Jump to content

கர்நாடக முதல்வரானார் குமாரசாமி - பதவியேற்பு விழாவில் திரண்ட எதிர்க்கட்சிகள் - வராதவர்கள் யார்?


Recommended Posts

கர்நாடக முதல்வரானார் குமாரசாமி - பதவியேற்பு விழாவில் திரண்ட எதிர்க்கட்சிகள் - வராதவர்கள் யார்?

இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத). தலைவரான எச்.டி குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

முதல்வரானார் குமாரசாமிபடத்தின் காப்புரிமைइमेज कॉपीरइट@INCKARNATAKA Image captionமுதல்வரானார் குமாரசாமி

அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

கடந்த வாரம் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் கடந்த சனிக்கிழமையன்று எடியூரப்பா பதவி விலகினார். இதனால் கர்நாடக மாநிலத்தில் ஒரே வாரத்தில் இரண்டு முதல்வர் பதவியேற்பு நிகழ்வுகள் நடந்துள்ளன.

இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிபிஎம் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்களான மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டு குமாரசாமிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

எதிர்கட்சித்தலைவர்கள் படை சூழ பதவியேற்ற குமாரசாமிபடத்தின் காப்புரிமைइमेज कॉपीरइट@INCINDIA

இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

முன்னதாக, தனக்கு பெரும்பான்மை இல்லாததால் எடியூரப்பா தனது பதவியை சனிக்கிழமையன்று ராஜிநாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கட்சியின் எச்.டி குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

https://www.bbc.com/tamil/india-44228366

Link to comment
Share on other sites

ஆபரேஷன் கமலா அச்சம்: நம்பிக்கை வாக்கெடுப்புக்காக காங்.,ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் ஹோட்டலில் தங்க வைப்பு

 

 
MLAS

சொகுசு பஸ்ஸில் எம்எல்ஏக்கள் அழைத்துச்செல்லப்பட்ட காட்சி   -  படம் உதவி: ட்விட்டர்

கர்நாடகச் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நிலையில், ‘ஆபரேஷன் கமலா’வை பாஜக செயல்படுத்திவிடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம்(ஜேடிஎஸ்) எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் நடந்த தேர்தலுக்கு பின் தனிப்பெரும் கட்சியாக உருவான பாஜக ஆட்சியைக் கைப்பற்றி, எடியூரப்பா முதல்வரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதளம் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்தார்.

 
 

இதையடுத்து கர்நாடகத்தில் 24-வது முதல்வராக ஜேடிஎஸ் கட்சித் தலைவர் குமாரசாமி நேற்று பதவி ஏற்றார். சட்டப்பேரவையில் நாளை தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை பாஜக ‘ஆபரேஷன் கமலா’ மூலம் எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம் என காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் அச்சப்படுகின்றன.

இதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 9 நாட்களாக தங்கள் குடும்பத்தினரைக் காண முடியாமல் எம்எல்ஏக்கள் ஹோட்டலில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதால், மனவேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு புறநகரில் உள்ள கோல்ஃப்ஷையர் ரிசார்ட்டிலும், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஹில்டன் எம்பஸி கோல்ஃப்லிங்கிலும் தங்கியுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில்தான் தங்கி இருப்பார்கள். அதன்பின் அவர்கள் வீட்டுக்கும், தொகுதிக்கும் அனுப்பப்படுவார்கள். எம்எல்ஏக்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கவும் இல்லை.

அவ்வாறு வரும் செய்திகள் தவறானவை. விருப்பத்தின் அடிப்படையில்தான் எம்எல்ஏக்கள் தங்கி இருக்கிறார்கள். எம்எல்ஏக்களிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டதாக சிலர் வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படவில்லை, அவர்கள் குடும்பத்தாருடன் செல்போனில் பேசி வருகிறார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபின், எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களின் தொகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/article23980098.ece?homepage=true

Link to comment
Share on other sites

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி: கடைசி நேரத்தில் பாஜக வெளிநடப்பு

 

 

 
Karnataka%20Assemblyjpg

கர்நாடக சட்டப்பேரவை   -  படம்: சீனிவாச மூர்த்தி

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது. இறுதி நேரத்தில் பாஜக வெளிநடப்பு செய்தது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் கால அவகாசம் வழங்கினார்.

 

எனினும் ஒருநாள் இடைவெளியில் பெரும்பான்மையை நிருபிக்க குமாரசாமி முடிவு செய்தார். அதன்படி. கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை கூடியது. முதல்கட்டமாக, சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சீனிவாசப்பூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமாரும், பாஜக சார்பில் போட்டியிடும் ராஜாஜி நகர் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் குமாரும் போட்டியிட்டனர்.

சபாநாயகர் தேர்வு நடைபெறுவதற்கு சற்று முன்பாக பாஜக வேட்பாளர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பிற்பகலில் அவை மீண்டும் கூடியது. முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்குகோரினார். பெரும்பான்மைக்கு 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இதில் குமாரசாமிக்கு 78 காங்கிரஸ் உறுப்பினர்கள், 36 மஜத உறுப்பினர்கள், 1 பகுஜன் சமாஜ் உறுப்பினர் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவு அளித்தனர். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

முன்னதாக எதிர்கட்சித் தலைவராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்

http://tamil.thehindu.com/india/article23989772.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.