Jump to content

காலப் பெருவலி


Recommended Posts

அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து
கசியும் நிலவொளி
துருவேறிய கம்பிகளை கடந்து
கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில்
திட்டுதிட்டாய் விழுகிறது
காய்ந்த உதிரச் சிதறல்கள்
உயிர்வற்றிய ஓவியங்களாய்
பயமுறுத்துகிறது.

இரவின் நிசப்தம் உடைகிறது
கூட்டத்தைப் பிரிந்து
தனியனாகிப்போன
குட்டியானையொன்றின் பிளிறலைப்போல்
அருகிலோர் அறையில்
அலறி அடங்கிப்போகிறது
அந்தரித்த ஒரு தமிழ்க்குரல்

அடிவயிற்றைப் பிழிகிறது பயம்
அடுத்தது நானாகவும் இருக்கலாம்
கடந்த விசாரணையின்
காயங்களே காயவில்லை
உதிரம் கலந்து ஒழுகிறது சலம்
பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட
மலவாயிலில் மரணவேதனை
நகம் பிடுங்கப்பட்ட விரல்களில்
இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது.

இன்னமும் நான் இருக்கின்றேனா?
இவை கடந்துவிட்ட காட்சிகளா?
உயிர் தரித்திருக்கிறதா
அன்றி தவறிப்போனதா
மனவெளியில் மங்கலாய்
மாலையாய் காட்சிகள்
தெளிவில்லை… தெரிவதும் மறைவதுமாய்
ஒருகால்…. 
உணர்வு தப்பியதோ?
உளவளம் உடைந்ததோ?

ஒன்று மட்டும் உறுதி
கனவுத்தேசம் கலைந்துகொண்டிருந்த
கடைசிநாட்கள் அவை
ஒட்டிய கண்கள் 
உலர்ந்த உதடுகள்
புழுதி அப்பிய தேகம்
அம்மா…. ஆம், அம்மாவேதான்….
காயம்பட்டுக் கிடந்த என்னை
கவனமாய் ஒப்டைத்தாள்
மீளத்தருவார்கள் என்ற
மீதமிருந்த நம்பிக்கையோடு


என் செய்வாள் இப்போது?
கண்ணீர் கோடிழுத்த கன்னங்களோடு
காவல் நிலைகளில் காத்துக்கிடப்பாளா?
திரும்புவான் மகனென்று
தினம் தினம் வழிபார்ப்பாளா?
என் படத்தோடும் பதாகையோடும் 
பாதையோரத்தில் பரிதவிப்பாளா?
இல்லை…. காரியங்களாற்றி
கடமை செய்து முடித்திருப்பாளா?


வலிக்கிறது
கால நீளவும்
கண்ணின் இமையென காத்துக்கிடந்தவள்
கண்மூடும் ஒரு நாளில்
தோளேற்றி துயர் வடித்து
கொள்ளி எடுத்துப்போட
கொடுப்பினை அற்றுப் போனேன்….!

15.05.18                                              - சோதியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வலிகள் வார்த்தைகளாக  கவிதை யாய் உயிர் கொடுத்துள்ளது . பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மோகன் said:

--------
கூட்டத்தைப் பிரிந்து
தனியனாகிப்போன
குட்டியானையொன்றின் பிளிறலைப்போல்
அருகிலோர் அறையில்
அலறி அடங்கிப்போகிறது
அந்தரித்த ஒரு தமிழ்க்குரல்

-----

 

15.05.18                                              - சோதியா

 

  

  Image may contain: cloud, sky and outdoor  Image may contain: 1 person, sitting

//கூட்டத்தைப் பிரிந்து
தனியனாகிப்போன
குட்டியானையொன்றின் பிளிறலைப்போல்
அருகிலோர் அறையில்
அலறி அடங்கிப்போகிறது
அந்தரித்த ஒரு தமிழ்க்குரல்//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

 

மரணித்தும்...மௌனித்தும் போன..,

எங்கள் சொந்தங்களே...!

 

சென்று வாருங்கள் என்று,,,,

இன்னும் கூட...,

எம்மால் விடை தர முடியவில்லை!

 

ஏனெனில்...,

மீண்டும்  வரும்போது..,

நீங்கள் விட்டுச் சென்ற் ...,

சாம்ராச்சியத்தின் ...

சிதிலங்கள் கூட இருக்காது!

 

அத்தனையையும்....,

உங்கள் பெயர் சொல்லியே...

அவர்கள் தின்றும் , மென்றும்,

விற்றும் விட்டார்கள்!

 

காலம் கனிகையில்...,

நாங்களே அழைக்கிறோம்!

அதுவரை....,

உன்னத ஆத்மாக்கள்...,

உறங்கியே இருக்கட்டும்!

 

வீர வணக்கமும்........ஆத்மார்த்த  அஞ்சலிகளும்!

Link to comment
Share on other sites

வாசிதது முடிக்க நெஞ்சு பாரமாகிப்போகின்றது...தேற்றவும் முடியாது ஆற்றவும் முடியாது..காலப் பெருவலியை கடக்கவும் முடியாது.. 

வலியோடுதான்  வாழ்வென்றாகிவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சண்டமாருதன் said:

வாசிதது முடிக்க நெஞ்சு பாரமாகிப்போகின்றது...தேற்றவும் முடியாது ஆற்றவும் முடியாது..காலப் பெருவலியை கடக்கவும் முடியாது.. 

வலியோடுதான்  வாழ்வென்றாகிவிட்டது.

சில கவிதைகளை.... வாசிக்கும் போது...
நெஞ்சுக்  கூட்டுக்குள், ஒரு வலி.. ஏற்படும்.
அந்தக் கவிதை தான் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியின் நெடில்

சோதியா

 

காற்றழுது திரிந்த

கடற்கரை வெளியின்

நிலவுறைந்த பொழுதொன்றில்

கைவிடப்பட்டன....

எனது

சீருடை

சுடுகலன்

வீரம்

நம்பிக்கை....

வெளிகள் எங்கணும்

தோல்வியின் நெடில்

வியாபித்திருந்தது.

 

மனிதநேய மீட்பர்களின்

இரட்சிப்புக் காலம்

திமிரும் வன்மமும் வக்கிரமும்

தினவெடுத்த குறிகளாய்

சுற்றிவளைக்கப்பட்டது

விசாரணைகளின் அங்கமானது

பாலியல் வதை;

கூட்டு வன்புணர்வு

நினைவு தப்பிக்கொண்டிருந்த

நிட்டூர நிமிடங்களில்

அரையிருள் பரவிய அறையெங்கும்

தோல்வியின் நெடில்

வியாபித்திருந்தது.

 

காணி உறுதி

மீள் வரைவு,

கச்சேரி அலுவல்கள்,

நிவாரண பொருட்களின்

சீரான வழங்கல்.....

ஆங்காங்கே

பக்குவமாய் கோரப்படுகிறது

பாலியல் லஞ்சம்!

அசிங்கங்கள் விரவிய

அலுவலக சுவர்களுக்குள்

தோல்வியின் நெடில்

வியாபித்திருந்தது.

 

கட்டவுட் கதாநாயகருக்கான

பாலாபிசேகம்

கேரளக் கஞ்சா

கேட்பாரற்ற

குறுநில மன்னர்களின்

வாள்வீச்சு வீரம்

வெற்று பியர் ரின்களோடு வீசப்பட்ட

விடுதலை வேட்கை

இனவாதம் விழுங்கும்

எல்லைக் கிராமங்கள்

புதிதாய் முளைக்கும்

புத்தர் சிலைகள்.....

தேசமெங்கணுமே

தோல்வியின் நெடில்

வியாபித்திருந்தது.

 

தோழர்களே!

உங்களோடிணைந்து

உரைத்த உறுதிமொழி

காக்க கதியற்றேன்

மன்னிப்பீராக!

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=df5de093-95cc-460f-a31e-ab4dfdaed973

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.