Jump to content

முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு.


Recommended Posts

முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு.

 

 

formar-ltte-6-1.jpg?resize=800%2C533
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்

 

தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் காவல்துறையினர் , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் விமானப்படையினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த அகழ்வினட போது ஒரு வெடிபொருள் கண்டு பிடிக்கப்படும் கருவியும்(ஸ்கானர்) மற்றும் ஐந்து கைதுப்பாக்கி ரவைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

formar-ltte-3-1.jpg?resize=768%2C512formar-ltte-1.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/80399/

Link to comment
Share on other sites

ஆயுதங்கள் மீட்கப்பட்ட வீடு, புலமம்பெயர்ந்துவாழும் முன்னாள் போராளி தீபனுக்கு சொந்தானது?

 

 

புலிகளின் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட இவர் கோபி – அப்பனுடன் தொடர்புபட்டவரா? – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் அகழ்வு விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

 

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்

இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர் தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு பொலிசார், , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் விமானப்படையினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு சென்ற விமானப்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் தர்மபுரம் பொலிசார், , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்டு பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தொட்டா ஐந்து என்பன மீட்க்கப்பட்டுள்ளது இவை பாவிக்கக்கூடிய நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தீபன் என்கின்ற முனியாண்டிராஜா ரஞ்சன் முன்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில்உயர் தரப்புக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் எனவும் மீள் குடியேற்றத்தின் பின்னர் பாரிய அளவில் பேசப்பட்ட கோபி அப்பன் அவர்களின் பிரச்சனையில் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பாததுகாப்பு தரப்பினரால் கைதுசெய்ய முறைப்பட்ட பொழுது நாட்டை விட்டு தப்பிச் சென்று புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. 

tharmapuram-news-1.jpg?resize=800%2C534tharmapuram-news-2.jpg?resize=800%2C534tharmapuram-news-3.jpg?resize=800%2C534tharmapuram-news-4.jpg?resize=800%2C534tharmapuram-news-5.jpg?resize=800%2C534tharmapuram-news-6.jpg?resize=800%2C534tharmapuram-news-7.jpg?resize=800%2C534tharmapuram-news-8.jpg?resize=800%2C534tharmapuram-news-9.jpg?resize=800%2C534tharmapuram-news-10.jpg?resize=800%2C480tharmapuram-news-11.jpg?resize=480%2C800

http://globaltamilnews.net/2018/80416/

Link to comment
Share on other sites

சரி காட்டிக்கொடுத்தவரிடம் கேளுங்கள் வெடிபொருள் கண்டறி கருவியையும், ஐந்து கைத்துப்பாக்கி ரவைகளையும் வைத்து எந்த ராணுவ முகாமை தாக்கி அழிக்க முடியும். 

வெடிபொருள் கண்டறிகருவியை பார்க்கும்போது ஹலோ ரஸ்ட் எனும் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்துக்கு சொந்தமானது போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவருக்கு புலம்பெயர் நாட்டில் வீசா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

 

குறித்த தீபன் என்கின்ற முனியாண்டிராஜா ரஞ்சன் முன்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில்உயர் தரப்புக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் எனவும் மீள் குடியேற்றத்தின் பின்னர் பாரிய அளவில் பேசப்பட்ட கோபி அப்பன் அவர்களின் பிரச்சனையில் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பாததுகாப்பு தரப்பினரால் கைதுசெய்ய முறைப்பட்ட பொழுது நாட்டை விட்டு தப்பிச் சென்று புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. 

 

http://globaltamilnews.net/2018/80416/

இத்தனை வருஷமா ஒழுங்கா கிறீஸ் பூசப்படாத நிலையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் சின்னதாகூட துருப்பிடிக்காமலா இருந்திருக்கும்?

நிலக்கணிகள் மீட்ப்புக்கே பாதுகாப்பு உபகரணங்கள்,விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்போது,

நிலத்துக்கடிக்கியில் எந்த வகையான,எவ்வளவு தொகையில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியாத நிலையில்,தோண்டுற இயந்திரத்தை இயக்குபவர் குடைபிடித்தபடியும், மற்றவர்கள் இப்படி கூட்டமா சந்தையில் நிற்பதுபோல் நின்றா தோண்டுவார்கள்?

அவர்கள் தோண்டும் ஸ்டைலை பார்த்தால் ஏற்கனவே அடியில் என்ன இருக்கிறது என்ற விபரமே அவர்களிடம் இருந்திருக்கிறதுபோல்தான் தெரிகிறது.

இந்த ஆயுதங்களை வைத்து ஒரு வலைப்பின்னல்போல் கொஞ்சப்பேரை கைது செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்,ரஞ்சன் எஸ்கேப் ஆனதால திட்டம் பிழைச்சுபோய் வைச்சத திரும்ப எடுக்கிறார்கள் என்பதுபோல்தான் பலருக்கும் தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழவன் குறிப்பிட்டதுபோல் தாங்களே புதைத்து பின் தோண்டி எடுப்பதுபோல்தான் இருக்கிறது. செய்தி எழுதியவரின் தமிழ்வசன நடையிலும் சிங்கள அல்லது முஸ்லிம் சாயம் தெரிகிறது. மொத்தத்தில் எல்லாமுயற்சியும் வேஸ்ட்டு.

Link to comment
Share on other sites

3 hours ago, vanangaamudi said:

வழவன் குறிப்பிட்டதுபோல் தாங்களே புதைத்து பின் தோண்டி எடுப்பதுபோல்தான் இருக்கிறது. 

சிறீலங்காவின் இன்றைய அரசியல்வாதிகளும், பாதுகாப்புப் படைகளும், யானையைக் காட்டி இதுதான் பூனை என்றால்...! மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் எல்லோரும் நம்பித்தான் ஆகவேண்டும்.!! நம்பிக்கைதான் வாழ்க்கை. 
 

Link to comment
Share on other sites

இது திட்டமிட்ட நாடகம் என்று புலப்படுகிறது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.