Jump to content

முள்ளிவாய்க்காலில் எம் சபதமாக இருக்கட்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு உறவை இழந்தாலே
ஆண்டாண்டு தவிக்கும் எம் இனத்தில்
கொத்துக்கொத்தாய்
ஆயிரமாயிரமாய்
கொடுத்துக்கொண்டிருந்ததை
கேட்டு பார்த்து அழுது புரண்டு
காப்பாற்றும்படி மன்றாடி
தோற்று
இன்றும் எழும்பமுடியாமல்
நித்திரை தொலைத்து
நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து
நடைப்பிணங்களாக வாழ்கின்ற தமிழினம்
 
தொலைத்தவை கொஞ்சமா?
காவலுக்கு நின்ற தம்பிகளை
தங்கைகளை பறி கொடுத்து
தலைமை தாங்கிய தளபதிகளை இழந்து
காப்பாற்றவேண்டிய தலைமையை தொலைத்து
இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரர்களின்றி
தலை குனிந்து நிற்கும் எம் இனம்
 
மீண்டும் எழணும்
மீண்டு எழணும்
அதுவே முள்ளிவாய்க்காலில் எம் சபதமாக இருக்கட்டும்
 
ஒன்றையும் நாம் மறக்கவில்லை
எவற்றையும் மன்னிக்கவுமில்லை
 
 
உறங்குங்கள் உறவுகளே
நிம்மதியாக உறங்குங்கள்
நிலம் வெடிக்கப்போகிறது......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாகும்வரை இருக்கும் வலி.

அழித்தவர்களையும், அழிவுக்கு துணைபோனவர்களையும்  மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.