Jump to content

எனக்குச் சிலம்பம் சுழற்றத் தெரியும்! - சமந்தா பேட்டி


Recommended Posts

எனக்குச் சிலம்பம் சுழற்றத் தெரியும்! - சமந்தா பேட்டி

 

 
11chncaSamantha
 

‘இரும்புத்திரை’ கதையைக் கேட்டவுடனே, நம்ம சமூகத்தில் நமக்குத் தெரியாமல் இவ்வளவு பிரச்சினைகள் நடக்கிறதா என்று பயந்தேன். இண்டர்நெட் மூலம் நமக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் உள்ளன, நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள் எப்படிக் கசிகின்றன என்பதை இயக்குநர் மித்ரன் அவ்வளவு அழகா கதைக்குள் கொண்டு வந்திருக்கார்” என்று சமந்தா பேசும்போது அவரிடம் அவ்வளவு உற்சாகம். சென்னையில் பிறந்த பெண், தற்போது ஆந்திரத்தின் மருமகள். திருமணமாகிவிட்டது அவருடைய நடிப்பு வாழ்க்கையை கொஞ்சம்கூட மாற்றவில்லை.

 

 

விஜய், சூர்யா ஆகியோரைத் தாண்டி விஷாலுடன் பணிபுரிந்த அனுபவம்?

விஷால் செட்டில் இருந்தாலே செம காமெடிதான். அங்கிருக்கும் அனைவரையும் சிரிக்க வைச்சுட்டே இருப்பார். திரையுலகம் நல்லாயிருக்கணும், மக்கள் நல்லாயிருக்கணும் என்று ரொம்பவே மெனக்கெடுகிறார். அவருக்கு இந்த வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பு இருப்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம். அவர் ஒரு திறமைசாலி.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து வருவது குறித்து...

பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி எப்போதுமே செம காமெடிதான். ஒரு ஊரை மையமாகக் கொண்ட கதையில் நான் படம் பண்ணதில்லை. முழுக்கப் பாவாடை தாவணி, சிலம்பம் கற்றுக்கொண்டு ‘சீமராஜா’ படத்தில் நடிச்சது நல்ல அனுபவம். தியாகராஜன் குமாரராஜா படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ அனைவருக்குமே அதிர்ச்சியா இருக்கும். சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி இடையே போட்டி கிடையாது. ஆனால் அவர்களது முந்தைய படத்துடனே போட்டியிட்டு வருகிறார்கள்.

திருமணமாகியும் தொடர்ச்சியாக நாயகியாக நடித்து வருகிறார் என்ற பார்வை இருக்கிறதே...

திருமணத்துக்குப் பிறகு வெளியான ‘ரங்காஸ்தலம்’ வெற்றிப்படமாக அமைந்தது. திருமணத்தால் படத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நல்ல கதாபாத்திரங்கள், சிறப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாராலும் என்னைப் புறக்கணிக்க முடியாது என நினைக்கிறேன். திருமணமான நடிகை என்ற இமேஜை உடைப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். ஆனால், உடைப்பது மட்டும் போதாது.

தொடர்ச்சியாகப் பல வெற்றிப் படங்களைத் தந்தால் மட்டுமே, திருமணமான நடிகைகள் நாயகியாக நடிக்க முடியாது என்ற சிந்தனையை மாற்ற முடியும். ஒரு நாயகியாக, திருமணமான பிறகும் நடிப்புத் துறையில் எதிர்காலம் உள்ளது என்பதற்கு எதிர்காலத்தில் வரும் நடிகைகளுக்கு நான் முன்னோடியாக இருக்க விரும்புகிறேன்.

திருமணத்துக்குப் பிறகு சமந்தா எவ்வளவு மாறியிருக்கிறார்?

முன்பு ரொம்ப கோபப்படுவேன். திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் குறைச்சுருக்கேன். திருமணத்துக்குப் பிறகு மாலை 6 மணிக்கு வீட்டுக்குப் போயிடுவேன். அங்கே சினிமா பத்தி பேசக் கூடாது என்று நாக சைதன்யா சொல்லியிருக்கார். ஆனால், அவரோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், நாங்க சண்டை போடுறோம் என்பது பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது.

சத்தத்தைக் கூட்டாமல், இருவரும் ஜாலியாகச் சண்டை போட்டுப்போம். பார்ப்பவர்கள் ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்காங்கன்னு நினைப்பாங்க. திருமணமான நாயகியாகவும் வெற்றிகரமாக இருக்க முடியும் என்று நாக சைதன்யா நம்புகிறார். இதை ஒரு வேலையாக மட்டுமே பாவித்துக் கொள் என்று அவர் சொன்னதுதான் சிறந்த ஆலோசனை.

திருமணத்துக்குப் பிறகு எந்த மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்?

வலுவான கதை இருக்கும் படத்தை எதிர்நோக்குகிறேன். வெறும் நாயகியாக மட்டும் நடிக்க அல்ல. ‘நடிகையர் திலகம்’ படத்தில் நான் நாயகி அல்ல. ஆனால், எனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை என்னால் தொடர்புபடுத்தி உணர முடிந்தது. போஸ்டரில் இருக்க வேண்டும், ஐந்து பாடல்களிலும் ஆட வேண்டும் என்பதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை.

தமிழைவிடத் தெலுங்கில், நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் அதிகமாக நடித்துள்ளேன். எதிர்காலத்தில் இது மாறும் என நம்புகிறேன். ஆனால், சில இயக்குநர்கள் மட்டுமே பெண்ணின் பார்வையில் இருந்து எழுதுகிறார்கள். பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் இங்கு ஆணுடைய பார்வையிலிருந்தே எழுதப்படுகின்றன.

12chrcjGVS0682

‘இரும்புத்திரை’ படத்தில் விஷால், சமந்தா

 

திருமணத்துக்குப் பிறகும் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியானப் புகைப்படங்களைப் பகிர்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே...

கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தால் கண்டிப்பாக என்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள் என்று தெரியும். ஆனால், கடற்கரையில் புடவையா கட்ட முடியும்? நான் கவனத்தை ஈர்ப்பதற்காக அதைப் பகிரவில்லை. ஆனால், நான் எதைப் பகிர வேண்டும் என்பதைச் சொல்ல யாருக்கு உரிமைஉள்ளது? நான் திருமணமான பெண் என்ற காரணத்தாலேயே அவதூறாகப் பேசுகிறார்கள். என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்லத் தேவையில்லை. நான் பயப்படவுமில்லை, இந்தப் பிரச்சினைக்குள் சிக்கவும் விரும்பவில்லை.

தெலுங்குத் திரையுலகில் ‘காஸ்டிங் கவுச்’ பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளதே...

தெலுங்கு சினிமா அல்லது சினிமாவில் மட்டும்தான் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா என்பதே பெரிய கேள்வி. இது அனைத்துத் துறைகளிலும், அனைத்துப் பணியிடங்களிலும் உள்ளது. நான் 8 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். இங்கே சில கறுப்பு ஆடுகள் உள்ளன. ஆனால் அவர்களைவிட அதிகமாக, நிறைய நல்ல, நேர்மையான, அழகான மனிதர்கள் இங்கு உள்ளனர். அந்தச் சில கறுப்பு ஆடுகளை அடையாளம் காண ஒரு அமைப்பைத் தொடங்கவுள்ளோம். இதனால் யாரும் இனி பயம் கொள்ளக் கூடாது. சரியான பாதையை நோக்கி எடுத்து வைக்கப்படும் முதல் அடி இது. கார்ப்பரேட் நிறுவனங்கள் போல சினிமா துறையிலும் சில கடுமையான விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

திருமணமானவுடன் சென்னையை மறந்து விட்டீர்களே...

யார் சொன்னது, சென்னை எப்போதுமே எனக்கு மிக நெருக்கம். இங்கு வந்தாலே பழைய ஞாபகங்கள் வர ஆரம்பிச்சிடும். இங்கிருக்கும் பல்லாவரம் தொடங்கி ஒவ்வொரு ரோட்டுக்கும் எனக்கு ஒரு கதையிருக்கு.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23839559.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கு என்ன என்ன தெரியாது என்று சொன்னால் ....
வந்து முடிந்த அளவில் கற்று தர முடியும் 

தெரிந்ததை சொல்லி நாங்கள் வசித்து என்ன செய்கிறது.

சினிமாவில் எவ்ளவு காலம் நடித்த நீங்கள் 
கம்பு சுழட்டிடுவீர்கள் என்பது எனக்கு தெரிந்ததுதானே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.