Jump to content

ஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..!


Recommended Posts

ஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..!

 
 

ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூர் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாகப் போகிறது. ஆம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் இருவரும் நேரில் சந்திக்கவிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கிம், `என்னிடம் அணு ஆயுத பட்டன் இருக்கிறது. அழுத்தினால் மொத்தமும் காலி' என்றார். பதிலுக்கு ட்ரம்ப், `என்னிடம் அதைவிடப் பெரிய பட்டன் இருக்கிறது' என்றார். இப்படி எதிரும்புதிருமாகப் பேசிக்கொண்ட இவர்கள் இன்று... `ட்ரம்ப்பை சந்திப்பதற்குள் வடகொரியாவில் உள்ள அனைத்து அணு ஆயுதக் கூடங்களும் அழிக்கப்பட்டுவிடும்' என்கிறார் கிம். `இந்தச் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்கிறார் ட்ரம்ப். `உலகில் அழிக்க முடியாத சக்தி அணுக்கள் மட்டுமல்ல... மாற்றமும்தான்' என்பதை நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார்கள் கிம் மற்றும் ட்ரம்ப்.

சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற முக்கியமான சந்திப்பு... தென்கொரியாவின் ஜனாதிபதி மூன் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு. இரண்டாம் உலகப் போர் காலம் தொட்டே இந்த இரண்டு நாடுகளுமே பகையாளிகள். வருடங்கள் ஓட, வட கொரியா  ஓர் அடாவடி தேசமாக மாறி அடுத்தடுத்து பல அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. அமெரிக்காவுக்கும், அதனுடன் நட்பு பாராட்டிய தென்கொரியாவுக்கும் வடகொரியா சிம்ம சொப்பனமாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் போர் மூண்டுவிடுமோ என்ற பயம் கொரிய மக்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இருநாடுகளைப் பிரிக்கும் எல்லைப் பிரதேசத்தில், வடகொரிய அதிபர் கிம் காலடி எடுத்து வைக்க, அவரை தென்கொரியாவின் அதிபர் கை கொடுத்து வரவேற்று தன் நாட்டுக்குள் அழைத்துச் சென்றதையெல்லாம் பார்த்த உலகம் `நடப்பதெல்லாம் கனவா நனவா' என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது.

 

ஜூன் 12 கிம் - ட்ரம்ப் சந்திப்பு

``நாங்கள் அணு ஆயுதச் சோதனை நடத்தும் போதெல்லாம், உங்களை அதிகாலைத் தூக்கத்திலிருந்து எழுப்பி செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிந்தேன். இனி அப்படி நடக்காது. உங்கள் தூக்கம் இனி கெடாது'' என்று கிம், தென் கொரியாவின்  ஜனாதிபதியிடம் மெல்லிய புன்னகையுடன் கூறியது இருநாட்டு மக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேசிய வட கொரிய அதிபர் கிம், `விரைவில் ட்ரம்ப்பைச் சந்திப்பேன்' என்றார். 

வடகொரிய -  அமெரிக்க அதிபரின் சந்திப்பும் இதே நிம்மதியைக் கட்டாயம் ஏற்படுத்தும் என்பதுதான் சர்வதேசத் தலைவர்களின் எதிர்பார்ப்பு. கிம் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். அணு ஆயுதச் சோதனைக் கூடங்களின் சுரங்கங்கள், ஆயுத தளம் எல்லாவற்றையும் மூடிவிடுவதாக அறிவித்துள்ளார். பதிலுக்கு அமெரிக்கா தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்தச் சந்திப்புக்குப் பின் வட கொரியாவுடனான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, தென்கொரியா, சீனா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வடகொரியாவைப் பார்வையிட்டுத் தரும் கட்டுரைகள்தாம் வடகொரியாவின் வாக்குறுதிகளை உறுதி செய்யும். வடகொரியா இதற்கும் தயாராகத்தான் உள்ளது. 

ஜூன் 12 கிம் - ட்ரம்ப் சந்திப்பு

சிங்கப்பூரில் சந்திப்பு நடப்பதற்குக் காரணம் சிங்கப்பூரின் நடுநிலைத்தன்மைதான் என்று அந்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் சான்சான்சிங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள ஷாங்கிரி-லா, மெரினா பே சான்ட்ஸ் ரிசார்ட் உள்ளிட்ட 6 பிரபல சொகுசு ஹோட்டல்கள் இந்தச் சந்திப்புக்காக பரீசிலிக்கப்பட்டு வருகின்றன. வடகொரியாவின் பொருளாதார முன்னேற்றம். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான முடிவுகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசவுள்ளனர். ஏற்கெனவே, இருந்த மனக்கசப்புகள் இந்தச் சந்திப்பில் பேசப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்காவின் மாகாணச் செயலர் போம்பியோ அது குறித்த விஷயங்கள் இடம்பெறாது என்று பதிலளித்துள்ளார். 

இருநாடுகளுக்குமிடையேயான இந்தச் சந்திப்பு உலக அமைதிக்கான முக்கிய வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எஸ்டிடினா வரலாறு தானே என்று நக்கலாக எள்ளி நகையாடிய இருவரும் இப்போது கை குலுக்கிச் சந்திக்கும் ஆச்சர்யம் ஜூன் 12 ம் தேதி நடக்கவிருக்கிறது. ஜூன் 12 சர்வதேச அரசியலின் எஸ்டிடி-யில் இடம்பிடிக்கப்போகிறது. 

 

தென்கொரியா - வடகொரியா, அமெரிக்கா- வடகொரியா, இந்தியா-சீனா என உலகின் சண்டைக்கார நாடுகள் எல்லாம் கை குலுக்கத் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய உறவுகள் அமைதியைத் தரும் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை!

https://www.vikatan.com/news/world/125102-trump-and-kim-jong-un-meeting-will-take-place-in-singapore-on-june-12.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.