Jump to content

தீவிரவாதத்தின் புதிய உத்தி


Recommended Posts

தீவிரவாதத்தின் புதிய உத்தி

 

 
 

புகைப்படமொன்றில் தாய் ஒருவர் தனது இளைய மகனின் தோளில் கையைவைத்தபடி காணப்படுகின்றார்.அவர்களிற்கு முன்னாள் இரு சகோதரிகள் பொருத்தமான சிவப்பு ஸ்கார்வ்கள் அணிந்து கையில் பூக்களுடன் காணப்படுகின்றனர். 

அதேபடத்தில் தன்னை விட உயரமாக வளர்ந்த மகனிற்கு அருகில் தந்தை காணப்படுகின்றார்.

ஆறு பேரும் அழகான மகிழச்சிகரமான நிறங்களில் ஆடை அணிந்துள்ளனர்.

அந்த படத்தை பார்த்தால் அது மகிழ்ச்சிகரமான இந்தோனேசிய  நடுத்தரவர்க்க குடும்பத்தின் படம் என்றே எண்ணத்தோன்றும்.

ஆனால் அந்த படம் இஸ்ரேலிய தீவிரவாதத்தின் புதிய அடையாளத்திற்கான குறியீடாக மாறியுள்ளது. உலகை இந்த வாரம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நண்பர்களும் உறவினர்களும் அந்த முஸ்லீம் குடும்பத்தை சாதாரணமானவர்கள், நல்லவர்கள் அருகில் வாழும் கிறிஸ்தவர்களுடன் நட்புடன் பழகுபவர்கள் என தெரிவிக்கின்றனர்

suicide_family.jpg

தங்கள் பிள்ளைகளிற்கு வீட்டில் வைத்து கல்வி போதித்த அவர்கள் ஏனைய குழந்தைகளுடன் அவர்கள் விளையாடுவதற்கு அனுமதித்துள்ளனர்.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அனைவரும் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினர்.

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்தனர். 

இந்த சம்பவம் இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரான  சுரபயாவில் இடம்பெற்றது  இதன் போது அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கொல்லப்ட்டனர்.

புகைப்படத்தில் கமராவை ஆவலுடன் பார்த்தபடி காணப்படும் அந்த குடும்பத்தின் இளம் வாரிசான எட்டு வயது சிறுமியும் தன்னை வெடிக்கவைத்து தற்கொலை குண்டுதாரியானார்.

அவரது சகோதரிக்கு 12 வயது.

முதல்தடவையாக ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை குண்டுதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் உணர்வதற்கு முன்பாக மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது.

இம்முறை இந்தோனேசியாவின் பொலிஸ் தலைமையகத்தை  இலக்குவைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்  தற்கொலை தாக்குதலை மேற்கொண்டனர் அவர்களில் ஏழு வயது குழந்தையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெடிவிபத்தில் கொல்லப்பட்டனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் ஒருவரையொருவர் நன்கு தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பொன்றின் சுரபாய பிரிவின் தலைவர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் 13 தீவிரவாதிகளும் அவர்களுடைய குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிர்பிழைத்த பிள்ளைகளிற்கு உளவியல் சிகிச்சை ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

சிறுவர்களை ஈடுபடுத்துவது பைத்தியக்காரத்தனம் என தெரிவிக்கின்றார் அரசசார்பற்ற அமைப்பொன்றை சேர்ந்த தவிக் அன்டிரி. முன்னாள் தீவிரவாதிகளின் புனர்வாழ்வு குறித்த நிலையத்தை நடத்தி வரும் அவர் இது இந்தோனனோசியாவை பொறுத்தவரை புதிய விடயம் இது தொடரலாம் என அஞ்சுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களையும் சிறுவர்களையும் தற்கொலை தாக்குதலிற்கு பயன்படுத்தும் நடவடிக்கைகளில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

நைஜீரியாவின் போக்கோ ஹராம் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசிய  பிரஜைகள் ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர் இவர்கள் தற்போது நாடு திரும்புகின்றனர் இது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் திரும்பிவருகின்றனர் அதிகாரிகளிற்கே எத்தனை பேர் திரும்பி வருகின்றனர் என்பது தெரியாது என தெரிவிக்கின்றார் சிங்கப்பூரின் தேசிய பல்கலைகழகத்தின் அரசியல் பேராசிரியர் பில்வீர் சிங் இந்த விடயத்தை உரியவிதத்தில் கையாளாவிட்டால் மேலும் பல தாக்குதல்கள் நிகழக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

 

ஏபி

 

தமிழில் - ரஜீபன்

http://www.virakesari.lk/article/33491

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.