Jump to content

மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது


Recommended Posts

மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது

 

 
Ddo1tGKU0AAQVWJjpg

மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ப்ட்ட்ன்ர்.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மெரினாவில் நடத்துவதற்காக சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

 

அதில், “நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் உள்ளரங்குகளிலும் நடத்திய போதும் சில அமைப்புகள், பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

மெரினா பொழுதுபோக்கு இடம் என்பதால் நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால், மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மெரினா கடற்கரைக்குள் எந்த இயக்கமும் நுழைய முடியாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னை மெரினா, சேப்பாக்கம், நேப்பியர் மேம்பாலம், கலங்கரை விளக்கம் பகுதிகளில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக பாரதி சாலையின் முக்கிய இடத்தில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி சாலை முழுவதும் தடுப்புகள் அமைத்து, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாரதி சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதையடுத்து பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

DdpC8waU0AE27Lyjpg
 

வைகோ ஆதங்கம்

இது தொடர்பாக வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்; இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்தக்கூடாதா?; இந்தியாவில் அரசுகள் மாறின. துரோகம் மாறவில்லை'' என்றார் ஆதங்கத்துடன்.

இதைத் தொடர்ந்து மெரினாவை நோக்கி பேரணியாகச் சென்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நினைவேந்தல் பேரணியில் கலந்துகொண்டு மெரினாவை நோக்கிச் சென்றவர்கள் கைதாகுமாறு காவல்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து பேரணியில் பங்கேற்ற 1000க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23943237.ece?homepage=true

Link to comment
Share on other sites

"மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்"

மெரினா

சென்னை மெரினா கடற்கரையில் ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக மே17அமைப்பின் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

மே 17அமைப்பு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய நினைவேந்தல் நிகழ்வில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலச்சந்திரனின் படத்தைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி நடந்துவந்து அவர்கள் முழக்கமிட்டனர்.

நினைவேந்தல் நிகழ்வின்போது பிபிசி தமிழிடம் பேசிய திருமுருகன் காந்தி, இறந்த தமிழ் சொந்தங்களுளாக, ஒரு நிகழ்வை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுப்பது மனித உரிமை மீறல் என்றார்.

 
 

''இறந்தவர்களை நினைவு கூர கடலுக்கு சென்று நினைவேந்தலை நடத்துவது காலங்காலமாக பின்பற்றப்படும் தமிழ் மரபு. இதற்கு அரசு அனுமதி மறுப்பது குற்றமாகும். ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடம் போன்ற இடங்களில் நினைவேந்தல் நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நாங்கள் நடத்தும் நினைவேந்தலுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? இந்த நிகழ்வுக்கு அரசின் அனுமதி தேவையில்லை, இந்த ஆண்டு புதுக்கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் நினைவேந்தலை நடத்த முடியும் என்பது சாத்தியமாகியுள்ள நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மெரினா கடற்கரையில் நடத்துவற்கு ஏன் தடை விதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மெரினா

''இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு துணை போனதாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். அதற்கான ஆதாரங்களை நாங்கள் நிறுவி வந்துள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் இங்கு நினைவேந்தல் நடத்த தடை விதிக்கிறார்கள். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில்(Universal Declaration of Human Rights) இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், இங்கு இறந்தவர்களை நினைவு கூறும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச அமைப்புகளிடம் நாங்கள் எடுத்துச்செல்வோம்'' என்று தெரிவித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற வைகோ, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

''எத்தனை தடைகள் வந்தாலும், இளைஞர்கள் பலர் உணர்வு ரீதியாக இந்த நிகழ்வில் பங்குபெறுவதை தடுக்கமுடியாது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்'' என்று அவர் கூறினார்.

ஐஸ்ஹவுஸ் பகுதியில், பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலையை நோக்கி வந்த பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/india-44191283

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.