Jump to content

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!


Recommended Posts

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!

 

61044_441392988800_754613800_5026948_400

 
 
 

‘‘இந்த நாட்­டின் பெரும்­பான்­மை­யி­ன­மான பெளத்த சிங்­கள மக்­க­ளை­யும், பெளத்த தேரர்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­க­ளில் அரசு ஈடு­பட்­டுள்­ள­தாக மகிந்த கூறி­யி­ருப்­பது சிறு­பிள்­ளைத் தன­மா­னது. மதத் தலங்­கள் கட்­டுப்­பா­டு­க­ளின்றி நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யி­லான சட்­ட­மூ­லம் ஒன்றை அரசு தயா­ரித்து வரு­வ­தைத் திரி­பு­ப­டுத்­திக் கூறி, மக்­களை அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்ெ­த­ழச் செய்­வதே மகிந்­த­வின் நய­வஞ்­ச­கத் திட்­ட­மா­கும். பெளத்த மதத்­தின் ஆதிக்­கம் அர­சி­னுள் நிலை பெற்­று­வ­ரும் நிலை­யில், மகிந்­த­வின் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது. எந்­த­வொரு நாட்­டி­லும் அர­சின் நட­வ­டிக்­கை­களில் மதம் நுழை­யு­மா­னால் அந்த நாட்­டில் அமை­தியை எதிர்­பார்க்க முடி­யாது. மத ரீதி­யான மோதல்­க­ளைத்­தான் காண­மு­டி­யும்.

இன­வா­தத்தை வளர்க்க முனை­யும்
பௌத்த மதத் தேரர்­கள்

அர­சி­ய­லும், மத­மும் இரு வேறு துரு­வங்­கள். இவை இணை­வ­தற்­கான வாய்ப்பே கிடை­யாது. ஆனால் சில நாடு­க­ளில் எதிர்­பா­ராத வகை­யில் அர­சி­ய­லில் மதம் கலந்து பெரும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. எமது நாடும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. இலங்­கை­யொரு பெளத்த சிங்­கள நாடு என அர­ச­மைப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தால், பெளத்த தேரர்­கள் அரச நிர்­வா­கத்­தில் தலை­யி­டு­கின்ற செயற்­பா­டு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாட்­டின் இனப் பிரச்­சினை மோச­மான கட்­டத்தை எட்­டி­ய­தற்கு பெளத்தமதத் தலை­வர்­க­ளைத்­தான் கார­ண­மா­கக் கூற முடி­யும். இன­வா­தம் பேசிப்­பே­சியே, இந்த நாடு சீர­ழிந்த நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இனங்­க­ளுக்­கி­டை­யில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­தும் இன­வா­தம்­தான். இந்த இன­வா­தத்­தின் ஊற்­றுக்­கண்­ணாக பெளத்த மதத் தலை­வர்­கள் உள்­ளமை கண் கூடு. சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு உரிமையும் எதை­யும் வழங்­கக்­கூ­டாது என்­ப­தில் பிடி­வா­த­மா­கச் செயற்­பட்டு வரும் இவர்­கள் நாட்­டைப் பற்றி சிறி­த­ள­வா­வது சிந்­திப்­ப­தா­கத் தெரிய வில்லை.

 

போரை ஊக்­கு­விக்­கும்
நிலைப்­பாட்­டில் செயற்­ப­டும்
பௌத்த மதத் துற­வி­கள்

தமி­ழர்­க­ளின் பிர­தேசங்க­ளில் மழைக் காளான்­க­ளைப் போன்று பெளத்த விகா­ரை­கள் முளைத்து வரு­கின்­றன. சில பகு­தி­க­ளில் முன்­னர் இருந்து சேத­ம­டைந்த இந்து ஆல­யங்­கள் புன­ர­மைக்கப் படாத நிலை­யில் அந்த இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தை­யும் காண முடி­கின்­றது. இதன் பின்­ன­ணி­யில் பெளத்­த­தே­ரர்­கள் சிலர் உள்­ளமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. அன்­பை­யும், அகிம்­சை­யையும் போதித்த புத்த பெரு­மான், கண்ட கண்ட இடங்­க­ளி­லும் தமது சிலை­களை வைக்­கு­மாறு ஒரு­போ­தும் கூறி­ய­தில்லை. கலிங்க நாட்­டின் மீது படை­யெ­டுத்து அந்த நாட்­டைச் சூறை­யா­டிய மாமன்­னன் அசோ­கன், அழி­வு­க­ளை­யும், உயி­ரி­ழப்­புக்­க­ளை­யும் கண்டு மனம் வெதும்பி ஆட்­சி­யைத் துறந்து பெளத்­தத்­தைத் தழு­வி­ய­தாக வர­லாறு கூற­கின்­றது. அவ­னது இரண்டு பிள்­ளை­க­ ளான மகிந்­த­னும், சங்­க­மித்­தி­ரை­யும் பெளத்த துற­வி­க­ளாக மாறி அந்த மதத்தை இலங்­கைக்­கும் கொண்டு வந்து பரப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­வ­துண்டு. ஆனால் இங்­குள்ள பெளத்த துற­வி­கள் போர் முனை­க­ளுக்­குச் சென்று படை­யி­ன­ருக்கு ஆசிர்­வா­தம் வழங்­கு­வ­தும், போரை ஊக்­கு­விப்­ப­தும் பெளத்த தர்­மத்­துக்கு முர­ணா­னது.

தமிழ் மக்­க­ளால் பெரி­தும் எதிர்பார்க்­கப்­பட்ட புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் மகா­நா­யக்க தேரர்­க­ளின் எதிர்ப்­புக் கார­ண­மாக கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளது. இது மீண்­டும் உயிர் பெற்று எழுமா? என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யது. அண்மையில் இடம்பெற்ற சிறு­பான்மை முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன் செயல்­க­ளி­லும் பெளத்த தேரர்­க­ளுக்­குப் பங்கு உள்­ள­தென்­பதை மறுக்க முடி­ய­வில்லை. இவை­யெல்­லாம் பெளத்த மதத்­துக்­கும், உண்­மை­யான பௌத்­தர்­க­ளுக்­கும் நிச்­ச­ய­மா­கப் பெருமை சேர்க்­காது.

கட்­டுப்­பா­டற்ற விதத்­தில்
மதத் தலங்­கள் நிர்­மா­ணிப்­ப­தைத்
தடுக்­கும் சட்ட மூலம் நாட்­டின் சகல
மதத்­த­வர்­க­ளுக்­கும் ஏற்­பு­டை­யதே

அரசு தயா­ரி்த்து வரும் கட்­டுப்­பா­டற்ற விதத்­தில் மதத் தலங்­கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் சட்ட மூலம், சகல மதங்­க­ளுக்­கும் பொது­வா­னது. பெளத்த மதத்தை மட்­டுமே கட்­டுப்­ப­டுத்­து­கின்ற ஒன்­றல்ல. தற்­போது மத வழிப்­ப­டுத்­த­லங்­கள் கட்­டுப்­பா­டு­கள் எது­வு­மின்றி கண்ட இடங்­க­ளி­லும் அமைக்­கப்­ப­டு­வ­தைக் காண முடி­கின்­றது.

ஆனால் இந்­தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­மா­ யின், தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் பெளத்த விகா­ரை­களை அமைக்­கும் பணி­க­ளுக்­குத் தடை­யேற்­பட்டு விடு­மென மகிந்த ராஜ­பக்ச அஞ்­சு­வ­தா­கத் தெரி­கின்­றது. இந்த விட­யத்­தில் பெரும்­பான்­மை­யி­ன­ரைத் தூண்­டி­விட்டு அர­சி­யல் ஆதா­யம் பெறு­வதே அவ­ரது நோக்­க­மெ­னத் துணிந்து கூற­லாம்.

பெளத்­தம் தவிர்ந்த ஏனைய மதத் தலை­வர்­கள் மீது பொது­வாக குற்­றச்­சாட்­டுக்­கள் எது­வும் இங்கு எழு­வ­தில்லை. அவர்­கள் தமது பணி­களை அமை­தி­யா­கவே செய்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் பெளத்­த­ம­தத் தலை­வர்­கள் அவ்­வா­றின்றி, சகல விட­யங்­க­ளி­லும் குறிப்­பாக அர­சி­ய­லில், தீவி­ர­மாக மூக்கை நுழைத்து வரு­கின்­ற­னர். அர­சி­யல் வாதி­கள் தமது வாக்கு வங்­கி­யைக் கருத்­தில் கொண்டு பெளத்த துறவிகள் சொல்­வ­தற்­கெல்­லாம் தலை­யாட்டி வரு­கின்­ற­னர். இதன் கார­ண­மா­கவே நாட்­டில் குழப்­பங்­கள் நில­வு­வ­தோடு இனங்­க­ளுக்­கி­டை­யில் அமை­தி­யின்­மை­யும் காணப்­ப­டு­கின்­றது.

ஆட்­சித் தலை­வர்­கள் மத­வா­தி­க­ளின் அடி­மை­க­ளாக இருக்­கும் வரை­யில், அவர்­க­ளால் எந்­த­வொரு தீர்­மா­னத்­தை­யும் சுதந்­தி­ர­மாக மேற்­கொள்ள முடி­யாது. இத­னால் நாட்டு மக்­களே பாதிக்­கப்­ப­டு­வார்­க­ளென்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது.

http://newuthayan.com/story/12/மத­வா­தி­க­ளால்-சீர­ழிகின்ற-இலங்­கைத்-திரு­நாடு.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத‌ வியாபாரிகளே உலக செல்வந்தர்கள். இவர்கள் எல்லா மத்திலும் உண்டு.எந்த வேலையும் உடல் வலிந்து செய்யாமல் மற்றவர்களின் உழைப்பில் வாழ்ந்து வருபவர்கள். உண்மையாக இறைவனுக்கு சேவை செய்வோர் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். இயற்கையே இறைவன். எந்த வித ‍‍‍‍accountability / transparency , எதுவுமே காட்டாதவர்கள்.

Religion the opium of the masses - Karl Marx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.