Jump to content

கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

 
 

 

p44aa_1526370947.jpg‘‘கர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.

‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார்.

‘‘ரஜினி அடுத்தடுத்து தனது மக்கள் மன்றத்தினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பலரும் ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம்’ என்று சொன்னார்கள். ‘நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும்தான் கூட்டணி அமைக்கும். சட்டமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது என நினைக்கிறேன்’ என்று ரஜினி பதில் சொன்னார். அந்த பதிலிலிருந்துதான் புது அரசியல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.’’

‘‘என்ன அது?’’

‘‘ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பக்கம், ‘மோடியுடன் ரஜினி இணைந்தால், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தலைமை வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்றார். தமிழருவி மணியனோ, ‘பி.ஜே.பி-யுடன் ரஜினி சேரமாட்டார். ஒருவேளை சேர்ந்தாலும், அதை நான் சகித்துக்கொள்வேன்’ என்கிறார். ரஜினியோடு அரசியல் பேசும் இடத்தில் இருப்பவர்களாகக் கருதப்படும் இந்த இருவரும் இப்படிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார்கள்.’’

p44c_1526370970.jpg

‘‘என்ன காரணம்?’’

‘‘தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது எந்தக் காலத்திலும் பி.ஜே.பி-யின் திட்டம் இல்லை. அவர்களின் உடனடி இலக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது. கடந்த முறை கைகொடுத்த பல மாநிலங்களில் இப்போது நிலவரம் சாதகமாக இல்லை. உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இணைந்தால், அங்கே பி.ஜே.பி-க்குப் பெரும் இழப்பு ஏற்படலாம். பீகார், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் கடந்த முறை அளவுக்கு இப்போது வெற்றி கிடைக்காது. இந்த இழப்புகளை, புதிய வெற்றிகளின்மூலமே ஈடுகட்ட முடியும். அதற்கு தமிழகத்தையும் எதிர்பார்க்கிறது பி.ஜே.பி தேசியத் தலைமை.’’

‘‘தமிழகத்தின் சூழல் தெரிந்தும், இப்படி எதிர்பார்க்கிறார்களா?’’

‘‘2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழப்பிரச்னை தமிழகத்தில் எவ்வளவு கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தாண்டி தி.மு.க ஜெயிக்கவில்லையா? இதே கேள்வியைத்தான் சிலர் கேட்கிறார்கள். எடப்பாடியும் பன்னீரும் வைத்திருக்கும் அ.தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதில் டெல்லி தலைவர்களுக்கு உடன்பாடில்லை. தினகரன் கட்சியுடனோ, தி.மு.க-வுடனோ போகவும் வாய்ப்பில்லை. இந்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ரஜினிதான். ஆனால், ரஜினி பிடிகொடுக்கவில்லை.’’

‘‘என்ன நினைக்கிறார் ரஜினி?’’

‘‘தமிழகத்தின் சூழல் அவருக்கு மட்டும் தெரியாதா என்ன? ‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டமன்றத் தேர்தல்தான் என் இலக்கு என ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவு கொடுத்தால், அதன் பின்விளைவுகளை நான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க வேண்டியிருக்கும்’ எனக் கவலையோடு சொன்னாராம். ‘நமக்கு மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் செல்வாக்கைப் பயன்படுத்தாமல், அவரின் சட்டமன்றப் பயணத்துக்கு மட்டும் நாம் ஏன் உதவ வேண்டும்?’ என டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் கேட்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் பலன்தரும் ஒரு ஃபார்முலாவை ரஜினியே சொல்லியிருப்பதாகத் தகவல். ‘தமிழக சட்ட மன்றத்தைக் கலைத்துவிடுங்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரட்டும். எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; உங்கள் வெற்றிக்கு நான் உதவுகிறேன்’ என்பதுதான் ரஜினி சொல்லியிருக்கும் அந்த ஃபார்முலா.’’

‘‘இது சாத்தியமா?’’

‘‘தினகரன் பக்கம் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும்போது, சட்டமன்றத்தை முடக்கிவைத்து, குழப்பங்களைப் பெரிதாக்கி, இந்த ஆட்சியைக் கலைப்பது சாத்தியம்தான். அதற்கு முன்பாக சில உறுதிமொழிகளை ரஜினி தரப்பிலிருந்து பி.ஜே.பி தலைவர்களும், பி.ஜே.பி தரப்பிலிருந்து ரஜினிக்கு நெருக்கமானவர்களும் எதிர்பார்க்கிறார்கள். ‘கட்சிக்குப் பெயர் வைக்காமல், கட்சியின் செயல்திட்டங்களை அறிவிக்காமல், பூத் கமிட்டி அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிரமமாக இருக்கிறது’ என ரஜினி மக்கள் மன்றத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ரஜினியிடம் ஆலோசனையின்போது சொன்னார்கள். ‘கொள்கைகளை முதலில் ரஜினி சொல்லட்டும். மறுநிமிடமே உறுப்பினர்கள் திரண்டு வருவார்கள். எதுவுமே சொல்லமாட்டேன், எங்களுடன் வாருங்கள் என்று அழைக்கும்போது மக்கள் யோசிக்கிறார்கள். இது மன்றத்தினரைத் தவறான செயல்பாட்டுக்கு அழைத்துப் போய்விடும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு இதை இழுத்துக்கொண்டே போவது சிரமம் என்பதை ரஜினியும் உணர்ந்துவிட்டார். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.’’

‘‘பி.ஜே.பி இதற்கு சம்மதிக்குமா?’’

‘‘தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்துத் தேர்தலை நடத்துவதில் அவர்களுக்கு மறைமுக ஆதாயம் கிடைக்கலாம். ஒருவேளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க ஜெயித்தால், தேர்தலுக்குப் பிறகான கூட்டணியில் அவர்களை இணைக்க முடியும் என நம்புகிறது பி.ஜே.பி. ‘தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்திருந்தால், சங்கடமின்றி தி.மு.க ஆதரிக்கும்’ என்பது அவர்கள் திட்டம்.’’

‘‘தமிழகத்தை ஆளும்தரப்புக்கு இதெல்லாம் தெரியுமா?’’

‘‘தெரிந்துதான் அவர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு ரஜினியை எல்லோரும் திட்டுவதைக் கவனியுங்கள். ஜெயக்குமார் திட்டினார். சி.வி.சண்முகம் திட்டினார். செல்லூர் ராஜு மோசமாகப் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானார். எல்லோரையும்விட அதிக கடுப்பில் இருக்கும் முதல்வர் எடப்பாடி, ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற அரசு விழாவில் குட்டிக்கதை சொல்லி எச்சரித்தார். ‘யாரையும் கண்மூடித்தனமாக நம்பினால் வெற்றி பெற முடியாது. மற்றவர்கள் செய்வதை நாமும் செய்ய நினைக்கக்கூடாது’ என்றார். மோடியுடனான தனது அனுபவத்தை வைத்து ரஜினிக்கு எடப்பாடி விடுத்த எச்சரிக்கையாகவே இதைப் பார்க்கிறார்கள்.’’

‘‘மக்கள் மன்ற இளைஞரணி நிர்வாகிகளிடம் என்ன பேசினாராம் ரஜினி?’’

‘‘மே 13-ம் தேதி போயஸ் கார்டனில் நடந்த இந்தக் கூட்டத்தில் ரஜினி அதிகம் பேசவில்லை. பூத் கமிட்டி பொறுப்பாளர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேர்ப்பதில் யார் யார் துடிப்பாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்குக் கட்சி ஆரம்பிக்கும்போது முக்கிய பதவிகளைத் தர நினைக்கிறாராம் ரஜினி. இதில் பின்தங்குகிறவர்கள் மன்றத்திலேயே இருக்க வேண்டியிருக்குமாம். ‘கட்சி வேறு, மன்றம் வேறு’ என இரண்டு அமைப்புகளையும் தனித்தனியாக நடத்த ரஜினி நினைக்கிறாரோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.’’

p44a_1526371059.jpg

‘‘தினகரன்-திவாகரன் மோதலில் இப்போதைக்கு வெற்றி தினகரனுக்குத்தானே?’’

‘‘எப்போதெல்லாம் இந்த மோதல் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் தினகரனுக்கே வெற்றி கிடைத்துள்ளது. இப்போதும் அதுபோல் அவரே வெற்றி பெற்றுள்ளார். மே 9-ம் தேதி சசிகலா அனுப்பிய நோட்டீஸில், ‘திவாகரன் தனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், சசிகலாவின் ஆதரவு தினகரன் பக்கம்தான் இருக்கிறது என்பது வெளிப்படையாகியுள்ளது. இது திவாகரனுக்கு மட்டுமேயான எச்சரிக்கை அல்ல, ஓ.பி.எஸ்-எடப்பாடி, அ.தி.மு.க தொண்டர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், சசிகலா குடும்ப உறவுகள் என அனைவருக்குமான அறிவுறுத்தல். ‘தினகரன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தன் சம்மதத்தோடுதான் எடுக்கப்படுகின்றன. தன்னை ஆதரிப்பவர்கள் தினகரனை ஆதரிக்க வேண்டும்’ என்று பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லியிருக் கிறார் சசிகலா.’’

‘‘இவ்வளவு கடுமையான நோட்டீஸ் வந்ததன் பின்னணி என்ன?’’

‘‘திவாகரன் தொடர்ச்சியாக தினகரனுக்கு எதிராகப் பேசிவந்தார். பல பேட்டிகளில், ‘என் அக்கா சசிகலாவுக்கு எதுவும் தெரியாது; தினகரன்தான் சசிகலாவை ஆட்டி வைக்கிறார்’ என்றார். , ‘மகாதேவன் மரணத்தின்போது என்னை அமைச்சர்கள் சந்தித்தனர். நான்தான் அவர்களை எடப்பாடியோடு இருக்கச் சொன்னேன்’ என்றார். இந்த இரண்டு விஷயங்களும் சசிகலாவைக் கடுமையாகப் பாதித்தன. ‘எல்லா அமைச்சர்களையும் எடப்பாடியோடு இருக்கச் சொன்னது திவாகரன்தான்’ என்று குடும்பத்திலேயே பலர் சொன்னபோதுகூட சசிகலா நம்பவில்லை. திவாகரனே தன் வாயால் சொன்னபோது சசிகலா அதிர்ந்துவிட்டார். அதன்பிறகு உடனடியாக, தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்குச் சிறையிலிருந்து கடிதம் எழுதி, வரச் சொன்னார். மே 2-ம் தேதி அந்தக் கடிதம் வந்துள்ளது. மே 8-ம் தேதி வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். 9-ம் தேதி சசிகலாவிடமிருந்து நோட்டீஸ் வெளியானது.’’

p44b_1526371084.jpg

‘‘ப.சிதம்பரம் குடும்பத்தினர்மீது மீண்டும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளதே?’’

‘‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சி எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தாலும், மற்ற காங்கிரஸ்காரர்களுக்குப் பெரிய குடைச்சல் இருக்காது. ஆனால், ப.சிதம்பரம் குடும்பத்துக்குக் குடைச்சல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இது மோடி Vs சிதம்பரம் மோதலின் தொடர்ச்சி. சில மாதங்களுக்குமுன்பு கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு முதலீடுகள் என்று ஜூ.வி நிருபர் விரிவாகப் பல சொத்துகளைப் பட்டியல் போட்டிருந்தாரே... இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் வாங்கப்பட்ட சொகுசு பங்களா ஒன்றும் அந்த லிஸ்ட்டில் இருந்தது.  அதற்கான பணம்  கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக்கணக்கிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகியிருந்ததும், அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி பெயரில் கணக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, வருமானவரித் துறை மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதையடுத்துத்தான் மே 11-ம் தேதி வருமானவரித் துறை மூவர்மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.’’

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்குப் பயணம் செய்ய தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளாராமே?’’

‘‘ஆம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஆணைதான் இது. தற்போது, அதைக் கொஞ்சம் கடுமையாக மாற்றியுள்ளனர். இப்போது முதலமைச்சர் துறைரீதியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார். இந்த ஆய்வுக்கூட்டம் ஏப்ரல் கடைசியிலிருந்து நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற உள்ளது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், அரசுத்துறை செயலாளர்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு, குளிர் பிரதேசங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். ஆய்வுக்கூட்டத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால், அவர்களைத் தொடர்புகொள்வதும் சிரமமாக உள்ளது. அதனால்தான் இந்த உத்தரவு’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி


p44_1526371010.jpg

பி.ஜே.பி அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து மாநில சுயாட்சி மாநாடு நடத்த தி.மு.க திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதம் நடக்க உள்ள இந்த மாநாட்டுக்காக சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல லட்சம் பேர் கூடும் வகையில் இடம் தேடிக்கொண்டிருக் கிறார்கள்.

நடிகர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆன நிலையில், சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் அவர் கலந்துகொண்டார். இவ்வளவு வெளிப்படையாக நடமாடியும், எஸ்.வி.சேகரை போலீஸ் கண்டுகொள்ளவில்லை. காரணம்... தலைமைச் செயலகத்திலிருந்து க்ரீன் சிக்னல் வரவில்லையாம். 

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி ரம்யா பாரதிக்கும் மோதல் வெடித்துள்ளது. மேற்கு வங்காளத்துக்கு டெபுடேஷன் கேட்கிறார் ரம்யா பாரதி. இவர் தொடர்புடைய ஒரு விவகாரம் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, மார்டி இதற்கு மறுத்துவிட்டாராம். இதை சாமர்த்தியமாக சிலர் ஐ.ஏ.எஸ் Vs ஐ.பி.எஸ் மோதலாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதில் நிரஞ்சன் மார்டி படு அப்செட்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.