Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்


Recommended Posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்
 
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது.   

அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது.   

தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.   

“முதலமைச்சருக்கும் எமக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டையடுத்து,   நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட குழு, அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும். வடக்கு மாகாண சபையிடமிருந்து, போக்குவரத்து ஏற்பாடு உள்ளிட்ட சில விடயங்களிலேயே அனுசரணையைக் கோரவுள்ளோம். மற்றைய அனைத்து விடயங்களையும் நாங்களே மேற்கொள்ளவுள்ளோம். ‘பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’ என்கிற அடையாளத்தைத் தவிர்த்து, ‘மாணவர்களும் மக்களும்’ என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவது தொடர்பில், நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். முதலமைச்சரும் அதையே விரும்புகின்றார். தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டை முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் தெரிவிப்பார்” என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதியொருவர் இந்தப் பத்தியாளரிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்திருந்தார்.   

இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கின்ற சமூகமொன்று, குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தமக்குள்ளேயே முட்டி மோதிக்கொள்வது என்பது ஜீரணிக்க முடியாதது.  ஆனால், அதையே கடந்த சில வருடங்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்ப் பரப்பு, பதிவு செய்து வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக்காகப் பெரும் தியாகங்களையெல்லாம் செய்து போராடிய இனமொன்றின் அரசியல், இன்றைக்கு ஒட்டுமொத்தமாகத் தேர்தல் என்கிற ஒற்றை வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.   

அதன் கூறுகளைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள்தான், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ போன்ற கூட்டுக் கோபத்தையும் அஞ்சலியையும் நிகழ்ந்த வேண்டிய இடங்களிலும் குறுகிய அரசியல் செய்ய ஆசைப்படுகின்றார்கள்.   

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, பொதுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்தி, அனுஷ்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை, தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.   

ஆனால், அதற்கான அர்ப்பணிப்பான எந்த முயற்சியையும் யாரும் முன்னெடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, பருவகால நிகழ்வு போன்றதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதிலேயே வடக்கு மாகாண சபை உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளும் கடந்த காலத்தில் ஈடுபட்டிருந்தன.   

ஏப்ரல், மே மாதங்களில் மாத்திரம் முள்ளிவாய்க்கால் பற்றிய உரையாடல்களை ஆரம்பிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அது, எல்லாக் காலங்களிலும் கூட்டுக் கோபத்தோடு, மேல் நிலையில் தக்கவைக்க வேண்டிய விடயம்.   

அதன்மூலம், தமிழ் மக்களின் அரசியல் இலக்கையும் நீதிக்கான கோரிக்கையையும் தடுமாற்றமின்றிப் பேண முடியும். அவ்வாறான நிலையொன்றைப் பேணாமல், சம்பந்தப்பட்ட தினங்களில் மாத்திரம் அஞ்சலிப்பது என்பது, எவ்வளவு தூரம் உண்மையானது என்கிற கேள்வியை எழ வைக்கும்.   

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் தற்போது காணப்பட்டுள்ள இணக்கப்பாடும் இறுதியான தீர்வு அல்ல. மாணவர்களின் ஒற்றுமைக்கும் ஆக்ரோசத்துக்கும் முன்னால், முதலமைச்சரோ, வடக்கு மாகாண சபையோ பணிந்துவிட்டதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது சார்ந்து, சில தரப்புகள் தமது அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன.   

இங்கு முதலமைச்சரோ, வடக்கு மாகாண சபையோ, பல்கலைக்கழக மாணவர்களோ யாராக இருந்தாலும், தமிழ் மக்களோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட தரப்பினரே. ஒருவரை மற்றவர் புறக்கணித்தும், மேவியும் செயற்பட முடியாது. அதுபோக, யாரும் ஏகபோக உரிமையை எடுத்துக் கொள்ளவும் முடியாது.  

 மாறாக, ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற முக்கிய விடயங்கள் செல்லும் போது, சம்பந்தப்பட்ட தரப்பைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு, தேர்தல் அரசியல் உள்ளிட்ட குறுகிய அரசியலை முன்னெடுப்பது தொடர்பில், உள்ளக- வெளியகத் தரப்புகள் முயற்சிகளை மேற்கொள்ளும். அது, அரசியல் கட்சிகளின் சார்பு நிலையை நோக்கித் திசை மாறுவதற்கான கட்டங்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றது.   

அப்படியான கட்டத்தில்தான், மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட தரப்பினர் என்கிற ரீதியில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்கள், முன்னாள் போராளிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பொதுக் கட்டமைப்பொன்றின் கீழ் ஒருங்கிணைத்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஒழுங்கமைப்பதற்கான குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.   

தமிழ்த் தேசிய அரசியல், அதிக தருணங்களில் தனிநபர்களைப் பிரதானப்படுத்தியே வந்திருக்கின்றது. அவ்வாறானநிலை, அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் வேண்டுமானால் அவசியமாக இருக்கலாம்.   
அதாவது, ஏக தலைமையொன்றின் கீழ் ஒருங்கிணைவதன் மூலம் தலையீடுகள், குழப்பங்களற்ற ஒரே முடிவின் கீழ் செயற்படலாம். ஆனால், தற்போதுள்ள தமிழ்த் தேசியச் சூழலில், தேர்தல் அரசியலுக்கு அப்பால், கூட்டுத் தலைமையொன்று உருவாக வேண்டிய தேவை உணரப்படுகின்றது.   

அது, தேர்தலை முன்னிறுத்திய ஒற்றை அரசியலுக்கு அப்பாலும், பலமான அரசியல் கட்டமைப்பொன்றைப் பேணுவதற்கு உதவும். அதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதற்காக அமைக்கப்படும் பொதுக்கட்டமைப்பும் அதன் குழுவும் முன்னோடியாக இருக்க முடியும்.   
தமிழ்ச் சமூக ஒழுங்கில் மாலை, மகுடங்களுக்கு அலைகின்ற உளவியல் என்பது விலக்கப்பட முடியாத ஒன்றாக நீள்கிறது. இடம், பொருள், ஏவல் தெரியாது, துதிப்பாடல்களும் பொன்னாடைகளும் போர்த்தப்படுகின்றன. இந்த உளவியல் என்பது, அதிக தருணங்களில் கடப்பாடுகளை மறந்து, விடயங்களைக் கோட்டைவிட வைத்திருக்கின்றது. அவ்வாறான நிலையை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளுக்குள்ளும் பேண வேண்டும் என்கிற பெரு விருப்பம் சில தரப்புகளிடம் உண்டு.   

அதற்காக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தமது கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கின்றன. ஏற்கெனவே அடையாளம் பெற்றுவிட்ட ஒரு தலைமையின் கீழ் அல்லது அரசியலின் தொடர்ச்சி தாங்கள்தான் என்று கவனம் பெறுவதற்கான கட்டங்களை, இவற்றின் மூலம் நிகழ்த்திவிட முடியும் என்றும் நம்புகின்றன.  

 ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் பெரும் தலைமையாகவோ, அரசியல் தரப்பாகவோ அடையாளம் பெறுவதற்கு, அதிக உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அது, குறுகிய நலன்களுக்கு அப்பாலான கட்டங்களை நிலைநிறுத்திக் கொண்டு செயற்படுவதன் மூலமே சாத்தியப்படும்.   

மாறாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் போன்றவற்றின் மூலம் கவனம் பெற்று, மக்களிடம் சென்று சேரலாம் என்பது அயோக்கியத்தனம். ஆனால், அவ்வாறான அயோக்கியத்தனத்தை எந்தவொரு குற்றவுணர்வுமின்றிச் செயற்வதற்குத் தயாராக, பல தரப்புகளும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றன என்பதுதான், பெரும் சோகம்.   

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வழங்க, இறுதி மோதல்களில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் ஏற்றுவார் என்று தெரிகின்றது. அதுபோல, அரசியல் தலைவர்கள் எவரின் உரைகளும் இன்றி, தமிழ் இன அழிப்புத் தொடர்பான பிரகடனம் ஒலிபரப்புச் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இது குறிப்பிட்டளவு முன்னேற்றம்.  

 ஆனால், அவை குழப்பங்கள், இழுபறிகள் இன்றி நிகழ வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கான பொதுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாகக் கொள்ள முடியும்.   

 மாண்டுவிட்டவர்களுக்காக அழுவதற்கான உரிமை கோரி, சில வருடங்களுக்கு முன்னர் வரை போராடிக் கொண்டிருந்தோம். அது, குறிப்பிட்டளவில் கிடைத்திருக்கின்ற தருணத்தில், மாண்டுவிட்டவர்களுக்கான நீதிக்காகவும் அர்ப்பணிப்போடு போராட வேண்டும். அது, ஒரே நாளில் கிடைத்துவிட முடியாத ஒன்றுதான், ஆனால், அந்தப் போராட்டத்துக்கான கடப்பாட்டை ஒவ்வொரு தலைமுறையிடமும் பிசிறில்லாமல் கடத்திச் செல்ல வேண்டிய தார்மீகத்தை காலம் எங்களிடம் வழங்கியிருக்கின்றது.   

அதைக் குறுகிய நோக்கங்களுக்காகத் தவற விடுவோமாக இருந்தால், காலம் மன்னிக்காது. மாண்டவர்களின் ஆன்மாவும் மன்னிக்காது. பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டு அஞ்சலிப்பதுதான், ஆன்மாக்களை சாந்தப்படுத்தும்.   

அதை அடைவதற்காக, அனைத்துத் தரப்புகளும் ஒரணியில் இணைய வேண்டும். அதன் ஆரம்பத்தை, இந்த வருட நினைவேந்தல் பதிவு செய்ய வேண்டும்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்-குறுகிய-அரசியலுக்கு-அப்பாலான-கணம்/91-215989

Link to comment
Share on other sites

பிளவுபட்டுக் கிடக்கும் தமிழருக்கு விமோசனம் என்பது எட்டாக்கனி

 
 

 

ஈழத் தமி­ழர்­க­ளின் ஒற்­று­மை­யீ­னம் அனை­வ­ருக்கும் தெரிந்த ஒன்­று­தான். தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டு­வ­தி­லி­ருந்து முள்ளி வாய்க்­கால் நினை வேந்­தல்­வரை இவர்­கள் தமது ஒற்­று­மை­யீ­னத்தை உல­க­றி­யச் செய்து விட்­டார்­கள்.

தமி­ழர்­க­ளைப் பற்றி நன்கு புரிந்து வைத்­தி­ருக்­கின்ற ஆட்­சி­யா­ளார்­கள் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தில் அக்­க­றை­யின்­றிக் காணப்­ப­டு­கின்­ற­னர்.

ஒற்­று­மையை இழந்து காணப்­ப­டு­கின்ற தமி­ழர்­க­ளால் எதை­யுமே செய்­து­விட முடி­யாது என்­பதே அவர்­க­ளது கணிப்­பா­க­வும் உள்­ளது.

ஒரு காலத்­தில் சாதிப் பிரச்­சினை தமி­ழர்­கள் மத்­தி­யில் பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துக் காணப்­பட்­டது.

ஒரு பகுதி மக்­கள் சாதி­யின் பெய­ரால் ஒதுக்கி வைக்­கப்­பட்­ட­னர். உயர் சாதி­யி­ன­ரின் கரங்­க­ளில் அதி­கா­ரம் இருந்­த­தால் தாம் நினைத்­த ­வாறு நடப்­ப­தற்கு அவர்­க­ளால் முடிந்­தது.

ஒதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த அந்த மக்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் பல­வீ­ன­முற்­ற­வர்­க­ளாக இருந்­த­தால் உயர் சாதி­யி­னரை அண்­டிப் பிழைக்க வேண்­டிய நிலை­யும் காணப்­பட்­டது.

காலப்­போக்­கில் சாதி­யம் மறைந்­து­போ­கா­மல் இருந்­தா­லும் அதன் வீரி­யத்­தில் தளர்வு ஏற்­ப­டத்­தான் செய்­தது.

அடக்­கி­யொ­துக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த மக்­கள் கல்­வி­யி­லும் பொரு­ளா­தா­ரத்­தி­லும் படிப்­ப­டி­யாக முன்­னேற்­றம் கண்­ட­தால் தமது சொந்­தக் கால்­க­ளில் நிற்­ப­தற்கு அவர்­க­ளால் முடிந்­தது.

இன்று கூட சாதிப் பாகு­பா­டு­கள் காணப்­ப­டு­கின்ற போதி­லும் சாதி ரீதி­யான அடக்கு முறை­க­ளைக் காண முடி­ய­வில்லை. ஆயி­னும் சாதி அடிப்­ப­டை­யி­லான பிள­வு­கள் இருக்­கத்­தான் செய்­கின்­றன.

ஒற்­று­மை­யின்மை பெரும் சாபக்­கேடு

தமி­ழர்­க­ளின் உரி­மைப் போராட்­டங்­கள் தோல்­வி­ய­டைந்­த­மைக்கு அந்த மக்­க­ளி­டம் காணப்­பட்ட ஒற்­று­மை­யி­னமே முதன்­மைக் கார­ண­மா­கும். தமது உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­குக் கூட ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­டாத இவர்­கள் இனி­யா­வது ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­டு­வார்­களா? என்­பது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­னது.

படித்­த­வர்­கள், பண்­புள்­ள­வர்­கள், தமது கலா­சா­ரத்­தைப் பேணிக் காப்­ப­தில் வல்­ல­வர்­கள் என்­றெல்­லாம் புக­ழப்­ப­டும் தமி­ழர்­க­ளி­டத்­தில், ஒற்­றுமை நில­வா­த­தால் அவர்­க­ளின் விவ­கா­ரங்­கள் பல­வும் தோல்­வி­யில் முடி­கின்­றன.

ஒற்­று­மைக்கு எடுத்­துக் கூட்­டாக விளங்­கு­ப­வர்­கள் சீன மக்­கள் என்­பதை சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை. உல­கின் அதிக மக்­கள் தொகை­யைக் கொண்ட அந்த நாடு பொரு­ளா­தா­ரத்­தி­லும், இராணு வப் படை பலத்­தி­லும் முதன்மை இடத்­தைப் பிடிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­க­ளைக் கொண்­டுள்­ளது.

ஆசிய நாடு­க­ளில் ஒன்­றான சீனா மேற்­கத்­திய நாடு­க­ளைப் பின்­தள்­ளிட்ட இந்­தச் சாத­னை­யைப் புரிந்­துள்­ளது. இதற்கு அந்த நாட்டு மக்­க­ளின் ஒற்­றுமை நிறைந்த அர்ப்­ப­ணிப்பு நிறைந்த உழைப்பே முதன்­மைக் கார­ண­மா­கும். அவர்­கள் தமது தலை­வர்­க­ளைப் பின்­பற்றி நடப்­ப­தில் ஒரு­போ­துமே தவ­றி­ய­தில்லை.

சிறந்த கொள்­கைப் பற்­றும் இவர்­க­ளி­டம் காண­மு­டி­கின்­றது. ஆனால் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் சீன மக்­க­ளின் இத்­த­கைய பண்­பு­களை அவர்­க­ளி­டம் காண முடி­ய­வில்லை. இதுவே அவர்­க­ளின் தோல்­வி­க­ளுக்­கும் கார­ண­மாக அமைந்து விட்­டது.

முள்­ளி­வாய்க்­கால் முரண்­டு­பி­டிப்­புக்­கள்

இறு­திப் போரின்­போது தமி­ழர்­கள் பல்­லா­யி­ரக் கணக்­கில் ஈவு இரக்­க­மின்­றிக் கொல்­லப்­பட்­ட­தற்­குச் சாட்­சி­யாக முள்ளி வாய்க்­கால் காணப்­ப­டு­கின்­றது.

இறு­திப்­போ­ரில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூரு­மு­க­மாக ஆண்டு தோறும் மே மாதம் 18ஆம் திகதி நினை­வேந்­தல் நிகழ்வு இங்கு இடம் பெறு­கின்­றமை வழக்­கம். ஆனால் இந்த ஆண்டு இதி­லும் முரண்­பா­டு­கள் தோன்­றி­யுள்­ளன.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ ரும், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ரும் இந்த விட­யத்­தில் முரண்­பட்டு நிற்­கின்­ற­னர். இந்த இரண்டு பகு­தி­யி­ன­ருக்­கும் இடை­யில் அறிக்­கைப்­போர் தொடர்­கின்­றது.

எவ­ருமே விட்­டுக் கொடுப்­தா­கத் தெரி­ய­வில்லை. போரில் அநி­யா­ய­மா­கக் கொல்­லப்­பட்­ட­வர்­களை நினைவு கூரு­வ­தில்­கூட முரண்­பா­டு­கள் தோன்­றி­யுள்­ளமை அவ­மா­னத்­துக்­கு­ரி­யது.

தமி­ழர்­க­ளின் இன்­னல்­கள் நீங்­கிப் பிரச்­சி­னை ­க­ளுக்­குத் தீர்வு கிடைக்க வேண்­டு­மென்­றால் முத­லில் அவர்­கள் தமக்­குள் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

ஒரு தலை­வ­னின் கீழ் அணி­தி­ரண்டு தமது பிர­ச் சினைக­ளுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான போராட்­டத்­தில் ஈடு­பட வேண்­டும். இதை விடுத்து ஆளுக்­கொரு பக்­க­மாக நின்று குரல் கொடுப்­ப­தால் எவ்­வித பய­னும் கிடைக்­கவே மாட்­டாது.

http://newuthayan.com/story/09/பிளவுபட்டுக்-கிடக்கும்-தமிழருக்கு-விமோசனம்-என்பது-எட்டாக்கனி.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.