Jump to content

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி


Recommended Posts

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி

7dc4fcf3-4c91-4c52-9dc5-ef8795c761ff-800
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

c4b60f75-7135-42c8-9ea7-e280680cbf1a-800e9990b4f-79e4-4a26-bf7e-9aa335f3ffa6.jpg

http://globaltamilnews.net/2018/80483/

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட்: தமிழக மக்களுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட்

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சயில் உள்ள கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்திய அரசின் செயற்பாடுகளை கண்டித்த கோஷங்கள் உள்ளடக்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கவனயீர்ப்பு தொடர்பில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயல்பாட்டு உறுப்பினர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில், "காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகிய நாங்கள், 462 நாட்களாக தொடர்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம் எம்மை போல சாத்வீகரீதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராடிய 11 அப்பாவி தமிழ் மக்கள் இந்திய மத்திய அரசின் கை கூலிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இச்சம்பவம் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது,"என்று கூறினார்.

 

 

"இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. நாம் ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்தோம் பதினாறாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் இந்தியாவில் நடந்த இச்சம்பவத்தை கேட்டு எங்கள் இதயம் துடிக்கின்றது. அவர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள். கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்."

ஸ்டெர்லைட் Image captionசெவ்வாயன்று தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது எரிக்கப்பட்ட வாகனம்

"இத்திட்டம் தூத்துக்குடியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியதிட்டம் இத்திட்டத்தினால் இலங்கைக்கும் பாதகம் ஏற்படும் எனவே இலங்கை அரசும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஸ்டெர்லைட் திட்டத்தினை நிறுத்த முன்வரவேண்டும். இலங்கையில் தமிழ் மக்களை இரண்டாம் பிரஜைகள் போல் பார்ப்பது போல் மோடி அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜையாக பாராமல், தமிழ் மக்களையும் தமது சொந்த பிரஜைகளாக கவனித்து அவர்களது வாழ்வுரிமையை கொடுக்கவேண்டும் அவர்களது சாத்வீக போராட்டத்துக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவேண்டும்," என்றார் லீலாதேவி ஆனந்த நடராஜா.

இலங்கையில் வலிந்து காணமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் 462வது நாளாக தொடர்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-44242444

Link to comment
Share on other sites

இந்த செய்தியின் நடுவிலே எரிக்கப்பட்ட தீயணைப்பு வாகனத்தைப்போடுவதன் மூலம் தான் யார், தனது நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அனர்த்ததுக்கு காரணமான ஆலையின் படத்தையோ, சுட்ட பின்னர் காவல்துறையினர் இழுத்து செல்லும் காட்சியையோ காட்ட துப்பில்லாத ஊடகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீது சிங்களவனால் நடத்தபட்ட படுகொலைகளை நம்மில் சிலர் மறந்துவிட்டாலும், வருடா வருடம் சினத்துடன் நினைவுகூரும்..தமிழக சொந்தங்களின்மீது,

நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைக்கு

யாழ்களத்திலும் துயர் பகிர்வோம் பகுதியில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்..

அது  அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு ஆத்ம பலமாக,தமிழக உறவுகள்மீது நாம் கொண்ட அக்கறைமிக்க காலத்தின் பதிவாக தமிழக உறவுகள் பார்வையில் படலாம்...

 

Link to comment
Share on other sites

37 minutes ago, valavan said:

 

யாழ்களத்திலும் துயர் பகிர்வோம் பகுதியில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்..

 

 

நல்ல கருத்து.

இது பொது பகுதி என்பதால் நீங்களே ஒரு திரியை திறந்து இருக்கலாம், அல்லது இனியும் திறக்க முடியும்.

Link to comment
Share on other sites

 

50 minutes ago, valavan said:

எம்மீது சிங்களவனால் நடத்தபட்ட படுகொலைகளை நம்மில் சிலர் மறந்துவிட்டாலும், வருடா வருடம் சினத்துடன் நினைவுகூரும்..தமிழக சொந்தங்களின்மீது,

நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைக்கு

யாழ்களத்திலும் துயர் பகிர்வோம் பகுதியில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்..

அது  அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு ஆத்ம பலமாக,தமிழக உறவுகள்மீது நாம் கொண்ட அக்கறைமிக்க காலத்தின் பதிவாக தமிழக உறவுகள் பார்வையில் படலாம்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

தொழிலால் இந்திய பாதுகாப்பு படையில் வேலை பார்த்தாலும், உணர்வால்  முதலில் தமிழர்கள் அதன்பின்புதான் மற்றதெல்லாம் என்பதை இவர்களின் கருத்து சொல்கிறது.

பேஸ்புக்கில் தமிழக சஞ்சிகைகளில் இலங்கையின் இறுதியுத்தம், தலைவர் பிரபாகரன் வரலாறு,புலிகள் பற்றிய செய்திகளின்போது கருத்துக்கள் எதுவும் பெரிதாக சொல்லாவிடினும் லைக்குகள், கவலை தோய்ந்த முககுறிகளிட்ட பல தமிழக எல்லைபடை வீரர்களை கவனித்திருக்கிறேன்.

தொழிலும் தேசமும்தான் வேறு என்றாலும் இனம் அவர்களுக்கு ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

தூத்துக்குடியில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து நல்லூரில் போராட்டம்

3e4dadd1-4b15-4f82-89db-96cd7b37cafd.jpg

தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து நல்லூர் முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

6cd2eae3-d7ee-4d9f-a5de-049455c205dc.jpg368286d7-158a-4138-bfb3-9cc432686363.jpga0d464f2-6387-4f52-8a53-171168e2b699.jpgf5a9c25c-81fd-4f30-91a1-ec828f3ad676-800

 

http://globaltamilnews.net/2018/80732/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.