Jump to content

5 பேரின் மரணத்துக்கு காரணமான மர்ம நோய்! இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்


Recommended Posts

5 பேரின் மரணத்துக்கு காரணமான மர்ம நோய்! இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்

 
 
Image

கடந்த சில நாட்களாக தென்மாகாணத்தில் 5 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆய்வுகூட அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நோயானது பிரதானமாக Influenza எனும் Virus இனால் உருவாகும் நியூமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க நேற்று (18/05/2018) தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையைத் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவ்வறிக்கையில் டாக்டர் ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையிலும், மாத்தறை பொது வைத்தியசாலையிலும் அதிகளவான சடுதியான சுவாச நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒரு வயதுக்கு குறைந்த சிசு மரணங்கள் இந்த சுவாச நோயினால் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..,

நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சடுதியான காய்ச்சல் மற்றும் சுவாச அறிகுறிகளுடன் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள சிறு பிள்ளை விடுதிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆய்வுகூட அறிக்கைகளின் படி இது இன்புளுவன்ஸா வைரஸ்சினால் பரப்பப்படும் நியூமோனியா காய்ச்சல் என கண்டறிய பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களிலும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற இன்புளுவென்சா நோய் அவதானிக்கப்பட்டது. இந்நோய் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் பின்வரும் சுகாதார பழக்க வழக்கங்களை கையாளுமாறு ஆலோசனை வழங்கபடுகிறது. இது சுவாசத்தினால் பரவும் நோய் என்பதால் காய்ச்சல் உள்ளவர்கள் பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடக்கூடிய முகமூடிகளை பாவிக்குமாறும், காய்ச்சலோடு இருமல் தடுமல் உள்ளவர்கள் கைக்குட்டையை பாவிக்குமாறும் வலியுறுத்த படுகிறார்கள்.

காய்ச்சலின்போது அடிக்கடி கைகளை சோப் கொண்டு கழுவுமாறும், முகத்தை அடிக்கடி தொடுவதை தவிர்க்குமாறும் வேண்டப்படுகிறார்கள்.

அதிக சன நெரிசல் உள்ள இடங்களை, குறிப்பாக காய்ச்சல் உள்ள நிலையில் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்நோய்க்கு இரண்டு வயதுக்குட்பட்ட சிறுபிள்ளைகள், கர்ப்பிணி தாய்மார், பாலுட்டும் தாய்மார், சுவாச, இருதய, சிறுநீரக நோயுள்ளவர்கள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். இவர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

காய்ச்சல் போன்ற நோய் நிலைமை ஏற்படும் போது உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு டாக்டர் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பிற்குறிப்பு :-

இதட்கிடையில் இந்நோய் இலங்கை கடல் இறால்களை உட்கொள்வதினால் ஏட்படுவதாக எந்த வித அடிப்படையும் அற்ற தவறான செய்தி ஒன்று நேற்று முதல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான செய்தி ஆகும்.

By:- Dr Ziyad A.I.A

Information Unit,

Ministry of Health

http://www.ibctamil.com/health/80/100757?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

தெற்கில் பரவும் வைரஸ் காய்ச்சல்:13 பேர் உயி­ரி­ழப்பு 600 பேர் வரை பாதிப்பு

 

(எம்.எப்.எம்.பஸீர்)

தென் மாகா­ணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் கார­ண­மாக இது­வரை 13 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 600 இற்கும் மேற்­பட்டோர் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.  

இந் நிலையில் பரவி வரும் இந்த காய்ச்சல் தொடர்பில் ஆராய சுகா­தார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் நிபு­ணர்கள் அடங்­கிய குழு, இன்று தெற்­குக்கு விஜயம் செய்­வ­தாக

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜய­சிங்க தெரி­வித்தார்.  

இந்த குழு­வா­னது காலி, மாத்­தறை மற்றும் கம்­பு­று­பிட்­டிய பகு­தி­களில் ஸ்தல பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும், குறித்த தொற்றை கட்­டுப்­ப­டுத்த பூரண நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

ஏற்­க­னவே இது தொடர்பில் கொழும்பு வைத்­திய ஆய்வு மையம் மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு என்­பன இந்த காய்ச்சல் தொடர்பில் ஆய்வு செய்து சுகா­தார அமைச்­சுக்கு அறிக்கை சமர்­பித்­துள்ள நிலை­யி­லேயே இன்று சிறப்பு நிபு­ணர்கள் குழு அங்கு செல்­ல­வுள்­ளது.

ஏற்­க­னவே சமர்­பிக்­கப்­பட்­டுள்ள ஆய்வின் படி, தெற்கில் பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்­ச­லா­னது, இன்­பு­ளு­வென்ஸா வைர­ஸுடன் எடினோ வைரஸ் மற்றும் நியூ­மோ­கொக்கல் பட்­றீ­றியா என்­ப­வற்றின் தாக்கம் கார­ண­மாக ஏற்­படும் காய்ச்சல் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே தற்­போது அது பர­வு­வதை தடுப்­ப­தற்­கான ஆரம்­ப­கட்ட வேலைகள், அறி­வு­றுத்­தல்கள் தெற்கில் அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், வைரஸ் தொற்றை கட்­டுப்­ப­டுத்த போதிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் வைத்­தியர் அனில் ஜய­சிங்க தெரி­வித்தார்.

பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ள 13 பேரில் 7 பேர் சிறு­வர்கள் என தெரி­விக்கிம் சுகா­தார அமைச்சின் தக­வல்கள், மேலும் 600 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.  
தென் மாகாண சுகா­தார சேவைகள் அலு­வ­லக தக­வல்­களின் பிர­காரம், காலி கரா­பிட்­டிய வைத்­தி­ய­சாலை, மாத்­தறை பொது வைத்­திய சாலை, எல்­பிட்­டிய, கம்­பு­று­பிட்­டிய, தங்­காலை, வலஸ்­முல்லை ஆகிய ஆரம்ப வைத்­தி­ய­சா­லை­களில் இந்த வைரஸ் காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளிகள் சிகிச்சைப் பெறு­வ­தாக அறிய முடி­கின்­றது.  

இந் நிலையில் குறித்த நோயா­ளி­க­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும் உடன் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அனில் ஜாசிங்­க­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­படி நோயா­ளி­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க அவ­சி­ய­மான ஹைப்லோ ஒட்­சிசன் இயந்­தி­ரங்கள் 10 காலி கரா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் வைத்­தி­யர்கள் கோரும் அனைத்து வச­தி­க­ளையும் வழங்க தயா­ராக உள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 இரண்டு வய­துக்கு குறை­வான குழந்­தைகள், முன் பள்ளி சிறு­வர்கள், கர்ப்­பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோ­தி­பர்கள் இந்த வைரஸ் தொற்று கார­ண­மாக இல­குவில் பாதிக்­கப்­படக் கூடி­ய­வர்­க­ளாக காணப்­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளுக்கு தனி நபர் பாது­காப்பு முறை­மை­களை கையாள ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு தெரி­விக்­கின்­றது.

குறிப்­பாக பொது இடங்­களில், மூக்கு, வாய் என்­ப­வற்றை மூடும் வகை­யி­லான பாது­காப்பு அணி­க­லன்­களை அணிய ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பில் அவதானிக்கப்பட்டால் முன்பள்ளி உள்ளிட்ட தனியார் வகுப்புக்களுக்கோ சிறுவர்களை அனுப்ப வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியட் அனில் ஜயசிங்க பெற்றோரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-21#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை வாசித்தால் தென்னிழங்கைச் செய்தியாக இருக்கிறது. ஆனால் புகைப்படத்தில் இருப்பது தமிழர்கள் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

கேரளாவிலும் இதுபோன்ற ஒரு வைரஸ் தாக்கமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

https://tamil.oneindia.com/news/india/deadly-nipah-virus-kills-15-people-18-days-kerala-320314.html

தென்மேற்கு பருவக்காற்றுடன் தொடர்புள்ளதாக இருக்கலாம். 

 

Link to comment
Share on other sites

12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு

 

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, அம்மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரையில் மூடிவிட தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

flu.jpg

குறித்த வைரஸ் காய்ச்சல் முன் பள்ளி சிறுவர்கள், அந்த வயதை அண்டிய வயதுப் பிரிவினரை வெகுவாக பாதிக்கும் நிலையிலேயே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.

இதனிடையே குறித்த வைரஸ் காய்ச்சலை ஏர்படுத்தும் இன்புளுவென்ஸா வைரஸ்,  எடினோ வைரஸ்,  நியூமோகொக்கல் பக்டீறியா தாக்கத்துக்கு உள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொழும்பு வைத்திய பரிசோதனை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆராய்ந்த போதே இன்று இந்த 22 பேரும் குறித்த வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 ஏற்கனவே இந்த வைரஸ் தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் தகவல்கள் வெளிப்படுத்திய நிலையில், அவர்களில் 12 பேர் சிறுவர்களாவர். மற்றையவர் கர்ப்பிணித் தாயாவார்.

தென்மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய ஆரம்ப வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அறிய முடிகின்றது. 

 இந் நிலையில் குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடன் பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு உத்தர்விட்டுள்ளார். 

அதன்படி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவசியமான ஹைப்லோ ஒட்சிசன் இயந்திரங்கள் 10 காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன் பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச க்கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் இந்த வைரஸ் தொற்று காரணாமாக இலகுவில் பாதிக்கப்படக் கூடியவ்ர்களாக  காணப்படுவதாகவும் அவர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு முறைமைகளை கையாள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 

 குறிப்பாக பொது இடங்களில், மூக்கு, வாய் என்பவற்ரை மூடும் வகையிலான பாதுகாப்பு மூடிகளை அணிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

 காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், பிள்ளைகளை முன்பள்ளி உள்ளிட்ட தனியார் வகுப்புகளுக்கோ அனுப்ப வேண்டாம் எனவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பெற்றோரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந் நிலையில் தடிமன், காய்ச்சல், இருமலுடன் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பெற்றோரை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றுக் காரணமாக மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல மற்றும் காலி கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 22 ஆம், 23 ஆம் திகதி மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/33704

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ கப்பல் வந்து போனதெல்லோ, ஏதும் ஆராய்ச்சி செய்றாங்களோ  தெரியல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

மருத்துவ கப்பல் வந்து போனதெல்லோ, ஏதும் ஆராய்ச்சி செய்றாங்களோ  தெரியல!

மருந்தை உருவாக்கினாப்பிறகுதான் நோயை உண்டாக்கிவினமாம். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.