Jump to content

நான் ஒரு ஈழ அகதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Beefsteak செய்யலாம் என்று மாட்டு இறைச்சி வாங்கி வந்திருந்தேன். Steakக்கு இறைச்சி நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் பண்ணைக்கு நேரடியாகவே போய்  இறைச்சியை வாங்கி  இருந்தேன். கொஞ்சம் காசு அதிகம்தான்.

 Steakக்குக்கு  Red wine sauce செய்வதற்காக சந்தையால் வரும்போது red wineம் வாங்கிக் கொண்டு வந்தேன். பொதுவாக wine sauce செய்வதற்கு நல்ல தரமான wine  தேவை என்றில்லை. ஆனாலும் நான் தரமான Weinஐயே வாங்கி வந்திருந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. Sauceக்குப் போக மீதமான wine வாய்க்குள்ளேயும் ஊத்திக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசைதான்.

 அரத்தை எடுத்து கத்தியை தீட்டிக் கூராக்கும் போதே அருகில் இருந்த இன்ரநெற் வானொலியைத் தட்டிவிட்டேன்

 கிளாஸுக்குள் றெட் வைன். தீட்டிய கத்தி. அழகாக வெட்டிக் கொள் என்று மரப் பலகையில் அல்வா துண்டு போல்  காத்திருக்கும் சிவந்த இறைச்சித் துண்டு. அருகில் ஒலித்துக் கொண்டிருந்தது வானொலி. யன்னலுக்குள்ளால் இளவேனிலும் 28 கிராட்  வெப்பத்தையும், வெளிச்சத்தையும் தந்து கொண்டிருந்த சூரியன். ஆகா அருமையான ஞாயிற்றுக்கிழமை (06.05.2018) என்று மனது மகிழ்ச்சியாக இருந்தது.

 “சட்டென்று வீசிய சூறையில் சாய்ந்து கிடக்கும் பழக் குலைகளே...” யசோதா மித்திரதாஸின் சோகமான குரலில் பாடல்  வானொலியில் போய்க் கொண்டிருந்தது. அதுதான் மதிய செய்தி வரப் போகிறது என்பதற்கான மணியோசை.

 “பருத்தித்துறைக் கடல் பிரதேசத்தில் 14 ஈழ அகதிகள் சிறிலங்கா 

கடற்படையினரால் கைதுசெய்தியை அதிவேகத்தோடு ஒரு பெண் வாசித்துக் கொண்டிருந்தாள். முதலில் தமிழ்நாட்டு வானொலியைக் கேட்பதாக  நான் நினைத்துக் கொண்டு இறைச்சியை வெட்ட ஆரம்பமானேன். பிறகுதான் நினைவு வந்தது, அந்த வானொலிகாற்றலையின் காவலன் கானமிசைக்கும் பாவலன்என்று

 அகதி என்ற வார்த்தையே தவிர்க்கப் பட வேண்டியது  என்றுஇடம் பெயர்ந்தவர்கள்’, ‘புலம் பெயர்ந்தவர்கள்என்ற வார்த்தைகளை எப்பொழுதோ நாங்கள் பாவிக்கத் தொடங்கிவிட்டோம். இப்போ இது என்ன புதுசாஈழ அகதிகள்என்ற வார்த்தையைத் தேடிக் கொண்டு வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

 நாங்களே எங்களை வானொலியில்ஈழ அகதிகள்என்று சொல்லிக் கொண்டு உலகம் எல்லாம் வாழும் தமிழர்களுக்கு உறவுப் பாலம் அமைப்போமானால் மற்றவர்கள் எவ்வளவு பேசிக் கொள்வார்கள். போதாதற்குஈழ அகதிகள்என்ற வார்த்தையை அந்த செய்தி வாசிக்கும் பெண் அடிக்கடி பாவித்ததால் போதும் இதுக்கு மேலே வேண்டம் என்று வானொலியை நிறுத்தி விட்டேன்

 உள்ளே இருந்த கோபத்தோடு இறைச்சியை வெட்டிவிட்டுப் பார்த்தால் அது minced meatஆக இருந்தது.

 Minced meatக்கு எதற்கு wine sauce?  Wine அப்படியே வைத்தால் அது vinegarஆக மாறிவிடும் என்பதால் முழுப் போத்தலையும் குடித்து முடித்து விட்டேன்

 மனதில்  எரிச்சலை வைத்துக் கொண்டு வைன் குடித்ததால் கோபம் போக மறுத்து இன்னும்ஈழ அகதிஎன்ற வார்த்தை எனக்குள்  ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை அகதிகளாக ஒருபோதும் கருதுவதில்லை. ஆனாலும் செய்திகள் எழுத, வாசிக்க ஈழத்தமிழர் பற்றாக்குறையால் தமிழகத்தைச் சேர்தவர்கள்தான் புலம்பெயர் ஊடகங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தளவில் “ஈழ அகதிகள்” என்ற சொல்லாடலைத்தானே பாவிக்கமுடியும். இதில் எரிச்சல்பட்டு ஒன்றும் ஆகபோவதில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அகதிகள்' என்ற சொல் நம் உள்ளத்திற்கு உகந்ததாய் இல்லை.  அவர்கள் இன்னும் இடம்/ புலம் பெயரவில்லை என்ற நிலையில், 'இடம் பெயரும் முயற்சியில் ஈழத்தமிழர் கைது' என்று வாசிக்கலாம். ஆனால் சில மென்மைகள்(sensitivities) எல்லோருக்கும் எப்போதும் தோன்றாதாகையால், கிருபன் கூறியதைப் போல் சில சமயங்களில் சில விடயங்களை சீரணித்துப் பழகத்தான் வேண்டும். அதே சமயம் இவ்வுணர்வுகளை இதுபோன்ற நமக்கான தளங்களில் இவ்வாறே மென்மையாய் வெளியிடுவதும் காலப்போக்கில் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.