Jump to content

விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன?


Recommended Posts

விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன?

 
 

இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, இதுபோன்ற சவாலை விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விராட் கோலியின் பதிவு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள், "உங்கள் சவாலை ஏற்கிறேன் விராட்" என்று பிரதமர் மோடி பதிலளித்தார்.

கோலிக்கு பதில் சொன்ன பிரதமர்

 

மோடி ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ மக்கள் பிரச்னைகள், சமூக அவலங்கள், மோசடிகள், ஊழல் குற்றசாட்டுகள், மதவாதம் குறித்த புகார்கள் என பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கின. ஆனால், அவை எதற்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. விளையாட்டு வீரரின் உடற்பயிற்சி குறித்த சவாலுக்கு பதில் சொல்லும் பிரதமரே, "இந்த 20 கேள்விகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இவற்றுக்கு எப்போது பதில் கூறப்போகிறீர்கள்?"

1. தலைநகர் டெல்லி வீதிகளில் 100 நாட்களுக்கும் மேலாக எலியை வாயில் கவ்விக்கொண்டும், நிர்வாணமாக ஓடியும் கோரிக்கைகளுக்காகப் போராடிய தமிழக விவசாயிகளை ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசாதது ஏன்?

2. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியதால், மக்கள் தவிப்புக்கு உள்ளாகி, வங்கி வாசலில் கால்கடுக்க நின்றதுடன், இந்தியா முழுவதும் வயதானவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்களே... அவர்களின் குடும்பங்களுக்கு உங்கள் பதில் என்ன?

3. காஷ்மீரில் ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே குரல் கொடுத்தார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?

4. ஒட்டுமொத்த தமிழர்களையும் 'பொறுக்கி' என உங்கள் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம் செய்தார். தொடர்ந்து அவரைக் கட்சியில் பாதுகாத்து வருகிறீர்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?

5. 'பெரியார் சிலையை உடைப்பேன்' என்று ட்வீட் செய்கிறார் உங்கள் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. கேட்டால் சமூக வலைதளத்தைப் பராமரிக்கும் 'அட்மின்' பதிவிட்டதாகக் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை நீங்கள் எடுக்காதது ஏன்?

6. மெரினா போராட்டத்தில் தமிழக போலீஸார் அப்பாவி இளைஞர்களை  ஓட, ஓட விரட்டியடித்தார்களே.... அந்த விவகாரம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே ஏன்?

7. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கும் நிகழ்வு இன்றுவரை தொடர்கிறது. அந்தவகையில் தமிழக மீனவர் பிரச்னை தீர்க்கப்படாமலேயே நீடிக்கிறது. நீங்கள் இலங்கைக்கு பயணம் செய்த பிறகும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லையே... இதற்கு உங்கள் பதில் என்ன?

8. சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்ட போது கலவரம் வெடித்து பல உயிர்கள் மாண்டு போனதே. அப்போது நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை?

9. காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்ட பின்னரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்வைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க அம்மாநில அரசை நீங்கள் வலியுறுத்தவில்லையே ஏன்?

10. 'நீட்' தேர்வு விவகாரத்தில் அனிதாவின் மரணத்துக்கும், இந்தாண்டு தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு அனுப்பியதற்கும், மாணவ, மாணவிகளை மோசமான முறையில் சோதனை நடத்தப்பட்டதற்கும் உங்களிடம் இருந்து எந்தவொரு கண்டனமும் வரவில்லையே பிரதமரே!

 

 

 

11. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் 100 நாட்களுக்கும் மேலாகப் போராடிய மக்கள் பற்றி நீங்கள் என்றுமே பேசாதது ஏன்?

12. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், தமிழக அரசையும், காவல்துறையையும் ஒரு வார்த்தைகூட கேட்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?

13. இந்தியாவின் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி சிலர் கொல்லப்பட்டார்களே... அவர்களைக் கொன்றவர்களைப் பற்றி ஒருமுறைகூட பேசவில்லையே ஏன்? 

14. மஹாராஷ்ட்ராவில் ஒரே இரவில் லட்சக்கணக்கில் கூடிய விவசாயிகள், காலில் வெடிப்புடன், தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடினார்களே, அந்த மக்களுக்கு உங்கள் பதில் என்ன?

15 பக்கோடா போடுவதையெல்லாம் வேலைவாய்ப்புப் பட்டியலில் இணைத்து நாடாளுமன்றத்தில் பேசினாரே உங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா. அவருக்கு உங்கள் பதில் என்ன?

16. கறுப்புப்பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவருவேன் என்று சொல்லி, இதுவரை ஒரு ரூபாயையோ அல்லது ஒருவர் பெயரையோகூட கொண்டு வராமல் இருப்பது ஏன்?

17. 'ஆதார் தகவல்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது' என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருக்கிறதே. இந்த சர்ச்சைக்கு இதுவரை பிரதமர் பதிலளிக்காதது ஏன்?

18. பெட்ரோல், டீசல் விலை உங்கள் ஆட்சிக்காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதே. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்கினாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதிகரிக்கிறதே. இதற்கு உங்கள் பதில் என்ன?

19. 'பொருளாதாரம் வளர்ந்துவிட்டது' என மார்தட்டிக் கொள்ளும் நீங்கள், ஆட்சிக்கு வரும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 ஆக இருந்தது. இப்போது 67 ரூபாயாக  சரிந்துள்ளதே. இதற்கு உங்கள் பதில் என்ன?

20. நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட பத்திரிக்கையாளர்களைச் சந்திக்காத பிரதமர் என்ற சாதனையை வைத்திருக்கிறீர்களே. ஏன் பதில் சொல்லத் தயங்குகிறீர்கள் பாரத பிரதமரே? 

 

ஆனால், இதுபோன்ற பிரச்னைகளையெல்லாம் விட்டுவிட்டு விராட் கோலியின் பதிவுக்கு மட்டும் 24 மணி நேரத்துக்குள் பதில் சொல்கிறீர்கள் என்றால் நீங்கள் யாருக்கான பிரதமர்? பதில் வராது என்று தெரிந்தும் கேட்கிறோம். பதில் சொல்வீர்களா?

https://www.vikatan.com/news/india/125850-20-questions-to-indian-prime-minister-modi.html

தொடர்பான செய்தி

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.