Jump to content

உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு


Recommended Posts

உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு
 
 

அரசியல் அரங்கின் சுவையே அதன் நிச்சயமின்மையே. அச்சுவையின் அபத்தம் யாதெனில், பல சமயங்களில் அச்சுவாரசியம் அவலச் சுவையுடையது. உலக அரசியல் அரங்கு, நிச்சயமின்மைகளாலும் அவலங்களாலும் நிறைகின்ற காலப்பகுதியில், எதிர்காலத்தை வெறித்துப் பார்த்தபடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.  

 ஒருபுறம், இதுவரை கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் விழுமியங்கள், புதிய வாசிப்புகளையும் விளக்கங்களையும் பெறுகின்றன. 

மறுபுறம், உலகம் எதேச்சாதிகாரத்தின் நவீன வடிவங்களை நோக்கி நகர்கிறது. இவை புதிய கேள்விகளையும் விளக்கங்களையும் வேண்டி நிற்கின்றன.  

உலகமயமாக்கலின் முடிவு  

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, உலக அரங்கின் மந்திரச் சொல் ‘உலகமயமாக்கல்’ ஆகும். ஆனால், கடந்த ஒரு தசாப்தமாக உருவாகி, நிலைத்துள்ள பொருளாதார நெருக்கடி, உலகமயமாக்கல் என்ற எண்ணக்கருவை நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளது.  

முதலாளித்துவத்தை உந்தும் பிரதான கருவியாக, உலகமயமாக்கல் மேலும் இருக்கவியலாது என நிதி மூலதனம் உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியத்தின் செயல்நிரலில், உலகமயமாக்கலுக்கு மாற்றீடு எதுவும் தோன்றவில்லை.   

இது, எதிர்காலத்தில் நிதிமூலதனத்தை வரன் முறையின்றிப் பரப்பும் கருவியை இல்லாமல் செய்துள்ளது. நிதி மூலதனம் வினைத்திறனுடன் செயற்பட இயலாமைக்கு, உலகமயமாக்கலே காரணம் என்பதோடு, அதனோடு சேர்ந்த திறந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் பற்றிய மாற்றுக் கருத்துகள் வலுப்பெற்று, உலகப் பொருளாதார ஒழுங்கை, மீள் கட்டமைக்கும் திசையில் உரையாடல்களும் கொள்கை மாற்றங்களும் அவை சார்ந்த அரசியலும் நகர்ந்துள்ளன.   

இவை உலகமயமாக்கலின் முடிவைக் கோருகின்றன. இன்னொரு வகையில் சொன்னால், கடந்த அரை நூற்றாண்டாக ஏகாதிபத்தியத்தைக் காவிச் சென்றதோடு அதைத் தக்கவைக்கும் கருவியுமாக இருந்த, அதன் பயன் முடிவுக்கு வந்துள்ளது. 

இதேவேளை, இம்முடிவு நெருங்குகின்ற சமயம், இந்நெருக்கடியைக் கையாளத் திசைதிருப்பல் உத்திகள், வேகமாக அரங்கேறுகின்றன.   

பொருளாதார விளைவுகளுக்கு முகங்கொடுக்க இயலாத முதலாளித்துவம்,  மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முகமாக, நாட்டின் பிற தேசிய இனங்களுக்கோ, மதச் சிறு பான்மையினருக்கோ, அயல் நாடெதற்குமோ எதிரான கடும்போக்கை மேற்கொள்ள முனைகிறது.  

 அதன் விளைவான முரண்பாடுகளை, ஏகாதிபத்தியம் தனக்குச் சாதகமாக்குகிறது. அத்துடன், அதுவரை சினேக முரண்பாடுகளாக இருந்த தேசிய இன, மொழி, மத, பிரதேச, சாதிய முரண்பாடுகளை, பகை முரண்பாடுகளாக்கி, அதில் ஒரு தரப்பையோ இன்னொன்றையோ ஆதரிப்பதுபோல் தோற்றம் காட்டி, தனது இருப்பை ஏகாதிபத்தியம் தக்க வைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் செயல்களை, இதன்மூலம் விளங்க இயலும்.   

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், ஒடுக்குவோரின் தேசியவாதமும் ஒடுக்கப்பட்டோரின் தேசியவாதமும் ஏகாதிபத்திய ஆதரவுடன், தத்தம் நோக்கங்களை நிறைவேற்ற முயல்வதால், அமைதியாகத் தீர்க்கக்கூடிய முரண்பாடுகள் பகையாக மாறி, பொருளாதாரம் சார்ந்த முரண்பாடுகளுக்கு, வேறொரு முகத்தை வழங்குகின்றன.   

இன்று விமர்சனத்துக்கு உள்ளாகும் திறந்தசந்தையும் கட்டற்ற வர்த்தகமும் முதலாளித்துவத்தின் அடிப்படைகளாக விமர்சனத்துக்கு உட்படவில்லை. மாறாக, உலகமயமாக்கலின் தோல்வியின் அடிப்படையில் அவை விமர்சிக்கப்படுகின்றன.  

 குறிப்பாக, கடந்த ஆண்டு அந்நிய நிறுவனங்களுக்கு எதிராக, அரசுகளின் நடவடிக்கை நான்கு மடங்கு கூடியுள்ளது. தனது கட்டுப்பாட்டை மீளப் பெறுவதை நோக்கி அரசு நகர்கிறது. உலகின் முதனிலைப் பொருளாதாரங்களே, கட்டற்ற வர்த்தகத்துக்குத் தடைகளை அதிகம் முன்வைக்கின்றன.  

இன்று அரசுகள், தம் காக்கும் கரங்களை அகல விரித்துள்ளதால், பொருளாதாரத் தடைகள், இறக்குமதி வரையறைகள், சுங்க வரிவிதிப்பு, அனுமதி வழங்கல் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள், வந்தேறுகுடிகளுக்கு வேலைவாய்ப்பில் பாரபட்சம் போன்றன நடக்கின்றன.   

அரசு மீண்டும் ‘ஆயா அரசு’ எனும் நிலைப்பாட்டிலிருந்து, அதிகாரத்தைப் பாவிக்க முடிகிறது. இதை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணலாம்.   

மதவாதத்தின் மாறும் வடிவங்கள்   

மதங்கள் யாவும் ஒன்றையே போதிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது மெய்யாயின், மனிதர் ஏன் மதங்களின் பெயரால் மட்டுமன்றி, மதப் பிரிவுகளின் பெயராலும் தம்மிடை போராடி மடிய வேண்டும்?    
மதச் சிந்தனை வேறுபாடுகளின் பெயரில் நடந்த, சமூக மோதல்களின் யுகம் போய்விட்டது. ஒவ்வொரு மதத்துக்கும் மதப் பிரிவுக்கும் அது தோன்றிய சில காலத்துக்குள்ளேயே, தன் கருத்தை மக்களிடையே பரப்ப, அரச அதிகாரத்தைப் பிடிப்பதோ, மதத் தலைமையின் செல்வாக்குக்குள் அரசைக் கொண்டுவருவதோ முக்கிய தேவையாகின. 

மதம் சார்ந்த மோதல்கள், மனிதர் மறுவுலகம் போகும் மார்க்கம் பற்றிய தத்துவ விவாதங்களின் விளைவுகளல்ல. அவற்றுக்கு வலிய பொருள்முதல்வாதக் காரணங்கள் இருந்தன.   

இந்தியாவின் தெற்கில் பல்லவர் ஆட்சியில் சமணரின் ‘கழுவேற்றம்’ முதல், மதங்களின் பெயரால் நடந்த அதிநீண்ட போரான ‘சிலுவை யுத்தம்’ வரை, அறம் சார்ந்த காரணங்களிலும் வலியதாக அரசியல் காரணங்கள் இருந்துள்ளன.   

பல மதங்களையும் பிறப்பித்த சமூகச் சூழல்கள் இன்று இல்லை. மத நடைமுறைகள், முதலாளித்துவச் சூழுலுடன் பெருமளவும் இணங்கியுள்ளன. முதலாளித்துவ விழுமியங்களுடன், வலிதாக முரண்பட்ட மதங்களை, முதலாளித்துவம் தனக்கு வாய்ப்பாக்குகிறது.   

 முதலாளித்துவத்தின் பயனாக, முதலாளித்துவ ஜனநாயகமும் தேசங்களும் தேச அரசுகளும் தோன்றின. ஆயினும், தனது இருப்பை மிரட்டும் எதையும் ஏற்காத முதலாளித்துவம் தேசியத்தின் பெயரால், தேசங்களை ஒடுக்குகிறது.  

 ஜனநாயகத்தின் மூலம் தனது ஆட்சியைப் பேணவிலாதபோது, சர்வாதிகாரமாகிறது. அதற்குப் பாசிசம் துணையாகிறது. 

பாசிசம் என்பது, முதலாளித்துவ ஜனநாயகம் வலுவற்றுப் போகையில், அதனிடத்தில் வரும் பகிரங்க சர்வாதிகாரப் பிரதியீடாகும்.  

மக்களுக்கு வெறியூட்ட, தேசிய உணர்வைவிட மத உணர்வு வலுவானது என்பதால், சோவியத் ஒன்றியத்தை வலு விழக்கச்செய்ய, இஸ்லாமிய மதவாதத்தைப் பாவித்த ஏகாதிபத்தியம், அதைச் சீனாவிலும் பின்னர் பிற நாடுகளிலும் பாவித்தது. இதன் இன்னொரு கட்டம் இப்போது அரங்கேறுகிறது.   

அதேவேளை, நவீன தென்னாசிய இந்து, பௌத்த மதவாதங்கள், நேரடி ஏகாதிபத்திய ஊக்குவிப்பின்றி 20 ஆண்டுகளுக்கும் மேல் செழித்தன. இந்தியாவில் இப்போது ஆட்சிலுள்ள இந்துத்துவ பாசிசக் கட்சி, மத அடையாளத்தை முதன்மைப்படுத்துகிறது.   

இலங்கையில் சிங்கள பௌத்தத்தின் பெயரில் அரசியலை முன்னெடுத்த பாசிசக் கட்சி, ஆட்சியில் இல்லாவிடினும் ஆட்சிகளில் அதற்குச் செல்வாக்குண்டு. முஸ்லிம்களைக் இலக்கு வைக்கும் சிங்கள-பௌத்த பாசிச வெறியர்களுடன், நேரடி உறவில்லாதபோதும், பாசிச வெறியர்களைக் காக்க அது முன்னிற்கிறது.   

அரசாங்கத்தையும் அதிலும் வலுவான அரச இயந்திரத்தையும் சிங்கள பௌத்த பாசிசச் சிந்தனை ஆழ ஊடுருவி வருகிறது. மியான்மாரின் ‘ஜனநாயக மீட்சி’யையொட்டி, பர்மிய - பௌத்த பாசிசம் வலுவுடன் எழுந்தது. அதன் பயனாக முஸ்லிம்களான றோகிஞ்சாக்கள் படும் இன்னல்களை நாமறிவோம்.   

இன்று மேற்குலகுக்கோ அல்லது மனித உரிமைக் காவலர்களுக்கோ, இந்தியாவில் வலுக்கும் இந்துத்துவ பாசிச வெறியாட்டம் பற்றியோ, இலங்கையிலும் மியான்மாரிலும் பரவும் பௌத்த பாசிச வெறியாட்டம் பற்றியோ கவலையில்லை.  

 ஏனெனில், இந்துத்துவமும் தேசியவாத பௌத்தமும் மேற்குலகின் கட்டுப்பாட்டை ஏற்பதோடு, ஆசிய நாடுகளின் மக்களைப் பகைமூட்டிப் பிரிக்கும் பணியையும் செய்கின்றன. இதனால், மதத்தின் பெயரால் வலுப்பெறும் பாசிச அபாயம் பற்றிய விழிப்பை ஏற்படுத்தல் அவசியமானது.  

பாசிசம் புதிய போக்குகள்  

முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட, ஐரோப்பிய பாசிசக் குணவியல்புகளின் அடிப்படையில், பாசிச நிறுவனங்களாகக் கருதப் போதாத பாசிசப் போக்குகளையுடைய அரச, அரசியல் நிறுவனங்கள் பலவுள்ளன.   

அதைவிட, அதிகாரத்தைப் பிடிக்க நவீன பாசிசம் பாவிக்கும் வழிமுறைகளும் ‘செவ்வியல் ஐரோப்பிய பாசிசம்’ பாவித்த ஜனரஞ்சக வழிமுறைகளும் வேறு. ஐரோப்பிய நவபாசிசம், முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகளுள் தனது நகலிகளை நட்டுள்ளது.   

அதனால், குறிப்பாக ஐரோப்பாவில், குடியேறிகளும் தொழிலாளி வர்க்கமும் இடதுசாரி இயக்கமும் பற்றிய பாசிச நிகழ்ச்சி நிரலின் முக்கிய கூறுகளை, ‘நடு-வலது’ கட்சிகள் மட்டுமன்றி ‘நடு-இடது’ கட்சிகளும் எளிதாக ஏற்கின்றன.  

ஒரு காலத்தில் கொலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முற்போக்குச் சக்தியான தேசியவாதம், இரண்டாம் உலகப் போருக்குச் சிலகாலம் பின், சிலசமயம் மதத்தைத் தேசிய அடையாளமாக உள்வாங்கிப் பேரினவாதமாயும் குறுந் தேசியவாதமாயும் சீரழிந்த மூன்றாமுலக நாடுகளில், பாசிசம் வளமான விளைநிலத்தைக் கண்டது.   

இத்தகைய அடையாள-அடிப்படை அரசியல், பழைய ஏகாதிபத்திய எதிர்ப்பை இழந்ததுடனன்றி, ஏகாதிபத்திய அனுசரணையை விருப்புடன் நாடி பாசிசக் குணவியல்புகளைப் பெறுகிறது. இருப்புக்கு ஒடுக்குமுறை தேவையாகும் போது, அது பாசிசமாகிறது. இத்தகைய பாசிச விருத்திகளை, யாரும் பொருட்படுத்துவதில்லை.   

தென்னமெரிக்காவில், ஜனரஞ்சக முறைகளால் பாசிசம் அதிகாரத்துக்கு வருமளவுக்கு நிலைமைகள் முதிராதபோது, பாசிச ஆட்சிகள், அமெரிக்க ஏகாதிபத்திய உதவியுடன் இராணுவச் சதிப் புரட்சிகள் மூலம் அமைந்தன.   

சட்டப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிய வலதுசாரித் தேசியவாதிகள், துருக்கியிலும் சிங்கப்பூரிலும் போன்று, அரசாங்கத்தை பாசிச ஆட்சியாக்கினும் மேற்குலக ஏகாதிபத்தியமும் ஊடகங்களும் அதைச் ஜனநாயகமாகவே, கருதும் போக்கு அதிகரித்து வந்துள்ளது.   

போர்க்குணமுள்ள அதிதேசியவாத, அடிப்படைவாதக் கட்சிகளை நவ-பாசஸிஸக் கட்சிகளாகக் கருதும் அதேவேளை, அவற்றின் எதிரிணைகளுக்கு விலக்களிக்கும் ஆபத்தான போக்கும் உள்ளது.   

மியான்மாரின் அரக்கன் தேசியக் கட்சி, சித்தாந்தத் தளத்தில், ம.ப.த.வினும் 969 இயக்கத்தினும் குறைந்த பாசிசக் கட்சியல்ல; இலங்கையின் ஜாதிக ஹெல உருமய, பொது பல சேனவிலும் சிங்ஹல ராவயவிலும் குறைந்த பாசிசக் கட்சியல்ல; இந்தியாவின் பா.ஜ.க, பஜ்ரங் தல்லிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் குறைந்த பாசிசக் கட்சியல்ல.  

ஜனரஞ்சகப் பாசிசம் ஆபத்தானதாக மாறியுள்ளமையால் அதை கவனமாகவும் உறுதியாகவும் கையாள வேண்டியது அவசியம். அதற்கான வலு அரசுகளிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான வலுவை ஏற்படுத்தும் தேவையை அரசுகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன.   

அவை, இந்த ஜனரஞ்சகப் பாசிசத்தைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பாசிசம் போலன்றி, நவீன பாசிசம் தனது வேலைத்திட்டத்தை அதிகாரத்திலுள்ள கட்சியாகவும் கூட்டரசாங்கத்தின் பங்காளியாகவும் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் இயங்கும் வலுவான அழுத்தக் குழுவாகவும் செயற்படுகிறது.  

இப்பின்னணியிலேயே, வலது திசை நோக்கிய அரசியல் விலகலைப் பேணுவதில் ஆட்சியாளர்கள் குறியாயுள்ளார்கள். உலக முதலாளித்துவமும் முதலாளித்துவ  ஜனநாயக அரசியலும் அதிதேசியவாதத்தையும் குடிவரவு எதிர்ப்பையும் முஸ்லிம் விரோத இனவாதத்தையும் பற்றிப் பொறுமை காக்கின்றன.  

 மூன்றாமுலகின் பாசிச எதிர்ப்பாளர்கள், குறிப்பாகச் சமூக நீதிக்கான வெகுசனப் போராட்டங்கள் தொடர்பாக, பாசிசப் போக்குகளுக்கு ஏகாதிபத்தியம் வழங்கும் செயலூக்க ஆதரவையும் செயலின்மை ஆதரவையும் பற்றி விழிப்போடிருக்க வேண்டும்.  

நவகொலனியத்தின் புதிய கட்டம்  

கொலனி யுகத்தில் அதிகம் கவனமீர்க்காத முரண்பாடுகள் பற்றிக் கவனமெடுக்குமாறு நவகொலனியச் சூழல் வேண்டுகிறது. அம் முரண்பாடுகளுள் பல்லின நாடுகளின் தேசிய இன முரண்பாடுகளும் பழங்குடிகளின் தேசிய இன உரிமைகளும், சாதிப் பாகுபாடும் ஒடுக்குமுறையும் அனைத்திலும் மேலாகப் பால்நிலைப் பிரச்சினைகளும் அடங்கும்.   

பல்வேறு சமூக முரண்பாடுகளுக்கும் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டுக்குமுள்ள உறவை, மனத்தில் இருத்துவதும் வர்க்கப் போராட்டத்தை முக்கிய இணைப்பாகக் கொள்வதும் முக்கியம்.  

மனிதச் சுற்றாடலின் சேதம், நெருக்கடி மட்டத்தை எட்டியுள்ளதுடன் இக்கோளத்தில் மனித இருப்பை மிரட்டுகிறது. இந்நெருக்கடிக்கு முதலாளித்துவத்திடம் விடையில்லை. நெருக்கடியின் பிரதான காரணம், முதலாளித்துவமே எனக் கூறப் பசுமை அரசியல் தவறுகிறது.  

 இது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் தேசங்கள் மீதும் பிரச்சினையின் சுமையை ஏற்றுகிறது. முதலாளித்துவத்தின் இலாபப் பேரவாவின் விளைவுகளான நுகர்வுப் பழக்கத்தையும் கழிவின் பெருக்கத்தையும் பல்தேசியக் கம்பெனிகள் ஏகாதிபத்திய ஆதரவுடன் மூன்றாமுலகின் மீது திணிக்கின்றன.   
மூன்றாமுலகில் போரையும் உள்நாட்டுப் போரையும் ஏகாதிபத்தியமே பேணுகிறது. மோதல்கள், முன்கண்டிராத சதவீதத்தில் மக்களிடத்தில் இடப் பெயர்வை ஏற்படுத்தியுள்ளன.  

 மூன்றாமுலகிலிருந்து வறுமையாலும் மோதல்களாலும் நிகழும் இடப்பெயர்வு, விருத்திபெற்ற முதலாளித்துவ நாடுகளுக்கு மலிவான, பணிவான உழைப்பாளர்களை வழங்குகின்றது. அத னோடு சேர்ந்து, பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், நிறவாதமும் நவீன பாசிசமும் மீள எழுந்துள்ளன.   

அண்மைய தசாப்தங்களில், தெரிந்தெடுத்த நாடுகளில் இறைமைக்குக் குழிபறிக்கவும் உள்நாட்டுப் போரை ஊக்குவிக்கவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் மக்கள் பிரிவினரின் நியாயமான மனக்குறைகளை, ஏகாதிபத்தியம் தனக்கு வந்தவாறு பயன்படுத்தியுள்ளதால், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பற்றி, ஏகாதிபத்தியத்தின் புதிய கரிசனையைக் கவனமாகச் சோதிக்கவேண்டும்.   

இன்றைய உலக அரசியல் அரங்கின் குறுக்குவெட்டு முகத்தோற்றம் மிகவும் குழப்பமான, நெருக்கடியான சித்திரத்தையே தருகிறது. அதேவேளை, ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான தௌ்ளத் தெளிவான பிரிகோடு, தோற்றம் பெறுவதையும் மறுப்பதற்கில்லை.  

 இது உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் போராடுவதைத் தவிர வழிவேறில்லை என்பதை உணர்த்துகிறது.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-அரசியல்-அரங்கு-ஒரு-கணக்கெடுப்பு/91-216453

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
    • லண்டனில் கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார் Published By: RAJEEBAN   26 MAY, 2024 | 02:21 PM   பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது. சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர்.  லண்டனின் தென்மேற்கு பகுதியில் வசித்துவந்த இவர் பிரிக்ஸ்டனில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்துவந்தார். இதே வேளை கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்திய கும்பலின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 14 பேருக்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. பிரிட்டிஸ் அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளின் சார்பில் இவரை 2022இல் முதலில் கைதுசெய்திருந்தனர். பிரான்ஸ் விடுத்த பிடியாணையை அடிப்படையாக வைத்து இவரை நாடு கடத்துமாறு 2022 நவம்பரில் நீதிபதியொருவர் உத்தரவிட்டார். எனினும் தனது மனைவி உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனது துணை அவருக்கு என தெரிவித்து சிவகங்கன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். எனினும், வெள்ளிக்கிழமை நீதிபதி அவரது மனுவை நிராகரித்துள்ளார். உலகின் பல நாடுகளில் செயற்படும் ஐரோப்பிய பரந்துபட்ட குற்றவாளி கும்பலின் முக்கிய நபராக இவர் விளங்கினார் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184514
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.