Jump to content

மனைவி


Recommended Posts

மனைவி

 

 
k9

சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. 
பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தன. படுக்கும்போது கூட போர்வைக்கு சண்டை போட்ட இதுகளா இப்படி என்றபடி எழுந்தேன். 
சமையலறையில் தனியொருவளாய் காலை நேர வேளையில் கண்ணாயிருந்தாள் என் மனைவி சங்கரி. "என்னைப் பார்த்ததும் "பல் தேய்ச்சிட்டு வாங்க காபி போட்டு வைக்கிறேன்'' என்றவாறே. பாலை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
"நீ எந்திரிக்கும் போது என்னையும் எழுப்பியிருக்கலாமே. ஏதாவது உதவி செய்வேனில்லை'' இப்படி எத்தனையோ முறை அவளிடம் கூறியும், இதுவரை அவள் என்னை எழுப்பியதில்லை. இன்றாவது அவள் எழுந்திருக்கும் முன்பே நானும் எழுந்திரித்து விட வேண்டும் என பலமுறை நினைத்தும் கூட என்னால் முழிக்க முடியவில்லை. 
"தனியா கஷ்டப்படுதியே. ஏதாவது செய்யட்டுமா?'' என கேட்டாலும், ஆண்கள் என்னவோ அதை எல்லாம் செய்யக்கூடாது என்பது போல வேண்டாம் என கண்டிப்பாக மறுத்து விடும் பெண்கள் அதிகம். இவளும் அந்த ரகம்தான். சாம்பாருக்குள் காய்கறியைப் போட்டபடி இருந்த அவளைப் பார்த்தவாறே பல் தேய்க்க சென்றேன். காபியைக் குடிக்கும் போதே அவள் சொன்னாள்.
"பிள்ளைக எழுந்திருக்கும் முன்னால நான் குளிச்சிட்டு வந்திர்றேன். குக்கர் விசில் 4 அடிச்சவுடன் ஸ்டவ்வை ஆப் செஞ்சிருங்க.'' 
ஒவ்வொரு நாளும் இது போல் அவள் சொல்வது அவள் வழக்கம். ஆனால், குக்கர் விசில் அடிப்பதற்குள்ளாகவே குளித்து விட்டு வெளியே வரும் அவள், "விசில் அடிக்கலயே'' என்பாள். 
"10 வருஷமா இதானே நடக்கு. குளிப்பதைக் கூட நிம்மதியா செய்ய மாட்டியா? அப்படி என்ன அவசரம். நான்தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல'' என்ற என்னைப் பார்த்து சிரித்த அவள் குளிப்பாட்டுவதற்காக பிள்ளைகளை எழுப்பப் பறந்தாள். 
சரி, காபி குடித்த டம்ளரை கழுவி வைப்போமே என நினைத்து சிங்கில் டம்ளரை கழுவ முயன்ற போது கைநழுவி டம்ளர் சிங்கில் சத்தத்துடன் விழுந்தது. 
சத்தம் கேட்டு பிள்ளைகளுடன் வந்தவள் "எதுக்குங்க தேவையில்லாத வேலை எல்லாம் செய்றீங்க?'' எனச்சொல்லி "பிள்ளைகளை பாத்ரூமுல விடுங்க. நான் கழுவி வைச்சிர்றேன்'' என்றவாறே டம்ளரை கழுவினாள். 
"ஐயோ..நான் கழுவாம இருந்தா சாயங்காலமாவது கழுவியிருப்பா. நம்மாலே இப்படி சங்கடப்படுறாளே'' என நினைத்தபடி பிள்ளைகளை பாத்ரூமுக்கு அழைத்தேன். "அம்மா வந்தாதான் வருவேன்'' என்றன இரண்டும் கோரஸôக. 
"இதுக்கும் நான்தானா? எனக்கு வேலை கொட்டிக் கிடக்கு அப்பாவோட போ'' என்று சொன்னதும், அடம் பிடித்தன இரண்டும். பாத்திரம் கழுவும் படலத்தை ஒத்தி வைத்த அவள் பாத்ரூமுக்குள் தஞ்சமானாள். இனி பல் தேய்த்து, காலைக்கடன்களை முடித்து, குளிப்பாட்டி வர எப்படியும் அரை மணி நேரமாகும். அதற்குள் ஸ்கூல் பேக்கை எடுத்து வைத்து விடுவோம் என பேக்கை தேடினால் , பேக் ஒரு பக்கமும், புத்தகங்கள் ஒரு பக்கமுமாக இறைந்து கிடந்தன. அண்ணனின் பையை துவம்சம் செய்வது அவனது தங்கை திவ்யதர்ஷினியின் வழக்கான பணி. நள்ளிரவு வரை தூக்கம் தொலைத்து பொருள்களை இறைந்து விளையாடுவது மகளுக்கு பிடித்த ஒன்று. அதன் பின்தான் அவளுக்கு தூக்கம் வரும். இறைந்து கிடந்தவற்றை பைக்குள் மொத்தமாக அள்ளிப்போட்டேன். 
குளித்து வந்த பையனுக்கு தலைவாரி, யூனிபார்மை மாட்டிய மனைவியிடம் கத்தினான் எனது மகன்.
"அம்மா, அப்பாவை யாரு பைக்குள்ள எல்லாத்தையும் அள்ளி வைக்க சொன்னது. இன்னைக்கு வியாழக்கிழமை எக்ஸ்டிரா ஆக்டிவிட்டி மட்டும்தான் இன்னைக்கு. லஞ்ச் மட்டும் கொண்டு போனா போதும்கிறது தெரியாதா?'' என்றவனிடம் "அப்பா மறந்திருப்பாரு. நீ தேவையானத எடுத்து வைச்சுக்கோ. நான் லஞ்ச் பாக்ûஸ எடுத்து தர்றேன்'' என்றாள் சங்கரி. 
"எனக்கு எதுவும் தெரியலயே. பிள்ளைக, வீடு எதுவும் தெரியாமலேயே இருக்கமே' என்ற குற்ற உணர்வுடன் குளிக்க கிளம்பினேன். 
"அப்பா நான் போயிட்டு வர்றேன். நீங்க குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே ஸ்கூல் பஸ் வந்துரும். டாட்டா'' என்று சொன்னபடி என்னை குளிக்க வழியனுப்பி வைத்தான் எனது மகன் விசுவநாதன். 
அவன் சொன்னது போலவே நான் குளித்து விட்டு வரும்போது பஸ் அவனை அழைத்துச் சென்று விட்டிருந்தது. மனைவி வைத்த இட்லிகளைச் சாப்பிட்டவாறே நான் கிளம்பினேன். வழக்கம்போல் அவள் சாப்பிடவில்லை. காலை நேரத்து சாப்பாடு என்பது அவளுக்கு பகல் கனவு. வீட்டிலுள்ள அம்மா, நான், பிள்ளைகளுக்காக மட்டுமே காலை நேர சாப்பாடு. அவள் சாப்பிடுவது மதியம் மட்டுமே. காலை நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தால் வேலைக்கு நேரத்தில் போக முடியாது என்பதால் இது. 
அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு எனது வேலையைப் பார்க்க கிளம்பினேன். நான் பார்க்கும் வேலைக்கு நேரம், காலம் கிடையாது. எந்நேரத்திலும் செய்யலாம் என்பதால் பரபரப்பு என்னிடம் கிடையாது. அவளது அலுவலகத்திலிருந்து பைக்கை திருப்பிய எனது மனம் பழைய நினைவுகளுக்குள் திரும்பியது. 

கல்லூரி காலங்களில் சில பெண்கள் என்னை விரும்பியதுண்டு. சில பல காரணங்களால் நான் நிராகரித்த சிலரும் உண்டு. என்னை நிராகரித்தவர்களும் உண்டு. எதிர்பாரா நிலையில் கடைசி நேரத்தில் என்னை வேண்டாம் என ஒருத்தி நிராகரிக்க மொத்த குடும்பமும் ஆடிப்போனது. தந்தை இல்லாத எனக்கு தந்தையும், தாயுமாக இருந்த என் சகோதரி எனக்காக பார்த்தவள்தான் இந்த சங்கரி. ஒரு வகையில் தூரத்துச் சொந்தமான அவளுக்கு எனது கதை தெரியும். இருந்தும் கூட எனது வாழ்க்கைத் துணையாக வர சம்மதித்தாள் அவள். 
மணமாகி 10 வருடங்கள் ஓடிவிட்டன. திருமணத்துக்குப் பின்னால் வரும் எந்தவொரு சந்தோஷமும் அவளுக்கு கிடைக்கவில்லை என்பது எனக்கு அவ்வப்போது வருத்தத்தை தரும். ஆனால், அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தாலாவது அவளுக்கு ஓய்வு கிடைக்கும் என செய்தால் அதையும் கூட விடுவதில்லை. பொதுவாக பெண்கள் அனைவரும் இப்படித்தானோ? தன் கணவன் வீட்டு வேலைகளைச் செய்யக் கூடாது என பெண்கள் நினைப்பது எதற்கென்று புரியவில்லை. 
டீ குடிப்பதற்காக பைக்கை ஓரம் கட்டினேன். கைபேசியில் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. 
"மத்தியானம் வீட்டுக்கு போய் சாப்பிடுங்க. சும்மா சுத்தி உடம்ப கெடுத்துகிடாதீங்க'' என்றாள்.
"காலையில் சாப்பிடாமலேயே இருக்கியே. உன் உடம்பு கெடாதா?'' என்றவனிடம் மேற்கொண்டு பேசாமல். "சரி போய் சாப்பிட்டிருங்க. எனக்கு வேலையிருக்கு'' என்றவாறே கைபேசியை அணைத்தாள். 

 

நிலா தனது வேலையை தொடங்கிய நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தேன். மகளை மடியில் வைத்தபடி மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். "ஹை அப்பா'' என்று வந்த மகளிடம் பண்டக் கவரை கொடுத்தபடி அமர்ந்தேன். சுடச்சுட காபி வந்தது. குடித்து விட்டு முகம் கழுவி வந்த என்னிடம் "இரவு என்ன சாப்பாடு செய்வது'' என்றாள். பதில் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தேன். "என்னங்க, நான் சொல்றது கேட்கலயா?'' என்றவளிடம், "எது ஈசியா செய்ய முடியுமோ, அதைச் செய். இல்ல ஹோட்டல்ல வாங்கி வரட்டுமா?'' என்ற என்னிடம், "பிள்ளைகளுக்கு ஹோட்டல் சாப்பாடு சரிப்படாது. சப்பாத்தி செய்திர்றேன்'' என்றபடி குருமாவுக்கு காய்கறியை நறுக்கத் தொடங்கினாள். 
டிவியை ஆன் செய்த என்னிடமிருந்து ரிமோட்டை பிடுங்கிய இரண்டு பிள்ளைகளும் சேனல்களை வரிசையாக மாற்றி விளையாடத் தொடங்கின. இரவு சாப்பாடு முடிந்து படுத்த எனக்கு தூக்கம் வரவில்லை. அண்ணன் அடித்து அழுது கொண்டிருந்த தங்கையை பாத்திரம் கழுவியபடி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் மனைவி. முழு நிலவு வானத்தை ஆக்கிரமித்து வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 12 -ஐ தாண்டிய நேரத்தில் தூங்கிய குழந்தைகளைத் தோளில் சுமந்தவாறே படுக்க வந்தாள் மனைவி. 
ஓடிக் கொண்டிருந்த டிவியில் "மனைவி அமைவதெல்லாம்...' பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பக்கத்து கோயில் கொடைவிழாவில் ஆர்கெஸ்ட்ராவில் பாடியவர் "தவமின்றி கிடைத்த வரமே' பாடிக் கொண்டிருந்தார். அவை என்னவோ எனக்காக பாடுவது போலவே இருந்தது. எனது கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை பார்த்து அதிர்ச்சியுற்ற மனைவியிடம், "அடுத்த பிறவியில் நீ கணவனாகவும், நான் மனைவியாகவும் பிறக்கணும். நீ எனக்கு இப்ப செய்ற எல்லாத்தையும் உனக்கு நான் அப்ப திருப்பிச் செய்யணும்'' என்றேன். 
"அவ்வளவுதானே சரி. நிம்மதியா தூங்குங்க'' என்றபடி படுத்தாள் அவள். 
மறுநாள் அதிகாலையில் சூரியனும் விழிக்கவில்லை.நானும் விழிக்கவில்லை. அவள் மட்டுமே விழித்து தனது வேலையைத் தொடங்கியிருந்தாள். 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.