Jump to content

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு


Recommended Posts

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு

ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரை மாத்திரமின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உயிரிழந்த குறித்த வீரருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் நாளைய தினம் Eintracht Braunschweig அணியின் தலைவர் ஹோல்ஸ்டெயின் கொயில் தலைமையில் கால்பந்து போட்டியை நடத்தவுள்ளதாக விளையாட்டுக்கழகத்தின் பணிப்பாளர் மார்க் ஆர்னோல்ட் அறிக்கை விடுத்துள்ளார்.

சிறந்த கால்பந்தாட்ட வீரர் மற்றும் நேர்மறையான ஈழவன் பிரபாகரனின் Eintracht Braunschweig விளையாட்டுக் கழக குடும்ப என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என இளையோர் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் விளையாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு தலைவர்களான ஒலிவர் ஹியின் மற்றும் டெனிஸ் குரூப்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த வீரருக்கு 14 வயதெனினும் உலகத்திலுள்ள அனைத்து கால்பந்தாட்ட வீரர்களுக்கும் சவாலாய் அமையக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

அவரது திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளமை தமிழர் தாயகம் மாத்திரமின்றி உலகத்தின் பல முன்னணி விளையாட்டு கழகங்களைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு, ஈழத்திற்கு உலகளவில் பெருமை சேர்க்க வேண்டிய ஒரு இளம் வீரர், உலகத்தினரால் அறியப்பட முன்னரே உயிரிழந்தமை ஈழத்திற்கு மாத்திரமின்றி சர்வதேச கால்பந்தாட்ட உலகிற்கே ஓர் பேரிழப்பாகும் என பொதுமக்களால் குறிப்பிடப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/182472?ref=featured-feed

 

 

 

உயிரிழந்த ஈழத் தமிழன் - ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள்

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.

புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் அல்லாமல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் பேரிழப்பாக கருதுகின்றனர், அத்துடன் ஜேர்மன் மிகச்சிறந்த எதிர்கால வீரனை இழந்துவிட்டது என ஜேர்மனி பத்திரிக்கைகள் பல ஈழவனின் இழப்பை பிரசுரித்துள்ளன.

ஈழவன் பாடசாலையிலும், விளையாட்டிலும் சிறப்பாக செயற்பட்டார் எனவும் ஈழவனின் பெற்றோர்கள் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தங்களை அர்ப்பணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் பிரத்தியேக தகைமைகள்,

14 வயதுக்கும் கூடிய பிரிவில் விளையாடியது மாத்திரம் அல்லாமல் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார், அத்துடன் ஜேர்மனி தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆயத்த நிலை வீரராக இருந்துள்ளார்.

ஜேர்மனியின் மிகப்பெரிய கழகங்களான Hannover 96, Schalke 04, Hamburger SV, Werder Bremen, Mönchengladbach, Wolfsburg ஆகிய கழகங்கள் ஈழவனை தமது கழகங்களுக்கு இணைப்பதற்கு முயற்சிசெய்துள்ளன.

7 வயதில் 4000 மீற்றர் தூரத்தினை சாதார வீரர்களின் வேகத்தில் ஓடி முடித்துள்ளார், அத்துடன் தடகள விளையாட்டில் முதன்மை வீரராக சிறந்து விளங்கியுள்ளார்.

மேலும், Niedersachsen மாநிலத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் தடகள சாம்பியனாக திகழ்ந்துள்ளார், அதன் பின்னர் கால்பந்தாட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதால் அந்த துறையினை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜேர்மன் கால்பந்தாட்ட வரலாற்றில் 14 வயதில் பெரும் தொகை பணத்தினை ஒப்பந்தம் செய்ய இருந்த ஒரே ஒரு வீரர் ஈழவன் மாத்திரமே என குறிப்பிடப்படுகின்றது.

இவரது முதல் பயிற்சிவிப்பாளர் இவரது தந்தையாகும், இடக்கால்பலம் மற்றும் அதிவேகம் இவருக்கு கால்பந்தாட்டத்துறையில் பலமாக இருந்துள்ளது.

சிறிய போட்டிகளில் ஈழவன் தொடர்பான விளம்பரங்களை அவரின் பெற்றோர் தவிர்த்து வந்துள்ளனர், சர்வதேச போட்டியிலேயே ஈழவனை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் கனவுகளுடன் பெற்றோர் இருந்துள்ளனர்.

மேலும், ஈழவனின் தந்தை இலங்கையில் பல்துறை விளையாட்டு வீரனாக இருந்துள்ளார், ஈழவன் தந்தை பிரபாகரன் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் திகழ்ந்துள்ளதுடன், அதேத்துறையில் தன் மகனை சாதனையாளனாக ஆக்கவேண்டும் எனும் உறுதியுடன் செயல்பட்டுள்ளார்.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/182705?ref=home-feed

Link to comment
Share on other sites

மிக கவலையான செய்தி. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கவலையான செய்தி. அவர்களின் பெற்றோரின் இழப்பு வலி கொடியது. ஆழ்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனின் திறமையை உலகம் காணமுன்னரே மரணித்தது மிகவும் கவலையானது. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

என்ன செய்வது வயதோ சிறியது... நோயோ பெரியது...குறுகிய நாட்களுக்குள் சகலதும் நடந்தேறி விட்டது.

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  கவலையான செய்தி. அவரது கு டும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்கே தமிழன் முன்னுக்கு வருவது பிடிக்கவில்லை போலும் 
ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

ஆறுதல் சொல்லமுடியாத, மனதை வருத்தும் செய்தி. அவரது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச் சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

என்ன நடந்தது பெடியனுக்கு கடுமையான பயிற்சியோ?
 

Link to comment
Share on other sites

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஜேர்மனியில் அடக்கம் செய்யப்பட்ட ஈழத்துச் சிறுவனின் பூதவுடல்

 

 

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரனின் பூதவுடல் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று பிற்பகல் ஈழவனின் இறுதி அஞ்சலி நிகழ்வு Sudfriedhof, Marienburger, Strasse 90E, 31141 Hildersheim என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழரான ஈழவனின் பூத உடலுக்கு ஜேர்மனிய மக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதில், பாடசாலை மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், கழக அங்கத்தவர்கள், பொறுப்பாளர்கள், தேசிய பயிற்சியாளர், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஐரோப்பியா முழுவதிலும் உள்ள விளையாட்டுதுறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அத்துடன், ஈழவன் விளையாடிக் கொண்டிருந்த Braunschweig கழகம், இறுதிச் சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரசித்தி பெற்ற தேசிய கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்களது இரங்கல் செய்தியினை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

அத்துடன், ஐரோப்பாவின் மிக புகழ் பெற்ற பாடகர் Majoe ஒழுங்கமைப்பிலேயே இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பாடகர் Majoe ஈழவனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்து தமிழர்களின் அடையாளமான ஈழவன் அனைவரின் கண்ணீர் துளிகளுடனும், கதறல்களுடனும் விடைபெற்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90
 


625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/182910?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.