Jump to content

சர்வதேச கால்பந்து போட்டி: மாஸ்கோ சென்ற தமிழக தெருவோர குழந்தைகள்


Recommended Posts

சர்வதேச கால்பந்து போட்டி: மாஸ்கோ சென்ற தமிழக தெருவோர குழந்தைகள்

 
கால்பந்து Image captionசங்கீதா

''கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது கால்பந்து''

மே மாதம் (10 முதல் 18 வரை) ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்தில் நடக்கும் சர்வதேச தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் அணியின் துணை கேப்டனான 17 வயது ஷாலினியின் வார்த்தைகள் இவை.

உலக அளவில் 'சேவ் தி சில்ரன்' அமைப்புடன் சேர்ந்து தெருவோர குழந்தைகளுக்காக இயங்கும் பல்வேறு அமைப்புகள் கைகோர்த்து நடத்தும் சர்வதேச கால்பந்து போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகளுடன் மோதி இறுதிப்போட்டிக்கு போகவேண்டும் என்ற இலக்குடன் உள்ள அவர் கால்பந்தில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் பற்றி பிபிசிதமிழிடம் பேசினார்.

'கால்பந்து விளையாட்டால் வாழ்க்கை மீதான அச்சம் தீர்ந்தது'

''அதிக வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக, 13 வயதான என்னை 32 வயதுள்ள ஒரு நபருக்கு திருமணம் செய்ய என் குடும்பத்தினர் முடிவுசெய்தனர். இதனால், வீட்டில் இருந்து வெளியேறி, தெருவோரத்தில் ஆதரவு தேடினேன். கருணாலயா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னை மீட்டு, பள்ளிப்படிப்பை தொடர வைத்தார்கள். முதலில் ஈடுபாடு இல்லை. கால்பந்து விளையாட்டை அறிமுகம் செய்தார்கள்''என்று நினைவுகூர்ந்தார் ஷாலினி.

''இந்த விளையாட்டால் மனஉளச்சல் குறைந்தது; என் வாழ்க்கை மீதான அச்சம் தீர்ந்தது. நான் விளையாட்டு வீராங்கனை; மீண்டும் குழந்தைத்திருமண வலையில் சிக்கமாட்டேன் என்ற உறுதியைக் கொடுத்தது கால்பந்து'' என்று மேலும் தெரிவித்தார் ஷாலினி.

கால்பந்து

வாழ்வின் மீதான பயத்தைப் போக்கியதால், கால்பந்து விளையாட்டில் மேலும் ஆர்வத்தை செலுத்தி, இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்குபெறவேண்டும் என்பது அவரது லட்சியம்.

ஷாலினியின் தோழி 18 வயது சங்கீதாவின் டீன்ஏஜ் காதலாக மாறிப்போனது கால்பந்து.

பள்ளிப்படிப்பைத் தொடர விருப்பமில்லாமல் வேலைக்குச்சென்ற சங்கீதாவுக்கு கருணாலயா தொண்டு நிறுவனத்தில் கால்பந்து விளையாட்டில் சேர அழைத்தபோது ஆர்வத்துடன் வந்துசேர்ந்தாள்.

''எனக்கு ஒரே ஒரு கட்டுப்பாடுதான் விதித்தார்கள். படிக்கமுடியாவிட்டாலும், தினமும் பள்ளிக்கூடம் போகவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தாமல் சென்றால், கால்பந்து விளையாடக் கற்றுத்தருவதாக கூறினார்கள். எனக்கு பிடித்தமான, சவாலான விளையாட்டாக கால்பந்து இருந்தது. பள்ளிக்கூடம் செல்ல ஒப்புக்கொண்டேன்,'' எனக்கூறும் சங்கீதா தற்போது கல்லூரி படிப்பில் முதலாமாண்டு மாணவி.

சங்கீதா

தண்டையார்பேட்டை பகுதியில் தெருவோரத்தில் வசிக்கும் சங்கீதாவுக்கு தெருவே விளையாட்டு மைதானமாக மாறிப்போனது.

கால்பந்து கற்றுக்கொண்ட சில நாட்களிலேயே மற்ற குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் சங்கீதாவுக்கு ஆர்வம் வந்தது.

''எனக்குள் திறமை இருக்கிறது. படித்து, பரிட்சையில் மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி இல்லை என்பதை உணர்ந்தேன். நான் சாதிப்பேன் என்ற நம்பிக்கையை கால்பந்து தந்தது. கால்பந்து விளையாட்டில் பல விதிமுறைகளை பின்பற்றுகிறோம், வெற்றிபெறுகிறோம். அதேபோல என்னுடைய வாழ்க்கையிலும் எனக்கான விதிகளை நான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். வெற்றிபெறவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்,'' என்று தெளிவாக பேசுகிறார் சங்கீதா.

மைதானத்தில் அனைவரும் சமம், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், விளையாட்டு மைதானத்தில் பந்தை கோல்போஸ்ட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே கால்பந்து விளையாட்டில் லட்சியம் அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை தீர்க்கும் மந்திரங்களைச் சொல்லிக்கொடுத்ததாகவே இந்த குழந்தைகள் கருதுகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த குழந்தைகளை தன் சுயவிருப்பத்தில் இலவசமாக பயிற்றுவிக்கும் பயிற்சியாளர் ஏ.எல். அட்கின்சனிடம் பேசினோம்.

ஷாலினி Image captionஷாலினி

''இந்த குழந்தைகளில் பலர் வெகு சமீபமாகவே கால்பந்து விளையாட்டைக் கற்றவர்கள் என்றாலும், மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். உலகளவிலான போட்டியில் கலந்துகொள்ள இவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அதேநேரத்தில், இந்த போட்டியில் இருந்து திரும்பிய பிறகும், இவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவேண்டும். வயதுவந்தவர்கள் பிரிவில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுபவர்களாக இவர்கள் உயரவேண்டும்,'' என்றார்.

சென்னையில் உள்ள தெருவோரக்குழந்தைகளை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்றுள்ள கருணாலயா தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பால் சுந்தர் சிங், ரஷ்யப் பயணம் தெருவோரக் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்வில் பெரிய லட்சியங்களை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்கிறார்.

தெருவோரக் குழந்தைகளைப் பற்றிய கற்பிதங்களை விளக்கிய அவர், ''தெருவோரக் குழந்தைகள் குறித்து சமூகத்தில் எதிர்மறையான பார்வை இந்த சமூகத்தில் உள்ளது. சராசரியான பெற்றோர், தங்களது குழந்தைகள், தெருவோரக்குழந்தைகளுடன் பழகக்கூடாது என்று கூறுவது, இந்த குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு, எந்த திறமையும் இருக்காது என்ற எண்ணத்தில் தான் பலரும் இருக்கிறார்கள்''என்று அவர் கூறினார்.

பால் சுந்தர் சிங் Image captionபால் சுந்தர் சிங்

'இந்த விளையாட்டுப் போட்டியில், கடும் பயிற்சியுடன் இந்திய அணிக்காக இந்த குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்ற அறிவிப்பு பலரின் சிந்தனையை மாற்றும். தெருவோரத்தில் குடும்பங்கள் வசிப்பதற்கு காரணம் அவர்கள் மட்டுமே அல்ல, அரசாங்கமும் ஒரு காரணம், சமூக அவலங்களால் இந்த மக்கள் புறந்தள்ளப்பட்டு வாழ்வதற்காக தினமும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சர்வதேச அளவிலான போட்டியில் குழந்தைகள் கலந்துகொள்ள வைப்பதன் மூலம் மாற்ற முயற்சிக்கிறோம்,'' என்கிறார்.

சர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளில் வாழும் குழந்தைகளை இந்தியாவில் இருந்து செல்லும் குழந்தைகள் சந்திப்பதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பீடு அதிகரிக்கும் என்று கூறும் பால் சுந்தர் சிங், ''தெருவோரக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் சாதிக்க முடியும். அவர்களால் தாய்நாட்டிற்கு பெருமை தேடித்தர முடியும் என பலருக்கும் அறிவுறுத்தும் நிகழ்வாகவும் இந்த போட்டி அமைந்துள்ளது,'' என்றார்.

https://www.bbc.com/tamil/sport-44097908

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.