Jump to content

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!


Recommended Posts

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!

 

61044_441392988800_754613800_5026948_400

 
 
 

‘‘இந்த நாட்­டின் பெரும்­பான்­மை­யி­ன­மான பெளத்த சிங்­கள மக்­க­ளை­யும், பெளத்த தேரர்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­க­ளில் அரசு ஈடு­பட்­டுள்­ள­தாக மகிந்த கூறி­யி­ருப்­பது சிறு­பிள்­ளைத் தன­மா­னது. மதத் தலங்­கள் கட்­டுப்­பா­டு­க­ளின்றி நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யி­லான சட்­ட­மூ­லம் ஒன்றை அரசு தயா­ரித்து வரு­வ­தைத் திரி­பு­ப­டுத்­திக் கூறி, மக்­களை அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்ெ­த­ழச் செய்­வதே மகிந்­த­வின் நய­வஞ்­ச­கத் திட்­ட­மா­கும். பெளத்த மதத்­தின் ஆதிக்­கம் அர­சி­னுள் நிலை பெற்­று­வ­ரும் நிலை­யில், மகிந்­த­வின் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது. எந்­த­வொரு நாட்­டி­லும் அர­சின் நட­வ­டிக்­கை­களில் மதம் நுழை­யு­மா­னால் அந்த நாட்­டில் அமை­தியை எதிர்­பார்க்க முடி­யாது. மத ரீதி­யான மோதல்­க­ளைத்­தான் காண­மு­டி­யும்.

இன­வா­தத்தை வளர்க்க முனை­யும்
பௌத்த மதத் தேரர்­கள்

அர­சி­ய­லும், மத­மும் இரு வேறு துரு­வங்­கள். இவை இணை­வ­தற்­கான வாய்ப்பே கிடை­யாது. ஆனால் சில நாடு­க­ளில் எதிர்­பா­ராத வகை­யில் அர­சி­ய­லில் மதம் கலந்து பெரும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. எமது நாடும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. இலங்­கை­யொரு பெளத்த சிங்­கள நாடு என அர­ச­மைப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தால், பெளத்த தேரர்­கள் அரச நிர்­வா­கத்­தில் தலை­யி­டு­கின்ற செயற்­பா­டு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாட்­டின் இனப் பிரச்­சினை மோச­மான கட்­டத்தை எட்­டி­ய­தற்கு பெளத்தமதத் தலை­வர்­க­ளைத்­தான் கார­ண­மா­கக் கூற முடி­யும். இன­வா­தம் பேசிப்­பே­சியே, இந்த நாடு சீர­ழிந்த நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இனங்­க­ளுக்­கி­டை­யில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­தும் இன­வா­தம்­தான். இந்த இன­வா­தத்­தின் ஊற்­றுக்­கண்­ணாக பெளத்த மதத் தலை­வர்­கள் உள்­ளமை கண் கூடு. சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு உரிமையும் எதை­யும் வழங்­கக்­கூ­டாது என்­ப­தில் பிடி­வா­த­மா­கச் செயற்­பட்டு வரும் இவர்­கள் நாட்­டைப் பற்றி சிறி­த­ள­வா­வது சிந்­திப்­ப­தா­கத் தெரிய வில்லை.

 

போரை ஊக்­கு­விக்­கும்
நிலைப்­பாட்­டில் செயற்­ப­டும்
பௌத்த மதத் துற­வி­கள்

தமி­ழர்­க­ளின் பிர­தேசங்க­ளில் மழைக் காளான்­க­ளைப் போன்று பெளத்த விகா­ரை­கள் முளைத்து வரு­கின்­றன. சில பகு­தி­க­ளில் முன்­னர் இருந்து சேத­ம­டைந்த இந்து ஆல­யங்­கள் புன­ர­மைக்கப் படாத நிலை­யில் அந்த இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தை­யும் காண முடி­கின்­றது. இதன் பின்­ன­ணி­யில் பெளத்­த­தே­ரர்­கள் சிலர் உள்­ளமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. அன்­பை­யும், அகிம்­சை­யையும் போதித்த புத்த பெரு­மான், கண்ட கண்ட இடங்­க­ளி­லும் தமது சிலை­களை வைக்­கு­மாறு ஒரு­போ­தும் கூறி­ய­தில்லை. கலிங்க நாட்­டின் மீது படை­யெ­டுத்து அந்த நாட்­டைச் சூறை­யா­டிய மாமன்­னன் அசோ­கன், அழி­வு­க­ளை­யும், உயி­ரி­ழப்­புக்­க­ளை­யும் கண்டு மனம் வெதும்பி ஆட்­சி­யைத் துறந்து பெளத்­தத்­தைத் தழு­வி­ய­தாக வர­லாறு கூற­கின்­றது. அவ­னது இரண்டு பிள்­ளை­க­ ளான மகிந்­த­னும், சங்­க­மித்­தி­ரை­யும் பெளத்த துற­வி­க­ளாக மாறி அந்த மதத்தை இலங்­கைக்­கும் கொண்டு வந்து பரப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­வ­துண்டு. ஆனால் இங்­குள்ள பெளத்த துற­வி­கள் போர் முனை­க­ளுக்­குச் சென்று படை­யி­ன­ருக்கு ஆசிர்­வா­தம் வழங்­கு­வ­தும், போரை ஊக்­கு­விப்­ப­தும் பெளத்த தர்­மத்­துக்கு முர­ணா­னது.

தமிழ் மக்­க­ளால் பெரி­தும் எதிர்பார்க்­கப்­பட்ட புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் மகா­நா­யக்க தேரர்­க­ளின் எதிர்ப்­புக் கார­ண­மாக கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளது. இது மீண்­டும் உயிர் பெற்று எழுமா? என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யது. அண்மையில் இடம்பெற்ற சிறு­பான்மை முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன் செயல்­க­ளி­லும் பெளத்த தேரர்­க­ளுக்­குப் பங்கு உள்­ள­தென்­பதை மறுக்க முடி­ய­வில்லை. இவை­யெல்­லாம் பெளத்த மதத்­துக்­கும், உண்­மை­யான பௌத்­தர்­க­ளுக்­கும் நிச்­ச­ய­மா­கப் பெருமை சேர்க்­காது.

கட்­டுப்­பா­டற்ற விதத்­தில்
மதத் தலங்­கள் நிர்­மா­ணிப்­ப­தைத்
தடுக்­கும் சட்ட மூலம் நாட்­டின் சகல
மதத்­த­வர்­க­ளுக்­கும் ஏற்­பு­டை­யதே

அரசு தயா­ரி்த்து வரும் கட்­டுப்­பா­டற்ற விதத்­தில் மதத் தலங்­கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் சட்ட மூலம், சகல மதங்­க­ளுக்­கும் பொது­வா­னது. பெளத்த மதத்தை மட்­டுமே கட்­டுப்­ப­டுத்­து­கின்ற ஒன்­றல்ல. தற்­போது மத வழிப்­ப­டுத்­த­லங்­கள் கட்­டுப்­பா­டு­கள் எது­வு­மின்றி கண்ட இடங்­க­ளி­லும் அமைக்­கப்­ப­டு­வ­தைக் காண முடி­கின்­றது.

ஆனால் இந்­தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­மா­ யின், தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் பெளத்த விகா­ரை­களை அமைக்­கும் பணி­க­ளுக்­குத் தடை­யேற்­பட்டு விடு­மென மகிந்த ராஜ­பக்ச அஞ்­சு­வ­தா­கத் தெரி­கின்­றது. இந்த விட­யத்­தில் பெரும்­பான்­மை­யி­ன­ரைத் தூண்­டி­விட்டு அர­சி­யல் ஆதா­யம் பெறு­வதே அவ­ரது நோக்­க­மெ­னத் துணிந்து கூற­லாம்.

பெளத்­தம் தவிர்ந்த ஏனைய மதத் தலை­வர்­கள் மீது பொது­வாக குற்­றச்­சாட்­டுக்­கள் எது­வும் இங்கு எழு­வ­தில்லை. அவர்­கள் தமது பணி­களை அமை­தி­யா­கவே செய்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் பெளத்­த­ம­தத் தலை­வர்­கள் அவ்­வா­றின்றி, சகல விட­யங்­க­ளி­லும் குறிப்­பாக அர­சி­ய­லில், தீவி­ர­மாக மூக்கை நுழைத்து வரு­கின்­ற­னர். அர­சி­யல் வாதி­கள் தமது வாக்கு வங்­கி­யைக் கருத்­தில் கொண்டு பெளத்த துறவிகள் சொல்­வ­தற்­கெல்­லாம் தலை­யாட்டி வரு­கின்­ற­னர். இதன் கார­ண­மா­கவே நாட்­டில் குழப்­பங்­கள் நில­வு­வ­தோடு இனங்­க­ளுக்­கி­டை­யில் அமை­தி­யின்­மை­யும் காணப்­ப­டு­கின்­றது.

ஆட்­சித் தலை­வர்­கள் மத­வா­தி­க­ளின் அடி­மை­க­ளாக இருக்­கும் வரை­யில், அவர்­க­ளால் எந்­த­வொரு தீர்­மா­னத்­தை­யும் சுதந்­தி­ர­மாக மேற்­கொள்ள முடி­யாது. இத­னால் நாட்டு மக்­களே பாதிக்­கப்­ப­டு­வார்­க­ளென்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது.

http://newuthayan.com/story/12/மத­வா­தி­க­ளால்-சீர­ழிகின்ற-இலங்­கைத்-திரு­நாடு.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத‌ வியாபாரிகளே உலக செல்வந்தர்கள். இவர்கள் எல்லா மத்திலும் உண்டு.எந்த வேலையும் உடல் வலிந்து செய்யாமல் மற்றவர்களின் உழைப்பில் வாழ்ந்து வருபவர்கள். உண்மையாக இறைவனுக்கு சேவை செய்வோர் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். இயற்கையே இறைவன். எந்த வித ‍‍‍‍accountability / transparency , எதுவுமே காட்டாதவர்கள்.

Religion the opium of the masses - Karl Marx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.