Jump to content

குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள் இன்று


Recommended Posts

குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள் இன்று

kumuthini2.jpg?resize=600%2C395

குளோபல் தமிழ் செய்தியாளர்
1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப்  படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33 வருடங்கள் ஆகும்.

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழி மறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

 

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.

சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

kumuthini.jpg?resize=800%2C450
 
நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.: 
 
“எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.”

 

சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது.71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது.

இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் “ “இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,” ” இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது.

நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இந்தப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை நெடுந்தீவு மக்கள் மாத்திரமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர்.

http://globaltamilnews.net/2018/79157/

Link to comment
Share on other sites

நெஞ்சை பதறவைக்கும் குமுதினி கடற்படுகொலை - படகு ஓட்டுநனரின் பதிவுகள்!

 

 
Image

நெடுங்கடல் இரத்தமாகி நெருப்பென ஆன நாள்!

2009 ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் சாரை சாரையாக மக்கள் கொல்லப்பட்ட நினைவு நாள். ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை ஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலை செய்தது. மே மாதம் 15 ஆம் திகதி மற்றொரு படுகொலை மக்கள் நேயம் உள்ளவர்களை உலுக்கிப்பார்த்தது.

ஆம் அதுதான் குமுதினி படகு படுகொலை.......

வாழ்வோடும் வறுமையோடும் கடல் அலையோடும் போராடியோர் மீது நடந்த தாக்குதல்.தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த அப்பாவி ஜீவன்கள் மிருகத்தனமாக வெறியோடு கொல்லப்பட்டனர். ஏன் நடந்து இந்தக் கொடுமை? அப்பாவி தமிழர்களின் செங்குருதியால் குமுதினி குளிப்பாட்டப்பட்டாள்.

குமுதினி 1960களில் ஸ்ரீலங்கா அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும்.

மாவலிதுறை நெடுந்தீவு கிழக்கில் இருந்தது. அங்கிருந்து நயினாதீவின் கிழக்கு கரை நோக்கி பயணித்து புங்குடுதீவின் கரையில் குறிகட்டுவான் துறைமுகத்தில் பயணிகளையும் பண்டங்களையும் கரை சேர்ப்பதும் அதேபோல் மீண்டும் மக்களையும் பொருட்களையும் நெடுந்தீவிற்கு எடுத்துப் போவதும் குமுதினிப் படகின் நாளாந்த கடமை.நெடுந்தீவிற்கு கிடைத்த அற்புதமான சகாரப் பறவை என்பதே சரியானதாகும்.

அதிகாலை 6 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் கரையை அடைந்து பின் 8.30 மணியளவில் நெடுந்தீவிற்குச் செல்வதும் பிற்பகலில் 2 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு புங்குடுதீவு கரையை அடைந்தும் மீண்டும் மாவலிதுறைக்குச் செல்வதும் வழமை.அன்று ஜூன் மாதம் 15 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு வழமை போல் தான் விடிந்தது. குமுதினியின் காலை பயணமும் வழமை போல் தான் சுமுகமாக முடிந்திருந்தது.

சில வேளைகளில் குமுதினியை 'நேவி'சுற்றி வட்டமடிக்கும் அப்படித்தான் அந்த மே மாதம் 15 ஆம் திகதியும் அந்தப் பயணிகள் நினைத்திருப்பர்.

இரண்டு மணிக்கு புறப்பட்ட குமுதினி வழமையான கலகலப்போடு நயினாதீவு முனை வரை அமைதியாகவே பயணித்திருப்பாள். அன்று வேகமாக வந்த கடற்படைப் படகுகள் சுற்றிச் சுற்றி வட்டமடிக்கும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த கொச்சை தமிழ் பேசிய இனந்தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டது.

ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர்.

பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர்.அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு.

கடுமையாக தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர்.

பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

குமுதினியாள் நொண்டியாக்கப்பட்டாள். குறையுயிரும் குற்றுயிருமாக அவள் தீவகத்தின் கடலில் பார்ப்பார் மேய்ப்பார் இன்றி அலங்கோலப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல அலையோடு அலையாகி அடித்துச் செல்லப்பட்டாள்.மனித ஓலங்கள் கடலோடு கரைந்தன.

இனவாதமும் பேரினவாதமும் நெடுந்தீவான் மீது கோர முகத்தை தன்முறையாக காட்டி இருந்தது.இறந்தவர்களின் பெயர்கள் நெடுந்தீவின் நினைவாலயத்தில் இன்றும் அழியா சுவடாய் எழுதப்பட்டுள்ளது.

எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும்.

33 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்.

33 ஆண்டுகள் கடந்து விட்டாலும் நெஞ்சை பதறவைக்கும் இனவெறி தாக்குதலின் உச்சம்.எழுத்தாளரால் எழுத முடியாத துயரம் கவிஞரால் வடிக்க முடியாத கவலை எழுத்துக்களில் அடக்க முடியாத கொடுமை குமுதினி படகின் துன்ப காவியம்!

33 ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி உயர்ந்து நின்ற குமுதினி 33 ஆண்டு கடந்தும் இன்னும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாக உயர்ந்து நிற்கிறது.

ஆறாத வடுவாய் 33 ஆம் ஆண்டு நினைவு நாளில்....

https://www.ibctamil.com/history/80/100524?ref=imp-news

Link to comment
Share on other sites

  • குமுதினிப் படுகொலையின் ஞாபகப்பதிவுகள்!!
 
 

குமுதினிப் படுகொலையின் ஞாபகப்பதிவுகள்!!

33 ஆண்­டு­க­ளின் முன்­னர் இதே நாளில் அர­ச­ப­டை­கள் நிகழ்த்­திய கோரத்­தாண்­ட­வம். யாழ்ப்­பா­ணக் குடா­வின் நிலப் பரப்­பி­லி­ருந்து நீண்ட தூரத்தே நீண்ட நெடும் பரப்­பாய் நிமிர்ந்து நிற்­பது நெடுந்­தீவு.

ஆழக்­க­ட­லின் அதி­கா­ரத் தோர­ணை­க­ளுக்­கும், இயற்­கை­யின் இறு­மாப்­புக்­க­ளுக்­கும் இசைந்து போகா­மல் தனக்கே உரித்­தான கம்­பீ­ரத்­து­டன் கல்­வே­லி­க­ளும் பனை, தென்னை, பூவ­ரசு, ஈச்­ச­ம­ரங்­கள் என அழகு செய்ய, நாற்­பு­ற­மும் காவற் தெய்­வங்களின் கண்­கா­ணிப்­பு­டன் தனித்­து­வ­மாய் நிற்­கி­றது அது.

நீண்ட கடல் வெளி­யால் பிரிக்­கப்­பட்டு பய­ணத்­துக்­காக பட­கு­களை நம்­பிக் காத்­துக்­கி­டப்­பி­னும், எம்­ம­வ­ரின் சிந்­த­னை­க­ளும் செயல் வடி­வங்­க­ளும் ஓங்கி ஒலித்த படி­தான் என்­றும் இருக்­கும். ஆழிப் பேரலை­யால் கூட அசைக்க முடி­யா­மற் போன எம் சொந்­தங்­கள் மீது 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மிகப்­பெ­ரிய வர­லாற்­றுக் கொடுமை நிகழ்த்­தப்­பட்­டது. அது கேட்டு நெடுந்­தீ­வின் குடி­மக்­கள் மட்­டு­மன்றி உல­கமே ஒரு கணம் உறைந்து போனது. அன்­றைய விடு­தலை வேட்கை வீறு கொண்டு வியா­பித்து வளர வழ்­வ­குத்த வர­லாற்­றுச் சம்­ப­வ­மா­க­வும் அது அமைந்­த­தெ­ன­லாம்.

சாதா­ரண பய­ணம்
அரச பணி­யா­ளர்­கள், பெரி­ய­வர்­கள், வியா­பா­ரி­கள், குழந்­தை­கள், பெண்­கள் என அறு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் நாளாந்த கட­மை­க­ளின் பொருட்டு அன்­றும் தமது பய­ணத்தைக் குமு­தி­னிப் படகு மூலம் மேற்­கொண்­ட­னர். கட­லன்னை தாலாட்ட குமு­தி­னி­யார் நீரைக்­கி­ழித்து அசைந்­தா­டிச் செல்­லும் அந்த ஒரு மணித்­தி­யா­ல­ய­மும் மன­துக்கு மகிழ்வு தரும் பய­ணம்­தான். திரும்­பி­வ­ரும் போது மட்­டும் வைகாசி, ஆனி மாதங்­க­ளில் சிறு அசௌ­க­ரி­யங்­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள வேண்­டி­ய­தா­யி­ருக்­கும். மன மகிழ்­வோடு புறப்­பட்ட பய­ணி­க­ளுக்கு பய­ணத்­தின் இடை­ந­டு­வில் இடி விழு­மென எவர் தான் எண்­ணி­யி­ருப்­பர்?

கடற்­ப­டை­யி­ன­ரால் படகு நிறுத்­தப்­பட்­டது. சிறி­ய­ ப­ட­கில் வந்­த­வர்­கள் குமு­தி­னி­யில் ஏறிக் கொள்ள வழ­மை­யான வெருட்­டும், அச்­சு­றுத்­தும் செயற்­பா­டு­தான் என எண்­ணி­ய­வர்­க­ளாய் பய­ணி­கள் பட­கி­னுள் மன­துக்­குள் ஒரு அச்ச உணர்­வு­டன் காணப்­பட்­ட­னர். உங்­க­ளை­யெல்­லாம் சோதனை இட வேண்­டும் எனக் கூறி எல்­லோ­ரை­யும் ஒரு­சேர பட­கின் பின்­பக்­க அறைக்­குள் அனுப்பி விட்டு, பின்­னர் ஒவ்­வொ­ரு­வ­ராய் முன் அறைக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு கத்தி, கோடாரி, கொட்­டன்­கள் என்­ப­வற்­றால் வெட்­டி­யும், கொத்­தி­யும் சித்­தி­ர­வதை செய்­தும் படு­கொலை செய்­தமை என்பன கடந்து போனவை.

கட­மையே கண்­ணென வாழ்ந்து காட்­டிய அதி­பர் திரு­மதி பிர­தானி வேலுப்­பிள்ளை, ஆசி­ரி­யர்.சதா­சி­வம் குமு­தி­னி­யின் பிர­தானி தேவ­ச­கா­யம்­பிள்ளை, ஊழி­யர்­க­ளான ந.கந்­தையா, ச.கோவிந்­தன் மற்­றும் க.கார்த்­தி­கேசு என பல அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­டன் பெரி­ய­வர்­கள் குழந்­தை­கள் கர்ப்­பி­ணிப் பெண் உட்­பட ஈவி­ரக்­க­மின்றி பல­ரும் குத்­தி­யும் வெட்­டி­யும் குத­றப்­பட்­ட­னர். குருதி வெள்­ளத்­தில் தத்­த­ளித்த இவர்­க­ளில் முப்­பத்­தாறு பேர் (36) கடற்­ப­டை­யி­ன­ரது கொலை­வெ­றிக்கு இரை­யாகி உயி­ரி­ழந்­த­னர். ஏனை­ய­வர்­கள் உயிர் ­தப்­பி­னா­லும் நீண்­ட­கால நோயா­ளி­க­ளா­கவே அவர்­க­ளால் வாழ முடிந்­தது.

சிங்­கள இன­வாத அர­சி­ய­லின் கொடூ­ர­மு­க­மும் கோழைத்­த­ன­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட இந்த சம்­ப­வம் தமிழ் இன விடி­ய­லுக்­காக இளை­ஞர்­களை வீறு­கொள்ள வைத்த வர­லாற்­றுத் தடங்­க­ளில் முதன்­மை­யான தென­லாம். சுமூ­க­ மான சூழ்நிலை நில­வும் போது குடும்ப உற­வு­க­ளோடு இணைந்­தி­ருக்க வேண்­டி­ய­வர்­கள் இன்று இல்லை என்­பதை எண்­ணிப்­பார்க்­கை­யில் இது எத்­தனை கொடு­மை­யா­னது என்­பது புரி­யும்.

வெட்­டு­வ­தும் கொத்­து­வ­தும் வேரோடு சாய்ப்­ப­து­வும் சிங்­கள இன­வாத சக்­தி­க­ளுக்கு ஒன்­றும் புதி­ய­தல்ல. குமு­தி­னி­யில் மட்­டு­மல்­லாது குரு­ந­க­ரி­லும் இதே வெறி­யாட்­டம் இடம்­பெற்­றதை இலே­சில் மறந்து விட இய­லுமா?

கவி­ஞர்­கள் பார்­வை­யில் குமு­தினி
சம­கால கவி­ஞர்­க­ளால் குமு­தி­னிப்­ப­டு­கொலை கவி­வ­ரி­க­ளில் வெளிக்­கொண்டு வரப்­பட்­டன. கவி­ஞர் புது­வை ­ரத்­தி­னத்­துரை ‘’குமு­தி­னிப் பட­கில் யார் வெட்­டி­னார்­கள்…. குரு நகர் கட­லில் ஏன் கொத்­தி­னார்­கள்… என்றும், நயி­னைக்­கவி குலத்­தின் ‘’கார்த்­தி­கேசு என்­ன­வா­னான்….’’என்று நீளும் கவி அவ­ல­மும் புங்கை நகர் கவிக்கோ சு.வில்­வ­ரத்­தி­னத்­தின் காலத்­து­யர் கவி­தை­யூ­டாக

‘’முட்­டை­களை வெட்ட ஏந்­திய வாள்­கள் மலர்­களை, தளிர்­களை, பிஞ்­சு­களை  கனிய நின்ற தோப்­பு­களை, என்ற வரி­க­ளும் குமு­தி­னிப் பட­கில் பேரி­ன­வாத கடற்­ப­டை­யி­ன­ரது கத்­திக்­கும் கோடா­ரிக்­கும் வாளுக்­கும் இரை­யாகி அவ­ல­மாக உயிர் நீத்த உறவு­க­ளின் நினைவை மனக்­கண்­முன் நிறுத்­து­கின்­றன.­ வெட்டி எறிந்த குரு­திக்­காட்­டில் எது பூக்­கும்? என்ற ஏக்­க­மும் என்­றும் எம் தீவு மக்­க­ளின் நாடித்­து­டிப்­பின் அடை­யா­ளங்­க­ளாய் நீண்டு செல்­லும்.

திருப்­பு­முனை நோக்கி
செல்­ல­ரித்­துப் போன தேச கட்­டு­மா­னங்­க­ளில் எம்­ம­வ­ரின் இழப்­புக்­கள் நிலை­யா­னவை. இன­வாத அர­சு­களை ஆட்­டங்­காண வைத்த வர­லாற்­றுப் பதி­வு­க­ளில் ஒரு முக்­கிய திருப்பு முனை. ஈழ விடு­தலை வர­லாற்­றில் என்றும் ஈரம் காயாத வரி­க­ளாய் நிலைத்து நிற்­பது குமு­தி­னிப் படு கொலை. அன்று அரச படை­க­ளின் கோரத் தாண்­ட­வத்­தால் குத­றப்­பட்­டோரை ஒன்­று­பட்ட ‘’இளை­ஞர் அணி­க­ளும்’’ பொது மக்­க­ளும் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­தால் அனே­க­மா­னோர் காப்­பாற்­றப்பட்டுள்ளனர்.

நினைவு தின­மும் நினை­வா­ல­ய­மும்
இறந்­தோ­ரின் நினை­வாக சமய வழி­பா­டு­க­ளு­டன் ஊர்­வ­லங்­க­ளும் நினை­வுக் கூட்­டங்­க­ளும் நடத்­தப்­பட்­டன. ‘’இளம் பற­வை­கள் கலா­மன்­றம்’ எனும் அமைப்பு நினை­வா­ல­யம் அமைப்­ப­தற்­கான முதல் முயற்­சியை செய்­தி­ருந்­தது. காலப் போக்­கில் பிர­ஜை­கள் குழு, பிர­தே­ச­சபை போன்­றவை தற்­போ­தைய நினை­வா­ல­யம் வரை­யான ஆக்­க­பூர்வ பணி­களை மேற்­கொண்­டி­ருந்­தன என­லாம். குமு­ தி­னிப்­ப­ட­கில் அரச படை­யி­னர் ஆடிய ஊழிக் கூத்­தின் முப்­பத்து மூன்று வரு­டங்­கள்; நிறை­வ­டை­யும் இன்­றைய நாள்­வரை எம்­ம­வர் மத்­தி­யில் குமு­தினி பேசு பொரு­ளாக அமைந்­தி­ருக்­கி­றது.

குமு­தி­னி­யின் சேவை­யும், தேவை­யும்
குமு­தி­னிப்­ப­டகு இற்­றைக்கு சுமார் எண்­பது வரு­டங்­க­ளுக்கு முன் கட்­டப்­பட்­டது. இன்று வரை அது சேவை செய்து வரு­கின்­றது. இடை­யில் பழு­த­டைந்­தால் பத்­தி­ரி­கை­கள் சோக கீதம் பாடு­வ­தைக் கேட்­க­லாம். அத்­தனை முக்­கி­யத்­த­து­வம் குமு­தி­னிக்கு உண்டு.

காற்­றும் மழை­யும் வெயி­லும் கொடும் மழை­யும்
ஏற்று எமைச் சுமக்­கும் குமு­தி­னித்­தாய்
கூற்­று­வ­ரின் கூட்­டக்
கொடுங்­கத்தி வாள்­மு­னை­யில்
வீழ்ந்­தாள் கடல் முனை­யில்
உப்­பு­தி­ருங் காற்­றின் உத­வி­யு­டன் கரை­சேர
செத்­த­வ­ராய்ப் போனோம் – நாம்
அவளோ…
சாகா வர­மெ­டுத்­தாள்
மீண்­டும் எமைச்­சு­மக்க

குமு­தி­னி­யின் வயது என்­ப­தைத் தாண்­டி­யுள்­ளது. இந்­தத் துன்­பி­யல் இன்­று­டன் முப்­பத்­தி­ரண்டு ஆண்­டு­க­ளைக்­க­டந்து நிற்­கின்­றது. எமது வாழ்­வின் நெருக்­கீ­டு­க­ளை­யும், தடை­க­ளை­யும் உணர்ந்து கொள்­ளும் ஒரு நாளாக இன்­றைய நாள் அமை­யும். குமு­தி­னிக்­குள் நடந்த இந்த சோகங்­க­ளைப் போல், குமு­தி­னி­யும் பல சோகங்­களைச் சுமந்­தும் நெடுந்­தீவு மக்­களை சுமந்து கரை சேர்க்­கும் தாயாக பாரிய பொறுப்பை இன்­றும் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­றாள்.
ஈர­மின்றி இறுகிப்­போன மனித மனங்­க­ளுக்கு வாழ்­வின் வலி­யை­யும், வழி­யை­யும், வனப்­புக்­க­ளை­யும் சொல்­லும் வள­மான ஆசா­னாய் இன்­றும் எம்­மு­டனே வலம் வருகிறாள் குமு­தி­னி­யாள். என்­றும் அவளே துணை என்ற நினைப்­புக்­க­ளு­ டன் எம்­ம­ வ­ரின் கடல்­வ­ழிப் பய­ணம் தொடர்­கின்­றது.

குற்­ற­வா­ளி­கள் யார்?
அன்­றைய அர­சின் கட்­ட­ளைக்கு அமைய செய்­யப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டும் இந்­தச் சரித்­திர அவ நிகழ்வு காலங்­கா­ல­மாக உற­வு­க­ளா­லும் ஊர­வ­ரா­லும் பேசப்­பட்­டா­லும் ‘’அர­சி­யல்­வா­தி­கள்’’ இன்­ன­மும் சிறு­பிள்­ளை­க­ளா­கவே இருப்­ப­தாய் எண்­ணத் தோன்­று­கின்­றது. குற்­ற­வா­ளி­யா­கக் கொள்­ளத்­தக்­க­வர்­க­ளுக்கு பாத­பூசை செய்­ப­வர்­க­ளாக எம்­ம­வர்­கள் மாறி­விட்­டார்­களே. இன ஐக்­கி­யம், மத நல்­லி­ணக்­கம் என்­ப­வற்­றின் பேரால் இந்த இழப்­புக்­க­ளை­யும் மறப்­ப­தைத் தவிர வேறு வழி என்ன இருக்­கி­றது எமக்கு? அமை­தி­யாய் அமை­திக்­காய் மௌனிப்­போம்.

http://newuthayan.com/story/92945.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் எமது நீங்காத நினைவுகளில் நீங்கள் !

கண்ணீர் அஞ்சலிகள்...!

Link to comment
Share on other sites

  • குமுதினிப் படுகொலை- நினைவிடத்தில் அஞ்சலி!!
 
 

குமுதினிப் படுகொலை- நினைவிடத்தில் அஞ்சலி!!

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து  64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் முரளி தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Capture-119-300x159.jpgUntitled-3-copy-2-300x175.jpgCapture-120-300x150.jpgUntitled-2-copy-2-300x175.jpgUntitled-7-copy-300x166.jpg

http://newuthayan.com/story/92977.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.