Jump to content

சினிமா விமர்சனம்: காளி


Recommended Posts

சினிமா விமர்சனம்: காளி

Kaali, Vijay antony, Amrita, Krithika Udaynithi, காளி சினிமா
   
நடிகர்கள் விஜய் ஆண்டனி, அஞ்சலி, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், நாசர், சுனைனா, அம்ரிதா ஐயர், ஷில்பா மஞ்சுநாத். மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி
   
இசை விஜய் ஆண்டனி
   
ஒளிப்பதவு ரிச்சர்ட் எம். நாதன்
   
இயக்கம் கிருத்திகா உதயநிதி

2013ல் வெளிவந்த வணக்கம் சென்னை படத்திற்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் திரைப்படம். தமிழில் காளி என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் தெலுங்கில், காசி என்ற பெயரில் வெளியாகிறது.

அமெரிக்காவில் மிகப் பெரிய மருத்துவராக இருக்கும் பரத்திற்கு (விஜய் ஆண்டனி) அடிக்கடி விசித்திரமான கனவு ஒன்று வருகிறது. அந்தக் கனவில் குழந்தையை மாடு ஒன்று முட்டவரும்போது, ஒரு பெண் நடுவில் புகுந்து காப்பாற்றுவதுபோல அந்தக் கனவு இருக்கிறது.

அந்தக் கனவுக்கு அர்த்தம் தெரியாமல் பரத் திகைத்துப்போயிருக்கும்போது, தான் யாரை பெற்றோர் என்று நினைத்திருக்கிறோமா, அவர்கள் தம் பெற்றோர் இல்லை என்பது புரிகிறது. இதனால், தன் பெற்றோரைத் தேடி இந்தியாவுக்கு வருகிறான் பரத். அங்கே கனவுக்கரை என்ற கிராமம்தான் தனது சொந்த கிராமம் எனத் தெரிய, காளி என்ற பெயரில் மருத்துவராகச் செயல்பட்டுக்கொண்டே, தனது உண்மையான பெற்றோரைத் தேட ஆரம்பிக்கிறான். அந்தத் தேடல்தான் மீதப் படம்.

Kaali, Vijay antony, Amrita, Krithika Udaynithi, காளி சினிமா

விஜய் ஆண்டனியின் முந்தைய படமான அண்ணாதுரை, ரசிகர்களின் பொறுமையை ரொம்பவுமே சோதித்தது. ஆனால், காளியில் வேறு மாதிரியான கதையைக் கையில் எடுத்து தப்பியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சினிமா விமர்சனம்: காளி சினிமா விமர்சனம்: காளி

படத்தின் கதையைக் கேட்கும்போது, ரொம்பவும் சென்டிமென்ட்டாக தோன்றினாலும் இந்தப் படத்தின் அடிப்படை, கதாநாயகன் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள்தான். கதாநாயகன் பெற்றோரைத் தேடும் முயற்சியில் மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் என மூன்று பேரது கதை சொல்லப்படுகிறது. அவர்களுடைய ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும்போது, மூன்று பேரின் சிறுவயது நபராக கதாநாயகனே வருவது ஒரு சுவாரஸ்யத்தை கதைக்கு அளிக்கிறது.

இதில், நாசரின் சிறுவயதில் திருடனாக வரும் கதை உண்மையிலேயே அட்டகாசம். திருட்டு, கட்டாயக் கல்யாணம், காதல், துரோகம் என அந்த சின்ன எபிசோடுக்குள் பல வண்ணங்கள். அந்த எபிஸோடில் வரும் 'அரும்பே, அரும்பே' பாடலும் நினைவில் நிற்கும் பாடல்.

Kaali, Vijay antony, Amrita, Krithika Udaynithi, காளி சினிமா

அண்ணாதுரை படத்தைத் தவிர, விஜய் ஆண்டனி தேர்வுசெய்த பாத்திரங்கள் எல்லாமே அவருக்குப் பொருந்தக்கூடிய, அதிகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தேவையில்லாத பாத்திரங்கள்தான். இந்தப் படமும் அப்படித்தான். நான்கு வெவ்வேறுவிதமான பாத்திரங்கள். அதை முடிந்த அளவுக்குச் சிறப்பாகவே செய்கிறார் விஜய் ஆண்டனி.

இந்த நான்கு பாத்திரங்களுக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஐயர் என நான்கு கதாநாயகிகள். இதில் மனதில் நிற்பது, வயதான மனிதரைத் திருமணம் செய்துகொண்டு, திருடனைக் காதலிக்கும் ஷில்பா மஞ்சுநாத்தின் பாத்திரம். இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர், சித்த மருத்துவராக வரும் அஞ்சலி.

சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை சோர்வில்லாமல் கொண்டுசெல்பவர், யோகிபாபு. வரும் காட்சி ஒவ்வொன்றிலும் சிரிப்பு மூட்டாமல் செல்வதில்லை.

Kaali, Vijay antony, Amrita, Krithika Udaynithi, காளி சினிமா

படத்தின் இசையும் விஜய் ஆண்டனிதான். ஏற்கனவே சொன்னதுபோல அரும்பே, அரும்பே பாடல் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம்தான் என்றாலும் 'யுகம் நூறை' போன்ற பாடல்களில், விஜய் ஆண்டனியின் முந்தைய பட பாடல்களின் சாயல் தென்படுகிறது.

வணக்கம் சென்னையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பல மடங்கு மேம்பட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. சவாலான திரைக்கதையுள்ள படத்தை சிறப்பாகவே கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வப்போது, படம் தொய்வடைவதுதான் இந்தப் படத்தின் ஒரே பலவீனம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44166838

Link to comment
Share on other sites

கிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா?! - 'காளி' விமர்சனம்

 
 

அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரியும் விஜய் ஆண்டனிக்கு, இதுநாள் வரை தன்னோடு இருந்தது, வளர்ப்புப் பெற்றோர்கள் என்ற உண்மை தெரியவருகிறது. எனில், 'தன்னுடைய உண்மையான பெற்றோர் யார்?' என்ற கேள்விக்கான விடைதேடி, இந்தியாவிற்குப் புறப்படுகிறார். விஜய் ஆண்டனியின் பெற்றோர்கள் யார், ஏன் அவரை விட்டுச்சென்றார்கள்? என்பதே, 'காளி' சொல்லும் கதை.

காளி

 

அமெரிக்காவின் மிக முக்கியமான மருத்துவர்களில் ஒருவர், விஜய் ஆண்டனி. அடிக்கடி வரும் பாம்பு, மாடு, குழந்தை கனவுக்கு விடை தெரியாமல் முழிக்கும் சூழலில், அம்மாவும் அப்பாவும் தன்னை வளர்த்தவர்களே தவிர, பெற்றவர்கள் அல்ல என்ற உண்மை தெரியவருகிறது. தனக்கு வரும் கனவுக்கும், தனது உண்மையான பெற்றோர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக உணரும் அவர், தனது தாய் - தந்தை பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள கனவுக்கரை என்ற கிராமத்திற்குப் பயணப்படுகிறார். சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் மூலம் சொல்லப்படும் கிளைக் கதைகள் வழியாக, விஜய் ஆண்டனி தனது அப்பாவைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான், திரைக்கதை.

நிகழ்காலக் கதைக்கு, 80-களின் பிளாஷ்பேக் வழியா கதை சொன்ன விதம் சூப்பர். ஆனால், அது காட்சி வழியாகக் கடத்துவதில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார், இயக்குநர் கிருத்திகா உதயநிதி. மருத்துவம், வளர்ப்பு பெற்றோர், கனவு, பெற்றோரைத் தேடும் படலம் என சுற்றிவரும் கதை, கடைசியில் சாதி ஏற்றத் தாழ்வுகளில் முடிவது ஓகே. ஆனால், தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே பழக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ரொம்பவே வீக்! திணிக்கப்பட்ட பாடல்கள், தேவையற்ற சில காட்சிகள், வீரியம் இல்லாத அல்லது ரொம்பவே ஓவர் டோஸான சில காட்சிகள் எனப் படத்தில் இருக்கும் டேமேஜ்கள் எக்கச்சக்கம். 

காளி

கேரக்டருக்குப் பொருந்திப் போகிறார் விஜய் ஆண்டனி. ஆனால், ஸ்லோ மோஷன் பேச்சும், வெரைட்டி ரியாக்‌ஷன் காட்டாத முகமுமாய் இன்னும் எத்தனை படத்தில்தான் தொடர்வார் எனத் தெரியவில்லை. ஃபிளாஷ்பேக்கில் கல்லூரி மாணவர், திருடன், சர்ச் ஃபாதர்... என கெட்அப்களில் வெரைட்டி காட்டியிருந்தாலும், நடிப்பில் ஒரே ரகம்தான்!. அதில், ஃபாதர் கேரக்டர் மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்க்கிறது. 

இந்தியாவிற்கு வரும் டாக்டர் விஜய் ஆண்டனிக்கு, எடுபுடியாக யோகிபாபு. முதல்பாதி படத்தை முற்றிலுமாகத் தாங்கிப்பிடிக்கும் இவர், சிரிக்கவைக்கவும் தவறவில்லை. அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள். இதில், ஷில்பா மஞ்சுநாத் தவிர, மற்ற அனைவருக்கும் 'வந்து போகும்' கதாபாத்திரங்கள்தான்.

நாசர், ஜெயப்பிரகாஷ், மதுசூதன் ராவ் மூவரின் கதாபாத்திரத்தைத் தவிர, படத்தில் இடம்பெற்ற மற்ற கேரக்டர்களான வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என அனைவருமே திரைக்கதையை நகர்த்த மட்டுமே உதவியிருக்கிறார்கள். அதில் ஆர்.கே.சுரேஷின் நடிப்பு மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறது. 

காளி

விஜய் ஆண்டனி இசையில் 'அரும்பே...' பாடல் செம்ம. 2018, 1980 என இருதளங்களில் பயணிக்கும் திரைக்கதையைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். பீரியட் ஃபிலிமுக்கு, கலை இயக்குநரின் பங்களிப்பு மிக முக்கியம். அதைக் கலை இயக்குநர் உணர்ந்தால் சரி.  

கார்டியோ சர்ஜனாக வரும் விஜய் ஆண்டனி, பொது மருத்துவம் முதல் டி.என்.ஏ டெஸ்ட் வரை... அனைத்தையும் சர்வ சாதாரணமாகக் கையாள்வதெல்லாம்? இப்படி லாஜிக் மிஸ்டேக்ஸும் அதிகம். 80-களில் போலியோ டிராப்ஸ் போட கிராமம் தேடி வந்தார்களா என்ன?

'உடனே ஓகே சொல்ற பொண்ணு விட்டுட்டுப் போயிடுவா, சுத்தவிட்டு ஓகே சொல்ற பொண்ணுதான் கூடவே இருப்பா!' போன்ற வசனங்களுக்கு, 'பெண்' இயக்குநர் கிருத்திகா உதயநிதிதான் சொந்தக்காரர். 

 

நல்ல கதை, கலர் கலரான முகங்கள் என அலங்காரங்களுக்கு மெனக்கெட்ட இயக்குநர் கிருத்திகா, திரைக்கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால், 'காளி' ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கும்.

https://cinema.vikatan.com/movie-review/125392-kaali-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.