Jump to content

தியாகிகளின் நாளில் ஈகோ இழுபறியா - வ.ஐச.ஜெயபாலன்


Recommended Posts

ஆயிரம் அஞ்சலிகள் நிகழட்டும் அத்தனையும் முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு ஆகட்டுமென முன்னரே குறிப்பிட்டேன். யாரும் கேட்பாரில்லை. 

.

பெரும்போர் நிகழ்ந்த விடுதலைப் புலிகளின் காலமும் அவர்களது ஆயுத போராட்டஅமைப்பும் பலமும் அதன் வழிவந்த அணுகுமுறைகளும் வேறு. மாறுபட்ட அறப்போராட்ட  காலத்தில் செயல்ப்படும் மாறுபட்ட அமைப்பும் பலமும் உள்ள பல்வேறுபட்ட அமைப்புகள் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏகபோக அரசியல் ஆக்க முனைந்தது வேடிக்கையானது. அடிப்படையில் மாறுபட்ட மாகாணசபையும் பல்கலைகழக மாணவர் அமைப்பும்  தனித்தனியே முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை  நிகழ்ந்திருந்தால் சிக்கலில்லாமல் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவேந்தல் நிகழ்வு இப்படி ஈகோ இழுபறியானதற்கு முதலமைச்சர் மாணவர்கள் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் இயங்குகிறார்கள்  என  மிரட்டும் தொனியுடன்  கொச்சைப்படுத்தியமையும் பிரபாகரன் நினைப்போடு நினைவேந்தலை ஏகபோகமாக சொந்தம்கொண்டாடியதுதான் காரணம். இத்தகைய மனநிலையுள்ள ஒருவரால் பல்வேறு தரப்பினரையும் இணைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை.  இந்த ஏகபோக மனப்பாண்மையை அப்போது விமர்சிக்காதவர்கள் இப்ப மாணவர்கள்மீது மட்டும் கோபம் கொள்வதில் அர்த்தமில்லை.  கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழியாக  பிரபாகரன் நினைப்போடு செயல்படுவதையும் அரசியல் செயற்பாடுகளை ஏகபோக ஆதிக்கமாக்கும் அடாவடித்தனத்தையும் எல்லா அரசியல் செயல்பாட்டாளர்களும் கைவிடவேண்டும்.

.

சினேகபூர்வமான அமைப்புகள் தமக்குள் ஒற்றுமைப்பட்டுத் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நிகழ்த்தியிருந்தால் இன்கொலையில் உயிர்பலியான உறவுகளுக்கு மரியாதை செய்த நிகழ்வுகளாக நினைவேந்தல் நாள் மேம்பட்டிருக்கும். இனி இப்படி வேண்டாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.