Jump to content

சினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்


Recommended Posts

சினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்

 
Bhaskar oru rascal, BBC Tamil movie review, Movie review, Aravind samy, Amala paul
   
நடிகர்கள் அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர், நாசர், அஃப்தாப் ஷிவ்தாசனி, நிகிஷா படேல்
   
இசை அம்ரீஷ்
   
ஒளிப்பதவு விஜய் உலகநாதன்
   
இயக்கம் சித்திக்

நயன்தாரா, மம்மூட்டி நடிப்பில் 2015ல் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் த ராஸ்கல் படத்தின் ரீமேக். விஜய் நடித்த காவலன் படத்திற்குப் பிறகு, சித்திக் இயக்கியிருக்கும் தமிழ்ப் படம் இது.

மனைவியை இழந்த பாஸ்கர் (அரவிந்த் சாமி) ஒரு தொழிலதிபர். அவருடைய மகன் (ராகவன்) படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் ஷிவானியின் (நைனிகா) தாய் அனு (அமலா பால்) கணவன் இல்லாதவர். அதிகம் கோபப்படும் பாஸ்கர், தன் மகனுக்காக எதையும் செய்யக்கூடியவர். பாஸ்கரையும், அனுவையும் இணைத்துவைக்க நினைக்கிறார்கள் குழந்தைகள். அந்த நேரத்தில் திடீரெனத் தோன்றுகிறார் காணாமல்போன அனுவின் கணவர். அவர் எப்படி காணாமல் போனார், இப்போது திடீரென வந்தது ஏன், பாஸ்கரும் அனுவும் ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.

Bhaskar oru rascal, BBC Tamil movie review, Movie review, Aravind samy, Amala paul

மலையாளத் திரைக்கதையை அப்படியே தமிழில் படமாக்கியிருக்கிறார் சித்திக். ஆனாலும், மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற இந்தக் கதை தமிழில் மிகச் சொதப்பலாக படமாகியிருக்கிறது. பாஸ்கரை முதலில் அறிமுகப்படுத்தும்போது அவர் ஒரு ரவுடியா, தொழிலதிபரா என்பதே புரியவில்லை. வெகுநேரம் கழித்தே அவர் மிகப் பெரிய பணக்காரர் என்பதும் தொழிலதிபர் என்பதும் புரிகிறது.

பாஸ்கர் கோபக்காரரா, நினைத்ததைச் செய்ய விரும்புபவரா, சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாதவரா என அவரது பாத்திரமே மிக குழப்பமானதாக இருக்கிறது. மிகப் பெரிய தொழிலதிபராக இருப்பவர், தன் மகன் கராத்தே கற்றுக்கொள்ளும் இடத்தில் சென்று, தேவையே இல்லாமல் மிகப் பெரிய சண்டை போடுகிறார். திடீரென அருகில் இருக்கும் பெண்ணின் ஃபோனை எடுத்துப் பேசிவிட்டு, கீழே போட்டு உடைக்கிறார். பிறகு பார்த்தால், அது அவருடைய ஃபோனாம். ஆனாலும் ஃபோனை அவர் தேடவேயில்லை.

Bhaskar oru rascal, BBC Tamil movie review, Movie review, Aravind samy, Amala paul

இப்படி கதாநாயகனின் பாத்திரமே மிகச் சொதப்பலாக இருப்பதால், படத்தின் எந்தக் காட்சியும் மனதோடு ஒட்ட மறுக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான பாத்திரங்கள், குழந்தைகள். ஆனால், இயல்பாக இருப்பதற்குப் பதிலாக, வழக்கமான சினிமா குழந்தைகளைப் போல அதீத புத்திசாலித்தனத்துடன் இருப்பது இன்னும் எரிச்சலூட்டுகிறது.

தனி ஒருவன் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த அரவிந்த் சாமிக்கு இந்தப் படம் ஒரு பெரிய சறுக்கல். குழப்பமான இந்தப் பாத்திரத்தை அவர் எவ்வளவோ சிறப்பாக நடித்துக்கொடுத்திருந்தாலும், அது எடுபடவேயில்லை.

Bhaskar oru rascal, BBC Tamil movie review, Movie review, Aravind samy, Amala paul

படத்தில் சற்றே உருப்படியாக அமைந்திருப்பது அமலா பால் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் மட்டும்தான். அவரும் அதை மிக நேர்த்தியுடன் செய்திருக்கிறார். சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணாவின் கூட்டணி அடிக்கும் கூத்துகள் சிரிப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எரிச்சலை ஏற்படுத்துகின்றன.

இதற்கு நடுவில், ஒரு மிகப் பெரிய நிழலுலக கும்பல், அவர்கள் தேடும் ஹார்ட் டிஸ்க் என்று ஒரு த்ரில்லர் கதையை வேறு நுழைக்க முயல்வதால், படம் திசைமாறி எங்கெங்கோ போகிறது.

Bhaskar oru rascal, BBC Tamil movie review, Movie review, Aravind samy, Amala paul

ஏகப்பட்ட பாடல்கள், ஏகப்பட்ட சண்டைகள் என இரண்டரை மணி நேரத்திற்கு பொறுமையை ரொம்பவுமே சோதிக்கிறார்கள். காவலன் படத்தை இயக்கிய சித்திக்கா இந்தப் படத்தை இயக்கியது என்ற சந்தேகமே ஏற்படுகிறது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44151678

Link to comment
Share on other sites

"என்னடா ராஸ்கலே... என்ன நினைச்சுட்டு இருக்கீங்க!" - 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விமர்சனம்

 
 

சிங்கிள் ஃபாதர் பாஸ்கரின் மகன் ஆகாஷும் சிங்கிள் மதர் அனுவின் மகள் ஷிவானியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஷிவானிக்கு ஒரு அப்பா வேண்டும், ஆகாஷுக்கு ஒரு அம்மா வேண்டும். அதனால், குழந்தைகள் இருவரும் பாஸ்கருக்கும் அனுவுக்கும் திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார்கள். திட்டம் ஜெயிக்கிறதா, இல்லையா என்பதே `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சொல்லும் கதை!

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

 

`எங்கள் அண்ணா', `ஃப்ரெண்ட்ஸ்' போன்ற ரோஃபல் காமெடி படங்களைத் தந்த சித்திக், தான் மலையாளத்தில் இயக்கிய `பாஸ்கர் தி ராஸ்கல்' படத்துக்கு மூன்று கோட்டிங் கோலிவுட் கலர் அடித்து கொடுத்திருக்கிறார். படம் மலையாளத்தில் ஹிட் என கேள்விபட்டதும், `ஏன் திமிங்கலம், நீயெல்லாம் எப்படி பாட்ஷா பாய் கிட்டே அசிஸ்டென்ட்டா இருந்தே' காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

நாயகன் பாஸ்கராக அரவிந்த்சுவாமி. மேனர்ஸ் என்பதே தெரியாத அடவாடிப் பேர்வழி. அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். `புதையல்' படத்துக்குப் பிறகு முழுநீள காமெடி திரைப்படத்தில் நடித்திருப்பவர், நம்மை ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார். என்னதான், அரவிந்த் சுவாமி கட்டுமஸ்தான உடலோடு பார்க்க ப்ராக் லெஸ்னர் போல இருந்தாலும், அடியாட்களை பறக்கவிட்டு பந்தாடுவதெல்லாம் ரொம்பவே ஓவர். தமிழ் சினிமாவில் அந்தமாதிரியான அட்ராசிட்டியெல்லாம் ரொம்பவே குறைந்துவிட்டது சித்திக் சார்.  படத்தில் நாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் அமலா பாலுக்கு. நடிப்பில் குறையொன்றுமில்லை, தன் பங்கை மிச்சம் சொச்சம் வைக்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். கதையோடு கூடிய காமெடிதான் சித்திக்கின் படங்களின் ஸ்பெஷல். இதிலும் சூரி-ரோபோசங்கர்-ரமேஷ் கண்ணா மூவரின் காம்போவில் அப்படியான நிறைய காட்சிகள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை காமெடிகளாக மாறாமல் வெறும் சாவடிகளாக இருப்பதுதான் பிரச்னை. இவர்கள் செய்யும் காமெடியைவிட, அர்விந்த் சுவாமி அலட்டாமல் செய்யும் காமெடியே ஓகேவாக இருக்கிறது. சிறுவன் மாஸ்டர் ராகவனின் நடிப்பில் அத்தனை முதிர்ச்சி. பேபி நைனிகா இன்னும் தெறி பேபியாகவே இருக்கிறார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

திரைக்கதை நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. அதாவது, ஒரு காட்சி ஆரம்பிக்கும்போதே அடுத்த காட்சி இதுதான் என நாம் எதிர்பார்ப்பதை இம்மியளவு கூட பிசாகமல் பூர்த்தி செய்கிறது திரைக்கதை. ரொம்பவே சிம்பிளான கதை, அதையே கலகலப்பான காட்சிகள் அமைத்து சுவாரஸ்யமாக தந்திருக்கலாம். அதைவிடுத்து மொத்தமாகவே கதையிலிருந்து தவறி புளூட்டோனியம், அலுமினியம் என ஜேம்ஸ்பாண்ட் படம் ஓட்டுகிறார்கள். பாஸ்கர் ஒரு பாண்ட், ஜேம்ஸ்பாண்ட்! வசனங்களில் நகைச்சுவையின் தடமே தெரியவில்லை.  வசனங்களைக் கேட்டு சிரித்திருக்க வேண்டிய ரசிகர்களின் வாய், கொட்டாவிதான் விடுகிறது. பின் வரிசையில் இரண்டு குழந்தைகள் சீட்டில் உருண்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள். எனவே, குழந்தை மனமுள்ளவர்கள் ஆங்காங்கே சிரிக்க வாய்ப்புள்ளது.

பின்னணி இசை ஓகே. ஆனால், பாடல்கள் வரும்போதுதான் இரண்டு பாப்கார்னை எடுத்து காதுகளை அடைத்துக்கொள்ளலாமா என தோன்றுகிறது. வண்ணமயமான, ஷார்ப்பான ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத் தனது வேலையை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார். பெனலி பைக்கில் ஏறிக்கொண்டு ரௌடிகளை மாலுக்குள்ளேயே விரட்டி விரட்டி வெளுக்கும் காட்சிகளெல்லாம் நினைத்தாலே கிலி கிளம்புகிறது. சிஜியும் தம் பங்குக்கு பயமுறுத்தியிருக்கிறது. 

மொத்தத்தில் சுவாரஸ்யமில்லாத கதைசொல்லல் இந்த பாஸ்கர் எனும் ராஸ்கலை நன்றாக பழிவாங்கியிருக்கிறது.

https://cinema.vikatan.com/movie-review/125304-bhaskar-oru-rascal-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.