Jump to content

''எங்கடை சனத்தைச் சாகவிட்டிட்டு என்னாலை வரேலாது!" ஈழப் போரின் இறுதி வரை போராடிய நளா - ஜெயம்!


Recommended Posts

''எங்கடை சனத்தைச் சாகவிட்டிட்டு என்னாலை வரேலாது!" ஈழப் போரின் இறுதி வரை போராடிய நளா - ஜெயம்!

 
 

 ஈழப்போரின்

ஈழத் தமிழர்களுக்குச் சற்று அமைதி அளிப்பதாகத்தான் இந்த நூற்றாண்டு தொடங்கியது. ஆனால், அதன் முதல் பத்தாண்டு நிறைவு செய்வதற்குள், மீண்டும் கொடூரக் காலத்தைக் காட்டிவிட்டது. போர் ஓய்வுக் காலம் தன் ஆயுளை 2006-ம் ஆண்டிலிருந்து தமிழ்நதிமெல்ல இழந்துவந்த நிலையில், 2008-ம் ஆண்டிலிருந்து இலங்கை அரசின் வலுவான தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய சூழலுக்கு ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். தமிழர்கள் தம் அரசியல் உரிமைக்காகப் போராடியதுபோய், உயிரைக் காத்துக்கொள்ளவேண்டிய அவலநிலை வந்தது. ஆயினும்,  களத்தில் நின்ற போராளிகள் எச்சூழலிலும் பின்வாங்காது மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் ஆண், பெண் பேதமில்லாமல் ஈழப்போரின் முழு வீச்சோடு எதிர்த்து களமாடினர். விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான ஜெயமும் அவரின் மனைவி நளாவும் 2009 மே மாதத்தின் இறுதித் தாக்குதல் வரை மக்களைக் காப்பதற்குப் போரிட்டனர். நளாவின் தோழியும் எழுத்தாளருமான தமிழ்நதியின் நெகிழ்ச்சியான பகிர்வு...

 

``உங்களுக்குப் பயமாயில்லையா நளா?”

``முன்னிரவு. கொட்டிலுக்குள் கட்டப்பட்டிருந்த ஆடுகளின் கழுத்துமணி அசைவு தவிர்த்து வேறெந்த ஓசைகளுமில்லை. வீட்டுக்கு முன்னால் போடப்பட்டிருந்த விசாலமான மாலுக்குள் அமர்ந்திருந்தோம். அம்மா நேரத்துக்கே உறங்கச் சென்றுவிட்டார்.''

``ஏனக்கா?” நளா சிரித்தபடி கேட்டார்.

``நீங்கள் ரெண்டு பேரும் போராளியள். எந்த நேரம் என்ன நடக்குமெண்டது தெரியாது. நாளைக்கு உங்களுக்கு ஒண்டு நடந்தால், இந்தப் பிள்ளைகள்..?”

நளாவின் விரல்கள், மடியில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் தலைமுடியை அளைந்தன.

``எங்களுக்கு மட்டுமா? போராட்டத்துக்குள்ளை இருக்கிற எல்லாருக்கும் நடக்கிறதுதானே?”

கணப்பொழுதும் தயங்காமல் உறுதியோடும் தெளிவோடும் அவர் அந்தப் பதிலைச் சொன்னார். மக்களுக்காகவே வாழ்வும் சாவும் என வரித்துக்கொண்ட லட்சியத்தின் மீதான பெருமிதம் அந்த விழிகளில் சுடர்ந்தது. அக்கணம் அவர் முன்னெப்போதையும்விட அழகாகத் தோன்றினார். சுயநல வாழ்வினைத் தேர்ந்த என்னை அந்தப் பதில் சுட்டது. அந்த நல்லிதயத்தின், தன்னலமின்மையின் முன்பு மானசீகமாகத் தலைகவிழ்ந்து நின்றேன்.

ஜெயம் நளா புகழேந்தி

(இடமிருந்து வலமாக... நளா, ஜெயம் மற்றும் ஓவியர் புகழேந்தி)

நளாவை, தளபதி ஜெயம் அவர்களின் மனைவியாகத்தான் முதலில் அறிமுகம். ஜெயம், என் கணவரின் நண்பர். இருவரும் ஒரே ஊரை, பாவற்குளத்தைச் சேர்ந்தவர்கள். 1985-ம் ஆண்டிலிருந்து ஜெயம் எனக்கும் பரிட்சயமானார். திருநெல்வேலி பல்கலைக்கழகத்துக்குப் பின்புறமிருந்த ஒழுங்கையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு என் கணவரோடு (அப்போது காதலர்) வருவார். ஜெயம், சராசரியை மிஞ்சிய உயரம். குறைந்தபட்சம் ஆறேகால் அடி உயரம் இருப்பார். கூச்ச சுபாவமுள்ளவர். அதிகம் கதைக்க மாட்டார். அப்படியே கதைத்தாலும், வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கதைப்பதுபோல இடைவெளிகள் விடுவார். இடையில் சில காலம் அவரோடு தொடர்பில்லை. பிறகு, அவருக்குத் திருமணமாகிவிட்டதாக அறிந்தேன். பல ஆண்டுகள் கழித்து, வட்டக்கச்சியில் அவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டில், முதன்முதலில் நளாவைச் சந்தித்தேன். நல்ல உயரம், மெலிந்த உடல்வாகு, தெளிந்த நீள விழிகள், கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு. அப்போதுதான் முதற்சந்திப்பு எனத் தோன்றாத வகையில் கலகலப்பாக உரையாடினார். இரவு உறக்கத்துக்கு முன்னதான உரையாடலின்போது, தானும் இயக்கத்தில் ஒரு பயிற்சியாளர் எனவும், தற்போது விடுமுறையில் நிற்பதாகவும் கூறினார். இயக்கத்தில் போராளிகளுக்கிடையில் திருமண உறவுகள் நிகழ்வது வழமை. நளா, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காலம் எனது ஞாபகத்தைச் சரித்துவிடவில்லையெனில், சசிகுமார் மாஸ்டர்தான் அந்தச் ‘சம்பந்த’த்துக்குக் காரணம் என்று நளா கூறியதாக நினைவு.

பிரபாகரன்

தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையில் தங்களது திருமணம் நடைபெற்றதாகக் கூறி புகைப்படங்களைக் காட்டினார். அந்தப் போராளியின் முகம்தான் அப்போது எத்தகு ஒளிகொண்டு பொலிந்தது!

ஜெயம் அண்ணாவையும் நளாவையும் பொறுத்தமட்டில், போராட்டம் வேறு குடும்பம் வேறில்லை. மக்களோடு மக்களுக்காகக் களத்தில் நின்றவர்கள் அவர்கள். அதுவொரு உன்னதமான வாழ்வியல் முறை. நளா மட்டுமல்லாது, அம்புலி என்ற கவிஞரும் வேறு பலரும் குடும்ப வாழ்வில் இருந்தபடி களத்தில் நின்றவர்கள்தாம்.

அதன்பிறகான கிளிநொச்சி நோக்கிய பயணங்கள் நளாவைக் காண்பதற்கென்றே தொடர்ந்தன.

பெண்ணொன்றும் ஆணொன்றுமாக இரண்டு பிள்ளைகள். அழகான, அளவான, அன்பான குடும்பம் அது. பிறகு, அவர்கள் வட்டக்கச்சியிலிருந்து கிளிநொச்சி நகரத்துக்குச் சற்றுதள்ளி இடம் மாறிப்போனார்கள். இரண்டு சிறிய அறைகள்கொண்ட வீடு. வீட்டின் தடுப்புச் சுவர்கள், எறிகணைகள் நிரப்பிவரும் தகரப்பெட்டிகளைப் பிரித்துத் தட்டி எழுப்பப்பட்டவை. வெக்கைதான்... இடப்புறம், ஆள்களைச் சந்திப்பதற்காக தனியான கொட்டகை.

நளா பிள்ளைகள் மீது எத்தனைக்கெத்தனை பாசத்தைப் பொழிவாரோ, அத்தனைக்கத்தனை கண்டிப்பானவர். மிகச்சிறந்த நிர்வாகி என்பது வீட்டைப் பார்த்தாலே தெரியும். பயிற்சிக் களத்தில் மிகுந்த ஆளுமை பொருந்திய பயிற்சியாளர் எனப் பிறர் சொல்லி அறிந்தேன். தனிப்பட்ட முறையில் குழந்தையின் சுபாவம்கொண்டவர்.

எங்கள் அம்மாவுக்கும் அவருக்கும் நன்றாக ஒத்துப்போகும். என்னதான் நட்பேயானாலும், இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர், முதன்நிலையிலுள்ள தளபதி ஒருவரின் மனைவி என்ற மரியாதை என் மனதின் ஓரத்தில் இருக்கும். அம்மாவுக்கு அத்தகைய பிரிகோடுகள் தெரியாது. ``ஏன் பிள்ளை மெலிஞ்சு போனாய்? கழுத்தெலும்பு தெரியுது பார்” என்பார். அம்மாவின் பேச்சினிடையேயான பழமொழிகளைக் கேட்டு, நளா விழுந்து விழுந்து சிரிப்பார். 

``அம்மா, சும்மா இருங்கோ” என்று நான் ஆற்றாமல் கண்டித்தால், ``அக்கா, அம்மான்ரை கதையளைக் கேட்க எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?” என்று முகமெங்கும் சிரிப்போடு சொல்வார். நளா, தன் தாயைப் பற்றிக் கதைக்காத நாளே இல்லை எனலாம். அவருடைய தாய், மன்னாரில் இருந்தார். அடிக்கடி சந்திக்கக்கூடிய சூழமைவு இல்லை. தாயைப் பிரிந்திருந்த ஏக்கம்தான் காணும் தாய்மாரில் எல்லாம் அத்தனை அன்பு கனியத் தூண்டியதோ என்னவோ!

ஈழம்

நளாவை மீண்டும் சந்தித்தபோது, ``திரும்பச் சண்டை தொடங்கும்போலை கிடக்கு. நானும் போகவேண்டியிருக்கும்” என்றார்.

அப்போதுதான் நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். ``உங்களுக்குப் பயமாயில்லையா நளா?”

பயமாவது ஒன்றாவது... அதற்கும் நளாவுக்கும் வெகுதூரம்.

2009-ம் ஆண்டு, போர் உக்கிரம் அடைந்து சனங்கள் எல்லோரும் முள்ளிவாய்க்காலை நோக்கி நெருக்கித் தள்ளப்பட்டபோது, நளாவும் பிள்ளைகளும் என்னவானார்களோ என்று நாங்கள் அஞ்சினோம். நான் அப்போது சென்னையில் இருந்தேன். வன்னியோடு தொடர்புகொள்ள முடிந்த ஒருவரை, நளாவுக்கு என்ன நடந்ததென்று அறிந்து சொல்லும்படி வேண்டினேன்.

'ஜெயம் அண்ணா பிறகு வரட்டும். பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு நீங்கள் மட்டுமாவது வெளியேறப் பாருங்கள்' என்று தான் கேட்டபோது, 'எங்கடை சனத்தைச் சாகவிட்டிட்டு என்னாலை வரேலாது' என்று நளா கூறியதாக, அந்த நண்பர் என்னிடம் சொன்னார். நளா கூறியபடி களத்தில் இறங்கிவிட்டார். கணவன் - மனைவி இருவரும் தாங்கள் நம்பிய லட்சியத்துக்காக இறுதிவரை போராடி தமது இன்னுயிர்களை ஈந்தார்கள்.

தளபதி ஜெயம் அவர்கள், கைப்பிடியில் மண்ணை இறுகப்பற்றி நெஞ்சில் வைத்தபடி. வீரச்சாவடைந்து கிடந்த புகைப்படத்தை, இலங்கை பாதுகாப்புப் படைகளின் இணையத்தளம் வெளியிட்டது. நளாவை புகைப்படமாகவும் நாங்கள் காணவில்லை. அந்தக் கலகல பேச்சும் சிரிப்பும் உறைந்த, சிதைந்த புகைப்படத்தைக் காணும் தைரியமும் எங்களுக்கில்லை.

இருந்திருந்துவிட்டு என் அம்மா கேட்பார்: ``நளா மட்டுமெண்டாலும் எங்கையாவது தப்பியொட்டி இருக்கமாட்டாளா?”

அந்தக் கேள்விக்கான பதில் வரும் வாசலை, துயரம் வழிமறித்து நிற்கும். அன்றொரு இரவில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோது, நளாவின் முகத்தில் பொலிந்த பெருமிதமும் ஒளியும் நினைவில் வரும்.

**

நளாவின் கணவர் கேணல் ஜெயம், யுத்தத்தின் இறுதியில், இலங்கை அரசிடம் பிடிபட்டுவிடக்கூடாது எனத் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறக்கும்போது, தன் நாட்டின் மண்ணையும் புல்லையும் கைகளில் ஏந்தியிருந்தார். உயிர் பிரிந்த பின்பும் அவரின் கைகள் அவற்றை விட்டுவிடவில்லை எனச் செய்தி வெளியானது. ஈழப்போரின் போது நடந்த ஒவ்வொரு செய்தியும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது. 

https://www.vikatan.com/news/world/125310-they-fought-until-the-end-of-eelam-war-nala-jayam-story.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.