Jump to content

கீர்த்தி சுரேஷ்: நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்த நான் பிறகு ஏன் ஒப்புக் கொண்டேன்?


Recommended Posts

கீர்த்தி சுரேஷ்: நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்த நான் பிறகு ஏன் ஒப்புக் கொண்டேன்?

''இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்''

சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் தமிழில் வெளியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து பல விஷயங்களை படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

'நடிகையர் திலகம்' திரைப்படம் குறித்து பல கேள்விகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.

''இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்''''இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்''

கே: நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். நீங்கள் சினிமாவுக்கு வந்து குறுகிய காலம் ஆகும் நிலையில் சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்க உங்களுக்கு பயம் இருந்ததா?

இந்த வாய்ப்பு முதலில் எனக்கு வந்தபோது பயமாக இருந்தது. நான் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஏனென்றால் சாவித்ரி சாதாராண நடிகை கிடையாது. அவங்க ஒரு பழம்பெரும் நடிகை. மனிதாபிமானமிக்க ஒரு நடிகையின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எனக்கு பயம் வந்துவிட்டது. சாவித்ரி கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கட்டாயப்படுத்தினார். அதற்கு பிறகுதான் முழு கதையை கேட்டு நடிக்க சம்மதித்தேன். ஆனால், இப்போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன்.

''இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்''

கே:இந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்றவுடன் உங்கள் மீது சொல்லப்பட்ட விமர்சனங்கள் என்ன?

நல்லதை விட நெகட்டிவ் விமர்சனங்களே நிறைய இருந்தன. சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தியானு எல்லாரும் பேசுனாங்க. எனக்கும் அதே சந்தேகம்தான் முதலில் இருந்தது. எனக்கே அந்த சந்தேகம் இருக்கும்போது மற்றவர்களுக்கு அது வராதா என்று நினைத்து கொண்டேன். அதேசமயம், பலரும் சூப்பர்னு என்னை பாராட்டுனாங்க. அந்த நேரத்தில்தான் சின்ன பதட்டமும், பொறுப்பும் எனக்கு அதிகரித்தது.

''இந்த படத்தை தவறவிட்டிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்''

கே: நீங்கள் சாவித்ரி நடித்த படங்களை பார்த்திருக்கிறீர்களா? சாவித்ரி கதாபாத்திரத்திற்காக உங்களை நீங்களே தயார்படுத்தி கொண்டது எப்படி?

இதற்கு என்னுடைய பாட்டி மற்றும் அம்மாவிற்குதான் நான் நன்றி சொல்லவேண்டும். எங்கள் வீட்டில் பழைய படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். மாயாபஜார், பாசமலர் படங்கள் பார்த்திருக்கேன். அதன் மூலம் சாவித்ரி ஒரு நடிகையாக எப்படி இருப்பாங்க என்பதை உள்வாங்கிகொண்டேன். அதோடு இயக்குநர் சில காட்சிகளை கொடுத்து பார்க்க சொன்னார். அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துகொண்டேன். மேலும், தெலுங்கில் அவர்களுடைய ஆடியோ நேர்காணலை கேட்டேன். அதிலிருந்து சாவித்ரி எப்படி இருந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்துகொண்டு நடித்தேன்.

நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்தது ஏன்? கீர்த்தி சுரேஷ்

கே: சாவித்ரி கதாபாத்திரத்திற்கு நீங்களே டப்பிங் பேசியுள்ள அனுபவம் எப்படி இருந்தது?

நான் இந்த படத்தில் நடிக்கும்போதே நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நானே சொந்தமாக டப்பிங் பேசியுள்ளேன். தமிழில் பேசும்போது எளிமையாக இருந்தது. ஒரே நாளில் டப்பிங் முடித்துவிட்டோம். ஆனால், தெலுங்கு டப்பிங்கிற்கு 11 நாட்கள் எடுத்துக்கொண்டேன். அர்த்தம் புரியாததால் ஒவ்வொரு காட்சிக்கும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு டப்பிங் பேசினேன். இருந்தாலும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்தது ஏன்? கீர்த்தி சுரேஷ்

கே: சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளாரே?

சமந்தா மதுரவானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் இந்த படத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர். நடிகையர் திலகம் படத்தில் நான் டைட்டில் ரோலில் நடிப்பது தெரிந்தும் எந்த ஒரு தயக்கமும் இல்லாம் நடித்துக்கொடுத்தார். அதற்கு காரணம் சாவித்ரி அவர்கள் மீது இருந்த மரியாதை. சமந்தாவால் நடிகையர் திலகம் படம் பெரிதானது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44106930

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.