Jump to content

போரில் மரித்த ஒரு சிங்களக் கொமாண்டோவின் தம்பி


Recommended Posts

http://indikadefonseka.com/my-brother-jani-a-portrait-of-a-real-life-jason-bourne/

போரில் மரித்த ஒரு சிங்களக் கொமாண்டோவின் தம்பி, மரித்த கொமாண்டோ சார்ந்து 2013ம் ஆண்டில் எழுதிய இந்தப் பதிவினை இன்று படிக்க நேர்ந்தது. எழுதியவர் இதயசுத்தியாக எழுதியிருக்கிறார் என்பதையும் அவரால் மனிதம் சார்ந்து எழுப்பப்படும் ஆசைகள் உண்மையானவை என்றும் என்னால் நம்ப முடிகிறது. அத்தோடு அவரது எழுத்து வளம் அழகாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும், ஒரு தமிழனாக என்னால் இந்தக் கொமாண்டோவின் வீரத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் சில சமாந்தரங்களை உணர முடிகிறது. இந்தப் பதிவு அது சார்ந்தது.

மேலே செல்வதற்கு முன்னர், மேற்படி இணைப்பில் கடந்த ஐந்தாண்டுகளாக இடப்பட்டுள்ள பின்னூட்டங்களைப் படிக்கையில் அங்கு ஒரு பொழுதுபோக்குச் சுவாரசியமும் கைப்படுகிறது. இறந்த கொமாண்டோவின் முன்னை நாள் காதலி, அவரை ரசித்த அவரின் பதின் வயதுத் தோளி முதலானோரதும் அவரது வாழ்வில் இடம்பெற்றிருந்த இன்னோரன்ன இதரபாத்திரங்களும் பதிவு சார்ந்து தங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டிருப்பமை ஒரு திரைப்படம் பார்த்த உணர்வைத் தருகிறது.

சமாந்தரங்கள்

எமது எதிரி பற்றிய வர்ணனை என்றபோதும், இந்தக் கதையில் எமது நாயகர்கள் பலரை இலகுவில் பொருத்திப் பொதுமை காண முடிகிறது. நான் மிகச் சிறுவனாக, காரணகாரியம் தெரியாது, பிரமித்துப் பார்த்த முதல் கதாநாயகன் கேடிள்ஸ். மேற்படி இணைப்பில் உள்ள யானி என்பதற்குப் பதில் கேடிள்ஸ் என்று போட்டு, நுகேகொடவிற்குப் பதிலாகத் தென்மராட்சி என்று மாற்றிப் படிப்பின், சில தவிர்க்கக் கூடிய வித்தியாசங்களிற்கு அப்பால் கதை அப்படியே பொருந்திவரும்.

பாலுமகேந்திரா படத்தில் வரும் நாயகிகள் போன்ற அக்காக்கள், கேடிள்ஸ் மோட்டார் சைக்கிளிள் செல்கையில் நளவெண்பா சித்தரித்த காப்புக் கழன்று விழும் நிலையில் நின்றதை நான் பார்த்திருக்கிறேன். கேடிள்ஸ் விபத்திற்குள்ளானதாய் வந்த வதந்தியால் அலரி விதை உண்ட அக்காவை நான் அறிந்திருந்தேன். ஏறத்தாள யானி நுகேகொடவில் நடத்திய ஊர்உலாவினை அதே காலப்பகுதியில் தென்மராட்சயில் கேடிள்ஸ் நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஊரிற்கு ஒவ்வொரு நாயகர்கள். வரியுடை வந்து இயக்கம் நிறுவனமானவதற்கு முன்னான சறமும் கோடன் சேட்டும், ஏசியா சைக்கிளும் உரப்பையிற்குள் ஆயுதமுமான காலம் பதின் வயதுப் பெண்களிற்கு ஒரு வகைக் கிளர்ச்சியினையும் பதின்ம பையங்களிற்கு ஆயுதம் தூக்க விரும்பிய கிழர்ச்சியினையும் தந்தது மறுப்பதற்கில்லை. 

தோமியன் பெருமை சிங்களவர் கட்டுரை முழுவதும் பரந்து கிடக்கிறது. “இந்துவின் சொந்தம்” என்ற வரி ஆரம்பகால வீரவணக்கப் போஸ்ட்டர்களில் பார்த்தபோது உணரப்பட்ட சற்று அதிகரித்த பெருமை மறுப்பதற்கில்லை. றாதா அண்ணா இறந்த காலப்பகுதியில், யாழ் இந்துவின் பிறேயர் கோலிற்கு அருகில் இருந்து, இற்றைவரை வீரமரணம் எய்திய லெப்.கேணல் எண்ணிக்கையில் இந்துவின் சொந்தங்கள் அதிகம் என்ற பெருமை பேசிய நண்பரை நினைவிருக்கிறது. 

யானியின் சாகசங்கள் செவிவழிக் கதைகளாக மட்டும் எழுத்தாளரால் பதியப்பட்டிருக்கிறது. எங்கள் நாயகர்கள் எங்கள் கண் முன்னே எண்பதுகளில் நிகழ்த்திய சாகசங்கள் கொஞ்சமா நஞ்சமா. வங்கி வாகனம் என எல்லோராலும் அறியப்பட்ட கேடிள்ஸ் அண்ணையின் வாகனம் இராணுவ ட்றக் முன்னால் அலாதியாகத் திருப்பியோட்டப்பட்டதை எத்தனை கிழவிகள் வெற்றிலை உரலை உணர்ச்சிவசப்பட்டு இடித்தபடி பேசி நான் பார்த்திருக்கிறேன். 

எத்தனை இலட்சம் சாதனைகள் நிகழ்ந்தபின் எண்பதுகளில் கேடிள்ஸ்; வாகனம் ஓடியதைப் பேசுகிறானே என யாரேனும் நினைக்கக் கூடும். காரணம் உள்ளது. இயக்கம் நிறுவனமாவதற்கு முன்னால் மக்களும் இயக்கமும் இருந்த மனநிலையில் தான் எதிரி பக்கம் இருந்து மேற்படி பதிவு வரையப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் மனிதம் என்ற பொதுமை சார்ந்து சிங்களக் கொமாண்டோவின் தம்பியார் நீட்டும் கரம் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

புதுமை

போரில் ஈரணிகளிலும் நின்ற அனைத்து வீரர்கள் சார்ந்தும் மரித்த பொதுமக்கள் சார்ந்தும் தன்னால் ஒரு சகோதரத்துவத்தை உள்ளுர முற்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது என்று சிங்கள எழுத்தாளர் சொன்ன வரி புதுமையாக இருக்கிறது. புத்தன் ஒருவேளை படிப்படியாய் இலக்கைக்கு மீள்கிறானோ என்ற நம்பிக்கையினை வளர்க்கிறது. 

என் அண்ணன் இழைத்த இன்னல்களிற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன். அதற்கான உரிமை என்னிடம் இல்லை. ஆனால், உங்கள் மீது அந்த இன்னலை இழைப்பதற்காக அவர் கொடுத்த விலை அபரிமிதம் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் என அவர் பதிந்திருப்பது புதுமையாய் இருக்கிறது. நம்பும் வகை இருக்கிறது. எங்களிற்கும் இருந்தது என்று ஒத்துக்கொள்ள முடிகிறது.

கருத்து

மேற்படி கட்டுரையில் போரின் பின் முன்வைக்கப்படும் பட்டவர்த்தமான பொது அறிவு, 2009 தையில் கிளிநொச்சி விழுந்ததைத் தொடர்ந்து பல தமிழராலும் முன்வைக்கப்பட்டுத் தான் வருகிறது. இருப்பினும் ஒன்று நடந்ததன் பின்னர் அது சார்ந்து பிறக்கும் அறிவு, குறித்த விடயம் நடப்பதற்கு முன்னால் அத்தனை இலகுவில் சாத்தியப்படுவதில்லை. அறுபது வருடங்களின் முன்னர் அந்தப் பொது அறிவு இப்போதிருப்பது போன்று பட்டவர்த்தனமாய் வெளிப்பட்டிருப்பின் ஒரு வேளை யானியை நாங்களும் கேடிள்சை அவர்களும் விளையாட்டு மைதானத்தில் சேர்ந்து கொண்டாடியிருக்கும் சாத்தியம் கைப்பட்டிருக்கலாம். ஆனால் தசாப்தங்களாக அந்தத் தீவு பொது அறிவினைத் தொலைத்திருந்தது.

தொலைத்த பொது அறிவினைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ஒரு விலை எப்போதும் இருக்கும். அந்தவiயில் இன்றைக்கு கட்டுரையில் பொது அறிவினைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி கருத்துக் கூறினும், அந்தத் தெளிவினை கண்டடைவதற்கு நாம் கொடுத்த ஒவ்வொரு சதமும் பேரம்பேசமுடியா விலையாக இருந்ததை மறுத்துவிடமுடியாது. இன்றைக்கு ஒருவேளை மேற்படி கட்டுரை தரக்கூடிய தெளிவினை வைத்து, இவ்விடயம் எப்போதும் இத்தனை இலகுவானதாய் இருந்ததாய் எவரும் நம்பிவிடக்கூடாது. இன்றைக்குக் கூட ஒட்டு மொத்த தேசமும் அந்தப் பொது அறிவினைக் கண்டடைந்துவிடவில்லை. சுவிற்சலாந்தில் கறுத்தச் சட்டையுடன் அடையாள அட்டை வளங்கும் இளையோரைப் பார்க்கிறோம். பிக்குகளைப் பார்க்கிறோம். தொலைத்த பொது அறிவினைத் தேடுதலும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது...

ஒரு வேளை மேற்படி கட்டுரைகள் போன்றன, பொது அறிவினைக் கண்டடையும் விலையினைச் சற்றுக் குறைக்கக் கூடும், பொது அறிவு மேலும் சிலரிற்குக் கிடைக்கும்வகை செய்யக்கூடும். செய்யும் என்று நம்புவோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் இணைத்த கட்டுரையை படிக்கவில்லை.

இலங்கைத் தீவில் தொலைந்துபோன பொது அறிவு என்பது நம்பிக்கையீனம் மிகுந்த இனங்கள் தங்களுக்குள் மோதுப்பட்டு பல ஆளுமைகளை இழக்கக் காரணமானது என்று அர்த்தம்கொள்கின்றேன். பிற இனங்களை அடக்கினால்தான் சிங்கள இனம் இலங்கைத் தீவில் நிலைத்திருக்கும் என்ற கருதுகோள் இருக்குமட்டும் பொது அறிவு திரும்பக்கிடைக்காது. இன்றைய சந்தைப்பொருளாதாரமும், சமூக வலைத்தளப் பாவனையும் ஜனநாயகத்தை செழுமையாக்கும் என்ற ஒரு தோற்றப்பாடு இருந்தாலும் அடிப்படையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை தோற்றுவிக்காது. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் எப்போதுமே ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணோடு பார்த்துக்கொண்டுதான் இருப்பர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.