Jump to content

ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று!


Recommended Posts

ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று!


 

 

oru-nimida-kadhai-yemaru-yemaatru

 

 

சதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது.

பின்ன ...கோபம் வருமா வராதா..? இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது.

சதாவுக்கு கோபம் இன்னும் அதிகமாகக் காரணம் நேற்று முக்கியமான மீட்டிங். பேசிக்கொண்டிருந்த அவருக்கு முக்கியமான ஒருவரின் பெயர் சட்டென்று நினைவில் இருந்து நிரந்திர விடுப்பு எடுக்க... தடுமாறி பின் எம்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

ஆனால் எதற்குமே உபயோகமில்லாத இந்த வெட்டிப்பயல் குமார் பெயர் மட்டும் எப்படி தானாகவே நினைவில் வந்து விழுகிறது?

குமாருக்கும் சதாவிற்குமான முரண்பாடு ஒரு குப்பைக் காரணமாகத்தான். மிகவும் சாதாரண காரணம் என்ற குறியீடாக குப்பை இங்கே உபயோகப்படுத்தப்படவில்லை. நிஜமாகவே வீட்டுக் குப்பைதான் காரணம்.

குமார், அவர்கள் தெருவை கூட்டிப்பெருக்க ஏற்பாடு செய்யப்பட்டவன். வருவதே வாரத்திற்கு அவனுக்குத் தோன்றுகிற ஒருநாளில்தான். தெருவில் குவிந்து கிடக்கும் குப்பையை சதாவின் வீட்டு முன் குவித்து வைத்துவிட்டு போயே போயிந்தி....போய்விடுவான். தெருக் கோடி வீட்டில் சாப்பிட்ட ஹோட்டல் சாம்பார் பொட்டலம், பக்கத்துவீட்டு ஜிம்மியின் காலைக்கடன் சுற்றிய பேப்பர், கோயில் பிரசாத தொன்னைகள், தெருவின் கனவுக்கன்னி லல்லுவின் சானிடரி பாட்...என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் இவர் வீட்டுக்குள் வந்து சேர்ந்துவிடும்.

இந்த அடாவடி நடவடிக்கைக்குக்காரணம் இவர் அவனுக்கு பணம் தர மறுப்பதுதான். உனக்குத்தான் இந்த வேலைக்கு மாச சம்பளம் பேசி இருக்கில்ல... அப்புறம் ஒவ்வொரு வீட்டுலேயும் வரும்போதெல்லாம் பணம் கேட்குற. என்ன எங்களுக்கு பணம் மரத்துலேயா காய்க்கிறது...என்று ஒரு முறை நியாயத்தைப் பேச... அன்றிலிருந்து குமார், அவனுடன் சுற்றும் அந்த கறுப்பு நாய் என்று குடும்பமாக சதாவை ஏளனப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

குமார் வராத நாட்களில் மிகச்சாதுவாக அந்தத் தெரு கோடி வீட்டில் சுருண்டு படுத்திருக்கும் அந்த கறுப்பு நாய், இவரைப் பார்த்த உடன் குலைக்கத்தொடங்க... வாக் கிளம்பியவர் மராத்தான் கணக்காக ஓடி வீட்டுக்குத்திரும்பி விடுவார்.

மெதுவாக அந்த குமாரை பார்த்தபடி வாசல் கேட்டை அழுத்தித்தள்ளினார்.

" சார்...சார்..."

கத்திக்கொண்டே குமார் வருவதைப்பார்த்தார்.

'தெரியும்....இந்த ரெளடிப்பயல் என்னை வம்பிக் கிழுப்பான்னு....இந்த டிரைவர் முட்டாப்பய.. அவனால வந்தது.. ' அவசரமாகக் கதவைத்திறந்து உள்ளே சென்றார்.

"சார்...சார்...உங்களைத்தான்... " கத்திக்கொண்டே குமார் ஓடி வருவது தெரிந்தது.

அப்பாடா கதவைச்சாத்தி தாளிட்டார்.

காலிங் பெல் சத்தமிட்டது

'படவா ராஸ்கல்....பெல் அடித்து கூப்பிடறான்...இரு...இதை சும்மா விடக்கூடாது"

வாசலில் குமார் நின்றிருந்தான்.கைகளில் ஒரு நூறு ரூபாய்.

"இதப்பாரு..." அவர் பேச ஆரம்பிக்குமுன் குமார் முந்திக்கொண்டான்.

" சார், நீங்கக் காரை விட்டு இறங்கும்போது இந்த ரூபா நோட்டு கீழே விழுந்திச்சு...கொடுக்கலாம்னு கூப்பிட்டா... ஓடியாந்துட்டீங்க....இந்தாங்க..."

பாதி கையை நீட்டியபடி பேந்த விழித்தார்.

"இன்னா சார் பாக்குற. இன்னொருத்தர் துட்டு நமக்கெதுக்கு. நா வேலை செய்ய துட்டு கேட்பேன்...பாரு சாரு...நான் தெருவத்தான் கூட்டறேன்.. ஆனா உன் வீட்டு மரக்குப்பை அதுவே எம்மாம் குப்பையா இருக்கு பாரு...அத்தப்பெருக்க பணம் கேட்டா.. நீ சம்பள நார்ம்ஸ்லாம் பேசி என்னை சாவடிக்குறே.. இந்தா இத்தை நான் எடுத்தா அது திருட்டு... வாங்கிக்க உன் ரூபாயை.."

சதா லேசாகச் சிரித்தார்.

"நியாயமான பேச்சுப்பா. சரி இந்த ரூபாயை உனக்கே தரேன். இனிமே தெரு கூட்ட வரும்போது வா... ரெகுலராவும் தரேன்’’

சலாம் போட்டபடி பணத்தை பாக்கெட்டில் சொருகிக்கொண்டே குமார் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

' ஏ ரூபா நோட்டே நீ ரொம்ப ராசிதான். உன்னை அந்த ஆளு போட்ட நோட்டா காட்டி எப்புடி காரியத்தை சாதிச்சேன்...இந்தத் தெரு கடைசிலே ஒரு வீட்டுலேயும் பணம் கொடுக்காம டபாய்க்கிறாங்க... வா...அங்கேயும் இந்த நாடகம் போடுவோம்.....'

கைகளில் பர்சே எடுத்துப்போகாதபோது, அந்த ரூபாய் நோட்டு எப்படி கீழே விழுந்திருக்கமுடியும் என்பதை சதா யோசித்திருந்திருக்கலாம். உணர்ச்சிகளும் உணர்வுகளும் லாஜிக்கை மழுங்கடிக்கக்கூடியவை.

இதனால் இன்று சந்தோஷமாக  விசில்  அடித்தபடி குமாரும், சதாவும்!

http://www.kamadenu.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏச்சுப்பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க .....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.