Jump to content

தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!!


Recommended Posts

தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!!

படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

maxresdefault-1-1-750x430.jpg
 
 

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/13/தமிழகத்தில்-இருந்து-வந்தோர்-மாதகலில்-அதிரடிக்-கைது.html

Link to comment
Share on other sites

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!

 
 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை போலீஸார் கைது செய்தனர்.

akathi_16361_18588.jpg

 

இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து அகதிகளாகத் தப்பிவந்த ஆயிரக்கணக்கானோர், தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருக்கும் அகதிகளுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியக் குடியுரிமை கிடையாது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இவர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி நிலவுவதால் பலர் தங்கள் தாயகத்துக்குத் திரும்பி வருகின்றனர். இவர்களில் சிலர் இந்திய, இலங்கை அரசுகளின் முறையான அனுமதியுடனும், சிலர் எந்த அனுமதி இன்றியும் இலங்கைக்குச் செல்கின்றனர்.

 

கடந்த 2006- ம் ஆண்டு இலங்கை திரிகோணமலை பகுதியிலிருந்து அகதிகளாக வந்து தமிழக முகாமில் தங்கியிருந்த சஜன், சந்திரலேகா, சாதனா மற்றும் 11 மாத கைக்குழந்தை ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்றின் மூலம் இலங்கை கடல் பகுதியில் பயணித்துள்ளனர். இவர்களை கண்ட இலங்கை கடற்படையினர் படகினை வழிமறித்து விசாரணை நடத்திய போது இவர்கள் ஆவணங்களின்றி கள்ளத்தனமாக தாயகம் திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அகதிகள் 4 பேர் மற்றும் இலங்கை படகோட்டிகள் 2 பேர் உள்ளிட்ட 6 பேரையும் காங்கேசன்துறை போலீஸாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரனைக்குப் பின் இவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/125195-sri-lankan-navy-arrested-sl-refugee-family-with-11monthold-child.html

தமிழகத்தில் இருந்து அழைத்து வந்த படகோட்டிகளுக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் இருந்து படகு மூலம் தாயகம் திரும்பியவேளை மாதகல் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் பிணை அனுமதி வழங்கியது மல்லாகம் நீதிமன்று.

அவர்களைப் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு அழைந்து வந்த படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டது.

http://newuthayan.com/story/17/தமிழகத்தில்-இருந்து-அழைத்து-வந்த-படகோட்டிகளுக்கு-நேர்ந்த-கதி.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.