Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 2:39 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் பெண்கள் ஆடிப்பாடுவதை ஏன் நீங்கள் தப்புப்போல் கூறுகிறீர்கள். விசர்ப் பெண்கள் கூடவே கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு போய்.........

 

நான் எங்கே அதை தப்பு என்று சொன்னேன் அக்கா? 

எந்த வகையிலும் பொருத்தப்பாடில்லாத மறுதலிப்பு உங்களுடையது.. பெண்கள் தமக்கென்று ஒரு நட்பு வட்டத்துடன் வாழவேண்டும் என்று குமாரசுவாமியண்ணா இணைத்த காணொளியை ஆமோதித்தேன் அது மட்டும்தான் நடந்தது.

 காரணமில்லாமல் பிறர்மேல் குற்றம் சாட்டும்போது, நீங்கள் ஏதோ மன அழுத்ததினால்தான் இந்த திரியை ஆரம்பித்ததாக பிறருக்கு எண்ண தோன்றும்...

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இந்த திரியை ஆரம்பித்து இதில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் திருப்பி பதில் எழுதும் விதம் தொனி இரண்டை குறிக்கிறது...
1. உங்களிடம் அதிக பட்சமாக நேரம் இருக்கிறது - வீணடிக்கிறீர்கள்.
2. ஆங்கிலத்தில் சொல்வார்கள் Attention seekers - "அடென்ஷன் சீகிங்" அது போல நீங்களும் சதா இப்படி ஏதாவது எழுதி;  மற்றவர்களை உங்கள் பக்கம் கவனத்தை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள்.

யாழ் களத்தில் உள்ள பலர் மத்தியில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், அன்புக்கும், நட்புக்கும் நிறையவே மதிப்பு உள்ளது.
இப்படியான தூரநோக்கற்ற, உப்புச்சப்பில்லாத சமூக குற்றச்சாட்டுக்களை சற்று கைவிடலாமே. :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் வீட்டில் இருவருமே இரண்டும் செய்வதாக்கும்.

கணவனுக்கு சிலநேரம் சேவகம் செய்ய முடியாமல் போகும்போது எதோ தான் தவறு செய்தது போல் குற்ற உணர்வில் பதருபவ்ர்களைப் பார்த்துள்ளேன்  குமாரசாமி. அதுக்குத்தான் இது.

திருப்திப் படவேண்டிய விடயங்களுக்கு திருப்திப் பட்டதனாலதான் முப்பது ஆண்டுகளாகியும் சேர்ந்து வாழுறம்.

ஒரு சில இடங்களில் நடக்கும் நடவடிக்கைகளை வைத்து உலகமே இப்படித்தான் என கணிப்பிடுவது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேற இன்று கண்ணில பட்டது சும்மா பார்த்து மகிழுங்கள்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2018 at 5:32 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடன சொந்த வீட்டுப் பிரச்சனை எண்டு மடக்கிறது.☺️ ஒவ்வொரு வாரமும் நான் நாற்பது குடும்பங்களைச் சந்திக்கிறேன். என் பள்ளியில் பன்னிரண்டு ஆசிரியர்கள். இதில் அரைவாசிப் பேரின் கதையும் நான் கேட்காமலே காதுக்கு வரும். அதைவிட வேலையிடத்தில் பொதுவெளியில் முகநூல் வட்டத்தில் என்று எத்தனையோ பெண்களுடன் உரையாடுவது.

கந்தப்பு நீங்கள் எழுதிய ஒரு கருத்தாடலில் தான் இதை எழுதவேண்டும் என நான் தீர்மானித்தது.

 

 நீங்கள் வாழும் நாட்டில் பார்த்தவற்றைவைத்து இங்கு எழுதியிருக்கிறீர்கள். நான் வாழும்  நாட்டில் பார்த்ததினை வைத்து கருத்து எழுதியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2018 at 4:27 PM, Sasi_varnam said:

அக்கா இந்த திரியை ஆரம்பித்து இதில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் திருப்பி பதில் எழுதும் விதம் தொனி இரண்டை குறிக்கிறது...
1. உங்களிடம் அதிக பட்சமாக நேரம் இருக்கிறது - வீணடிக்கிறீர்கள்.
2. ஆங்கிலத்தில் சொல்வார்கள் Attention seekers - "அடென்ஷன் சீகிங்" அது போல நீங்களும் சதா இப்படி ஏதாவது எழுதி;  மற்றவர்களை உங்கள் பக்கம் கவனத்தை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள்.

யாழ் களத்தில் உள்ள பலர் மத்தியில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், அன்புக்கும், நட்புக்கும் நிறையவே மதிப்பு உள்ளது.
இப்படியான தூரநோக்கற்ற, உப்புச்சப்பில்லாத சமூக குற்றச்சாட்டுக்களை சற்று கைவிடலாமே. :100_pray:

பறவைகள் பல விதம் 
ஒவ்வொன்றும் ஒரு விதம்.

இதில் உப்பு சத்து இல்லை என்று ஒரே அடியாக சொல்ல முடியாது.
எதோ கொஞ்ச பெண்கள் போகிறார்கள் என்பதால் ...
எல்ல பெண்களுக்கும் சுதந்திரம் இருக்கிறதா என்றால் இல்லைதான். 

பெண்களின் அன்பு பாச கட்டமைப்பு கூட ஒரு சவாலாக அமைந்துவிடுகிறது 
முயற்சித்தோம் முடியவில்லை என்று மேலே ஒரு பெண் குறிப்பிட்டு இருந்தார். 
சுதந்திரம் இல்லாமை மட்டுமே காரணமாகவும் இல்லை.

இயற்கையான வாழ்க்கை முறைமைகளை 
சந்தை முதலாளித்துவ முதலைகள் இல்லாது ஒழித்து வருகிறார்கள்.
ஒரு குடும்பம் என்ற பின்பு ... ஆணோ .. பெண்ணோ ஒருவரின் மன உளைச்சல் 
இருவரையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
சந்தை வியாபார யுத்திக்குள் சிக்குண்டு நாம் எல்லோரும் அல்லல் படுகிறோம் 
என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.
பெண்ணின் மூளை அமைப்பு வீடை கட்டி காப்பதாகவும் 
ஆணின் மூளை அமைப்பு வீடை கட்டுவது தேவையானதை வெளியில் 
இருந்து வீட்டுக்கு எடுத்து வருவதும் ஆகவே அமைந்து உள்ளது.

முன்னேற்றம் என்பதில் எல்லோருக்கும் ஈடுபாடு வேண்டும் என்றாலும் 
முன்னேற்றம் என்றால் என்ன? என்று தெரியாது ஓடித்திறிந்து வாழ்வை சிதைப்பவர்கள் 
ஏராளம். ஒரு சமூக சாரளமாக இவ்வாறான தலைப்புகளில் விவாதம் செய்வதில் 
ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

இதை சுமே அக்காவின் சொந்த வீட்டு பிரச்சினையாக பார்க்க போனால்தான் 
இங்கு உப்பு சப்பு இல்லாமல் போகிறது. 

இவ்வளவு பேர் கருத்துக்கள் பகிர்ந்தும் யாரும் இந்த சமூக சிக்கல் சார்ந்து 
ஒரு தீர்வை அல்லது ஒரு தொலைக்கு பார்வையை முன் வைக்கவில்லை.
80 வீதமான பெண்கள் வெளியில் போகும் சுதந்திரம் இல்லாமல் இருப்பது என்னவோ 
உண்மையானது. சிலருக்கு அதில் இஷடம் இல்லை ... சிலருக்கு அதில் ஈடுபாடு இல்லை 
என்றாலும் நிலைமை இருக்கிறது என்பது என்னவோ உண்மையானது.

வீட்டில் இருக்கும் ஆண்கள் மறுக்கிறார்கள் என்பது மட்டுமே பிரச்சனை இல்லை 
வெளியில் சமூகத்தில் இருக்கும் ஆண்களின் பாலியல் தொந்தரவு கூட இங்கு ஒரு 
பிரச்சனையாக இருக்கிறது.
மது போதைவஸ்து பாவனை இன்னொரு காரணி இதல்லாம் இதுக்குள் பார்க்க கூடிய 
விடயங்கள். 

சாதாரண வேலைக்கு செல்லும் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லையை 
இதைவிட வேறு விதமாக வில்லா முடியாது 
இந்த விடியோவை பாருங்கள் 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருதங்கேணி. பார்க்கப்போனால் இதில் எழுதிய ஆண்களோ பெண்களோ முழுமையாகத் தம் மனத்தில் உள்ளதை எழுதவில்லை. சிலருக்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்பதும் புரியவில்லை. ஆரோக்கியமாக் இதை விவாதிக்கவும் முடியவில்லை. பெண்களை இப்படி எதோ ஒரு விதத்தில் வாய் திறக்க விடாது செய்துவிடுகிறார்கள்.

On 5/28/2018 at 10:27 PM, Sasi_varnam said:

அக்கா இந்த திரியை ஆரம்பித்து இதில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் திருப்பி பதில் எழுதும் விதம் தொனி இரண்டை குறிக்கிறது...
1. உங்களிடம் அதிக பட்சமாக நேரம் இருக்கிறது - வீணடிக்கிறீர்கள்.
2. ஆங்கிலத்தில் சொல்வார்கள் Attention seekers - "அடென்ஷன் சீகிங்" அது போல நீங்களும் சதா இப்படி ஏதாவது எழுதி;  மற்றவர்களை உங்கள் பக்கம் கவனத்தை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள்.

யாழ் களத்தில் உள்ள பலர் மத்தியில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், அன்புக்கும், நட்புக்கும் நிறையவே மதிப்பு உள்ளது.
இப்படியான தூரநோக்கற்ற, உப்புச்சப்பில்லாத சமூக குற்றச்சாட்டுக்களை சற்று கைவிடலாமே. :100_pray:

சசி நீங்கள் பார்க்கும் கோணம் உங்களைப் பொறுத்தது. அடென்சன் சீக் பண்ணி எழுத நான் புதியவரா என்ன ??????

On 5/28/2018 at 9:05 PM, valavan said:

நான் எங்கே அதை தப்பு என்று சொன்னேன் அக்கா? 

எந்த வகையிலும் பொருத்தப்பாடில்லாத மறுதலிப்பு உங்களுடையது.. பெண்கள் தமக்கென்று ஒரு நட்பு வட்டத்துடன் வாழவேண்டும் என்று குமாரசுவாமியண்ணா இணைத்த காணொளியை ஆமோதித்தேன் அது மட்டும்தான் நடந்தது.

 காரணமில்லாமல் பிறர்மேல் குற்றம் சாட்டும்போது, நீங்கள் ஏதோ மன அழுத்ததினால்தான் இந்த திரியை ஆரம்பித்ததாக பிறருக்கு எண்ண தோன்றும்...

எனக்கு மன அழுத்தம் என்றால் இப்பிடித் திரி திறந்தால் உடனே மாறிவிடுமா ????அதற்க்கு வைத்தியரிடம் தான் செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

.. இதில் எழுதிய ஆண்களோ பெண்களோ முழுமையாகத் தம் மனத்தில் உள்ளதை எழுதவில்லை...

"சுதந்திரம், மட்டுப்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான்.." என சொல்லியாச்சுது..!

இதுக்கு மேலே என்னம்மா எழுத வேணும்..? ?

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 5/23/2018 at 9:04 AM, சுவைப்பிரியன் said:

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

இதற்கு 100 % காரணம் இலங்கையில் பெற்றோரின் அடிமை வளர்ப்பு.  வயதுக்கு வந்தவுடன் வீட்டுக்குள் பெண் பிள்ளைகளை பூட்டி வளர்க்கும் மண்ணாக்கட்டி கலாச்சாரம். இதை தூண்டுவது தமிழரின் பழமைவாதம். பத்தாம் கேட்டால் பண்பாடாம் கலாச்சாரமாம் மண்ணாங்கட்டியாம்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2018 at 2:23 PM, tulpen said:

இதற்கு 100 % காரணம் இலங்கையில் பெற்றோரின் அடிமை வளர்ப்பு.  வயதுக்கு வந்தவுடன் வீட்டுக்குள் பெண் பிள்ளைகளை பூட்டி வளர்க்கும் மண்ணாக்கட்டி கலாச்சாரம். இதை தூண்டுவது தமிழரின் பழமைவாதம். பத்தாம் கேட்டால் பண்பாடாம் கலாச்சாரமாம் மண்ணாங்கட்டியாம்.

உங்கள் வீட்டில் சுதந்திரம் தானே பெண்களுக்கு ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.