Jump to content

மழை நின்ற காலத்தில்...


Recommended Posts

மழை நின்ற காலத்தில்...  

 

 
k2

 


குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். 
விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு
சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு.
யாரோ என் தோளைத் தொட திரும்பினேன்.
"நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...''
அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்சாகமாகக் கையாட்டினாள்.
யார் இவள்...? குழப்பத்துடன் "என்னையா?' என்பது போல் சைகை காட்ட அவள் சிரித்தபடி "ஆமாம்' என்பதாக பெரிதாகத் தலையாட்டினாள்.
அந்த முகம்... அந்த சிரிப்பு... கால் நொடியில் சிந்தனை, மூளை முழுவதும் பரவி ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி... அட, இது மினி... சிஸ்டர் மினி.
உற்சாகமாகப் புன்னகைத்து தலையாட்டினேன்.
இதுவே தமிழ்நாடு என்றால் அவளை முன்னே வரவழைத்துப் பேசலாம். கேரளா என்பதால் நான் பின்னே சென்று அவளுடன் சேர்ந்து கொண்டேன்.
"எந்தா ஏட்டா... மினியை அடையாளம் கண்டோ...?''
"மினி... எப்படியிருக்கே மினி...? எவ்வளவு வருஷமாச்சு உன்னைப் பார்த்து...''
"ம்... அதாச்சு ஏழெட்டு வருஷம் ஏட்டா...''
"யாரு மினி உன்னோட குழந்தையா...?''
"அதே. அசுவதிக் குட்டி... அங்கிளுக்கு குட்மானிங் பறையு...'' 
அவள் சொல்ல அதுவும் தன் இடது கையை நெற்றி மேல் வைத்து "மார்னி...'' என்றது.
"ஏட்டா... இது எண்ட அம்மை...''
அருகிலிருந்த அவள் தாயை அறிமுகம் செய்தாள்.
"ஞான் ஆஸ்பத்திரில ஜோலில இருந்தப்போ ஏட்டனோட அம்மைக்கு ட்ரீட்மென்ட் நோக்கான் வேண்டி ஏட்டன் அவிட வந்துட்டுண்டு...''
"ஓ...'' என்றவள் என்னிடம் திரும்பி "அம்மே இப்போ எங்கன உண்டு...? சுகந்தானே...''
"அம்மே...'' மினி தாயை அடிக்குரலில் அதட்டினாள்.
"ஏட்டனோட அம்மே இப்போ இல்லே. மரிச்சுப் போயி...'' என்று சொல்ல அவள் பதட்டமாகி "úஸôரி úஸôரி...'' என்றாள் வேகமாக.
"நோ ப்ராப்ளம்'' என்றேன் புன்னகையோடு. 
"ஏன் மினி கல்யாணமே கழிக்க மாட்டேன்னு சொன்ன...?''
"கடைசி வரை வேணாம்னு தான் பிரஸ்னம் பண்ணினா. சரியான மண்டை வேதனை. நானாக்கும் கம்பெல் பண்ணி செஞ்சு வச்சது...''
"எண்ட மாமன் மகன் தான் அவரு ஏட்டா.''
"சந்தோசமா இருக்கேல்ல மினி...? அது போதும். நர்ஸ் யூனிபார்மில உன்னைப் பார்த்தது... இப்போ திடீர்னு சேலைல பார்த்ததும் ஆள் அடையாளமே தெரியலே மினி''
"அதாக்கும்! செரி உங்க சம்சாரம் வரலையா...? ஒரு மகன் தானே...?''
"ம்... ரெண்டு பேருமே வரலை மினி. தனியாத் தான் வந்திருக்கேன்..''
கூட்டம் மெல்ல நகரத் துவங்கியது.
"அப்புறம் ஆஸ்பிட்டல் எப்படியிருக்கு மினி, ஜோசப் டாக்டரு எப்பிடியிருக்காரு...?''
"ஓ. நான் இப்போ அங்கே இல்லே ஏட்டா. வேற ஆஸ்பிடல் போயி...''
"ஓ அப்படியா...''
"அம்மையை என்னால மறக்கவே முடியாது ராஜேஸ் ஏட்டா. அம்மை இப்பவும் என்னோட கனவுல வந்துட்டுண்டு. வெல்லம் கேட்கும். சிரிக்கும்.''
திடீரென்று குழந்தை அழுதாள்.
"எந்தா குட்டி... மோளுக்கு பசிக்குதா'' என்று முந்தானையை விலக்கி விட்டுக் கொண்டாள்.
முன்புறம் திரும்பிக் கொண்டேன். அவள் பற்ற வைத்த அம்மாவின் ஞாபகத் தீ என்னுள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது...

 

அப்பாவைக் குறித்தான பெரிய நினைவுகள் என் மனதில் தேங்கியிருக்கவில்லை.
அவரிடமிருந்து அடிக்கும் சிகரெட் வாடையும், முரட்டுத்தனமான அணைப்பும், சைக்கிளில் என்னைப் பின்புறம் உட்கார வைத்துக்கொண்டு இரவுக்காட்சி என்று சினிமா அழைத்துப் போனதும், தப்புந் தவறுமாக நான் சொல்லும் இங்கிலீஸ் எஸ்úஸக்களைக் கேட்டு ரசிப்பதும்... அழுத்தமாகப் பதிவதற்குள்ளாகவே எனது பன்னிரெண்டாவது வயதில் லாரி விபத்தில் அவர் பிரிந்து போனார்.
அதன் பிறகு எனக்கு அம்மா தான் அப்பா.
சொந்த வீடும், அப்பாவின் இன்சூரன்ஸ் பணமும் எத்தனை நாள் துணைக்கு வரும்...?
அரைகுறையாகத் தனக்குத் தெரிந்த தையல் தொழிலை மேம்படுத்தி வீட்டின் முன்புறம் தையல் மெசின்களைப் போட்டு உழைப்பின் உன்னதம் உணர்த்தினதும், படிப்பு மட்டுமே கடைசி வரை துணை என்று அதன் அருமை புரிய வைத்ததும், நல்ல நட்புகளின் உறவு உண்டாக்கி, உலகம் உணர்த்தி உயர்வு உண்டாக்கியதும்... அவர் தான்.
"சே பாவம்... அப்பா இல்லாத பையன்' என்ற உணர்வு எனக்கே கூடத் தோன்ற விடாது வளர்த்த விதம் என்ன சொல்ல...
நன்றாகப் படித்தேன். எனது சுய முன்னேற்றமே அவளது சந்தோசத்திற்கான ஒரே காரணமாக அமையும் என்பதை புரிந்தே இருந்தேன். கல்லூரி முடித்த இரண்டாவது வாரத்திலேயே நான்கைந்து வாய்ப்புகள் தேடி வர அம்மாதான் எனக்கான வேலையைத் தேர்ந்தெடுத்தாள்.
"பெரிய கம்பெனில வேணாம். உன்னைக் காணாமப் பண்ணிடுவாங்க. சின்ன கம்பெனியும் வேணாம். உன்னோட திறமையை வீணடிச்சிடுவாங்க. வளர்ந்துட்டு வர்ற கம்பெனியா பாரு. நீயும் வளர்ந்து அவங்களையும் வளர்த்திடலாம்...''
அம்மாவின் கணிப்பு சரியானதாகவே இருந்தது. தேசம் முழுக்க கிளைகள் விரித்து பெரிதான முன்னேற்றம் அடையத் துடிக்கும் ஒரு நம்பிக்கையான நிதி நிறுவனத்தின் பொறுப்பில் அமர்ந்தேன். வேலையின் தன்மை உணர்ந்து, நிறைகள் பெருக்கி, தவறுகள் களைந்து... இரண்டு வருடத்தில் மூன்று பதவி உயர்வுகள் தேடி வந்தன. வெளிநாடு வந்தேன். தலைமைக்கு அடுத்த இடத்தில் இருப்பவருடன் நினைத்த நேரத்தில் பேசும் அதிகாரம். வீடு எடுத்தேன். அம்மாவின் பெயரில் ஆனந்த வீடு. 
அதே பிறந்தநாளில் அம்மா தொடங்கிவிட்டாள் திருமணப் பேச்சினை. 
"இதான் சரியான நேரம்டா... கல்யாணம் பண்ணிக்கோ''
"சரி உன் விருப்பம்'' என்று சொல்ல, பறந்து பறந்து தேடி எனக்காக தனலட்சுமியை திருமணம் செய்து வைத்தாள்.
தனலட்சுமிக்கு அவள் இன்னொரு தாய். 
நம்பகமான ஒரு ட்ராவல் ஏஜன்சி மூலம் காசி, கயா, மதுரா என்று உள்நாட்டிலும் , இலங்கை, மலேசியா என்று வெளிநாடுகளுக்கும் டூர் அனுப்பி வைத்தேன். கண்புரை சிகிச்சை செய்து கொண்டாள். லேசான மூட்டு வலி அவஸ்தை இருந்து வந்தது. 
அவள் ஆசைப்பட்டபடியே முதல் வாரிசாக அண்ணாமலை பிறந்தான். கண்ணுக்குள் வைத்து கவனித்துக் கொண்டாள்.
நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. அல்லது நான் தான் அப்படி தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேனோ? திடீரென்று ஒரு நாள் பாத்ரூமில் வழுக்கி விழுந்தாள். எழுப்பி நிறுத்த, மீண்டும் தொப்பென்று சரிந்து விழுந்தாள். ஏன் இப்படி, எதனால் என ஒருவருக்கும் புரியவில்லை. மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம்.
மறுதினம் அவள் நிலை இன்னும் மோசமானது. இடது கையும், இடது காலும் முடங்கிப் போனது. கண்ணீர் விட்டுக் கதறினாள். 
"நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணலையேடா''
அவளைத் தேற்றினேன். நியூரோ சர்ஜன் வந்தார். பொய் சுத்தியலால் மூட்டுகளைத் தட்டி, " இங்கே வலிக்குதா... இங்கே வலிக்குதா'' என்றார். மொன்னை ஆணியால் பாதம் கீறி ஏதாவது தெரியுதா என்று உணர்ச்சி
களைப் பரிசோதித்தார். சொன்னார்:
"பேராலைசிஸ் அட்டாக்'' - முடக்குவாதம்
இடிந்து போனேன் என்பதைவிட உடைந்துபோனேன் என்பதே நிஜம். 
அடுத்து வந்த நாட்கள் இன்னும் கொடூரமானதாகவே அமைந்தன. அவளது வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டுவிட்டது. அத்தனை கோபத்திலும் ஏதோ கருணை காட்டியதுபோல ஆண்டவனின் செயல் அமைந்தது. கோணிப் போன வாய் மட்டும் இரண்டொரு தினங்களில் தானாகவே சரியாகிப் போனது. 
அதுபோல கை, கால் முடமும் குணமாகிவிடும் என்று நம்பினேன். ஆனால் அது நடக்கவேயில்லை. 
இட்லியும், ரச சோறும் மட்டுமே சாப்பிட்டாள்.
தினசரி இரண்டு முறை நடைப்பயிற்சிக்கு பிசியோதெரபிஸ்ட் பயிற்சி. ஏராளமான மாத்திரைகள். தூக்கம் வர, யூரின் போக, மோசன் போக, நிறுத்த...
நானும் தனலெட்சுமியும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம். அண்ணாமலை அவளின் கை பிடித்து இழுத்து, "வாங்க பாத்தி... வீட்டுக்குப் போகலாம்'' என்று அடம்பிடித்து அழுதான். 
டாக்டர் என்னை அழைத்திருந்தார். 
"என்ன பண்ணப் போறீங்க ராஜேஷ்? இந்த விஷயத்துக்கு இங்கே ட்ரீட்மெண்ட் இப்படித்தான். இவ்வளவுதான். மத்த டாக்டர்ஸ் மாதிரி பொய்யாப் பேசி, பணத்தைக் கறக்க மாட்டேன். வேற ஏது பண்றதுக்கும் அவங்க உடம்பு தாங்காது. வயசாகி உழைச்சு தேஞ்ச உடம்பு. வேற ஏதாவது பண்ணி நீங்களும் கெடுத்திடாதீங்க. ஒவ்வொரு உறுப்பா தேய்மானம் அடைஞ்சிட்டிருக்கு. வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க. கூடவே இருங்க. தேவையானதை கேட்காமலேயே செய்து கொடுங்க. ரிஸ்க் எடுக்க வேணாம் ராஜேஷ்''
எனக்கு உண்டான கோபத்துக்கு பல்லைக் கடித்துக் கொண்டே வெளியே வந்துவிட்டேன். இவரென்ன டாக்டரா? ஞானியா?
டிஸ்சார்ஜ் செய்து அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆபிஸ் மறந்தேன். நெட்டில் தேடி மருத்துவ ஆலோசனைகள் கவனித்தேன். அம்மாவின் கட்டை விரல் ரேகை உருட்டி நாடி ஜோதிடம் பார்த்தேன். நோய்காண்டத்தில் சொன்ன பரிகாரங்களைச் செய்தேன்.
வீட்டிற்கே லேடி பிஸியோ தெரபிஸ்ட் தினசரி இரண்டு வேளை வந்து அம்மாவுக்குப் பயிற்சிகள் தந்து நடக்க வைக்க முயற்சிகள் தந்தாள். அம்மாவால் ஏதும் முடியவில்லை.
யாரோ சொன்னார்கள் என்றுதான் கோவைக்கும், பாலக்காட்டிற்கும் இடையே அமைந்திருக்கும் அந்த ஆயுர்வேத மருத்துவமனை பற்றித் தெரிந்து கொள்ள சென்றிருந்தேன். 
டாக்டர் தன்னம்பிக்கையோடு பேசினார். "சாரோட அம்மாவைப் போல நிறைய பேசன்டுங்க இவிட உண்டு. எங்களோட உழிச்சல், பிழிச்சல் ட்ரீட்மென்ட் நோயை சீக்கிரமா குணமாக்கித் தரும்''
என் வாழ்நாளில் நான் செய்த மிகப் பெரிய குற்றம் அவரின் வார்த்தைகளை நம்பி அம்மாவை அங்கே கொண்டு போய்ச் சேர்த்ததுதான். 
அம்மாவின் உடலில் மூலிகைகள் தேய்த்து, ஆயில் தடவி, மரக்கட்டிலில் படுக்க வைத்து ஊற வைப்பார்கள்.
குறிப்பிட்ட நேரம் கழித்து குளியல். குளிகை, கசாயம் என்ற பெயரில் திட, திரவ மருந்துகள்.
அந்தச் சிகிச்சையின் சரியாக மூன்றாவது நாளில் அம்மா ரத்த வாந்தி எடுத்தாள். பெரிய டாக்டர் வந்து பார்தார். 
"சிலருக்கு இந்த ட்ரீட்மென்ட் அலர்ஜியாகிவிடும். பக்கத்திலேயே நம்மளோட டயாபடிக் ஹாஸ்பிடல் உண்டு. அங்கே சேர்த்துடுங்க. நாலஞ்சு நாள் போகட்டும்''
அந்த மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் அம்மாவைச் சேர்ப்பித்தேன். மிகவும் சோர்ந்து போயிருந்தாள். இடையில் இருந்த தெம்பு கூட காணாமல் போயிருந்தது. யூரின் போக சிரமம் என்று ட்யூப் சொருகிவிட்டார்கள். செயற்கை சுவாசத்துக்கு மூச்சுக் குழாய், நாசியருகே, நெஞ்சருகே துளையிட்டு அதிலும் ஒரு குழாய்.
"கடவுளே'' உள்ளூர அலறினேன் நான்.
ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று டாக்டர் அப்போதே சொன்னதை மதித்திருக்கலாமோ...
நான் இவளைக் காப்பாற்றுகிறேனா... இல்லை கஷ்டப்படுத்துகிறேனா...
அந்த மருத்துவமனையில் வைத்துத்தான் மினியைச் சந்தித்தேன். குழந்தை முகமும், கருணை உள்ளமும் நிறைந்திருந்தாள். என் கையைப் பிடித்து அவள் சொன்ன ஒற்றை வார்த்தையில் என் பாதித் துக்கம் கரைந்து போனது. 
"கரையாண்டா சாரே... இனி சாரோட அம்மே என்னோட அம்மே''
சொன்னபடியே அம்மாவை அப்படி கவனித்துக் கொண்டாள். எந்த அசூயையும், சின்ன முகச்சுழிப்பும் அவளிடம் இல்லை. அம்மாவைச் சுத்தம் செய்து விடுவதில் இருந்து அவள் தேவைகளைக் கவனித்து சோறுட்டி, பாதுகாத்து, சன்னமான குரலில் பாடல்கள் பாடி, ஜோக் சொல்லி... என்னைப் பார்த்தால் அழுதிடும் அம்மா அவளிடம் ஆசுவாசமாக இருந்தாள்.
சரியா ஆறாம் நாள் காலை நான்கு மணி இருக்கலாம். அறைக் கதவு படபடவென்று தட்டப்பட்டது.
"சாரே வேகம் வாரும். நிங்களோட அம்மைக்கு குறைச்சு சீரியசாயிட்டுண்டு''
பதற்றமாக இறங்கி கீழே வந்தேன். அவளின் அறை பரபரப்பாக இருந்தது. டாக்டர்களும், நர்சுகளும் உள்ளே வருவதும் , போவதும் ஏதேதோ சாதனங்கள் கொண்டு போவதும்...
அரை மணி நேரம் கழித்து பெரிய டாக்டர் வருத்தமான முகத்துடன் வெளியே வந்து....

 

"எந்தா ஏட்டா கரையுன்னு''
மினி என் தோளைத் தொட நிகழ்காலம் திரும்பினேன். தரிசனம் முடிந்து கோயில் சன்னதி விட்டு வெளியே வந்தோம்.
"என் கூட வா மினி''
அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்தேன். 
"எந்தா ஏட்டா'' என்றாள் புரியாமல்.
அவள் மறுக்க, மறுக்க குழந்தைக்கு அரைப் பவுனில் செயின் வாங்கித் தந்தேன். 
"அன்னைக்கே உனக்கு ஏதாவது செஞ்சிருக்கணும். அப்போ இருந்த பதட்டத்தில, துக்கத்தில என்ன பண்றதுன்னே புரியலே... நைட் டுயூட்டின்றதாலே நீயும் இருக்கலை. ஊருக்கு வந்த பின்னாடி உன்னோட ஞாபகம் வந்துட்டேயிருந்தது. இப்போ உனக்கு பண்ணினதாலே எனக்கு ஒரு மனதிருப்தி. அம்மாவும் சந்தோசப்படுவாங்க''
"என்டே ஹஸ்பெண்ட் கொல்லும்'' என்று புலம்பினாள்.
சமாதானம் செய்வித்து என் விசிட்டிங் கார்டைத் தந்தேன்.
"ஏதாவதுன்னா கூப்பிடு என்ன''
என்னோட ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
"வர்றேன் ராஜேஷ் ஏட்டா பை''

***************

அம்மாவின் நினைவுகளுடனே பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
அம்மா இல்லாதது பெரும் துக்கமாகவே இருந்து வருகிறது. அவள் இன்னும் கொஞ்சகாலம் என்னுடன் இருந்திருக்கலாம். அதற்குள் அம்மா அவசரப்பட்டு....
அவ்வளவு பெரிய ஆள் பேருந்திற்குள் வாய் விட்டுக் கதறி அழுதது எல்லாரையும் பதற வைத்துவிட்டது.
"ஏ... எந்தா எந்தா...''
"என்னங்க... என்னாச்சு?''
"அம்மா... அம்மா....''
"அம்மாவுக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லையா?''
"செத்துப் போயிட்டாங்க''
"அடப் பாவமே... இப்போவா''
"எட்டு வருசத்துக்கு முன்னாடி''
"எந்தா எட்டு வருசம் கழிஞ்சோ'' பின் வாங்கினார்கள். 
"யோவ் எத்தனை வருஷம் போனா என்னய்யா. அம்மா அம்மா தானேய்யா''
"சரி சாரே சரி.. கரையண்டா'' தண்ணீர் பாட்டில் தந்தார்கள்.
இத்தனை காலமும் அவள் செத்துப் போன துக்கத்தைப் போலவே மனதை உறுத்தும் இன்னொரு விசயமும்...
அம்மா படும் வேதனைகளையும், துயரங்களையும் காணச் சகிக்காது, டாக்டருடன் கலந்து பேசி அம்மாவின் மூச்சை செயற்கையாக நான்தான் நிறுத்தினேன்.
ஒவ்வொரு முறை அவள் வேதனையுடன் பதறும்போதெல்லாம், கண்ணீர் தேங்கும் விழிகளுடன் என்னை வெறித்து நோக்கி, "டேய் என்னை விட்டுர்றா. என்னால முடியலேடா'' என்று சொல்லாமல் சொல்லுவாளே என்ன பதில் அதற்கு?
கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். 
நான் தான் என் அம்மாவைக் கொன்றேன். நான்தான். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். அம்மா நிச்சயம் மன்னிப்பாள். கண்களை மூடிக் கொண்டேன்.
மனதிற்குள் அம்மாவின் முகம் விரிந்தது. 
கருணை வழியும் கண்களுடன் என்னை ஆரத் தழுவி... தலை கோதி முத்தமிட்டு, "என் மகனைப் பத்தி எனக்குத் தெரியாதா?'' என்றாள்.
ய் நித்யா

 

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருணைகொலைதான் ஆனால் என்ன செய்தவனையே மீண்டும் மீண்டும் கொல்கிறதே......!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணிப்பவர்களை விட மரணத்தின் தருணத்தை உடனிருந்து தரிசிப்பவர்களின் மனதின் வலி உயிருள்ளவரை உடனிருந்து கொல்லும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.