Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்த்துவது என்ன?


Recommended Posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்த்துவது என்ன?

 

நான்­கா­வது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் உணர்வுபூர்­வ­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்­டி­க்­கப்­பட்­டது. தமி­ழின வர­லாற்றில் ஒரு சோக கலிங்­கப்போர் நிகழ்­வாக எழு­தப்­பட்­டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்­றைய தினம் வடகிழக்­கி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உற­வுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்­தார்கள்.

இந்த நிகழ்வில் இறு­தி­யுத்­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான இரத்த உற­வுகள், அயல் உற­வுகள், அர­சியல்வாதிகள், பொதுஅமைப்­புக்கள் ,மாண­வர்கள், மதத்­த­லை­வர்கள் என ஏகப்­பட்­ட­வர்கள் மதம், இனம், பிர­தேசம் பாராது கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான சுடர் ஒளியால் முள்­ளி­வாய்க்கால் சோக தேச­மாக காட்­சி­ய­ளித்­தது.

மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண்ணில் தமது உறவு ஆத்­மாக்­க­ளுக்கு அம்­மா­வென்றும் அப்­பா­வென்றும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மாமன், மாமி, பேரன், பேத்தி என ஆயி­ரக்­க­ணக்­கான உற­வுகள் உணர்­வு­டனும் உரு­கியும் மர­ணித்த மண்ணில் நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வு முள்ளிவாய்க்­காலில் மட்­டு­மன்றி வட­கி­ழக்கில் எங்­கெங்­கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்­கி­றார்­களோ அங்­கெல்லாம் அனுஷ்டிக்­கப்­பட்­டது. ஆரா­திக்­கப்­பட்­டது.

   கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நினைவு கூரும் அஞ்­சலி வாரம் ஆரம்­பிக்­கப்­பட்டு வட­கி­ழக்கில் 20க்கு மேற்­பட்ட இடங்­களில் அனுஷ்­டிக்­கப்­பட்டு வந்த நிலையில் யாழ். செம்­ம­ணிப்­ப­கு­தியில் பல தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்ட இடத்தில் அஞ்­சலி செலுத்தும் நிகழ்வு மே 12ஆம் திகதி நடை­பெற்­றது. கிரு­சாந்­தி­யென்னும் மாண­விக்கு நடந்த மாள­மு­டியா கொடூரம் நினைவு கொள்­ளப்­பட்­டது.

அதேபோல் கடந்த மே 14ஆம் திகதி வட­ம­ராட்சி கிழக்கில் நாகர்கோவில் பாட­சாலை முன்­பாக 22 மாண­வர்கள் விமா­னக்­குண்டு வீச்­சுக்கு இலக்­காகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை நினைவு கூரும் வகையில் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பில் பன்­னங்­கு­டா­வெளியில் உணர்வுபூர்­வ­மாக நேற்­றைய தினம் நினை­வஞ்­சலி நடை­பெற்­ற­துடன் இரத்­த­தானம், அன்­ன­தானம் மற்றும் மாலை 6.30 மணி­ய­ளவில் பன்­னங்­கு­டா­வெளியில் ஆற்­றங்­கரை முற்­றத்தில் இறந்­த­வர்­களின் உற­வு­களால் 1000 சுடர்கள் ஏற்­றப்­பட்­டன.

திரு­கோ­ண­ம­லையில் மே 16ஆம் திகதி மாலை கடற்­கரை தியா­கிகள் அரங்கின் முன்­பாக ஆத்­மாக்­களை நினைவு கூரும் வகையில் பொது­மக்­களால் சுடர் ஏற்றி அஞ்­சலி அனுஷ்­டிக்­கப்­பட்­ட­துடன் நேற்­றைய தினம் சிவன் ஆலயம் தந்தை செல்வா சிலைக்கு முன்­பாக சுடர் ஏற்றி அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

மே 17ஆம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் (திருக்­கோ­விலில்) கொல்­லப்பட்ட சம்­ப­வத்தை நினைவுகூரும் வகையில் அஞ்­சலி செலுத்­தப்­பட்­ட­துடன் மாலை கல்­லடி கடற்­க­ரை­யிலும் இந்­நி­கழ்வு இடம்பெற்­றி­ருந்­தது.

புலம்­பெயர் தேசமெல்லாம் தாய­க­மண்ணில் உயிர் நீத்த உற­வு­களை நினைந்­தேங்கி நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் நிறு­வப்­பட்­ட­தற்­குப்­பின்னால் இந்த முள்ளி அழிப்பு நாள் அனுஷ்­டிக்க சுதந்­திர கதவு திறந்து விடப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும் பல்­வேறு தடைகள், சவால்கள், விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் இந்த நான்­கா­வது நினை­வேந்தல் நிகழ்வு நடாத்­தப்­பட்­டுள்­ளது.

உலக வர­லாற்றில் மிகப்­பெ­ரிய தமி­ழி­னப்­ப­டு­கொலை நாள் மே 18 ஆகும். இந்த நினை­வு­ நாளை அனுஷ்­டிக்கும் முக­மாக வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் ஏற்­பாட்­டுக்­குழு அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. வரு­வோ­ருக்கு அனு­ச­ரணை வழங்கும் முக­மாக பொதுமக்­க­ளுக்­கான பந்­தல்கள், தண்ணீர் பந்­தல்கள் உட்பட ஏனைய வச­தி­களும் பொது அமைப்­புக்­களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் போரா­ளிகள் நிகழ்வை வடி­வ­மைக்கும் வகையில் மைதான ஒழுங்­கு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள்.

வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கிழக்­கி­லுள்ள 3 மாவட்­டங்­க­ளி­லு­மி­ருந்தும் ஏரா­ள­மான உற­வுகள் வருகை தந்­தி­ருந்­த­தோடு 8 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் தமது சொந்­தங்­களை களப்­பலி கொடுத்த உற­வுகள் என்ற வகையில் மாவட்­டத்­துக்கு ஒரு உற­வாக எண்­மரும் வட­கி­ழக்­குக்கு வெளியேயுள்ள உற­வு­களில் ஒரு­வ­ரு­மாக ஒன்­பது உற­வுகள் சுட­ரேற்றி தங்கள் உற­வு­க­ளுக்கு ஆகுதி செய்து வைக்க ஏனைய உற­வுகள் ஏற்­று­வ­தற்­கென ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த 1500 சுடர்கள் அந்த விதைப்பு மண்ணில் ஏற்­றப்­பட்­டன.

எங்கும் சுடராய் ஒளிவேள்­வியாய் சுடர் கள் வானத்தை நோக்கி வளர்ந்து ஆத்­மாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­துபோல் இருந்­தது. கண்­ணீரும் கம்­ப­லையும் நிறைந்த மண்­ணாக முள்ளி மண்­கா­ணப்­பட்­ட­தாக உண­ரப்­பட்­டது.

   சுதந்­திர இலங்­கையில் தமிழ் இனத்­தின்­ மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட பல­கோர கொடிய சம்­ப­வங்­களில் முள்­ளி­வாய்க்கால் யுத்த வடுக்­களை தமிழ் மக்கள் கோடி வரு­டங்கள் கழிந்­தாலும் மறக்­க­ மு­டி­யாத அள­வுக்கு வர­லாற்றை நினைவு கொள்ளும் மே 18. இலங்கை தமிழ் மக்­களின் துக்­கிப்பு நாளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­து போல் முள்ளி நினை­வேந்தல் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

  மாவீரர் தினத்­துக்கும் முள்ளி வாய்க்கால் நினை­வேந்தல் தினத்­துக்கும் வித்­தி­யா­ச­முண்டு. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தனித்­தமிழ் ஈழம் என்ற கன­வோடு களப்போர் புரிந்து வீரச்­சா­வ­டைந்த மாவீ­ரர்­களை நினைவு கொள்ளும் நாள் மாவீ­ரர் தின­மாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இறு­தி­ யுத்­தத்தில் ஏது­ம­றி­யாமல் இறந்துபோன அப்­பாவி மக்­களை அவர்­களின் உற­வுகள் நினைவு கொள்ளும் நாள் பிதி­ராகிப்போய் பிறப்­புக்கும் இறப்­புக்கும் எல்லை தெரி­யாத அந்த அப்­பாவி பொது­மக்­களை கொன்று குவித்த தின­மாக அது ஆரா­திக்­கப்­ப­டு­கி­றது.

2009ஆம் ஆண்டு மே மாதம் தமி­ழர்­களின் உரி­மைப்­போ­ருக்கு உலக வல்­ல­ர­சு­க­ளோடு சேர்ந்து உலை­வைக்­கப்­பட்­ட­ மாதம். மே 18ஆம் திகதி உல­க­ வ­ர­லாற்றை உலுக்­கிய நாள் என்­பதை உல­கமே கண்­ணீர் ­மல்க ஏற்­றி­ருந்­தது. வன்­னிப்­போரை நய­வஞ்­ச­கத்­துடன் மூட்­டி­யது கண்டு உல­கமே அழுது கண்­ணீர் ­வ­டித்­தது. 2009ஆம் ஆண்டு வன்­னிப்போர் மூண்­ட­வே­ளையில் பாரா­ளு­ம­ன்றில் வன்னி நிலை­மையை எடுத்­துக்­கூ­றிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அவர்கள் பின்­வ­ரு­மாறு உல­கத்­துக்கு அறி­வித்தார்.

வன்­னியில் சாட்­சி­ய­மில்லா படு­கொ­லைகள் நடந்து கொண்­டி­ருக்­கி­ன்றன. மிகப்­பா­ர­தூ­ர­மான மனி­தப்­பே­ர­வலம் ஏற்­பட்­டுள்­ள­துடன் மரணம், அழிவு பெருந்­தொ­கையில் இடம்பெற்­றுள்­ள­தாக நான் அறி­கிறேன். இங்கு இடம்பெறும் அழி­வைப்­போன்று உலகில் வேறு எந்த நாடு­க­ளிலும் இடம்­பெ­ற­வில்லை (இரா. சம்­பந்தன் 5.5.2009 பாராளுமன்றில்) இச்­செய்­தியை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஐ.நா. செய்­ம­திப்­ப­டங்கள் ஊர்­ஜிதம் செய்­துள்­ள­தாக செய்­திகள் கசிந்­தி­ருந்­தன. அதன்­ பி­ர­காரம் மோதல் நடை­பெறும் சூன்ய பிர­தே­சத்­துக்குள் அடை­பட்­டி­ருக்கும் பெண்கள், சிறுவர், முதியோர் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் மர­ணத்­துடன் போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­க­ளென சர்வ­தேச செஞ்­சி­லு­வைச்­சங்கம் அச்சம் தெரி­வித்­தி­ருந்­தது. பொது­மக்கள் தங்­கி­யி­ருக்கும் பாது­காப்பு வல­யத்தின் மீது விமா­னப்­படை குண்டு வீச்சு நடத்­தி­ய­தாக செஞ்­சி­லுவைச் சங்கம் கவலை தெரி­வித்­தி­ருந்­தது.

வன்­னிப்­போரும் அதன் இழப்­புக்கள் பொது­மக்கள் தொடர்பில் அப்­போது கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ. நா. சபையின் கொழும்­புக்­கான பேச்­சாளர் கோர்டன் வைஸ் வன்­னிப்­ப­கு­தியில் இரத்தக்களரி ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தனக்கு கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.வன்னி பாதுகாப்பு வல­யத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­கி­றார்கள் என வைஸ் கவலை தெரி­வித்­தி­ருந்தார்.

 வன்னி இறு­தி­ யுத்தம் குறித்து இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பிரான்ஸ் நாட்டின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரான பெர்னாட் குச்­னரும் இங்­கி­லாந்து அமைச்­ச­ரு­மான டேவிட் மில்­லி­பாண்டும் வன்னி நிலை குறித்து ஆராய உட­ன­டி­யாக ஐ.நா. சபை கூட்­ட­ வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்­த­மையை கவ­ன­மாக எடுத்­துப்­பார்ப்பின் முள்ளி வாய்க்­காலில் எத்­த­னை­யா­யிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­க­லா­மென ஊகிக்க முடியும். கொல்­லப்­பட்ட பொது­மக்கள் தொடர்பில் கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ.நா. சபைக்­கான மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான உதவி செய­லாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வன்னி யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை ஒரு­போதும் தெரி­யா­மலே போகலாம். இடம்பெற்ற யுத்­தத்தில் கடை­சிக்­கட்­டத்தில் இறந்த அப்­பாவி பொது­மக்­களின் சரி­யான எண்­ணிக்கை தெரி­யா­மலே இருக்­கி­றது. இந்த யுத்­தத்தில் 80 ஆயிரம் தொடக்கம் 1 லட்­சம்­வரை கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

யுத்­தம்­ மு­டி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தாக கூறப்­படும் மே 18ஆம் திகதி ஜோர்­தா­னி­லி­ருந்து திரும்­பிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விமா­னத்தை விட்டு இறங்­கி­ய­வுடன் தரையில் விழுந்து முத்­த­மிட்டு போர் முடிந்­து­விட்­டது. புலிகள் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு விட்­டார்கள் என்­ப­தற்­காக பெரு­மைப்­பட்­டாரே தவிர கொல்­லப்­பட்ட பொதுமக்­க­ளுக்­காக அவர் ஒரு சொல்லும் உச்­ச­ரிக்­கா­மலே சென்­றதை உலகம் தொலைக்­காட்­சி­களில் கண்­டு­கொண்­டது.

  இறுதி யுத்­தத்தில் நடந்­தே­றிய சம்­ப­வங்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் விடுத்த உத்­தி­யோகபூர்வ­மான அறி­வித்­தல்கள் யாதெ­னப்­பார்ப்பின் 2 லட்­சத்து 80 ஆயிரம் பேர் அகதி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் (லண்டன் டெலி­கிராப்) 9100 விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டைந்­துள்­ளனர். இதில் 7500 பேர் புனர்வாழ்வு நிலை­யங்­க­ளிலும் 1600 பேர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை தொடர்பில் விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் ஊட­கத்­துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்­தன தெரி­வித்­தி­ருந்தார்.

  பிர­பா­கரன் உட்­பட 300 புலி உறுப்­பி­னர்­களின் சட­லங்கள் முள்ளிவாய்க்­காலில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­த­க­வலை இரா­ணு­வப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் உதய நாண­யக்­கார தெரி­வித்­தி­ருந்தார். பொது­மக்­களின் இறப்­புக்­கு­றித்து அரச தரப்­பினர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சரி­யான தக­வல்­களை தெரி­விக்­க­வில்லை.

  2012ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­ இ­லங்­கைக்­கெ­தி­ரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்றம் தொடர்பில் அமெ­ரிக்­காவால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்கள் இலங்­கைக்கு பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­ய­போதும் அடுத்­த­டுத்த ஆண்­டு­களில் இலங்­கைக்கு கொடுக்­கப்பட்ட அவ­கா­சங்கள், மனித உரிமை ஆணை­ய­கத்தின் நெகிழ்­வுத்­தன்­மைகள், சர்­வ­தேச போக்­கையும் அபிப்­பி­ரா­யத்­தையும் எவ்­வாறு மாற்­றி­ய­மைத்­தது என்­பது உலகம் அறி­யா­த­வொ­ரு­வி­ட­ய­மல்ல.

   2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட நல்­லா­ட்சி அரசாங்கம் கார­ண­மாக சர்வ தேசத்தின் அபிப்­பி­ரா­யமும் போக்கும் எவ்­வாறு தலை­கீ­ழாக மாறி­யுள்­ள­தென்­பதை அண்­மையில் பாரா­ளு­மன்றில் ஜனா­தி­பதி நிகழ்த்­திய அரச கொள்கை விளக்­க­வு­ரை­யி­லி­ருந்தும் பிர­த­மரின் மேதின உரை­யி­லி­ருந்தும் தெரிந்­து­கொள்­ளலாம்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் என்­பது வரு­டா­ வ­ருடம் கொண்­டா­டப்­படும் ஒரு சடங்­காக அமை­யாது உற­வு­களை இழந்­த ­மக்­களின் உள்­ளத்தை ஆற்­றுப்­ப­டுத்தும் நிகழ்­வா­கவும் அவர்­களின் அர­சியல் மற்றும் வாழ்க்­கையை ஈடேற்­றவும் வழி­காட்­டவும் அமைய வேண்டும் என சமத்­துவ சமநீதிக்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இந்த கருத்து இன்­றைய யதார்த்­தத்தை தெளிவா­கவே விளக்­கு­வ­தாக அமை­கி­றது.

தமிழ் மக்­களின் 30 வருட அகிம்சை போராட்டம் அதனைத் தொடர்ந்து 30 வரு­ட­கால ஆயு­தப்­போ­ராட்டம் என்­ப­னவற்றின் அடுத்த பரி­ணா­மமே இன்­றைய உடன் போக்கு போராட்­ட­மாக மாறி­யுள்­ளது. எனவேதான் 60 வருட கால போராட்­டத்தை அடுத்த கட்­டத்­துக்கு எடுத்தும்செல்லும் வழியை முள்­ளி­வாய்க்­காலில் ஏற்­றப்­பட்ட சுடர்கள் மூலம் அவர்கள் தேடு­கி­றார்கள் என்­பதை அர­சியல் தலை­மைகள் உண­ர­ வேண்டும்.

   விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் கடந்த கால, நிகழ்கால, எதிர்­கால அர­சி­யலை அனு­மா­னித்து உணர்­வ­தற்­கான ஒரு மைய­மாகும் என்று கூறப்­ப­டு­கி­றது. இந்த மையத்­தி­லி­ருந்து புதிய அர­சியல் தத்­து­வத்­தையும் முன்­னெ­டுப்­புக்­க­ளையும் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­த­ வேண்டும். வலி­யு­றுத்தி நிற்­க ­வேண்­டு­மென்­ப­துதான் இன்­றைய தமிழ் மக்­களின் தேவை­யாக இருக்­கி­றது. கோரிக்­கை­யாகவும் மாறு­கி­றது.

  தமிழ் மக்­களின் வர­லாற்று அனு­ப­வங்­க­ளைப் பார்ப்போமாயின் எதி­லுமே ஒன்றுபட்ட முடி­வுக்கு வரு­வ­தென்­பது முடி­யாத காரி­ய­மா­கவே இருந்­துள்­ளது. இரண்டு பஞ்­சாங்கம் ஏட்­டிக்குப் போட்­டி­யான தலை­மைகள், பல கட்­சிகள், பல இயக்­கங்கள், மாறு­பட்ட சடங்­குகள், முறைகள் வேறு­பட்ட போக்­குகள் என எல்­லாமே ஏட்­டிக்குப் போட்­டி­யா­கவே இருந்து வந்­துள்­ளன. அனு­ப­வங்­களை பாடங்­க­ளா­கவோ வர­லாற்றை முன்­னு­தா­ர­ணங்­க­ளா­கவோ கொண்டு நடக்­கா­ததன் கார­ண­மா­கவே இன்னும் திக்கு தெரி­யாத காட்டில் நடந்து போய்க்­கொண்­டி­ருக்­கி­றது தமிழர் வர­லாறும் வாழ்­வி­யலும்.

  முள்ளிவாய்கால் நினை­வேந்தல் என்­பது தமிழ் மக்கள் வாழ்­வியல் மற்றும் அர­சியல் போராட்­டத்தில் கறை­ப­டிந்த அத்­தி­யாயம் என்­ப­தை­விட புதிய பாதையை வகுக்­க­வேண்­டிய அர­சியல் தத்­து­வத்தை வகுக்­க ­வேண்­டிய ஒரு சந்­தியில் நின்றுகொண்­டி­ருக்­கிறோம் என்­பதை அனைத்து தரப்­பி­னரும் உண­ர­வேண்டும். அதை­வி­டுத்து முள்ளி நினை­வு­களை அஞ்­ச­லிக்­கக்­கூட மாகா­ண­ சபை, பல்­க­லை­க்­க­ழகம், அந்த கட்சி, இந்த கட்­சி­யென தனிவழி­ தே­டிக்­கொண்­டி­ருப்­பது எமக்கு இன்னும் இழுக்­கா­கவே இருக்­கி­றது. எதிர்காலத்தில் இத்­த­கைய அட்­டூ­ழியம் நடை­பெ­றா­ம­லி­ருக்க அடுத்த தலை­மு­றையை நாம் தயார்ப்­ப­டுத்­த­ வேண்டும். இதை செய்­ய­ வேண்­டி­ய­வர்கள், செய்யக்கூடி­ய­வர்கள் அர­சியல் தலைமை­களே.

ஜப்­பா­னி­யர்கள் இரண்டாம் உல­கப்­போரின் வடுக்­களை தாங்­கிக்­கொண்டு எப்­படி எழுந்து நின்­றார்­களோ, அதே போல் பலஸ்தீனி­யர்கள், தென்­னா­பி­ரிக்­கர்கள் ஆகி­யோரை நாம் முன்­னு­தா­ர­ணங்­க­ளாக பார்க்­க­ வேண்டும்.

இன்­றைய இலங்கை அர­சி­யலின் தேக்க நிலை தமி­ழர்­க­ளைப்­பொ­றுத்­த­வரை ஆரோக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­ட­வில்லை. தமிழ் ­மக்­க­ளுக்­கான தீர்வுக்­காக எடுக்­கப்­பட்டு வரும் எல்­லா­ வகை முயற்­சி­களும் குறித்த ­புள்­ளியைவிட்டு நக­ரா­மலே நின்று கொண்­டி­ருக்­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் காலங்கள் கடத்­தப்­ப­டு­கி­றதே தவிர அடைவு மட்­டங்­களை நோக்கி நகர்த்­தப்­ப­டுதல் என­்பது வெறும் பூஜ்­ஜி­யமா­கவே காணப்­ப­டு­கி­றது. இதற்கு நாம் யாரையும் குறை­கூறி அழுது கொட்­டு­வதில் அர்த்தம் இல்­லை­யென்ற முடி­வுக்கே வர­ வேண்­டி­யுள்­ளது. கடந்த காலத்தில் முன்­னைய பேரி­ன­வாத தலை­வர்­க­ளாலும் அர­சாங்­கங்­க­ளி­னாலும் எவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டோமோ அதே­போன்­ற­தொரு அர­சியல் காலநிலை தான் இப்­பொ­ழுதும் காணப்­ப­டு­கி­றது.

 தலை­வர்­களும் ஆட்­சி­யா­ளர்­களும் புதிது புதி­தாக வந்­தாலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­யா­னது இன்னும் ஊறுகாய் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க வியாக்­கி­யானம் சான்­றா­க­வுள்­ளது. வட­கி­ழக்கில் மீண்­டு­மொரு யுத்தம் நிக­ழாமல் இருக்­க­வேண்­டு­மாயின் மக்­களின் பொறு­மை­யி­ழப்­பினை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டுத்­த­ வேண்­டு­மாயின் மக்­களின் விருப்­பத்­தையும் இணக்­கப்­பாட்­டையும் பெற்ற அரசியல் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென பழைய புள்ளிக்கு தீர்வை கொண்டு வந்துள்ளார். அரசாங்கத்தின் கவனம் முழுவதும் இன்னும் பயங்கர வாதத்தை தோற்கடிப்பதிலேயே செலுத்தப்படுகிறது என்பதை ஜனாதிபதி தனது உரையில் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாதுள்ளது. கடந்த 3 வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப்பெற்று அந்த கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே தான் முயற்சித்து வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவருடைய கரிசனை தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லையென்பதாகும்.

போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடும் தீர்மானமும் தெளிவாகவே பல தடவைகள் அவரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நீதி முறையையோ கலப்பு நீதி விசாரணையையோ யான் அனுமதிக்கப் போவதில்லை. இராணுவ வீரர்களை நான் காட்டிக்கொடுக்கப்போவதுமில்லை.தண்டிக்கவும் விடமாட்டேன் என தீவிரமாக கூறிவருவதை கேட்டிருக்கிறோம். ஐ.நா. சபைக்கு கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கனதியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாருமில்லை என நல்லாட்சி தலைவர் கூறிவருவது தொடர்பில் நாம் இன்னும் வாழாது இருக்கிறோம். இத்தகைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றலானது தமிழ் மக்களுக்கான புதிய விதியை வகுக்க வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றதென்பதை நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்த்தியிருக்கிறது. எதிர்காலத்தின் விதியை நோக்கி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டுமாயின் ஒன்றுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-19#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.