Jump to content

பிரிகேடியர் சொர்ணம் - உதிக்கும் திசையில் உதித்த ஆதவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 பிரிகேடியர் சொர்ணம் - உதிக்கும் திசையில் உதித்த ஆதவன்

இரத்தினம் கவிமகன்

 

 

தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம்

மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம்

தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் வரவை எதிர்பார்த்து விழித்திருந்தன. சோதியா படையணி போராளிகள் மட்டுமல்லாது மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தலைமைச் செயலக “மணாளன்” சிறப்பு தாக்குதலணி மற்றும் பூநகரி படையணி போராளிகள், எல்லைப்படை மற்றும் காவல்துறைப் படையணி என பல படையணி போராளிகளை உள்ளடக்கிய போராளிகளணி. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் பணியாற்றினார்.

வான் நிலாவின் அழகை ரசித்தபடி சுடுகலன்களை தயாராக வைத்து காத்திருக்கிறது அந்த அணி. அதில் பல புதிய போராளிகள் இருந்தாலும், அவர்கள் விசுவாசமாக சண்டையை எதிர் கொண்டதும் எதிரிகளை திணறடித்ததும் அங்கு பதிவாகிய வரலாறு. அவர்களுக்கான அணித்தலைவர்கள் அனுபவம் மிக்க சண்டையணிப் போராளிகள் என்பதால் சண்டையை சீராக செய்ய கூடிய நிலை இருந்ததும் அங்கு பெறுமதியான பதிவாக மணலாறுக் களமுனை அன்று நிமிர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் போராளிகள் தயார்நிலையில் இருந்த அதே வேளை, களமுனையின் எல்லை வேலி இந்திரன் முகாமில் இருந்து மிக அருகில் சிங்கள இராணுவமும் அதை தாண்டிய ஜீவன் முகாமருகில் போராளிகளுமாக நீண்டு சென்றது. மிக அருகில் ஜீவன் முகாமில் பிரிகேடியர் சொர்ணம் தனது கட்டளை பணியகத்தை (Commanding station ) அமைத்து இருந்தார்.

அவருக்கு ஜீவன் முகாமின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்க்கும் போதெல்லாம் 1987 ஆம் ஆண்டு கால நினைவுகள் மனதை விட்டு மறையாது இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகை விடுதலைப்புலிகளையும் தேசியத்தலைவரையும் மணலாறுக் காட்டுக்குள் கொண்டு சென்ற போது, ஜீவன் முகாம் பல வருடங்களாக தேசியத் தலைவரை தாங்கி நின்ற வரலாற்று நிமிர்வு மிக்கதான ஒரு முகாம்.

வானுயர்ந்த மரங்களின் போர்வைக்குள் எதிரியின் நுழைவுகளை தடுக்கும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நிமிர்ந்து நின்றது ஜீவன் முகாம். ( முன்னாளில் உதயபீடம் என்று அழைக்கப்பட்ட இந்த முகாம் தான் தலைவரின் பிரதான தங்ககம்) அது மட்டுமல்லாது, நீதிதேவன் (நீதி வழங்கல்), காமதேனு ( வளங்கல் பிரிவு) விடியல் (மகளிர் படையணி), வைகறை (மகளிர் படையணி) அமுதகானகம் (மருத்துவபிரிவு) என பல முகாம்கள் அங்கு நிமிர்ந்து நின்றன. பின்நாட்களில் அவை குறியிடு பெயர்கள் மாற்றப்பட்டு மாவீரர் பெயர்களை தாங்கி நின்றது வரலாறு. அங்கு தான் ஜொனி மிதிவெடியின் உயர் பயனை விடுதலைப்புலிகளும் எம் வெடிபொருள் உற்பத்தி அறிவினை இந்திய இராணுவமும் அறிந்த நாட்கள் அமைந்திருந்தன. தேசியத்தலமையை தன்னுள் பல காலங்களாக சுமந்து நின்ற இந்த முகாம்களின் வடிவமைப்பின் போது விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரிய பொது மகன்கள் சிலரையும் நாம் நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 – செப்டம்பர் 16, 1931 மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். ) என்று அன்பாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் லெப் கேணல் டடி அல்லது நவம் என்ற மாவீரனை பெற்ற தந்தை அதில் முக்கியம் பெறுபவராவார். அவர் மூலமாகவே அதுவரை வவுனியா மன்னார் காடுகளில் வாழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு மணலாறு காடு பற்றிய அறிவும் பரீட்சயமும் கிடைத்தது. அவரால் தான் மணலாறு காடு பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் வாழ்விடமாகியது. அவரின் அனுபவமும் திறணும் மணலாறு காட்டினுள் பல இடங்களில் வாழ்விடங்களாகவும் கிணறுகளாகவும் நிமிர்ந்து நின்றதை நாம் மறுக்க முடியாது.

இங்கு மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியது அவசியம். மணலாறு காட்டினுள் இருந்த இந்திரன் முகாமில் நிலத்தடி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதாவது சாதாரண பதுங்ககழி போல் அல்லாது நிலத்துக்கு கீழாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க கூடிய அளவில் நிலத்தடி மருத்துவமனை ( Underground Hospital ) அமைக்கப்பட்டு போராளிகள் பராமரிக்கப்பட்டார்கள். இது கட்டுவதற்கும் இவரின் பங்கு மிக முக்கியமானதாக வரலாறு பதிவாகியிருக்கிறது.

அதைப் போல தேசியத் தலைவனின் மிக நெருக்கத்திக்குரிய பாதுகாவலனாக இருந்த ஆதவன் அல்லது கடாபி என்று அழைக்கப்படும் மூத்த தளபதியின் தந்தை காட்டுக்குள் சமையல் கூடங்கள் மற்றும் வெதுப்பகம் என்பவற்றை உருவாக்குவதில் வெற்றி கண்டு எம் வரலாற்றில் முக்கியம் பெறுகிறார் .

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் அசைவில் எழும் இன்னிசைகளில் இந்த நினைவுகள் எல்லாம் வந்து போன போது அந்த நாட்களை தன் விழி முன்னே கொண்டு வந்து நினைவு கொள்வார் பிரிகேடியர் சொர்ணம்.

கெரில்லா போராளிகளாக இருந்த காலத்தில் தான் எவ்வாறு பயணித்தார் என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொள்வார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சியின் பின் இன்று மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக நிமிர்ந்து நின்றாலும் மணலாறு காட்டைப் பொறுத்தவரை கெரில்லா போர்முறையே சரியான தெரிவாக இருக்கும் என்பது அவரது தெரிவாக இருந்தது.

ஏனெனில் 1991ஆண்டு ஆகாய கடல் வெளி என்ற பெரும் வலிந்து தாக்குதலை செய்து விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலை சிங்களத்துக்கு புகட்டிய எம் அமைப்பு அது முடிந்த சில நாட்களில் இதே மணலாறு காட்டினுள் மின்னல் நடவடிக்கை சிங்களத்தால் செய்யப்பட்ட போது, அதை எதிர்கொள்ளும் திடத்தை பெற்றிருந்ததை மறுக்க முடியாது.

சிங்களம் மணலாறு காட்டுக்குள் மின்னல் படைநடவடிக்கையை செய்து காட்டுக்குள் வந்திருந்தாலும் அதை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. உடனடியாகவே அந்த நடவடிக்கையை விட்டு வெளியேறிச் சென்றது. காரணம் அப்போதெல்லாம் சிங்கள இராணுவத்திற்கு போதிய அளவு காட்டு நடவடிக்கைகள் பரீட்சயம் இல்லாமல் இருந்தது.

இவ்வாறான படை நடவடிக்கைகளின் தோல்விக்கு பின்னான காலங்களில் “ஜெயசிக்குறு” என்ற படை நடவடிக்கையை சிங்களம் செய்த போது அமெரிக்காவின் Green parrot என்ற படையணியின் மூலமாக முற்று முழுதான காட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டே வந்தன. ஆனாலும் அவர்களும் எமது படையணிகளிடம் பல முறை அடி வாங்கி சிதைந்து போனது வரலாறு. இது இவ்வாறு இருக்க,

ஒரு மரபுவழி இராணுவக் கட்டமைப்பால் அந்த காட்டுக்குள் நின்று உணவு மருத்துவம் என்று எந்த தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்பதே அவரது கணிப்பாக இருந்தது. அதற்காக அவரின் போரியல் முறையில் சில வேவு அணிகளை தயார்ப்படுத்தி எல்லை வேலிக்கு முன் நகர்த்தி இருந்தார். அவர்கள் கெரில்லா முறைத் தாக்குதல்களை செய்ய பணிக்கப் பட்டார்கள். இவ்வாறாக அந்த களமுனை இறுதிக் கட்ட சண்டையை மிக மூர்க்கமாக எதிர்கொண்டிருந்த காலத்தில் தான் சில இடங்களில் சிதைந்திருந்த எம் எல்லையை சீராக்கி FDL (Forward Defense Line இதை பேச்சுவழக்கில் லைன் (line) என்று குறிப்பிடுவார்கள். ) முன்னகர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுகிறது.

இதற்காக திட்டமிட்டு 2008 சித்திரை 27 ஆம் நாள் அணிகளை நகர்த்துகிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் திட்டம் எதிரிக்கு கசிந்து விட்டதாலோ என்னவோ சண்டை எம் அணிகள் நினைத்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதனால் மறுபடியும் சித்திரை 29 ஆம் நாள் பெரும் முயற்சி எடுக்கப் படுகிறது. அந்த சண்டை எமக்கு சாதகமாக இருந்த போதும் நாம் புதிய சிக்கல் ஒன்றை எதிர் கொள்ள நேர்ந்தது. விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர் தாக்குதல்களை செய்யலாம் என்று எதிர்பார்த்த சிங்களம் இரவு முழுவதும் ஓயாத எறிகணை தாக்குதல்களை செய்கிறது.

அந்த எறிகணையின் சிதறல்கள் கட்டளைச்செயலக பகுதிகளையும் தாக்குகிறது. பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் பாதுகாப்பு போராளிகள் பதுங்ககழிக்குள் வருமாறு பல தடவை அழைத்தும் உள்ளே செல்லாது பதுங்ககழிக்கு மேலே படுத்திருந்தார். அந்த சிதறல்களில் ஒன்று சொர்ணம் அவர்களின் கழுத்திலும் இன்னொன்று கண்ணுக்கு மேல் உள்ள புருவத்திலும் தாக்குகின்றன. இரத்தம் சீறிப் பாய்கிறது. களமருத்துவப் போராளி உடனடி இரத்தக் கட்டுப்பாட்டை செய்துவிட்டு அருகில் இருந்த குட்டுவன் என்ற முகாமில் மருத்துவ முகாமை அமைத்து தங்கி நின்ற இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் ரேகா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்களோடு மருத்துவ நிர்வாக போராளி நம்பியும் உடனடியாக ஜீவன் முகாமுக்கு வருகிறார்கள்.

காயத்தின் நிலை கொஞ்சம் சிக்கலாக இருந்ததால் அருகில் இருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை உணரப்படுகிறது. மருத்துவர் தணிகையும் பொறுப்பாளர் ரேகாவும் அதை எடுத்து கூறுகிறார்கள். உள்ளே தங்கி விட்ட எறிகணைத் துண்டை வெளியில் எடுக்க வேண்டிய தேவையை அவர்கள் அவருக்கு உணர்த்த முனைகிறார்கள். ஆனால் தான் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பின்நகரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தளபதி சொர்ணம்.

ஆனால் எவ்வாறாயினும் அவரை புதுக்குடியிருப்புக்கு நகர்த்தி விட துடித்தனர் இரு மருத்துவ பிரிவு போராளிகளும். தம்மிடம் இப்போது மயக்க மருந்து குடுத்து சத்திரசிகிச்சை செய்ய உபகரணங்கள் இல்லை அதனால் கப்டன் கீர்த்திகா இராணுவ மருத்துவமனைக்கு போய் சத்திரசிகிச்சை பெற்று உடனே திரும்பலாம் என்பதை வலியுறுத்துகிறார்கள். அவரோ மறுக்கிறார். அவர்களுக்கு களமுனையில் மயக்க நிலையில் மூத்த தளபதி ஒருவரை வைத்திருக்கும் அபாயம் கண்முன்னே நின்றது. அதை விட சொர்ணம் அவர்கள் ஒரு நீரிழிவு நோயாளி அவருக்கு தகுந்த வசதிகளற்று சிகிச்சை அளித்து அதனால் விளைவுகள் பாதகமானால் ? என்ற வினா எழுந்து நின்றது. ஆனால் அவர் அதை ஏற்க வில்லை மயக்க மருந்து போட தேவை இல்லை லோக்கல (Local Anesthesia/அனஸ்தீசியா) போட்டு சிதறிய எறிகணைத் துண்டை எடுக்கும் படி கேட்கிறார். அவர்கள் மறுக்கிறார்கள்.

அப்போது இவ்வளவு பேர சண்டைல விட்டிட்டு இந்த ஒரு காயத்துக்கு சிகிச்சை என்று என்னால் பின்னுக்கு போக முடியாது என்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் மருத்துவர்கள். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவரை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். சத்திரசிகிச்சைக் கூடம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதற்கும் பதில் தந்த தளபதி சொர்ணம் எங்கட பெடியள் எத்தின பேருக்கு பங்கருக்க வைச்சுத் தான் தான் உயிர் காத்தனிங்கள் என்னை மட்டும் ஏன் இப்பிடி செய்கிறீர்கள்? என்னால் இவ்வாறான நிலையில் அண்ணைய பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு போனால் அவர சந்திக்காமல் வர முடியாது அதனால் நான் பின்னால் வர மாட்டேன். அவர் உறுதியோடு இருந்தார். சண்டை எப்ப தொடங்கும் என்று தெரியாத நிலை. இதுக்குள் நான் எப்பிடி பெடியள விட்டிட்டு பின்னால வாறது என்னால முடியாது. என்று மறுக்கிறார்.

அவரின் உறுதியும் இறுதியான கட்டளையும் மருத்துவர் தணிகைக்கு எதையும் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறது. கிடைத்த வளங்களை வைத்து அந்த சத்திரசிகிச்சையை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருந்தது. பதுங்ககழிக்குள் வைத்து சிகிச்சை செய்ய அழைத்த போதும் அதை மறுத்து வெளியில் வைத்தே சிகிச்சை செய்ய தளபதி சொர்ணம் அவர்களால் பணிக்கப்படுகிறார் மருத்துவர். பெரிய வெளிச்சத்தை பாச்ச முடியாத சூழலில் சூரிய விடியலின் சிறு வெளிச்சத்தைக் கொண்டு இரத்த அழுத்தம்(Blood Pressure ) பரிசோதிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சரியான நிலையில் இருந்த போது அனஸ்தீசியா ( Local Anesthesia) போடப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வெடிபொருள் சிதறல்கள் அகற்றப்பட்ட பின் உடனடியாகவே சண்டைக்கு தயாராக வோக்கியை கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த குரலை கேட்ட போது இராணுவ மருத்துவர் தணிகையின் விழி கலங்காமல் இல்லை.

உண்மையில் ஒரு பெரும் தளபதி தன் காயத்தை கூட பொருட்படுத்தாது, களமுனை நிலவரத்தை மனதில் கொண்டு களமுனை விட்டு நகர மாட்டேன் என கூறியது எம் போராட்ட வரலாற்றை மீண்டும் பெறுமதியாக்கி சென்றது. எம் தளபதிகள் இறுதி வரை இவ்வாறே வாழ்ந்தார்கள். தம் சாவுக்கு மேலாக மக்களை நேசித்தார்கள். அவர்களின் குடும்பங்களை பற்றி சிறிதளவு கூட சிந்திக்காது தலைவனை பற்றிச் சிந்தித்தார்கள்.

கவிமகன்.இ
23.12.2017

 

https://www.facebook.com/eelapriyan.balan/posts/2332800863416148

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.