Jump to content

சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

 
 

 

p2c_1526628657.jpg

‘‘திடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே?” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்!

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ‘என்னைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். என்னை நீக்க அவர் யார்? குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். கட்சியில் அவர் நடிப்பு எடுபடாது. அவர் என்னைப் பதவியிலிருந்து தூக்குவதாகச் சொல்கிறார். அப்படி நடக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவாரா?’ என்று கேட்டுள்ளார்.’’

‘‘குஷ்பு அப்படிச் சொன்னாரா?’’

‘‘குஷ்பு அப்படிக் குறிப்பிடவில்லை. ‘இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப் படுவார். எனக்கு டெல்லியிலிருந்து தகவல் கிடைத்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் திருநாவுக்கரசரைக் கடும் ஆத்திரத்தில் தள்ளியது. உடனே குஷ்புவைத் தாக்கும் போக்கில் தி.மு.க-வையும் குத்தியிருக்கிறார் அரசர். ‘தி.மு.க-விலிருந்து முட்டையாலும் செருப்பாலும் அடித்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு. அதேநிலை இப்போது காங்கிரஸ் கட்சியிலும் ஆகும்’ என்றதோடு, ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எனவே எந்தக் கட்சியுடனும் ஆயுட்காலக் கூட்டணி வைக்க முடியாது’ என்றும் பேசினார். வேண்டுமென்றே திருநாவுக்கரசர் இப்படியெல்லாம் பேசியதாக தி.மு.க-வினர் நினைக்கிறார்கள்.’’

p2b_1526628639.jpg

‘‘டெல்லி மேலிடம் என்ன நினைக்கிறது?’’

‘‘தமிழக விவகாரங்கள் குறித்து, ப.சிதம்பரத்திடம் ராகுல் ஆலோசித்துள்ளார். அந்த ஆலோசனையின் அடிப்படையில், ‘இப்போதைக்கு திருநாவுக்கரசரின் பதவியைப் பறிக்க வேண்டாம். வேண்டுமானால், அவருக்குக் கீழே நான்கு செயல் தலைவர்களை நியமிக்கலாம்’ என்ற முடிவுக்கு டெல்லி வந்துள்ளது. அதுவே, திருநாவுக்கரசருக்கு வைக்கப்படும் ‘செக்’தான். அதே நேரத்தில், மேலிட விவகாரங்களைக் கட்சித் தலைமையின் அனுமதியின்றி பொதுவில் பேசிய காரணத்துக்காக குஷ்புமீதும் நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.’’ 

‘‘திருப்பதியில் எடப்பாடியை ஒருவர் கடுமையாக அர்ச்சனை செய்திருக்கிறாரே?”

‘‘மே 14-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். சேலத்திலிருந்து வேலூர் வழியாக காரில் சென்ற எடப்பாடியின் குடும்பம், அன்று இரவு திருமலையில் தங்கியது. அப்போது திருமலையில் இருக்கும் ஸ்ரீவராகசாமி கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்றார் முதல்வர். கோயில் சார்பில் எடப்பாடிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். மூலவருக்கு ஆராதனை செய்யும் நேரத்தில், அங்கு பக்தர்கள் மத்தியில் நின்றிருந்த பட்டர் ஒருவர் திடீரென்று சாமியாடத் தொடங்கினார். அவர் போட்ட கூச்சலில் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி, சாமி கும்பிடுவதையே நிறுத்திவிட்டார். சாமி ஆடியவர் ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி ஏதேதோ அருள்வாக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில், எடப்பாடியை ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். ‘எடப்பாடியை என்னை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல். தமிழ்நாட்டையே சீரழிச்சிட்டார் இந்த எடப்பாடி பழனிசாமி’ என்றெல்லாம் அவர் கத்த ஆரம்பித்ததும், அனைவரும் அதிர்ந்துவிட்டனர். எடப்பாடி முகமே மாறிவிட்டது. அவர் குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், சாமி ஆடிய அந்த நபரை அகற்ற முயற்சி செய்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தால் அப்செட்டான எடப்பாடி, அதன்பிறகு யாரிடமும் முகம்கொடுத்துப் பேசவில்லையாம்.’’

‘‘அந்த சாமியாடி யார்?’’

‘‘அந்த நபர் பெயர் ஸ்ரீராமுலு. அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். அவரும் வழக்கமாக திருப்பதிக்கு சாமி கும்பிடச் செல்வாராம். எடப்பாடியைப் பார்த்ததும் தனது கோபத்தைக் காட்டிவிட்டார் என்கிறார்கள். திருப்பதியில் இதுவரை வி.ஐ.பி-க்கள் வரும்போது இப்படி ஆனதில்லை. எனவே, இது எடப்பாடி பழனிசாமியின் எதிரணியினர் செய்த வேலையாக இருக்கலாம் என்கிறது ஆந்திர போலீஸ் தரப்பு. அந்த பக்தரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், ஆந்திர போலீஸ் நிதானமாக நடந்துகொண்டதாக எடப்பாடி நினைக்கிறார். ஆனால், ‘பக்தர்களிடம் நாங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வ தில்லை’ என்கிறது ஆந்திர போலீஸ். சென்னை திரும்பியதும் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த முதல் உத்தரவு, இந்த சம்பவம் குறித்து விசாரித்து உளவுத்துறை அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதுதானாம்!”

p2_1526628686.jpg

‘‘தி.மு.க சார்பு அணிகளின் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் கடந்த வாரத்தில் மூன்று நாள்கள் நடந்துள்ளதே?”

‘‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும்! ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு. அதுபோல, இலக்கிய அணியில் இப்போதெல்லாம் சுத்தமாக வருமானமே இல்லை. முன்பெல்லாம், இந்த அணிக்கு ஓரளவு மரியாதையும் இருந்தது; வருமானமும் இருந்தது. ஆனால், இப்போது இரண்டும் இல்லை. அதனால், ‘இந்த அணியின் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக அந்த அணியின் செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார். அதுபோலத் தொண்டரணி மாநிலச் செயலாளர் மாசிலாமணி, ‘தொண்டரணியின் யூனிபார்மாக இருக்கும் கறுப்பு-சிவப்பு உடையை மாற்றுங்கள்; அது பாண்ட் வாத்தியக்காரர்களைப் போல் இருக்கிறது. நீங்கள் ‘நமக்கு நாமே’ பயணம் போகும்போது 300 பேருக்கு புதிய உடை வாங்கிக் கொடுத்தீர்கள்... இப்போது அந்த 300 பேர் எங்கே? அவர்கள் அந்த உடையோடு போய்விட்டார்கள். அதையே, தொண்டரணிக்கு வாங்கிக் கொடுத்திருந்தால், அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே’ என்று தெரிவித்தாராம். வர்த்தக அணியின் சார்பில் பேசிய காசி முத்துமாணிக்கம், ‘நீங்கள் இளைஞரணியை போலவே எல்லா அணிகளையும் வளர்க்க வேண்டும்’ என்றாராம். மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி வைத்த குற்றச்சாட்டைக் கேட்டு ஸ்டாலினே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்!”

‘‘அது என்ன?”

‘‘கனிமொழி, ‘நான் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போனால், மகளிரணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை’ என்று குறிப்பிட் டாராம். ‘அப்படி நடந்தால் அதுபோன்ற மாவட்டப் பொறுப்பாளர்களை உடனே நீக்கிவிடுங்கள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மறுநாளே இரண்டு மாவட்டங்களின் பொறுப்பாளர்களை கனிமொழி நீக்கிவிட்டார்’’ என்றபடியே பறந்தார் கழுகார்.


dot_1526628586.jpgp2a_1526628609.jpgசமூகநலத் துறை அமைச்சர் சரோஜாவுக்கும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் வளர்மதிக்கும் ஈகோ மோதல் அதிகமாகி வருகிறதாம். வட சென்னையில் தாலிக்குத் தங்கம் தரும் அரசு விழாவுக்கு வளர்மதிக்கு அழைப்பு இல்லையாம். இருந்தும் மேடைக்கு வந்த அவர், சரோஜாவைக் கடுப்படித்தாராம். ‘‘இது அரசு விழா. கலெக்டர்தான் யார் யாரை அழைப்பது என்று லிஸ்ட் ரெடி பண்ணினார். எனக்குச் சம்மந்தமில்லை’’ என்று பதிலுக்கு சரோஜாவும் எகிற, அங்கிருந்தவர்கள் அமைதிப்படுத்தினார்களாம். 

dot_1526628586.jpg மருத்துவமனையில் இருக்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சமீபத்தில் சந்தித்தார் மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன். ‘‘இது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம். ஸ்பெஷலாக உங்களுக்காக கொண்டுவந்தேன்’ என்று நீட்டினாராம். ‘‘ஆல்வேஸ் வித் யூ’’ என்று மெல்லிய குரலில் சொன்னபடி குங்குமத்தை நெற்றியில் பூசிக்கொண்டாராம் அருண் ஜெட்லி. 

dot_1526628586.jpg நள்ளிரவு நேரத்திலும் அந்த போலீஸ் பிரிவின் அனைத்து விளக்குகளும் பிரகாசமாக எரியும். தலைநகர வி.ஐ.பி-க்களின் குடும்ப விவகாரங்கள், பிசினஸ் கட்டைப்பஞ்சாயத்து, சிவில் விவகாரம்... இந்த மாதிரியான ரகசிய விசாரணைகளை அந்தப் பிரிவுதான் நடத்தும். தலைநகர போலீஸ் அதிகாரிகளுடன் நட்பில் இருக்கும் ஒரு பிரமுகர், சமீபத்தில் சிவில் பஞ்சாயத்து ஒன்றை இங்கு கொண்டுவந்திருக்கிறார். அவர் சுட்டிக்காட்டிய வி.ஐ.பி-யைத் தூக்கிவந்து விடிய விடிய பஞ்சாயத்து நடந்ததாம்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.