Jump to content

Recommended Posts

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

அன்பர்களே! இலக்கிய நயம் உணர்ந்து ரசிக்கவும், ருசிக்கவும், இலக்கியத் தமிழ் நயத்தில் நனைந்து தமிழுணர்வில் திளைக்கவும் யாழ் இனிய அற்புதக்களம் அமைத்துள்ளது என்றால் மிகையன்று. உலகெங்கும் வாழும் தமிழர்களின் இணைய-யுக தமிழ்ச்சங்கம் யாழ். 'தி இந்து' தமிழ் இதழில் வந்த எனது திருவாசகக் கட்டுரைகளின் தொகுப்பை யாழ் இணையத்தில் தற்செயலாகக் கண்டபின்னர் 'யாழ்' முத்தமிழ் கண்டேன். அறிவார்ந்த தமிழர்களின் யாழ் சங்கமத்தில் பதிவிடுவதும், அவர்தம்மோடு கூடிக் கலப்பதுவும் ஈடு இணையற்ற உயிர்ப்பு.

சில  நாட்களுக்கு முன்  எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களிடமிருந்து "ஒரு சந்தேகம். . . என்று குறிப்பிடப்பட்டு, ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். அன்னாரின் வினாவுக்கு விடையளிக்கும் முயற்சியில், பன்னிரு சைவத் திருமுறைகளும், ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரம் பாசுரங்களும் வழங்கும் தமிழும் நயமும் புலப்பட்டுத் தோன்றின.  தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டிய அருமையான கருத்தை வெளிப்படுத்தும் அன்னாரின் அறிவார்ந்த வினாவையும், வினாவிற்கான செறிவான விடையையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

இனி . . .  எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களின் வினாவும் வினாவிற்கான விடையும்:

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள பேராசிரியர் திரு கிருஷ்ணன் அவர்களுக்கு,
வணக்கம்..என் பெயர் ஷங்கர்பாபு.அவ்வப்போது எழுதுகிறவன்...விகடனில் ,குங்குமத்தில் எழுதி இருக்கிறேன்...
தி இந்து தமிழில் கடந்த வருடம் "இப்படியும் பார்க்கலாம்..." என்ற தலைப்பில் 45 வாரங்கள் எழுதினேன்.,,
தற்போது சக்தி விகடனில் "புதிய புராணம்" என்ற தலைப்பில் ஆன்மீகம் கலந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன்...
அவ்வப்போது தங்களின் "வான் கலந்த மணிவாசகம் " தொடரைப் படிப்பதுண்டு...ஆழமான கட்டுரைகள்...
நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலும்,நீங்கள் சைவ இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர் என்ற முறையிலும் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க ஆசைப்படுகிறேன்...
அதாவது---எங்கு இந்தக் கருத்தைக் கேட்டேன் என்பது மட்டும் தெரியவில்லை;ஆனால் திருவாசகத்தில் தான் என்பது நினைவில் இருக்கிறது...
அது பின்வருமாறு---"இறைவா,எனக்கும் முதுமை வரும்...அந்தப் பொழுதில் என்னால் உன்னை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போய் விடக்கூடும்..ஒருவேளை,அப்படி ஒரு முதுமையில் என்னால் உன்னை நினைக்காமல் போனால்,அந்தக் காரணத்தால் என்னை நிராகரித்து விடாதே..."
சரியாக நினைவில்லை...இது போன்ற கருத்துதான் அந்தப் பாடலில் வரும்...

திருவாசகம் அறிந்தவர் என்ற முறையில் தங்களால் இந்தப் பாடலை அடையாளம் காண முடிகிறதா?
அப்படியானால்,அதை நீங்கள் எனக்குத் தெரியப்படுத்தினீர்கள் என்றால் தங்களுக்கு நன்றி உரியவனாக இருப்பேன்...
அன்புடன்--ஷங்கர்பாபு.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தென்னாடுடைய சிவனே போற்றி!                 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

அன்புள்ள எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களுக்கு,

வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக அலுவல் சுமையினால் உடனே பதில் எழுத இயலாமல் போனது. தாங்கள் கேட்டிருந்த வினாவின் செறிவு அப்படி. அந்தக் வினாவுக்கான விடைகாணும் வாய்ப்பையும், அதன்வழி, எனக்கு ஒரு நற்சிந்தனை நினைவூட்டலையும் நல்கிய தங்களுக்கும், இறைவனுக்கும் கைம்மாறு என்ன செய்யப் போகிறேன்!

தாங்கள் தெரிவித்த கருத்தை வெளிப்படுத்தும் தேவாரப்பாடல் இரண்டும், ஆழ்வார் பாசுரம் ஒன்றும் என் நினைவுக்கு வருகின்றன. திருவாசகத்தில் இக்கருத்தை ஒட்டிய பாடல் இல்லை. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறை, திருப்புகலூர் திருத்தாண்டகம் 99ம் பதிகம், பாடல்.1 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ' என்று தொடங்கும் தேவாரமும், "ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டீர்" என்று தொடங்கும் தேவாரமும், பெரியாழ்வார் அருளிய  பத்தாந்திருமொழியில் "துப்புடையாரை அடைவ தெல்லாம்" என்று தொடங்கும் 423ம் பாசுரமும் தாங்கள் தெரிவித்த கருத்துடன் ஒட்டியவை.

முதலில் திருநாவுக்கரசர் பெருமான் அருளிய 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ' என்னும் தேவாரம் அருளப்பட்ட தலமும், தேவாரப் பாடலின் பொருளும் அறிந்து கொள்வோம்.

பாடல் பிறந்த தலம்: திருப்புகலூர்(சோழநாடு);  தலச் சிறப்பு : சித்திரைச் சதயத்தில் அப்பர் பெருமான் இறைவன் திருவடியை அடைந்த புண்ணியத் திருத்தலம். உயிர்கள் இறைவன் திருவடியைப் புகலாக அடையும் தலம் ஆதலால் திருப்புகலூர் என்னும் திருநாமம் பெற்று விளங்குகின்றது. முருகநாயனார் அவதாரத் திருத்தலமும் இதுவே. சுந்தரருக்கு செங்கற்களைப் பொன்னாக இறைவன் மாற்றித் தந்து அருளிய திருத்தலமும் இதுவே. இபுண்ணியத் திருத்தலத்தில் உள்ள மடத்தில் முருக நாயனார், சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர் ஆகிய நான்கு நாயன்மார்கள் கூடியிருந்து இறைவனின் திருவடிகளைச் சிந்தித்து மகிழ்ந்துள்ளனர் என்ற செய்தி பெரியபுராணத்தில் காணக் கிடைக்கின்றது.

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
உலகியல் நடைமுறையில் ஒருவருக்குக் கிடைக்கும் சாதாரண நன்மைகளையே புண்ணியம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகின்றோம். ஆனால், புண்ணியம் என்பதற்கு, நன்மைகள் அனைத்திலும் சிறந்தது என்பதே பொருள். இறைவனின் திருவடிகளை அடைவதற்கு மேல் சிறந்த ஒரு நன்மை இல்லை என்ற பொருள் விளங்க, 'புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்' என்று பாடுகின்றார் நாவுக்கரசர் பெருமான்.

சமணநூலாகிய சீவகசிந்தாமணிகூட, சிவபெருமானைப் "போகம் ஈன்ற புண்ணியன்" சீவகசிந்தாமணி (362) என்று குறிப்பிடும். அப்பர் பெருமான் நிறைவாகப் பூம்புகலூர் என்னும் இத்தலத்தில்தான் திருத்தொண்டு செய்து வாழ்ந்தார் என்கிறது சைவவரலாறு. "எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ" எனத்தொடங்கும் இத்திருத்தாண்டகப்பதிகம் பாடி, "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவியபுண்ணியனே" என்று போற்றி வாழ்ந்து, ஒரு சித்திரைச் சதயத்தில் புண்ணியன் இறைவன் திருவருளால், அவன் திருவடி நீழலில், இரண்டறக் கலந்தருளினார் அப்பர் பிரான்.

இத்திருமுறைப் பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதுவோரும், கேட்போரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர்; தொண்டர்தம் பெருமையை சொல்லும் வாய்ப்பைத் தந்த தங்களுக்கு ,அருள்வழங்கும் செந்தமிழ்ச் சொக்கன் சோமசுந்தரனின் திருவருள் முழுமையாகக் கிடைக்க அவன் திருவடிகளைச் சிந்திக்கின்றோம்.

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ  எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்! ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்!
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்! பூம்புகலூர் மேவிய புண்ணியனே! - தமிழ்மறை: 6.99.1 (நாவுக்கரசர் திருப்புகலூர் திருத்தாண்டகம்)

இப்பாடலில் அப்பர் பெருமான் சிவபெருமானிடம், "இறைவா! உடலைவிட்டு உயிர்நீங்கும்போது,  உடலின் ஒன்பது வாயில்களும் ஒருசேர அடைத்து, நினது திருவடிகளை உணராமல் செய்துவிடும் என்பதால், எனக்கு அந்நிலை வருமுன், இப்போதே உன் திருவடிகளுக்கு என்னை ஒப்புக்கொடுக்கின்றேன்; என்னை ஏற்றுக்கொண்டருள்க." என்றார். இப்போது, முழுப்பாடலில் பொருளையும் காண்போம்.

"அழகிய புகலூர் மேவிய புண்ணியனே!  நினைக்கும் தன்மை உடையவனாகிய நான், எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பது ஒன்றை மட்டுமே நினைப்பவன்; இச்செயல் அல்லாது, வேறு எதனை விரும்பி நினைப்பேன்?  நினது கழல் இணையடிகளையே கைதொழுது காண்பதைத் தவிர என் கண்களில் வேறு காட்சியில்லாதவன்; இதுவன்றி வேறெதிலும் பற்று இல்லாதவனாகவும் உள்ளேன். யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாக நீ அருளிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்துள்ளாய். அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து (இறப்பு நேரும் காலம்) மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன். ஆதலின் அக்காலம் வாராதபடி, இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக!" என்று வேண்டுகின்றார் பெருமான்.

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் என்று இந்த நிறைவுத் திருத்தாண்டகத்தைப் பாடியவாறே, சிவானந்தத்தில் திளைத்து, ஞானவடிவாக அமர்ந்திருந்து, சிவபெருமானின் கழலடியைச் சேர்ந்தார் என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் "போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று முடிவது சிறப்பு.

ஒன்பது வாசல் என்பவை இரண்டு கண்கள், இரண்டு நாசித் துவாரங்கள், இரண்டு காதுகள், வாய், எருவாய், கருவாய்: நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயில்களும் செயல்படும் காலத்து, கண்கள் அவன் திருவடிகளையே காணும்; கைகள் அவன் திருவடிகளையே வணங்கும்; உயிர் பிரிந்த பின்னர், அனைத்து துவாரங்களும், ஒரே சமயத்தில் அடைக்கப்பட்டுச் செயலிழக்கும்போது கண்களும், கைகளும் தம் கடமைகளைச் செய்ய இயலாமல் போகும்.  இந்த செய்தியைத் தான் 'ஒக்க அடைக்கும்போது' என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

இறக்கும் தருவாயில், அதாவது ஒன்பது துளைகளும் ஒக்க அடைக்கும்போது உணர முடியாது என்பதால், நாம் இறக்கும் தருவாயில் இறைவனை நினைத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடவேண்டாம் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரானின்  இத்தேவாரப் பாடல் நாம் மிகவும் உணர்ந்து பின்பற்றத் தக்கது.

சிவபுராணத்தில் மாணிக்கவாசகரும்

"மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும்
நலன்தான் இலாத சிறியேற்கு"

என்று குறிப்பிடுகின்றார். உடலில் உயிர் இருக்கும் வரையில், ஒன்பது வாயில் புலன்களிலும் அழுக்கு ஊறி, நாம் மாய உலக வாழ்க்கையில் மகிழ்ந்து இறைவனை முற்றிலும் மறந்து விடுகின்றோம். ஒன்பது வாயில்கள் ஒக்க அடைபடும் போது, பிறவிப் பயனாகிய இறைவனை அடையாமல், இப்பிறவி வீணானதை உணர முடியாமல், உயிர், வேறு வழியைத் தேடி, மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கும்;  இவ்வாறு, பெற்ற பிறவியை வீணாக்கும் முன்னர், நாம், சோற்றுத்துறை இறைவனை நினைத்துப் போற்றி, நமது துன்பங்களை நீக்கிக் கொண்டு நல்வழியைச் சென்று அடையலாம் என்று நமக்கு அறிவுரை கூறும் இன்னுமொரு அப்பர் தேவாரம் இங்கு காண்போம்:

ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டீர்
மாற்றுத் துறை வழி கொண்டு ஓடாமுன்னம் மாய மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்வழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக் கண் சேரலாமே. தமிழ்மறை:6.93.5


அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

உடலை விட்டு உயிர் பிரியும்போது உன்னை என்னால் நினைக்க முடியாது, எனவே உன்னை நினைக்கும் சமயத்திலேயே உன்னிடம் நான் வந்து அடைகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதுபோல், பெரியாழ்வாரின் அழகான பாசுரம் ஒன்று உள்ளது.

தமிழர் மெய்யியல் தொன்மங்களில் முக்கியமானது "உடலை விட்டுப் பிரியுந்தருவாயில் இறைவனின் திருவடிகளையே எண்ணினால் திருவடிப்பேறாகிய வீடுபேறு கிட்டும்'' என்பது.

வயதான காலத்தில் இவ்வுலகில் வாழும் வாழ்வின் தேவைக்காக, வங்கியில் பணம் சேமித்து வைப்பதைப் போன்று, இறைவனின் அருள் வங்கியில் அவன் திருவடிகளையே எண்ணும் தம் வேண்டுதல் புண்ணியத்தை முன்கூட்டியே செலுத்தி வைத்து, தம் உயிர் உடலைவிட்டு நீங்கும் தருவாயில் வந்து, கூற்றுவனிடமிருந்து காத்து, தமக்குத் திருவடிப்பேறு நல்கவேண்டும் என்று வேண்டுகின்றார் பெரியாழ்வார்.

 துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே!
ஒப்பு இலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! -பெரியாழ்வார்: 422 - பத்தாந் திருமொழி

"பாம்பணையில் பள்ளிகொண்ட திருவரங்கத்துப் பெருமாளே! இவ்வுலகத்தோர், உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தேடிச் சேர்ந்து நட்புக் கொள்வது, துன்பம் நேரும் காலத்தில் அவ்வுயர்ந்த நிலையில் இருப்பவர்கள் துன்பம் நீக்கத் துணையாக இருப்பார்கள் என்றுதான். உன்னிடம் சரணடையும் தகுதி எனக்கு இல்லாவிட்டாலும், துணிவுடன் நின்னை வந்து அடைந்துவிட்டேன்! ஏன் தெரியுமா? உன்னைச் சரணடைந்த கஜேந்திரன் எனும் யானைக்கு நீ அருள்செய்தாய் என்பதை அறிந்ததால்! உடல் நைந்து, களைப்புற்று, உயிர் பிரியும் காலத்தில், நான் உன்னை நினைக்க மாட்டேன்; எனவே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்; நீ என்னை அப்போது வந்து மறவாமல் காக்கவேண்டும்" என்று பொருள் அமைந்த பத்துப் பாசுரங்களில் முதல் பாசுரமாக அமைந்துள்ளது. இப்பாசுரமே தங்கள் கருத்துக்கு முழுவதும் ஒட்டிவரும் பாடலாகும்.

--------------------------------------------------

என்னை எழுதச் செய்த, தங்களுக்கு என் நன்றிகளும் வணக்கமும்.

அன்புடன்

ந. கிருஷ்ணன்.
----------------------------------------------------
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நிலைகளிலும் படைக்கப்பட்ட தமிழும் நயமும் நமக்கெல்லாம் பேரின்பம் நல்குவதேன்னவோ பேருண்மையாகும்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.