Jump to content

அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?


Recommended Posts

அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?

Ireland Cricket Getty image
 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது.

 

1993 ஆம் ஆண்டு முதல் .சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொடரில் பலம் மிக்க பாகிஸ்தான் அணியை அதிர்ச்சித் தோல்வியில் வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வரலாற்றில் இடம் பிடித்தது அயர்லாந்து அணி.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியையும் 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளையும் வெற்றியீட்டி தமது திறமைகளை சிறப்பாகவே வெளிக்காட்டியது என்றால் மிகையாகாது. எனவே, .சி.சி 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கி .சி.சி இன் முழு அங்கத்துவ நாடாக அறிவிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டி, அயர்லாந்து ஆண்கள் அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், ஏற்கனவே அயர்லாந்து மகளிர் அணி 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டு இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி கடந்த காலங்களில் மிஸ்பா உல் ஹக் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான மிஸ்பா உல் ஹsக் மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் ஓய்வினைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சரிவினைக்கண்டு .சி.சி இன் தற்போதைய டெஸ்ட் தர வரிசையில் 7 ஆம் இடத்தில் உள்ளது.  

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் இத்தொடரில் பல புது முக வீர்ரகளை இணைத்துக்கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய அணியாக களமிறங்கும் அயர்லாந்து அணி அனுபவம் மிக்க பாகிஸ்தான் அணியை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்காக இரு அணிகளும் தமது வீர்ர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அயர்லாந்து அணி

வில்லியம் போர்டபீல்ட் (தலைவர்), அன்ரோ பல்பரேனி, எட் ஜோய்ஸ், டிரோன் கேன், அன்ரோ மக்பரேன், டிம் முர்டாக், கெவின் ஒப்ரைன், நீல் ஒப்ரைன் (விக்கெட் காப்பாளர்), போய்ட் ரன்கின், ஜேம்ஸ் ஷன்னோன், நதன் ஸ்மித், போல் ஸ்டேர்லின், ஸ்டுவர்ட் தொம்ப்சன், கேரி வில்சன்.

பாகிஸ்தான் அணி

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸாத் ஷபீக், அஸார் அலி, பாபர் அஸாம், பஹீம் அஷ்ரப், பகர் ஸமான், ஹரிஸ் சொஹைல், ஹஸன் அலி, இமாமுல் ஹக், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ஆமிர், ரஹட் அலி, ஸாத் அலி, சமி அஸ்லம், சடாப் கான், உஸ்மான் சலாஹுத்தீன்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

அயர்லாந்தின் முதலாவது டெஸ்ட் இன்று
 

image_166395314b.jpg

வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து இன்று விளையாடவுள்ளது. டப்ளினில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதன் மூலமே வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து விளையாடவுள்ளது.

அந்தவகையில், ஆப்கானிஸ்தானுடன் சேர்த்து கடந்தாண்டு ஜூனில், சர்வதேச கிரிக்கெட் சபையால் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே, பங்களாதேஷ் 2000ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதன் பின்னர் முதலாவது அணியாக டெஸ்ட் அறிமுகத்தை அயர்லாந்து மேற்கொள்கிறது.

இப்போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்துக் குழாமில், இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய பொய்ட் றாங்கின் இடம்பெற்றிருப்பது அவ்வணிக்கு பலத்தை வழங்குவதுடன் எட் ஜோய்ஸ், நைஜல் ஓ பிரயன், டிம் முர்டாக், கெவின் ஓ பிரயன், அணித்தலைவர் வில்லியம் போர்ட்பீல்ட், போல் ஸ்டேர்லிங், அன்டி போல்பிரயன் போன்ற சிரேஷ்ட வீரர்களும் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, தமது சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் அயர்லாந்துக்கு மேலும் சற்று சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் குழாம் பெரும்பாலும் இளம் வீரர்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. அதுவும் தொடர்ச்சியாக உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்று வருகின்ற பவட் அலாமை விட்டு துடுப்பாட்ட வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர்.

பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட இமாம்-உல்-ஹக் இப்போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து, பாகிஸ்தானின் முதன்மை சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷா காயமடைந்துள்ள நிலையில், அவரைக் குழாமில் பிரதியீடு செய்துள்ள ஷடாப் கான் பயிற்சிப் போட்டிகளில் பிரகாசித்தபோதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகளில் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/அயர்லாந்தின்-முதலாவது-டெஸ்ட்-இன்று/44-215733

Link to comment
Share on other sites

அயர்லாந்து டெஸ்ட்- முதல் இன்னி்ங்சில் பாகிஸ்தான் 310 ரன்கள் சேர்த்து டிக்ளேர்

 

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. #IREvPAK

 
அயர்லாந்து டெஸ்ட்- முதல் இன்னி்ங்சில் பாகிஸ்தான் 310 ரன்கள் சேர்த்து டிக்ளேர்
 
அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

201805131818133892_1_shadabkhan-s._L_styvpf.jpg
சதாப் கான்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/13181813/1162711/IREvPAK-Test-pakistan-310-runs-declared-first-innings.vpf

Link to comment
Share on other sites

அறிமுக டெஸ்டில் அயர்லாந்து தோல்வி

IRELAND

பாகிஸ்தான் அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட்டில் அயர்லாந்து அணி தோல்வியடைந்தது.

ஐசிசி-யின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியை சொந்த நாட்டில் டப்ளின் நகரில் விளையாடியது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 96 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பஹீம் அஸ்ரப் 83, ஆஷாத் ஷபிக் 62, ஷதப் கான் 55 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் முர்டாஹ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 47.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு சுருண்டு பாலோ -ஆன் பெற்றது. அதிகபட்சமாக கெவின் ஓ’பிரையன் 40 ரன்கள் எடுத்தார்.

 

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4, ஷதப் கான் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 129.3 ஓவர்களில் 339 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கெவின் ஓ’பிரையன் 118, தாம்ப்சன் 53 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 5, முகமது அமீர் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 45 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 59, அசார் அலி 2, ஹரிஸ் சோகைல் 7, ஆசாத் ஷபிக் 1, சர்ப்ராஸ் அகமது 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். இமாம் உல்-ஹக் 72, ஷதப் கான் 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றியது.

http://tamil.thehindu.com/sports/article23899500.ece

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை பாடாய்படுத்திய அயர்லாந்து... முதல் டெஸ்ட்டில் இதுதான் நடந்தது!

 
 

2011 உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டம்... பெங்களூரு மைதானத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 327 ரன்கள் குவித்தது. அயர்லாந்தும் 25 ஓவரில் 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, தான் ஒரு கத்துக்குட்டி அணி என்பது போலவே ஆடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அணிக்கு ஒரு பாகுபலியாக கெவின் ஓ ப்ரைன் எனும் வீரர் 50 பந்துகளில் சதமடிப்பார். கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றியைப் பதிவு செய்யும்.

2015 உலகக் கோப்பையின் `பி’ பிரிவில் 3 வெற்றி 3 தோல்விகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது அயர்லாந்து. 2019 உலகக் கோப்பை கனவு சமீபத்தில் நடந்த தகுதிச் சுற்றுடன் பொய்யானது. ``பெரிய அணிகளை வைத்தே விளையாடுங்கள். அவர்கள் மூலம் பணம் பாருங்கள். நாங்கள் வெறும் பாக்கெட்டுடன் இங்கிருந்து வெளியேறுகிறோம்'' என்று ஐசிசிக்கு எதிரான குரலை அயர்லாந்து கேப்டன் பதிவு செய்தார்.

 

இப்போது அயர்லாந்துக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் டெஸ்ட் அங்கீகாரம் வழங்கியுள்ளது ஐசிசி. அயர்லாந்து பாகிஸ்தானோடும், ஆஃப்கான் இந்தியாவோடும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஆடும் என்று அறிவித்தது. இதற்கு பின்னாலும் அரசியல் இருக்குமோ என்பதுதான் சர்வதேசப் போட்டி அட்டவணை கூறும் தகவல். ஆம், அயர்லாந்து தொடருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. அதேபோல் ஆஃப்கான் தொடருக்குப் பின்பு இந்தியாவுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு திரும்புகின்றன. இதற்கு பயிற்சி ஆட்டம்தானா இந்த டெஸ்ட் போட்டிகள் என்பது விடைதெரியா கேள்வி.

அயர்லாந்து

எது எப்படியோ, முதல் டெஸ்ட்டை பாகிஸ்தானுடன் ஆடிவிட்டது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அயர்லாந்து அணியில் 11 பேரில் 10 பேருக்கு இதுதான் முதல்போட்டி. ரான்கின் மட்டும் இங்கிலாந்துக்காக ஒரேயொரு போட்டி ஆடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பீட்டர் சிடில் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

முதல்நாள் மழையால் ரத்தானது. இரண்டாவது நாளில் அயர்லாந்தின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க பாகிஸ்தான் திணறியது. 169 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஷகதாப்கான் மற்றும் அஷ்ரஃபின் அரைசதத்தால் 310/9 என்ற நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அயர்லாந்து தரப்பில் முர்தாப், தாம்சன் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரான்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கெவின் ஓ ப்ரைன்

பந்துவீச்சில் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அயர்லாந்து, பேட்டிங்கில் முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றத்துடன் ஆடியது. 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கெவின் ஓ ப்ரையனின் 40, வில்சனின் 33 ரன்கள் என்று 130 ரன்களுக்கு ஆல் -அவுட். ஃபாலோ ஆன் வாங்கி மீண்டும் பேட் செய்தது. அவ்வளவுதான் எளிதில் அயர்லாந்து ஆட்டம் முடிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இரண்டாவது இன்னிங்ஸில் இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கமாக உருவெடுத்தது. 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், பின்னர் கொஞ்சம் சரிவு. அடுத்து கெவின் ஓ பிரையனின் சதம் என மாஸ் காட்டியது அயர்லாந்து. 339 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாகிஸ்தானுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் பாகிஸ்தானுக்குப் படம் காட்டியது அயர்லாந்து. 200 நிமிடங்கள் ஆடவைத்து 5 விக்கெட்டுகளை இழந்து 5வது நாளில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். 

கெவின் ஓ ப்ரைன்

கெவின் ஓ பிரையன்தான் ஆட்ட நாயகன். அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் சதம் இவரால் அடிக்கப்பட்டது என்ற பெருமை வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. `` மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் அடித்த சதம்தான் என் வாழ்க்கையின் முக்கியமானது'' என்கிறார் கெவின். 

அயர்லாந்து இனி யாருடனெல்லாம் டெஸ்ட் ஆடும், முன்னணி அணியாக வலம் வருமா? இல்லை வெறும் ஒன்லி டெஸ்ட் ஆடிக்கொண்டிருக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை என வரிசையாகக் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் கெத்துக் காட்டியிருக்கிறது அயர்லாந்து. இப்போது ஐசிசி எனும் பேட்டைக்காரனுக்கு அறிமுக டெஸ்ட் மூலம் சொல்லியிருக்கும் பதில் ``அண்ணே! என் சேவப் பந்தயம் அடிக்கும்ணேங்கறது'' தான்.

ஆட்டத்தில் தோற்றாலும் சிறப்பான பந்துவீச்சு, பேட்டிங் என அறிமுக டெஸ்ட்டில் அதிரடி காட்டிய அயர்லாந்து கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை வென்றது. வாழ்த்துகள் அயர்லாந்து!

https://www.vikatan.com/news/sports/125197-irelands-first-test-against-pakistan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.