Jump to content

நேற்று -இன்று -நாளை!!


Recommended Posts

  • நேற்று -இன்று -நாளை!!
 

நேற்று -இன்று -நாளை!!

1 – நேற்று

முப்­பது ஆண்­டு­கள் தமிழ் மக்­களை அடக்கி ஆண்­ட­வர்­கள், சித்­தி­ர­வதை செய்­த­வர்­கள், தமிழ்த் தலை­வர்­க­ளைக் கொன்று புதைத்­த­வர்­கள், பேச்­சுச் சுதந்­தி­ரம் எழுத்­துச் சுதந்­தி­ரம் என்­ப­வற்றை மறுத்­த­வர்­கள், பாசிச ஆட்சி நடத்­தி­ய­வர்­கள் தொலைந்து அழிந்து ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டன என முக­நூ­லி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கொக்­க­ரித்து ஆனந்­தக்­கூத்­தா­டு­கி­றார்­கள் சிலர். அந்த அழிவை நடத்­திய மகிந்த ராஜ­பக்ச அர­சைப் போற்­றித் துதி­பா­டு­கி­றார்­கள்.

இன்று
சாதா­ரண தமிழ் மக்­கள் அன்று இருந்த நிலை­யில்­தான் தற்­போ­தும் உள்­ள­னர். பொருண்­மிய நிலை­யில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை. அவர்­க­ளின் அடிப்­படை வாழ்­வி­யல் கஸ்­ரங்­கள் அப்­ப­டி­யே­தான் உள்­ளன. தமிழ் மக்­க­ளின் காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்டவர்­க­ளைத் தேடும் போராட்­டம், விடு­தலை, அர­சி­யல் தீர்வு எல்­லாமே எட்­டாக்­க­னி­க­ளாகி எங்­கேயோ போய்­விட்­டன.
இந்த மக்­க­ளுக்கு, என்ன பதில் சொல்ல இந்த முக­நூல் வித்­து­வான்­கள் நினைக்­கி­றார்­கள்.

2 – நேற்று
புலிப் போரா­ளி­க­ளையோ, அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளையோ, அல்­லது புலி வாசம் கொண்ட எந்த மனி­த­ரையோ தங்­கள் கட்­சிப் பக்­கம் சேர்த்­தா­லும் வேட்­பா­ளர்­க­ளா­கவோ, கட்­சி­யின் முக்­கிய பொறுப்­புக்­க­ளி­லேயோ அவர்­க­ளைச் சேர்க்க மாட்­டார்­கள், சேர்க்­கக்­கூ­டாத விச ஜந்­துக்­க­ளா­கவே அவர்­களை வைத்­தி­ருக்க விரும்­பு­கி­றார்­கள்.

இன்று
புலிப்­போ­ரா­ளி­கள் வேண்­டாம், அவர்­க­ளின் ஆத­ர­வா­ளர்­க­ளும் வேண்­டாம், ஆனால், அர­சி­யல்­கூட்­டங்­கள் வந்­தால், எழுச்­சிப்­பே­ர­ணி­கள் நடந்­தால், புலி­க­ளின் பரப்­பு­ரைப் பாடல்­கள் வேண்­டும். அந்­தப் பாடல்­களை ஒலி­பெ­ருக்­கிக் கொண்டு, கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளும் தொண்­டர்­க­ளும் தலை நிமிர்ந்து நடப்­பார்­க­ளாம்!

தேர்­தல் வந்­தால், புலி­க­ளின் தலை­வ­ரின் பெயர்­வேண்­டும். தலை­வ­ரின் பெய­ரைச் சொல்­லிச் சொல்­லியே ஆயி­ரத்­தெட்­டுப் பரப்­பு­ரைக்­கூட்­டங்­களை முடித்­து­வி­டு­வார்­கள். வச­தி­யான பத­வி­கள், அவை­த­ரும் சுகங்­கள்­போ­லவே இந்த அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குத் தேர்­த­லின்­பின் வாக்­க­ளித்த மக்­கள் எப்­படி அந்­நி­யப்­பட்­டுப்­போ­கி­றார்­களோ புலி­க­ளை­யும் அப்­ப­டியே பாவிக்­கி­றார்­கள்.

3 -நேற்று

போராட்ட ஆரம்ப காலத்­தில் அதைச் சாட்­டாக வைத்­துப் புலம்­பெ­யர்ந்த நாடு­க­ளுக்கு ஓடி ஒளித்­த­வர்­கள் ஏரா­ளம். அன்று தொடக்­கம் இன்­று­வரை செய்­வது புலி என்று பரப்­புரை. புலி­க­ளின் போராட்­டம் முடி­வ­டைந்த பின்­னர் தாம் தோண்டி எடுத்த சில விட­யங்­க­ளில் மயிர் பிடுங்­கிக்­கொண்­டி ­ருக்­கி­றார்­கள்.

இலக்­கி­யப் படைப்­பா­ளி­க­ளின் பங்கோ வேறு­வி­தம்.
நாடு நாடாய்ச் சுற்­று­வ­தும், நவீன இலக்­கி­யங்­கள் படைப்­ப­தா­கப் பாவனை பண்­ணு­வ­தும் பெண் சக­வா­சங்­க­ளு­டன் தண்­ணி­ய­டித்­துப்­போ­தை­யில் மூழ்­கு­வ­தும் எதை எழு­தி­னால் பிர­பல்­ய­ம­டை­ய­லாம் என்று தெளி­வாக முடி­வெ­ டுத்து புலி எதிர்ப்­புக் கதை­க­ளா­க­வும் நாவல்­க­ளா­க­வும் எழுதி புலம்­பெ­யர் இலக்­கி­யத்­தில் பிதா மகர்­க­ளா­கி­யி­ருக்­கின்­ற­னர்.

இன்று
சென்­னை­யில் நடந்த விருது வழங்­கும் விழா ஒன்­றில் ஒட்­டு­மொத்த ஈழ­மக்­கள் சார்­பா­கக் கேட்­கப்­பட்ட கேள்­விக்­குப் புலம்­பெ­யர் இலக்­கி­யப் படைப்­பாளி ஒரு­வர் பின்­வ­ரு­மாறு பதில் கூறி­யுள்­ளார், ‘‘ஈழத்­துத் தமிழ் மக்­கள் ஆயு­தப் பக்­கம் எதிர்­கா­லத்­தில் திரும்ப மாட்­டார்­கள்’’ என்றகருத்துப்பட அவர் உறு­தி­ய­ளித்­தார்.

போராட்­டம் உச்­ச­மான காலத்­தி­லும் அதற்­குப் பின்­ன­ரும் போராட்­டத்­துக்கு எதி­ரா­கக் கொம்பு சீவிய இவர்­போன்­ற­வர்­கள் எந்த அடிப்­ப­டை­யில் இவ்­வா­றான கருத்­துக்­க­ளைக்­கூற முடி ­யும்…?
தமிழ் மண்­ணில் குறிப்­பா­கப்­போர் உச்­சம்­பெற்ற வன்­னி­யில் சாதா­ரண தமிழ் மக்­கள் அனு­ப­வித்த எந்­தத் துய­ரத்­தை­யும் அனு­ப­வித்­துப்­பார்க்காத இவர்­கள் போன்ற புலம்­பெ­யர் படைப்­பா­ளி­கள் எந்த உரி­மை­யில் தமிழ்­மக்­க­ளுக்­கான கருத்­தைக்­கூற முடி­யும்? கேள்வி கேட்­ட­வர்­க­ளும் முட்­டாள்­களா? பதில் சொன்­ன­வர் முட்­டாளா?

4 -நேற்று
போராட்­டம் உச்­ச­மாக இருந்­த­போது யாழ்ப்­பா­ணத்­தில் தமிழ்ப் பு­கழ்­பாடி தமிழை வளர்க்க முடி­யா­த­வர்­கள் போராட்ட கால வாழ்­வுக்­கஸ்­ரங்­களை அனு­ப­விக்­கப் பயந்து கொழும்­புக்கு ஓடி­ய­வர்­கள், தங்­கள் ‘தமிழ்’ வளர்ப்­புக்­குப் புலி­கள் தடை­யாக உள்­ள­னர் என்று கதை பரப்பி கொழும்­பில் தமது தமிழ்ச் சாம்­ரா­ஜ்ஜியத்தை அல்ல பொரு­ளா­தார சாம்­ராஜ்ஜியத்தை நிறுவினார்கள்.

அர­ச த­லை­வர்­க­ளை­யும் அவர்­தம் கையாள்க­ளை­யும் அடக்­கு­மு­றையை மேற்­கொண்ட அரச அதி­கா­ரி­க­ளை­யும் இது­போன்ற விற்­பன்­னர்­கள் தொழுது வணங்கித் தங்­கள் தமிழ் விழாக்­க­ ளுக்கு அழைத்­துத் தமிழை வளர்த்­தார்­களோ இல்­லையோ தம்மை வளர்்த்துக்­கொண்­டார்­கள்.

இன்று
இப்­போ­தும் பணம் பெற்­றுக்­கொண்டே பிர­மு­கர்­க­ளைக் குத்து வி­ளக்­கேற்ற அனு­ம­திக்­கி­றார்­கள். அல்­லது வரு­டத்­தில் எவ்­வ­ளவு பணம் தரு­வீர்­கள் என்­று­ பே­ரம் பேசு­கி­றார்­கள். போராட்­டம் முடி­வுக்கு வந்­த­ பின்­னர், எல்­லோ­ரும் புலிக் கதை­கள் கதைத்­துப் பிர­ப­ல­ம­டை­வ­தப்­போல தாங்­க­ளும் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்­த­போது புலி­க­ளு­டன் இரண்­ட­றக் கலந்­தி­ருந்­த­தா­க­வும் புல­னாய்­வுத் துறை­யு­டன் உண்டு பசி­யாறி ஆனந்­தப்­பட்­ட­தா­கவும் கதை­ய­ளந்து மகிழ்ந்து மகிழ்­விக்­கி­றார்­கள்.

5 -நேற்று
விடு­த­லைப்­போ­ராட்ட காலத்­தில் சஞ்­சிகை நடத்தி, அர­சி­யல் கதைக்­க­மாட்­டோம் எனக் கறுத்த அட்­டைப்­ப­டம் போட்­டுக் கருத்து எழு­தி­ய­வர் கொழும்பு சென்று பேரா­சி­ய­ரின் புனைப்­பெ­ய­ரில் கவி­ஞர் புதுவை இரத்­தி­ன­துரை உட்­பட போராட்­டத்­துக்­குப் பின்­னால் நின்ற இலக்­கி­யப் படைப்­பா­ளி­களை வறுத்­தெ­டுத்து இன்­பம் கண்­டார்.

இன்று
திடு­மென அந்த மாற்­றம் நடந்­தது. ‘‘யூனி­போம்’’ போடாத புலிப்­போ­ரா­ளி ­யாக மாறிய அவர் இப்­போது புலி­சார்ந்து பேசு­வ­தும் எழு­து­வ­து­மா­கப் பொங்­கிச் சரி­கி­றார். எல்­லா­வற்­றுக்­கும் உச்­ச­மாக அவ­ர­டித்த ‘கப்சா’ ஒன்று மிகப் பிர­ப­ல­மா­னது.

வன்­னி­யில் பொது­மக்­கள் பாவ­னை­யி­லு­மி­ருந்த ‘‘அந்­தி­வா­னம்’’ பதிப்­ப­கத்­தில் அவ­ரு­டைய நண்­ப­ரான கவி­ஞர் ஒரு­வ­ரின் வடி­வ­மைப்­பில் வெளி­யி­டப்­பட்ட அவ­ரது நூலை ‘‘கிளி­நொச்­சி­யில் மரங்­கள் அடர்ந்த பகு­திக்­குள் எதி­ரி­கள் கண்ணுக்குப் படா­மல் பிர­பா­க­ர­னின் நேர­டி­ மேற்­பர்­வை­யில் இர­க­சி­ய­மாக அச்­ச­கம் இயங்­கிக் கொண்­டி­ருந்­த­தைப்பார்த்­தேன். என் புத்­த­கங்­கள் அச்­சிட்டு அங்கு அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­த­தைப் பார்த்­துப் புழ­காங்­கி­தம் அடைந்­தேன்’’ என்று தமி­ழக சஞ்­சிகை ஒன்­றுக்­குப் பேட்­டி­ய­ளித்துக் கதை­பண்­ணி­யுள்­ளார் அந்­தப் படைப்­பாளி.

6 -நேற்று
விடு­த­லைப்­போ­ராட்ட காலத்­தில் இயக்­கத்­தில் பல அமைப்­புக்­க­ளில் முன்­ன­ணிப் பத­வி­க­ளில் எப்­போ­தெல்­லாம் அம­ர­வேண்­டுமோ, யாரி­டம் தய­வைப் பெற்று அதைச் செய்­ய­லாமோ, அந்த வேலையை ஒழுங்­கா­கச் செய்த அவர், ஆள்க­ளைச் சேர்த்து வைத்­துக் கருத்­துக்­க­ளை­யும் அள்ளி வீசு­வார். போராட்ட இறு­திக்­கா­லத்­தில் கடை­சி­யாக அவர் தேடிச்­சென்ற இடம் ‘சற்­லைற் போன்’ வ­சதி கொண்ட அந்­தப் பிரி­வு­தான். சாதா­ரண தொலை­பேசி வச­தி­கள் கேள்­விக்­கு­ரி­தான அந்­தக் காலத்­தில் ‘சற்­லைற் போன்’ வசதி அவ­ருக்கு எப்­படி உதவி செய்­தி­ருக்­கும்? என்று யோசித்­துப் பாருங்­கள்.

இன்று
இப்­போ­தும் புதுப் புது அவ­தா­ரங்­களை மாற்றி நிகழ்­கா­லத்­தை­விட புலி­க­ளின் காலத்­தில் நடந்த தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்டி விமர்­சிக்­கும் மூன்­றாம் தரப்­பாக நின்று கருத்­து­மழை பொழி­யும் அவருடைய வல்­ல­மையை என்­ன­வென்று சொல்­வது?

நாளை
நாளை எப்­படி இருக்­கும்? யாரா­வது யோசிப்­பது உண்டா? தமிழ்ப் பகு­தி­கள் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் சுருங்கி வரு­வ­து­பற்­றியோ புதிது புதி­தா­கப் புத்­தர் சிலை­கள், இரா­ணுவ முகாம்­கள் அமைக்­கப்­பட்டு வரு­வ­தையோ கல்வி நட­வ­டிக்­கை­க­ளில் முன்­பள்­ளி­க­ளில் நடப்­ப­தைப்­போல இரா­ணு­வத் தலை­யீ­டு­கள் ஏற்­ப­டு­வ­தைப் பற்­றியோ யாழ்.நக­ரங்­கள் போன்ற இடங்­கள் சிங்­க­ளக் கலா­சா­ரங்­க­ளுக்கு மாறி அது ஒரு இயல்­பான நட­வ­டிக்­கை­யாக மாற்­றப்­ப­டு­வ­து­தொ­டர்­பிலோ யார் கவ­லைப்­ப­டப்­போ­கி­றார்­கள்?

பத­வி­க­ளுக்­காகக் கட்சி அர­சி­யலை நடத்தித் தேர்­த­லில் வென்று அதன்­பின்­னர் கிடைக்­கும் பத­விச் சுகங்­க­ளுக்­கா­கத் தேர்­தல் காலத்­தில் எதிர்த்த கட்­சி­க­ளின் தோளில் கைபோட்டுச் சனங்­க­ளைக் குழப்­பும் இந்த அர­சி­யல்வாதி­கள்­தான் நாளை தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்வு வந்­து­வி­டும் என்று நேற்­றும் சொன்­னார்­கள். இன்­றும் சொல்­லு­கி­றார்­கள். நாளை­யும் சொல்­வார்­கள். ஈழத்­துத் தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வரை நாளை என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­தான்.

http://newuthayan.com/story/92462.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.