Jump to content

பச்சைமிளகாய் கறி


Recommended Posts

உத யாரும் செய்து சாப்பிட்டு பார்த்தனீர்களா? 'பின்' விளைவுகள் எப்படி என்று பார்த்து நானும் செய்ய.

On 5/13/2018 at 3:14 AM, கிருபன் said:

 

உண்மையிலேயே வெள்ளையப்பமும் பருத்துறை வடையும்தான் வடமராட்சியின் தனித்துவமான உணவுகள்.

அப்ப கோழி புக்கை? கோழி புக்கையும் வடமராட்சி ஸ்பெசல் என்று கேள்விப் பட்டனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

உத யாரும் செய்து சாப்பிட்டு பார்த்தனீர்களா? 'பின்' விளைவுகள் எப்படி என்று பார்த்து நானும் செய்ய.

அப்ப கோழி புக்கை? கோழி புக்கையும் வடமராட்சி ஸ்பெசல் என்று கேள்விப் பட்டனான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அப்ப கோழி புக்கை? கோழி புக்கையும் வடமராட்சி ஸ்பெசல் என்று கேள்விப் பட்டனான்.

நான் ஊரில் இருக்குமட்டும் மச்ச மாமிசங்கள் சாப்பிடாததால் கோழிப் புக்கை என்பதைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. இலண்டனில் சில பார்ட்டிகளில் சாப்பிட்டுள்ளேன். ஆனால் மிளகும் அரைத்த செத்தல் மிளகாய்ப்பொடியும் தரும் உறைப்பைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஊருக்குப் போனபோது கரவெட்டியில் கோழிப்புக்கை சாப்பிடும் சந்தர்ப்பம்  வாய்த்தது. வெளிநாட்டுக்காரர் என்று உறைப்பைக் குறைத்துவிட்டதால், காரசாரமாகச் சாப்பிடும் எனக்கு அந்தக் கோழிப்புக்கை பெரிதாகப் பிடிக்கவில்லை. நானே ஒருமுறை செய்து பார்த்தால்தான் திருப்தி வரும் என்று நினைக்கின்றேன்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழிப்புக்கை - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

kadaleri_1.jpg

 

தலைப்பை கோழிப்பொங்கல் என்று இட வேண்டுமா என எண்ணுகின்றேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரைக்கும் தைப்பொங்கலுக்கு காய்ச்சிப் படைப்பது எங்களுக்கு புக்கையாகத்தான் இருந்தது. ஆனால், கொழும்புக்குள் நகர்ந்த போது - வேறொரு மொழியை உள்வாங்கிய போது உச்சரிக்கப்படக்கூடாத ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட தெரிந்த முதல் பதம் இந்த புக்கை தான். வேற்று மொழி பழகிய ஆரம்ப காலங்களில், தெரியாத்தனமாக வாய்க்குள் தட்டுத்தடுமாறி வரும் போதெல்லாம் சகோதர மொழி நண்பனுக்குப் புரியாமல் விழுங்குவதில் உள்ள சங்கடம்... அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

”அடேய்... வடமராட்சியில் கோழிப்புக்கை என்று ஒரு சாப்பாடு செய்வாங்களாமே. உனக்குத் தெரியுமா...?” பல்கலைக்கழகத்தில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன் கேட்ட நண்பனுக்கு என் பதில் இப்படித்தான் இருந்தது. “தெரியுமாவா...? வீட்டிலே பானை பானையாய்க் காய்ச்சிக் கொட்டுவாங்கள்...! ஏ9 பாதை திறக்கும் போது கட்டாயம் வா... செய்து தரலாம்.”

கோழிப்புக்கையின் ருசி மட்டுமல்ல... அதன் நிறம் கூட என்னவென்று அறியாத நான் இப்படிச் சொல்லவும் ஒரு காரணம் இருந்தது. அது... எப்போது இந்தப் பாதை திறந்து, எப்போது இவர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள் என்ற அதீத நம்பிக்கைதான். குறைப்படாதீர்கள்...! அந்த நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல... அப்போது எல்லோருக்கும் தானே இருந்தது.

வடமராட்சியின் சில ஊர்கள் எப்போதும் சில உணவுப்பண்டங்களின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு, பருத்தித்துறை வடை, நாகர்கோவில் நாவற்பழம், வடமராட்சி கிழக்கின் கரைவலை மீன்.... இலண்டன் சந்தைகளிலும் இவற்றுக்கு கிராக்கி அதிகமாம். அங்குள்ள வல்வெட்டித்துறை நண்பன் புளுகியிருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன்.

நான்கு வருடங்களுக்கு முதல் கேட்டதை ஞாபகம் வைத்திருந்தவன் அன்றைக்கு அழைப்பெடுத்தான்.
“மச்சான் நாங்களும் யாழ்ப்பாணத்தில் தான் நிற்கிறோம். கொழும்பிலேயிருந்தும் கொஞ்சம் இறக்குமதியாகியிருக்கிறாங்கள்... நாளைக்கு வடமராட்சி வாற ஐடியா. மணற்காட்டுக் கடல்... பிறகு உன் வீட்டிலே கோழிப்புக்கை மத்தியானச் சாப்பாடு...”

கிழிஞ்சுது போ... வேறு வழி தெரியவில்லை... தொலைபேசி ஆமென்று பதில் சொல்லி அணைவதைத்தவிர!!! பத்து செக்கன் உரையாடலின் முடிவில் கைத்தொலைபேசி நூறு டிகிறியில் சுட்டது.

அம்மாவைப் பார்த்தேன்... ம்கூம்... என் மானப் பிரச்சினையின் வீரியத்தை விளங்கப்படுத்தி, முடியாவிட்டால் சக்கரைப்பொங்கலாவது காய்ச்சுங்கோ என்றேன்.
 

★ ★ ★
 

வல்லிபுரக்கோவிலின் சுற்றாடலில் கிளைவிட்டு நின்ற பனைமரத்தை தரிசித்த வண்ணம் மணற்காட்டுக் கடலை அடைந்தாயிற்று. 
kadaleri_2.jpg

மணற்காடு என்றதும் எப்போதும் பதினாறு வயது இளங்குருத்தொன்றுதான் என் ஞாபகத்திரைகளில் தோன்றி மறைவான். 1993 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். கப்பல் வடிவிலான ஊர்தியில் பவனி வந்த அவனுக்கு காத்திருந்து பூக்கள் சொரிந்ததும் - அந்தப் பூ வாங்கிப் போட்டவள் இன்னொரு நாள் அதே மாதிரிக்கப்பலில் பவனி வந்ததும் மனது மறக்காத வரலாறுகள்.

வெயில் சுட்டெரித்தது... ஆனாலும், கடல் நீர் இதமாகத் தான் இருந்தது. மூன்று மணித்தியாலங்கள்.... அருமையான பொழுது. கடலுக்குள் நாங்கள் தாண்டு போனாலும் தூக்குவதற்கென்று துணையொன்றைக் கரையில் இருத்தி விட்டு கும்மாளம் நடந்தது. பாவம்.... எங்கள் போட்டோப் பிரியன்.

அந்த மண் மலை, சவுக்கம் தோப்பு, தூர்ந்து போன மணலில் இருந்து வெளிப்படும் தேவாலயம், எங்களுக்காய் உயிர் துறந்த நண்டு, ஒரு துண்டு எச்சமுமின்றி துடைத்து வழித்த இடியப்பமும் சொதியும்.... என்றைக்கும் மறக்காது!!!

kadaleri_3.jpg

இதிலே இன்னொன்றையும் மறைக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும். அன்றைக்குத்தான் நானும் முதன் முதலாய் மணற்காட்டுக்கடலில் கால் நனைத்தேன். ஆனாலும், நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த வழிகாட்டியாய் நடித்ததை எண்ணி இப்பவும் பிரமிக்கின்றேன்.

அடுத்ததாய் மதிய உணவு... அது தான் கோழிப்புக்கை. என்ன நடந்ததென்று நான் சொல்வது சுயதம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். ஆனாலும், கூடவே ஒரு மூடை சீனியும் வாங்கி வைத்திருக்கலாம் என நண்பர்கள் உணர்ந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுடன் கூட இருந்து உண்டவன் தானே நானும்.

ஊர் சுற்றிப்பார்க்கவென வந்தவர்கள் கோழிப்புக்கை சாப்பிட்ட மறுநாள் ஓய்வெடுத்து வீட்டில் தங்கியிருந்தார்களாம்... நல்லது தானே!!! ம்ம்ம்.... யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிற்கின்ற மின்சாரம் போல தண்ணிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. தப்பிக் கொண்டார்கள்.

கடந்தது கடந்து போகட்டும்...!!! எந்தளவுகளில் தூள், கடுகு, மிளகு, பச்சை மிளகாய் இடுவதென இப்போது அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.... இரண்டாவது தடவையாக இன்னொரு தரம் சமைப்பதற்கு தயாராக இருக்கிறாளாம். ஆகவே, அடுத்த தடவை வரும் போதும் மறக்காமல் வந்திடுங்கள்...!!!

http://srikaran-blog.blogspot.co.uk/2010/05/blog-post_06.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்புளித்தீயல் என்று நம்மபக்கம் சொல்வார்கள். இந்தச் செய்முறையில் நெத்தலி மீனை இணைத்தால் நெத்தலித்தீயல் என்றும் சூடை மீனை போட்டால் சூடைத்தீயல் என்றும் இறாலைப் போட்டால் இறால் தீயல் என்றும் சொல்வோம் காரமும் புளிப்பும் தூக்கலாக இருக்கும். கண்களில் நீர் முட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

மச்சியோ....

அக்கா... இது... தம்பி.... அக்கா... தம்பி... பாசக்கார தம்பி... ?‍♀️

 

முனி, எனக்கு யாழில் நெடுக்கர் மட்டும் தான் தம்பி ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

முனி, எனக்கு யாழில் நெடுக்கர் மட்டும் தான் தம்பி ?
 

எனக்கு யாழில், ரதியக்கா மட்டும் தான் அக்கா ! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எனக்கு யாழில், ரதியக்கா மட்டும் தான் அக்கா ! 

 

இதோடா?...ஊருக்குப் போய்ட்டு வரும்  போது கோப்பியும்,தூளும் கொண்டு வரச் சொன்னால் கொண்டு வராத தெரியாது?...அக்காவாம் அக்கா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

இதோடா?...ஊருக்குப் போய்ட்டு வரும்  போது கோப்பியும்,தூளும் கொண்டு வரச் சொன்னால் கொண்டு வராத தெரியாது?...அக்காவாம் அக்கா ?

இதப்பாருங்கோவன்..

இது உங்களுக்கே நல்லாயிருக்கா

கட்டிக் காவி கொண்டு வந்து, எங்க கொண்டாந்து தாரது எண்டு கேட்க, கிருபனிடம் கொடுத்தால், சரி எண்டு சொல்லி நழுவீற்று... இப்ப கதையை பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதப்பாருங்கோவன்..

இது உங்களுக்கே நல்லாயிருக்கா

கட்டிக் காவி கொண்டு வந்து, எங்க கொண்டாந்து தாரது எண்டு கேட்க, கிருபனிடம் கொடுத்தால், சரி எண்டு சொல்லி நழுவீற்று... இப்ப கதையை பாருங்கோவன்.

சரி கிருபனிடடை கொண்டு வந்து கொடுத்தநீங்களே? இல்லைத் தானே...என்னை பார்க்கவாவது வந்தனீங்களே.?..அவ்வளவு பயம் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை என்ன சத்தம்? என்ரை பேரும் அடிபடுது!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

அங்கை என்ன சத்தம்? என்ரை பேரும் அடிபடுது!?

 

முனியர் எனக்கு என்று கொண்டு வந்த ஊர்க் கோப்பியையும்,தூளையும் நீங்கள் எடுத்து விட்டிர்களாம்...அவர் சொல்கிறார் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு அடிபடாமல் யாராவதொராள் தின்று பார்த்து சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருசத்துக்கு பத்தாயிரம் பதினைய்யாயிரம் மிளாகாய்க்கண்டு எண்டு  மினைக்கெட்ட நான் உப்பிடியான மிளகாய்க்கறியை நான் கேள்விப்படவேயில்லை.

நாங்கள் இஞ்சை துருக்கி மிளகாயிலைதான் கறி வைக்கிறனாங்கள்.....அந்த மாதிரியிருக்கும்.. :cool:

 

images?q=tbn:ANd9GcSAHhnOp_cY-Z9qp4D8xSqPhu3S347Oxez5vJkCcVMOySK4sySH9Q

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 9:19 PM, ரதி said:

 

முனியர் எனக்கு என்று கொண்டு வந்த ஊர்க் கோப்பியையும்,தூளையும் நீங்கள் எடுத்து விட்டிர்களாம்...அவர் சொல்கிறார் ?
 

நான் ஊர்க்கோப்பித் தூளில் கோப்பியே குடிப்பதில்லை. எப்பவும் NESCAFÉ GOLD BLEND மட்டும்தான். ப்ராண்ட் முக்கியம் அல்லவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 11:09 PM, குமாரசாமி said:

வருசத்துக்கு பத்தாயிரம் பதினைய்யாயிரம் மிளாகாய்க்கண்டு எண்டு  மினைக்கெட்ட நான் உப்பிடியான மிளகாய்க்கறியை நான் கேள்விப்படவேயில்லை.

நாங்கள் இஞ்சை துருக்கி மிளகாயிலைதான் கறி வைக்கிறனாங்கள்.....அந்த மாதிரியிருக்கும்.. :cool:

 

images?q=tbn:ANd9GcSAHhnOp_cY-Z9qp4D8xSqPhu3S347Oxez5vJkCcVMOySK4sySH9Q

நானும் மிளகாய்க்கறியை கேள்விப்படவில்லை. இருந்தாலும் வயிற்றை இடைக்கிடை கிளியர்பண்ண இப்படி மிளகாய்க்கறி செய்து பார்த்தால் என்ன என்று யோசிக்கின்றேன்?

துருக்கி மிளகாய் இனிப்பா அல்லது உறைப்பா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2018 at 8:59 AM, கிருபன் said:

 

துருக்கி மிளகாய் இனிப்பா அல்லது உறைப்பா??

இரண்டும் இருக்கு.அத மிழகாயின் அந்த நேர மனநிலையைப் பொறுத்தது.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.