Jump to content

வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்


Recommended Posts

வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்

26047241_1821296107943946_82913650046842
 

சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது. எனினும், இலங்கை வீரர்களின் தொடர் உபாதைகள் இலங்கை அணியின் வெற்றிக்கும், எதிர்கால வியூகத்துக்கும் மிகப் பெரிய தடங்கலாக இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில், சுமார் 2 மாதகால ஓய்வின் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த இலங்கைக் குழாமானது  கண்டி பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற எட்டு நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றது.

இதில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, சுழல் பந்துவீச்சாளர்களுக்கு 2 வார பயிற்சி முகாமொன்றை நடத்துவதற்காக அவுஸ்திரேலிய முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான பீட்டர்ஸ் ஸ்லிப் இலங்கைக்கு வருகை தந்து சுழல் பந்துவீச்சு தொடர்பான பயிற்சி முகாம்களை நடாத்தி வருகின்றார்.

இதேநேரம், இலங்கை அணியின் குறுகிய கால வேகப்பந்து ஆலோசகராக அவுஸ்திரேலியாவின் விக்டோரியா கிரிக்கெட் சங்கத்தின் உயர் செயல்திறன் முகாமையாளரான டிம் மெக்கஸ்கில் செயற்பட்டு வருகின்றார்.

இதன்படி, இலங்கை டெஸ்ட் அணியுடன் தற்போது இணைந்துகொண்டுள்ள அவர், வேகப்பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்ற அதேநேரம், உபாதைகளிலிருந்து எவ்வாறு வீரர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலான யுக்திகளையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளர்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வருகின்ற உபாதைகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு இவருடைய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

அதுமாத்திரமின்றி, டிம் மெக்கஸ்கில்லினால் வழங்கப்படுகின்ற இந்தப் பயிற்சிகள், எதிர்காலத்தில் சந்திக்க ஹத்துருசிங்கவினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு உதவியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

இந்நிலையில், குறித்த பயிற்சி முகாமிற்குப் பிறகு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க இந்தியாவின் க்ரிக்பஸ் (Cricbuzz) இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில்,

“டிம் மெக்கஸ்கில்லின் நிபுணத்துவத்தை எமது வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அவரை நாம் ஒரு சில வாரங்களுக்கு ஆலோசகராக ஒப்பந்தம் செய்தோம். அவர் வேகப்பந்துவீச்சு தொடர்பான இயந்திரவியல் நிபுணர் ஆவார். பயிற்சிகளின் போது அவர் எமது பந்துவீச்சாளர்களின் நுட்பங்களை இயந்திரங்கள் மூலம் நன்கு அவதானித்தார். அதிலும் குறிப்பாக அவர் அனைத்து பந்து வீச்சாளர்கள் தொடர்பிலும் தனித்தனியாக அவதானம் செலுத்தியிருந்தார். அதுமாத்திரமின்றி அவர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன் எமது பந்துவீச்சாளர்களின் ஓட்டம், பந்துவீசும் முறை என்பது தொடர்பில் நன்கு ஆய்வு செய்துவிட்டு வருகை தந்திருந்தார்.

எங்களது பந்து வீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் எனவும், அவர்கள் எதை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவருடன் ஆலோசித்தோம். அத்துடன், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் எதனை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அவ்வாறு எம்மால் மாற்றம் செய்ய முடியாது போனால், நாம் பலப்படுத்த வேண்டிய பகுதிகள் என்ன என்று அவரிடம் கேட்டிருந்தோம்.

அதுமாத்திரமின்றி எமது பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் எவ்வாறான மாற்றங்கள் செய்ய வேண்டும். எவ்வாறான சீரமைப்புகளை செய்ய வேண்டும் என்பது பற்றி கேட்டுள்ளோம். அவருடைய அறிவுரைகள் எமது பந்துவீச்சாளர்களுக்கு வெற்றிகரமான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்கும்.

எனவே நாங்கள் கொழும்புக்குத் திரும்பிய பிறகு, டிம் எங்கள் மருத்துவ அதிகாரிகளுடன் உட்கார்ந்து, இதுபற்றிய விடயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளதாகவும்” ஹத்துருசிங்க தெரிவித்தார்.

”அத்துடன், எமது வேகபந்துவீச்சாளர்களும், வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்களும் பல்வேறு முறைகளில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இதைத்தான் நாம் ஒரு பந்துவீச்சாளரிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். எனவே இந்த அனுபவங்களை டிம் கொழும்புக்குச் சென்று அங்குள்ள எமது உள்ளுர் பயிற்றுவிப்பாளர்களுக்காக நடத்தப்படவுள்ள விசேட கருத்தரங்கில் தெளிவுபடுத்தவுள்ளார்.

இது எமக்கு மிகப் பெரிய ஊக்கத்தை கொடுக்கும் என நம்புகிறேன். அத்துடன் எமது வீரர்கள் பெற்றுக்கொண்ட இந்த அனுபவங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் எதிர்பார்த்துள்ளோம். அதிலும் குறிப்பாக, மேற்கிந்திய டெஸ்ட் தொடரை சிறந்த முறையில் முகங்கொடுக்க தயாராகி வருகின்றோம்.

 

 

எனினும் போட்டியின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை யாராலும் கூறமுடியாது. ஆனால் நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதை அங்குள்ள நிலைமைகளை விரைவில் அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு விளையாடினால் நிச்சயம் எதிரணியின் சவாலை எம்மால் சமாளிக்க முடியும்” என ஹத்துருசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பயிற்சிகளின் பின்னர் இலங்கை அணி இந்த மாதம் 25ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகின்றது. இலங்கை அணி அங்கு சென்று பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. அதன் பின்னர், ஜூன் மாதம் 6 ஆம் திகதி போர்ட் ஒப் ஸ்பெய்ன் நகரில் இடம்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் மோதவுள்ளது.

கடந்த பத்து வருடங்களில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். அத்தோடு, இதுவரையில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் வைத்து டெஸ்ட் தொடரொன்றை கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கெட் தொடரின் போது பின்தொடை பகுதிகளில் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஷெஹான் மதுசங்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் பூரணமாக குணமடையாத காரணத்தால் மேற்கிந்திய தொடரில் இடம்பெறவில்லை.

 

 

அதேநேரம், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் (விலா எலும்பு முறிவு) மற்றும் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் (முழங்கால் தசைப்பிடிப்பு) ஆகிய இருவரும் காயங்களில் இருந்து குணமடைந்து முழு உடற்தகுதியுடன் இருக்கின்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனவே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது இறுதி டெஸ்ட் தொடரை 1-0 என பங்களாதேஷில் வைத்துக் கைப்பற்றிய தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் தற்போது ஆறாம் இடத்தில் காணப்படுகின்றது. எனினும், டெஸ்ட் தரப்படுத்தலில் 9ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகளை அதன் சொந்த மண்ணில் வைத்து தோற்கடிப்பது இலகுவான விடயம் அல்ல என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.