Jump to content

அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?


Recommended Posts

அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?

Ireland Cricket Getty image
 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது.

 

1993 ஆம் ஆண்டு முதல் .சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொடரில் பலம் மிக்க பாகிஸ்தான் அணியை அதிர்ச்சித் தோல்வியில் வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வரலாற்றில் இடம் பிடித்தது அயர்லாந்து அணி.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியையும் 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளையும் வெற்றியீட்டி தமது திறமைகளை சிறப்பாகவே வெளிக்காட்டியது என்றால் மிகையாகாது. எனவே, .சி.சி 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கி .சி.சி இன் முழு அங்கத்துவ நாடாக அறிவிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டி, அயர்லாந்து ஆண்கள் அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், ஏற்கனவே அயர்லாந்து மகளிர் அணி 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டு இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி கடந்த காலங்களில் மிஸ்பா உல் ஹக் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான மிஸ்பா உல் ஹsக் மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் ஓய்வினைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சரிவினைக்கண்டு .சி.சி இன் தற்போதைய டெஸ்ட் தர வரிசையில் 7 ஆம் இடத்தில் உள்ளது.  

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் இத்தொடரில் பல புது முக வீர்ரகளை இணைத்துக்கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய அணியாக களமிறங்கும் அயர்லாந்து அணி அனுபவம் மிக்க பாகிஸ்தான் அணியை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்காக இரு அணிகளும் தமது வீர்ர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அயர்லாந்து அணி

வில்லியம் போர்டபீல்ட் (தலைவர்), அன்ரோ பல்பரேனி, எட் ஜோய்ஸ், டிரோன் கேன், அன்ரோ மக்பரேன், டிம் முர்டாக், கெவின் ஒப்ரைன், நீல் ஒப்ரைன் (விக்கெட் காப்பாளர்), போய்ட் ரன்கின், ஜேம்ஸ் ஷன்னோன், நதன் ஸ்மித், போல் ஸ்டேர்லின், ஸ்டுவர்ட் தொம்ப்சன், கேரி வில்சன்.

பாகிஸ்தான் அணி

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸாத் ஷபீக், அஸார் அலி, பாபர் அஸாம், பஹீம் அஷ்ரப், பகர் ஸமான், ஹரிஸ் சொஹைல், ஹஸன் அலி, இமாமுல் ஹக், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ஆமிர், ரஹட் அலி, ஸாத் அலி, சமி அஸ்லம், சடாப் கான், உஸ்மான் சலாஹுத்தீன்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

அயர்லாந்தின் முதலாவது டெஸ்ட் இன்று
 

image_166395314b.jpg

வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து இன்று விளையாடவுள்ளது. டப்ளினில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதன் மூலமே வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து விளையாடவுள்ளது.

அந்தவகையில், ஆப்கானிஸ்தானுடன் சேர்த்து கடந்தாண்டு ஜூனில், சர்வதேச கிரிக்கெட் சபையால் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே, பங்களாதேஷ் 2000ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதன் பின்னர் முதலாவது அணியாக டெஸ்ட் அறிமுகத்தை அயர்லாந்து மேற்கொள்கிறது.

இப்போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்துக் குழாமில், இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய பொய்ட் றாங்கின் இடம்பெற்றிருப்பது அவ்வணிக்கு பலத்தை வழங்குவதுடன் எட் ஜோய்ஸ், நைஜல் ஓ பிரயன், டிம் முர்டாக், கெவின் ஓ பிரயன், அணித்தலைவர் வில்லியம் போர்ட்பீல்ட், போல் ஸ்டேர்லிங், அன்டி போல்பிரயன் போன்ற சிரேஷ்ட வீரர்களும் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, தமது சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் அயர்லாந்துக்கு மேலும் சற்று சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் குழாம் பெரும்பாலும் இளம் வீரர்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. அதுவும் தொடர்ச்சியாக உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்று வருகின்ற பவட் அலாமை விட்டு துடுப்பாட்ட வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர்.

பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட இமாம்-உல்-ஹக் இப்போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து, பாகிஸ்தானின் முதன்மை சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷா காயமடைந்துள்ள நிலையில், அவரைக் குழாமில் பிரதியீடு செய்துள்ள ஷடாப் கான் பயிற்சிப் போட்டிகளில் பிரகாசித்தபோதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகளில் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/அயர்லாந்தின்-முதலாவது-டெஸ்ட்-இன்று/44-215733

Link to comment
Share on other sites

அயர்லாந்து டெஸ்ட்- முதல் இன்னி்ங்சில் பாகிஸ்தான் 310 ரன்கள் சேர்த்து டிக்ளேர்

 

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. #IREvPAK

 
அயர்லாந்து டெஸ்ட்- முதல் இன்னி்ங்சில் பாகிஸ்தான் 310 ரன்கள் சேர்த்து டிக்ளேர்
 
அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

201805131818133892_1_shadabkhan-s._L_styvpf.jpg
சதாப் கான்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/13181813/1162711/IREvPAK-Test-pakistan-310-runs-declared-first-innings.vpf

Link to comment
Share on other sites

அறிமுக டெஸ்டில் அயர்லாந்து தோல்வி

IRELAND

பாகிஸ்தான் அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட்டில் அயர்லாந்து அணி தோல்வியடைந்தது.

ஐசிசி-யின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியை சொந்த நாட்டில் டப்ளின் நகரில் விளையாடியது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 96 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பஹீம் அஸ்ரப் 83, ஆஷாத் ஷபிக் 62, ஷதப் கான் 55 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் முர்டாஹ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 47.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு சுருண்டு பாலோ -ஆன் பெற்றது. அதிகபட்சமாக கெவின் ஓ’பிரையன் 40 ரன்கள் எடுத்தார்.

 

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4, ஷதப் கான் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 129.3 ஓவர்களில் 339 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கெவின் ஓ’பிரையன் 118, தாம்ப்சன் 53 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 5, முகமது அமீர் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 45 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 59, அசார் அலி 2, ஹரிஸ் சோகைல் 7, ஆசாத் ஷபிக் 1, சர்ப்ராஸ் அகமது 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். இமாம் உல்-ஹக் 72, ஷதப் கான் 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றியது.

http://tamil.thehindu.com/sports/article23899500.ece

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை பாடாய்படுத்திய அயர்லாந்து... முதல் டெஸ்ட்டில் இதுதான் நடந்தது!

 
 

2011 உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டம்... பெங்களூரு மைதானத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 327 ரன்கள் குவித்தது. அயர்லாந்தும் 25 ஓவரில் 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, தான் ஒரு கத்துக்குட்டி அணி என்பது போலவே ஆடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அணிக்கு ஒரு பாகுபலியாக கெவின் ஓ ப்ரைன் எனும் வீரர் 50 பந்துகளில் சதமடிப்பார். கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றியைப் பதிவு செய்யும்.

2015 உலகக் கோப்பையின் `பி’ பிரிவில் 3 வெற்றி 3 தோல்விகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது அயர்லாந்து. 2019 உலகக் கோப்பை கனவு சமீபத்தில் நடந்த தகுதிச் சுற்றுடன் பொய்யானது. ``பெரிய அணிகளை வைத்தே விளையாடுங்கள். அவர்கள் மூலம் பணம் பாருங்கள். நாங்கள் வெறும் பாக்கெட்டுடன் இங்கிருந்து வெளியேறுகிறோம்'' என்று ஐசிசிக்கு எதிரான குரலை அயர்லாந்து கேப்டன் பதிவு செய்தார்.

 

இப்போது அயர்லாந்துக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் டெஸ்ட் அங்கீகாரம் வழங்கியுள்ளது ஐசிசி. அயர்லாந்து பாகிஸ்தானோடும், ஆஃப்கான் இந்தியாவோடும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஆடும் என்று அறிவித்தது. இதற்கு பின்னாலும் அரசியல் இருக்குமோ என்பதுதான் சர்வதேசப் போட்டி அட்டவணை கூறும் தகவல். ஆம், அயர்லாந்து தொடருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. அதேபோல் ஆஃப்கான் தொடருக்குப் பின்பு இந்தியாவுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு திரும்புகின்றன. இதற்கு பயிற்சி ஆட்டம்தானா இந்த டெஸ்ட் போட்டிகள் என்பது விடைதெரியா கேள்வி.

அயர்லாந்து

எது எப்படியோ, முதல் டெஸ்ட்டை பாகிஸ்தானுடன் ஆடிவிட்டது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அயர்லாந்து அணியில் 11 பேரில் 10 பேருக்கு இதுதான் முதல்போட்டி. ரான்கின் மட்டும் இங்கிலாந்துக்காக ஒரேயொரு போட்டி ஆடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பீட்டர் சிடில் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

முதல்நாள் மழையால் ரத்தானது. இரண்டாவது நாளில் அயர்லாந்தின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க பாகிஸ்தான் திணறியது. 169 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஷகதாப்கான் மற்றும் அஷ்ரஃபின் அரைசதத்தால் 310/9 என்ற நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அயர்லாந்து தரப்பில் முர்தாப், தாம்சன் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரான்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கெவின் ஓ ப்ரைன்

பந்துவீச்சில் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அயர்லாந்து, பேட்டிங்கில் முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றத்துடன் ஆடியது. 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கெவின் ஓ ப்ரையனின் 40, வில்சனின் 33 ரன்கள் என்று 130 ரன்களுக்கு ஆல் -அவுட். ஃபாலோ ஆன் வாங்கி மீண்டும் பேட் செய்தது. அவ்வளவுதான் எளிதில் அயர்லாந்து ஆட்டம் முடிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இரண்டாவது இன்னிங்ஸில் இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கமாக உருவெடுத்தது. 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், பின்னர் கொஞ்சம் சரிவு. அடுத்து கெவின் ஓ பிரையனின் சதம் என மாஸ் காட்டியது அயர்லாந்து. 339 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாகிஸ்தானுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் பாகிஸ்தானுக்குப் படம் காட்டியது அயர்லாந்து. 200 நிமிடங்கள் ஆடவைத்து 5 விக்கெட்டுகளை இழந்து 5வது நாளில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். 

கெவின் ஓ ப்ரைன்

கெவின் ஓ பிரையன்தான் ஆட்ட நாயகன். அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் சதம் இவரால் அடிக்கப்பட்டது என்ற பெருமை வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. `` மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் அடித்த சதம்தான் என் வாழ்க்கையின் முக்கியமானது'' என்கிறார் கெவின். 

அயர்லாந்து இனி யாருடனெல்லாம் டெஸ்ட் ஆடும், முன்னணி அணியாக வலம் வருமா? இல்லை வெறும் ஒன்லி டெஸ்ட் ஆடிக்கொண்டிருக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை என வரிசையாகக் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் கெத்துக் காட்டியிருக்கிறது அயர்லாந்து. இப்போது ஐசிசி எனும் பேட்டைக்காரனுக்கு அறிமுக டெஸ்ட் மூலம் சொல்லியிருக்கும் பதில் ``அண்ணே! என் சேவப் பந்தயம் அடிக்கும்ணேங்கறது'' தான்.

ஆட்டத்தில் தோற்றாலும் சிறப்பான பந்துவீச்சு, பேட்டிங் என அறிமுக டெஸ்ட்டில் அதிரடி காட்டிய அயர்லாந்து கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை வென்றது. வாழ்த்துகள் அயர்லாந்து!

https://www.vikatan.com/news/sports/125197-irelands-first-test-against-pakistan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.