Jump to content

பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்


Recommended Posts

பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்
 
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன.  

கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை.   

கூட்டமைப்பின் பலவீனம் என்பது, தமிழ் மக்களது அரசியலிலும் நாளாந்த வாழ்வியலிலும் நிச்சயமாகத் தாக்கத்தைச் செலுத்தும். ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின், தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பணி, கூட்டமைப்பிடம் வந்து சேர்ந்தது.   

பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே ‘சுவொட்’ (SWOT) பகுப்பாய்வு ஆகும். இது தனிநபர், நிறுவனங்கள், கட்சிகள், நாடுகள் என அனைத்துக்கும் பொருத்தப்பாடு ஆகும். இதனடிப்படையில் கூட்டமைப்பு, தன்னுடைய பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என அனைத்தையும் பகுத்தறிய வேண்டும்.   

உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குவேட்டை ஆடுதல்; ஆட்டத்தில் புள்ளிகள் குறையப் பெறின் கொள்கைகள், இலட்சியங்கள் ஆகியவற்றை மறந்து கூட்டுச் சேரல்; அதன் ஊடாக அதிகாரத்தைத் தன்வசம் அமுக்கிப் பிடித்தல்; அதன் பின்னர், தலைமைத்துவத்தைத் தக்கவைத்தல் என்ற சாதாரண அரசியல் தடத்தில், கூட்டமைப்பு பயணிக்கக் கூடாது என்பதே, தமிழ் மக்களின் பேரவா ஆகும்.   

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ எனப் பாடசாலை நாட்களில் எழுதிய கட்டுரைகளில் ‘கலக்கி எறிந்தது’ ஞாபகம் வருகின்றது. 

இந்த உலகத்தை ஆள்வதே பொருளாதாரம் ஆகும். பொருளாதார வளம் பொருந்திய நாடுகளின் காலடியில், வறிய நாடுகள் வீழ்ந்து கிடக்கின்றன. அவ்வாறான பொருளாதாரத்தை நிர்ணயிப்பது, அரசியல் ஆகும்.   

கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டின் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில், வடக்கு, கிழக்கில் கூடுதலான கட்டுமானப் பணிகள், வீட்டுத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான சீமேந்து, ஓடு, கூரைத்தகடுகள் என்பன வெளி மாகாணங்களில் இருந்தே எடுத்து வரப்படுகின்றன. பெருமளவிலான மனித வளமும் தென்பகுதியிலிருந்தே வருகின்றது.   

இவ்வாறான திட்டங்கள் ஊடாக, வடக்கு, கிழக்கு நோக்கி வந்த பணப்பாய்ச்சலின் பெரும் பகுதி (சீமெந்து ஓடு, கூரைத்தகடுகள், மனித வளம்), மீண்டும் தெற்கு நோக்கியே பாய்ச்சப்படுகின்றது.  

கடந்த ஆட்சியில் வடக்கு, கிழக்கில் பல வீதிகள் புதிதாக அமைக்கப்பட்டன. ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், தொழிற்சாலைகளோ மீள இயங்க மறுத்து விட்டன. அதேபோலவே, நல்லாட்சியிலும் ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தப் போவதில்லை.   

இந்நிலையில் தமிழ்ப் பிரதேசங்களில் சீமெந்துத் தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலை என்பன இயங்க ஆரம்பித்திருப்பின், ஒருபுறம் பல தொழில் வாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கியிருக்கும். 

மறுபுறம், பெரும் பணம் வடக்கு, கிழக்கின் உள்ளேயே சுற்றி வட்டமிட்டிருக்கும். வட்டமிடும் அந்த நிதி, மேலும் பல திட்டங்களைத் தீட்டியிருக்கும். வேலைவாய்ப்புகள், உற்பத்திகளைப் பெருக்கும்; பொருளாதாரத்தைப் வளப்படுத்தும்.  

வடக்கு, கிழக்கிலிருந்து கணிசமான இளைஞர்கள் பல்வேறு விதமான தொழில் வாய்ப்புகளைத் தேடியும் பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நிலை தொடர்கின்றது.   

அங்கு சென்று, பொருளாதார மேம்பாடுகளைக் கண்டாலும் பலவிதமான உள, சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இது, அவர்களது வாழ்க்கையிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீதும் பல பாதக விளைவுகளையே தோற்றுவிக்கின்றது. பொருத்தமான பொறிமுறைகளின் ஊடாக, நிரந்தரமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தால் வடக்கு, கிழக்கிலிருந்து, ஊரையும் உறவுகளையும்  பிரிந்து, மத்திய கிழக்குக்குச் செல்ல வேண்டியதில்லை.   

தமிழ் மக்கள், 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதிவரை, ‘மரணங்கள் மலிந்த பூமி’யில் வாழ்ந்தவர்கள். தற்போது தற்கொலைகள் மலிந்த பூமியில் வாழ்கின்றார்கள். தற்கொலைச் செய்திகள் வழமையான செய்திகளாக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.    

தமிழ் மக்களுக்குப் போர் கொடுத்த, பலவிதமான உள நெருக்கீடுகள்,  அழுத்தங்கள் தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றாக, பொருளாதாரச் (கடன் தொல்லை) சுமை காணப்படுகின்றது.   

பொருளாதார நெருக்கடி காரணமாகவே, சிறிய கடன் வசதிகளைப் பெற, நுண் நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்ளை நாடி, தற்கொலைகளைச் சம்பாதிக்க வேண்டி வருகின்றது.   

“புலம்பெயர்ந்த தமிழர்களது நிதியைப் பெற்று, தாயகத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி, தமிழர்களை வலுவூட்ட, ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை” என்று, அண்மையில் வலிகாமம் வடக்கில் மக்களைச் சந்தித்து, வடக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 

இவ்வாறான கடும் நெருக்குவாரங்கள், அழுத்தங்களுக்கு மத்தியில், அதற்குள் ‘ஓடி ஒளித்துச் சுழித்து’ப் பணியாற்ற வேண்டிய தருணத்தில், தலைமைகளுக்காகத் தலைவர்களுக்குள் தலைதூக்கும் பிளவுகள், தமிழ் இனத்தைத் தலைதூக்க முடியாமற்  செய்து விடும்.   

“முள்ளிவாய்க்காலில் போர்க்குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. மனிதாபிமானம், தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றை மட்டுமே படையினர் முள்ளிவாய்க்காலில் நடத்தினர்” இவ்வாறாகச் சொல்லிய கடந்த ஆட்சியாளர்களைப் போலவே, நடப்பு ஆட்சியாளர்களும் கூறி வருகின்றனர். எதிர்காலத்தில் ஆட்சி அமைப்போரும், மனப்பாடம் செய்த வாய்ப்பாடு போல, இதையே  மீண்டும் மீண்டும் கூறுவர். அது உலகறிந்த சர்வ நிச்சயம்.   

 தமிழ் மக்களின் அவலத்துக்குக் காரணமான முள்ளிவாய்க்கால் நினைவு, அதை வலிந்து ஏற்படுத்தியவர்களுக்கான தண்டனையாகவும் மறுபுறம் அதை வலிந்து ஏற்றோருக்கான வெகுமதியாகவும் அமைய வேண்டும்.  

இதற்கு வலுவான ஆயுதமாக, இரு பக்கமும் கூர்மை கொண்ட கத்தியாக முள்ளிவாய்க்காலைத் தீட்ட (பயன்படுத்த) வேண்டும். தவிர இலங்கை அரசாங்கத்தால் பேசாப் பொருளாக மாற்ற (மறக்க) முனையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை, சர்வதேசத்தில் பேசு பொருளாக்க வேண்டும்.   

இதுவே முள்ளிவாய்க்காலில் மூர்க்கத்தனமாக ஏவப்பட்ட குண்டுகளால், மூச்சடங்கிய சொந்தங்களுக்கு வழங்கும் அஞ்சலி ஆகும். சிரம் தாழ்த்தி, மார்பில் கரம் குவித்து, அவர்களுக்குச் செய்யும் வணக்கம் ஆகும்.   

இந்நிலையில், தமிழ் மக்களுக்குப் பேரவலத்தையும் இருட்டையும் வழங்கிய முள்ளிவாய்க்கால் நிம்மதியையும் வெளிச்சத்தையும் வழங்க வேண்டும்.   

இதற்குச் சட்ட நிபுணத்துவம், மொழிப்புலமை, பேச்சு வல்லமை, இராஜதந்திர நகர்வுகள் உள்ள அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் முகாமிட வேண்டும்.   

இலங்கை அரசாங்கம், தானான விரும்பி எக்காலத்திலும் தமிழ் மக்களுக்கான உரிமைகளைக் கொடுத்துவிடப் போவதில்லை. அதனது, சிங்கள - பௌத்த பொறிமுறை, என்றைக்கும் அனுமதி வழங்காது. இலங்கையைத் தனிச்சிங்கள பௌத்த நாடு எனக் கூறுவதில், பேரினவாதம் தனி சுகம் அனுபவிக்கின்றது. அந்த இலக்கை அடையவே அடம் பிடிக்கின்றது.   

 

இந்நிலையில், பலத்த இழுபறிகளுக்கு மத்தியிலும் தொடரும் கூட்டரசாங்கத்தின் ஆட்சி மேலும் தொடர்வதே, மேற்குலகின் மேலான விருப்பம் ஆகும். 

மறுபக்கமாக மேற்குலகம் எதிர்பார்த்த புதிய அரசமைப்பு வருகை, பயங்கரவாதத் தடுப்புச்சட்ட நீக்கம், முழுமையான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு எனப் பல விடயங்கள் கிடப்பில் உள்ளன. இவையெல்லாம் நல்லாட்சியால் நகர்த்த முடியாத காரியங்களாகக் காணப்படுகின்றன.    

இவைகள் அரசாங்கத்தின் ஆற்றாமைகள். அரசாங்கத்தின் ஆற்றாமைகளைத் தமிழ்த் தரப்பு தமது ஆற்றுமைகள் ஆக்க வேண்டும். இவற்றை உலகம் முழுக்க பறை அடித்துக் கூற வேண்டும்.   

முள்ளிவாய்க்கால் (மே 2018) உரையில் வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டது போல, “இலங்கையில் கடந்த 70 ஆண்டு கால வரலாற்றைப் பார்க்கும் எவருக்கும், சர்வதேச தலையீடுகள் இல்லாமல், நெருக்கீடுகள் இல்லாமல், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிப்பது இயலாத காரியம் என்பதை, உலக முற்றத்தில் நிறுவ வேண்டும். இலங்கையில் நடுநிலைமை, நல்லாட்சி என்பனவெல்லாம் வெறும் உதட்டிலும் ஏட்டிலும் மட்டுமே தவிர செயல் உருவம் பெறுவது ஒரு போதும் இல்லை” என நிறுவும் திட்டங்கள் தரவுகளுடன் வெளிப்படுத்த வேண்டும்.    

நீண்ட கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமான தமிழ் இனத்தின் விடுதலை, தலை மீது சுமத்தப்பட்ட நிலையில், நிலை தடுமாறிப் பயணிக்கக் கூடாது. பலவீனங்களுடனும் தனிவழியிலும் வேற்றுமைகளுடனும் பயணித்து, அந்த உயர் இலக்குகளை அடைய முடியாது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பலவீனங்களுக்குப்-பரிகாரம்-தராத-பலவீனங்கள்/91-216328

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.