மூவிங் பந்துக்கு எதிராக இவர்களது உத்தியில் தவறு இருக்கிறது.

ஆக்லாந்தில் 58 ஆல் அவுட் ஆன நினைவுதான் எனக்கு வருகிறது. அதேதான் லார்ட்சிலும் தற்போது நடைபெற்றுள்ளது, பந்தை கொஞ்சம் முன்னால் பிட்ச் செய்து ஆடும்படி செய்தால் நாங்கள் எட்ஜ் செய்து விடப்போகிறோம். ஆட்டமிழந்தவர்களின் பிட்ச் வரைபடத்தைப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.

ஜோ ரூட் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கேப்டன் தான் எடுக்கும் முடிவில் திறம்பட செயல்படுவதுதான் அவசியம், பேட்டிங் தேர்வா பேட்டிங்கை திறம்படக் கையாள வேண்டும்.

இங்கிலாந்து தளர்வாக ஆடியது, கேப்டன் ஜோ ரூட் அவுட் ஆனதையே பார்த்தால் பந்தை தொட அவர் நீட்டி முழக்கி முயற்சித்தார், ஆனால் எட்ஜ் செய்தார். இப்படி ஆடிவிட்டு “நாங்கள் இப்படித்தான் ஆடுவோம்” என்று கூறுவது பயன் தராது. அலிஸ்டர் குக் வழக்கம் போல் அதிகவனத்துடன் ஆடினார். ஆனால் அவர் யாரிடம் பயிற்சி ஆலோசனை பெற்றார் என்று தெரியவில்லை கட் ஷாட்டை ஆடவில்லை. நான் தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் கட் ஷாட் இல்லாத குக் இன்னிங்ஸைப் பார்க்க முடியுமா? எல்லாப் பந்துகளுக்கும் முன்னால் வந்து ஆடினார், அதாவது தன்னை பவுலர்கள் ஒர்க் அவுட் செய்வதைப் புரிந்து வைத்திருக்கிறார் குக்.

பாகிஸ்தான் இங்கிலாந்து வீரர்கள் குறித்து ஹோம் வொர்க் செய்துள்ளனர். நல்ல வேகத்தில் வீசினர். மொகமது அப்பாஸ், ஹசன் அலி விக்கெட் டு விக்கெட் வீசினர். வேகம், ஸ்விங். யார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது? அசார் மஹ்மூதுதான். ஏனெனில் அவர் இங்கிலாந்தில் ஏகப்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார். லார்ட்ஸ் பிட்சில் ஒரு முனை சரிவாக இருக்கும் அதில் எப்படி வீச வேண்டும் என்பதையெல்லாம் அசார் மஹ்மூத் பாடம் கற்பித்துள்ளார். மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார் டேவிட் லாய்ட்.

http://tamil.thehindu.com/sports/article23991154.ece

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 350/8

 

 
 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாளில் பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 350/8
 
லார்ட்ஸ்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்டோன்மேன், கேப்டன் ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.
 
தொடக்க வீரர் அலஸ்டைர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது.
 
பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
201805260312084637_1_pakis-2._L_styvpf.jpg
 
அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.
 
அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஆடிய ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார்.
 
அடுத்து இறங்கிய ஆசாத் சபிக்கும், பாபர் ஆசம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி எண்ணிக்கை 
உயர்ந்தது.
 
ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் ஆசம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷதப் கான் அரை சதமடித்து அசத்தினார்.
 
இதனால், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. மொகமது அமிர் 19 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26031208/1165706/lords-test-second-day--pakistan-3508.vpf

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்- நான்கு நாட்களிலேயே இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பாகிஸ்தான்

 
அ-அ+

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ENGvPAK

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட்- நான்கு நாட்களிலேயே இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பாகிஸ்தான்
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அலஸ்டைர் குக் (70) மட்டும் நிலைத்து நின்று விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. அசார் அலி (50), ஆசாத் ஷபிக் (59), பாபர் அசாம் (68), ஷதாப் கான் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 114.3 ஒவர்கள் விளையாடி 363 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்சில் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட்டை (68) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததது.

201805271813464403_1_engvpakistan1-s._L_styvpf.jpg
அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்

6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்று தத்தளித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர் உடன் பெஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி மேலும் 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானுக்கு 150 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கலாம் என்று நினைப்புடன் இங்கிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் தொடர்ந்து விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய 8-வது பந்தில் பட்லர் மேலும் ஒரு ரன் எடுத்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 80-வது ஓவரை முகமது அப்பாஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் எல்பிடபிள்யூ ஆனார்

அடுத்த ஓவரில் மார்க்வுட் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் டக்அவுட்டில் வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் முகமது அமிர் பெஸ்-ஐ க்ளீன் போல்டாக்கினார். இதனால் இங்கிலாந்து 82.1 ஓவரில் 242 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

201805271813464403_2_engvpakistan-s._L_styvpf.jpg
சேஸிங் செய்த சந்தோசத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து 4.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 63 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தானுக்கு 64 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

64 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 66 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்து செல்லும்போது தொடரை 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சில் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா நான்கு விக்கெட்டுக்களும், சதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 1-ந்தேதி லீட்ஸில் தொடங்குகிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/27181346/1166037/Lords-Test-pakistan-beats-england-by-9-wickets.vpf

Link to comment
Share on other sites

950 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.. எங்களுக்குத் தெரியாதா?- மைக்கேல் வானுக்கு ஆண்டர்சன் பதிலடி

 

 

IN12ANDERSON

படம். | ராய்ட்டர்ஸ்.

லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆண்டர்சன் அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினார், பிராட் 1 விக்கெட்டைத்தான் கைப்பற்றினார்.

 
 

இதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரிலும் கூட இருவருக்கும் வயதாகி விட்டது, வேகம் குறைந்து விட்டது, ஸ்விங் போய்விட்டது என்று இருவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் அந்தத் தொடரில் இவர்கள்தான் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட் தோல்வி இங்கிலாந்து ஓய்வறையை ஆட்டிப்படைத்துள்ளது.

இதனையடுத்து விமர்சனங்கள் இருவர் மீதும் விழுந்தன.

இந்நிலையில் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டர்சன் கூறியதாவது:

“பாகிஸ்தான் எந்த லெந்தில் வீசினார்கள் என்பதைப் பார்த்தோம், பிறகு இந்தப் பிட்சில் எந்த லெந்த் சரிப்பட்டு வரும் என்று யோசித்துதான் முடிவெடுத்து வீசினோம். விமர்சனங்களை நான் தடுத்தாட்கொள்வேன்.

சிலர் என்னைவிட தங்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 15 ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவத்தில் எனக்கு எந்த பிட்சில் எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டு என்று நன்றாகவே தெரியும்.

நானும் பிராடும் சேர்ந்து 950 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் கொஞ்சம் பார்மில் பின்னடைவு கண்டுள்ளோம் என்பது உண்மைதான். இத்தகைய சூழல்களில் மேட்ச் வின்னிங் ஆட்டத்திறன் கொண்ட வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.

2வது டெஸ்ட் போட்டிக்கு அணி தன்னம்பிக்கைக் குறைவாகவே செல்கிறது. ஆனால் நாட்டில் உள்ள வீரர்களில் சிறந்த 12 வீர்ர்கள்தான் அணியில் உள்ளனர்.

என்று மைக்கேல் வான் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

http://tamil.thehindu.com/sports/article24046134.ece

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து வேகத்தில் 174 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

 

லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானை 174 ரன்னில் சுருட்டியது இங்கிலாந்து. சதாப் கான் 56 ரன்கள் சேர்த்தார். #ENGvPAK

 
லீட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து வேகத்தில் 174 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

201806012050342133_1_ENGvPAK002-12s._L_styvpf.jpg

5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. 68 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது.

201806012050342133_2_ENGvPAK001-s._L_styvpf.jpg

சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/01205034/1167225/ENGvPAK-Leeds-Test-pakistan-174-runs-1st-innings.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட்- முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2

 

 
 

லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லீட்ஸ் டெஸ்ட்- முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2
 
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். 10-வது ஓவரின் முதல் பந்தில் அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 
 
201806020014185316_1_DenI35TXkAEhZ5i._L_styvpf.jpg
 
இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.
 
201806020014185316_2_DeoEjbXX0AU4uD8._L_styvpf.jpg
 
நிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கியுள்ளது. #ENGvPAK
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/02001418/1167242/England-scored-106-for-2-against-Pakistan-at-end-of.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட்- இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302/7

 
அ-அ+

லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லீட்ஸ் டெஸ்ட்- இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302/7
 
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 48.1 ஓவரிலேயே 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
201806030035459498_1_DesKGMnXcAA009Y._L_styvpf.jpg
 
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.
 
நிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 
 
201806030035459498_2_DetPJfJWsAAFaJF._L_styvpf.jpg
 
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கி நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்தது. ரூட் மேற்கொண்டு 16 ரன்கள் எடுத்து 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் டேவிட் மலன் களமிறங்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி எடுத்த ஸ்கோரை கடந்தது. மலன் 28 ரன்கள் எடுத்து அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டோமினிக் பெஸ் ஆட்டமிழந்தார். அவர் 49 ரன்கள் எடுத்தார். 
 
அதைத்தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோவ் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். வோக்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
201806030035459498_3_DesopabW4AA0dVI._L_styvpf.jpg
 
அதன்பின் பல்டருடன், சாம் குர்ரன் ஜோடி சேர்ந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இது பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 128 ரன்கள் அதிகமாகும். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மொகமது அமிர், பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/03003546/1167496/England-scored-302-for-7-against-Pakistan-at-end-of.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்

 
அ-அ+

பாகிஸ்தானுக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களை எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய குக் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரூட் 45 ரன்னிலும், டேவிட் மலன் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 21 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
201806031820459993_1_eng-3._L_styvpf.jpg
 
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோஸ் பட்லர் அரை சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம் குர்ரன் 20 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்னில் அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
 
பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvPAK

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/03182046/1167601/england-all-out-for-363-in-first-innings-for-second.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

 
அ-அ+

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. #ENGvPAK

 
 
லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிறங்கியது. குக் 46 ரன்கள், ரூட் 45 ரன்கள், டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
 
பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
201806032141022437_1_butler-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்து  வீச்சினால் அந்த அணி விரைவில் தனது விக்கெட்டுகளை இழந்தது.
 
பாகிஸ்தான் அணியில் இமாம் அல் ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாவுதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றைப்படை இலக்கத்தில் அவுட்டாகினர்.
 
இறுதியில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
 
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. #ENGvPAK

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/03214102/1167630/england-beat-pakistan-an-innings-and-55-runs-in-second.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.