Jump to content

சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு


Recommended Posts

சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு

 

 
 

'அக்கினிப் பறவைகள்' என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தார்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இது தொடர்பாக அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்:

01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கோடு தமிழீழத்தில் தேசிய அடையாள அட்டை வெளியிடப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு தமிழிறைமை பறிக்கப்பட்டதன் விளைவாக தமிழீழ தேசிய அடையாள அட்டையின் பயன்பாடு இல்லாமற் போனது.

இதனை மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் அக்கினிப் பறவைகளின் இந்த முயற்சி இன்றைய சூழ்நிலையில் தேவையானதா என்ற வினா எழுவது இயல்பானதே.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

2009ம் ஆண்டில் இடம்பெற்ற தமிழினத்திற்கெதிரான வல்லாதிக்க சக்திகளின் கூட்டுச்சதி நடவடிக்கையானது இனவழிப்பு என்பதையும் தாண்டி தமிழீழ நடைமுறை அரசையும் இல்லாமற்செய்துவிட்ட ஒரு தேசிய அழிப்பு நடவடிக்கையாகும். தமிழீழ நடைமுறை அரசின் அழிவோடு தமிழீழக் கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியமும் வலுவிழந்துபோயிருப்பதும் வெளிப்படை. தற்போது தமிழீழம் என்பது பெரும்பாலும் வெறும் நினைவுகளில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகவே காட்சியளிக்கிறது.

தமிழீழத் தேசியக்கட்டுமானம் என்பது நினைவுகளில் மட்டுமின்றி நடைமுறையிலும் பேணப்படவேண்டும். தமிழீழ இறைமையானது சரணாகதியடையவோ, தாரை வார்க்கப்பாடவோ இல்லை என்பதை நந்திக்கடல்வரை இடம்பெற்ற வீரம் செறிந்த மற்றும் பெரும் ஈகத்துடன்கூடிய போர் எமக்குப் புலப்படுத்தி நிற்கிறது.

தற்போதைக்கு தமிழீழத் தனியரசின் கட்டுமானங்களைத் தமிழீழத்தில் செயற்படுத்த முடியாத நிலை உள்ளபோதும், அதனை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப் பாடு உள்ளவர்களாக இருக்கிறோம்.

அந்த வகையில் தமிழீழத்தின் கட்டுமானங்களைப் புலம்பெயர்ந்த தேசங்களில் அந்நாடுகளின் சட்டங்களுக்கு அமைவாக நிறுவி அவற்றின் மூலம் தமிழீழத்தின் குடிமக்கள் என்ற நடைமுறை உணர்வில் தமிழர்கள் வாழ வழி சமைக்கவேண்டும். அதற்கான முதற்படியே இவ்வடையாள அட்டையின் மீள்வெளியீடாகும்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இவ்வடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நபரும் பின்வரும் விடயங்களை முழுமையாகவும் மனப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனம். இவர்கள் தமக்கென ஒரு பாரம்பரிய தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். தனியே ஒரு மொழி, பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டவர்கள்.

- ஈழத்தமிழரின் வரலாற்று இறைமையின் பாலும் மற்றும் வட்டுக்கோடடைத் தீர்மானத்தின் பாலும் தமிழீழ மக்கள் முழு இறைமைக்கு உரித்தானவர்கள்

- மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் தமிழீழ இறைமை நிறுவப்பட்டது.

- தமிழ் மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் காலங்காலமாக நடத்தப்பட்டு வந்த மற்றும் நடத்தப்பட்டு வருகின்ற திட்டமிட்ட ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கையே ஆகும்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

மேற்குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தமிழீழ அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவராகிறார்கள். இவ்வாறானதொரு மக்கள் தொகுதி உருவாவதன் மூலமாகத் தமிழீழத்தின் அடிப்படையான அடையாளம் நிறுவப்படுகிறது.

தமிழீழ அடையாள அட்டையின் மீள்வெளியீடு தமிழீழ அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு மக்கள் குழுவை நிறுவுகிறது. தமிழீழக் கட்டுமானங்களை அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக உருவாக்கி அவற்றின் மூலம் தமிழீழக் கோட்பாட்டை நிலைநிறுத்திப் பேணுவதுடன், அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழீழ மக்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள், தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் அக்கினிப் பறவைகள் அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.

தமிழீழ மரபுவழித்தாயகம் ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும் மற்றும் இனவழிப்பின் மூலமாகத் தமிழீழத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் , தமிழீழச் சித்தாந்தம் நிலைபெறுவதற்கும் மற்றும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்குமான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இதுவே தமிழீழ தேசத்தின் இருப்புக்கான இன்றைய இன்றியமையாத தேவையாகும்.

இந்த அடிப்படையில் முன் முயல்வுகளை எடுத்துவரும் அக்கினிப் பறவைகள் அமைப்பின் முயற்சிகளுக்கு அனைத்துத் தமிழீழ மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அக்கினிப் பறவைகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

http://www.ibctamil.com/ltte/80/100167

Link to comment
Share on other sites

உங்களால் நிறுவப்படும் தரவுத்தளத்தின் பாதுகாப்பு என்ன .? எப்போதாவது எதிர்கள் கைகளில் சேகரிப்பட்ட தரவுகள் சென்றடைவதால் ஏற்படும் பாதிப்புகளை உணருவீர்களா.?

இந்த அடையாள அட்டை மூலம் பயன்பாடு என்ன .?

பிறப்பு நாடு குறித்த வரையறை என்ன .?

புலிகளின் தமிழீழ நிர்வாக கட்டமைப்பில் செய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கும்போது அடையாள அட்டையின் முக்கியதுவம் என்ன.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. புலம்பெயர் இளைய சமூகம் இத்தகைய விடயங்களை ஒற்றுமையோடு முன்னெடுக்க வேண்டும். இலக்கு ஒன்று தான்.. தமிழீழம்.

ஆனால்... தரவுப் பாதுகாப்பு என்பது சர்வதேச தரத்துக்கு நிகராகப் பாதுக்காக்கபட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு  முதலில்  ஒரு அடையாள அடடை கொடுங்கோ
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலங்களில் தமிழீழத்திற்கு ஒரு பங்களிப்பென்றால், பொருளாதார ரீதியாக என்றாலும் சரி, வெகுஜன போராட்டரீதியில் என்றாலும் சரி  புலம் பெயர்ந்து வாழும் எந்த தமிழீழத்தவர் வாழும் தேசங்களினாலும் போட்டி போடமுடியாதபடி கெத்து காட்டிய சுவிஸ் புலம்பெயர் தேசத்தில்...

இந்த அடையாள அட்டை வெளியீட்டுக்கு வந்தவர்கள் எண்ணிக்கையே சொல்லுது ..

இது  எவ்வளவுமிக பெரிய நகைச்சுவை  என்பதை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2018 at 1:48 PM, பகலவன் said:

உங்களால் நிறுவப்படும் தரவுத்தளத்தின் பாதுகாப்பு என்ன .? எப்போதாவது எதிர்கள் கைகளில் சேகரிப்பட்ட தரவுகள் சென்றடைவதால் ஏற்படும் பாதிப்புகளை உணருவீர்களா.?

இந்த அடையாள அட்டை மூலம் பயன்பாடு என்ன .?

பிறப்பு நாடு குறித்த வரையறை என்ன .?

புலிகளின் தமிழீழ நிர்வாக கட்டமைப்பில் செய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கும்போது அடையாள அட்டையின் முக்கியதுவம் என்ன.?

வேறு என்ன...

வெறும் விளம்பரம்...இல்லையென்றால்,புலம்பெயர்ந்தவர்கள் கட்டமைப்புக்கு  இப்போது இருக்கும் நெருக்கடியை இன்னும் சிக்கலாக்குவது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தியாக தமிழ்நாட்டில் இருபத்துநாஙு பொறியியல் கல்லூரிகள் இழுத்துமூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அறிவித்தல் போய்ச்சேர்ந்துள்ளது. அதில் ஒரு கல்லூரியை புலம்பெயர்தமிழர்கள் விலைக்கு வாங்கி மேலைத்தேசங்களில் மிகவும் சிறந்த பல்கலக்கழகங்களுடன் இணைந்து அதனுடன் மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தி தாயகத்தில் வாழும் புலம்பெயர்ந்துவாழும் எமது இளையோருக்குத் தகுந்த பொறியியற் கல்வியைக் கொடுத்தால் இதைவிடச்சிறப்பாக இருக்கும்.

தவிர தாயகத்தில் இப்போது கவனிப்பாரற்றுக்காணப்படும் விவசாய நிலங்களை சரியான விதத்தில் திருத்தி பாரம்பரிய காய்கறி மற்றும் நெல் தவிர தானியங்களை இயற்கை முறையில் உற்பத்திசெய்தும் கால்நடைகளைப் பெருமளவில் வளர்த்து சுயசார்பிலான பொருளாதாரத்தை எமது மண்ணில் கட்டியெழுப்புவதன்மூலம் எமது வழத்தைப்பாதுகாப்பதுடனில்லாது ஏனையோருக்கும் முன் உதாரணமாகவும் விவசாயம் இலாபமூட்டும் தொழிலே என்பதை நாம் நிறுவலாம்.

தமிழீழக்கனவை நாம் வென்றெடுப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இவையே இருக்கும் அதைவிடுத்து அடையாள அட்டை கொடுக்கிறம் எனச்சொல்லிப்போட்டு அங்கினைக்க வருடத்துக்கு ஒரு தடவையாகுதல் ஊருக்கும்போய் வருகிறவயளையும் போகாமல் பண்ண பிளான் போடுகினம். 

ஊருடன் உறவாடும்போதே எமது தேசத்தை நாம் மீதவேண்டும் எனும் எண்ணம் எமது மனதில் நிலையாக நிற்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று... நாடு இல்லை. எம்மை... ஆதரிக்கும் நாடுகளும் இல்லை.
ஊரில்.... உள்ள தமிழ்  கட்சிகளும், 30 வருடமாக உயிரை கொடுத்து நடந்த போராட்டங்களை மறந்து, 
போராட்டம்  ஆரம்பித்த  போது  இருந்த அரசியல் தளத்துக்கே வந்து, மீண்டும் எம்மை.. சினக்க வைக்கும் நிலையில்....
அடையாள அட்டை விடயம்,  அர்த்தமற்றது. சுவிஸ் இளையோர்களே... உங்களது  இந்த முடிவை, மீள்  பரிசீலனை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் தமக்கான நிலமான இஸ்ரேலை பல நூற்றாண்டுகள் காத்திருந்துதான் அமைத்தார்கள். பற்பல நாடுகளில் புலம்பெயர்ந்திருந்தாலும் அவர்கள் சில விடயங்களில் உறுதியாக இருந்தார்கள். ஒன்று தமக்கான நிலத்தை எத்தனை தலைமுறை தாண்டியும் அமைத்தே தீர்வது ; இரண்டு தங்கள் மத அடையாளங்களான சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் எந்த சமரசமும் செய்யாமல் வாழ்வது ; மூன்று  அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு நிற்பது.

ஒரு மத அடையாளத்தைக் கொண்டவர்களுக்கே இவ்வளவு உறுதியென்றால், அதை விட மேன்மையான மொழியினப் போராளிகளின் சிறப்பை என்னவென்று சொல்வது ! ஈழம் பிரிவினைவாதமல்ல. சிங்களப் பேரினவாதம் அடிமட்டம் வரை வேரூன்றியதை நாம் உணர்ந்ததன் வெளிப்பாடு.

 அடையாள அட்டையும் ஒற்றுமைக்கான ஒரு  குறியீடே . ஒருமுகப் படுத்துதலுக்கான எந்தவொரு முயற்சியிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. கூட்டம் சேரவில்லை என்பதற்காக சோர்வும் தேவையில்லை. இதையெல்லாம் எதிர்பார்க்காமலா ஒரு போராளி களத்தில் இறங்குகிறான் ?

எனவே போராட்டத்தின் அனைத்து வடிவங்களுக்கும் தோள் கொடுப்போம் தோழா ! உனக்குத் துரோகம் இழைத்த எல்லையிலிருந்தே உனக்கு நான் பாடும் பரணி - 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப'. உன் போரில் தோள் கொடுக்கும் காலம் அமையுமானால், அதைவிட இப்பூவுலகில் வேறு என்ன பேறு ?

  மேற்கூறியவை வெறும் உணர்வு வடிவாய்த் தோன்றலாம். போர்க்களத்தில் உணர்வே எல்லாம் இல்லை. ஆனால் உணர்வு இல்லாமலும் இல்லை.

Link to comment
Share on other sites

45 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

யூதர்கள் தமக்கான நிலமான இஸ்ரேலை பல நூற்றாண்டுகள் காத்திருந்துதான் அமைத்தார்கள். பற்பல நாடுகளில் புலம்பெயர்ந்திருந்தாலும் அவர்கள் சில விடயங்களில் உறுதியாக இருந்தார்கள். ஒன்று தமக்கான நிலத்தை எத்தனை தலைமுறை தாண்டியும் அமைத்தே தீர்வது ; இரண்டு தங்கள் மத அடையாளங்களான சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் எந்த சமரசமும் செய்யாமல் வாழ்வது ; மூன்று  அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு நிற்பது.

ஒரு மத அடையாளத்தைக் கொண்டவர்களுக்கே இவ்வளவு உறுதியென்றால், அதை விட மேன்மையான மொழியினப் போராளிகளின் சிறப்பை என்னவென்று சொல்வது ! ஈழம் பிரிவினைவாதமல்ல. சிங்களப் பேரினவாதம் அடிமட்டம் வரை வேரூன்றியதை நாம் உணர்ந்ததன் வெளிப்பாடு.

 அடையாள அட்டையும் ஒற்றுமைக்கான ஒரு  குறியீடே . ஒருமுகப் படுத்துதலுக்கான எந்தவொரு முயற்சியிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. கூட்டம் சேரவில்லை என்பதற்காக சோர்வும் தேவையில்லை. இதையெல்லாம் எதிர்பார்க்காமலா ஒரு போராளி களத்தில் இறங்குகிறான் ?

எனவே போராட்டத்தின் அனைத்து வடிவங்களுக்கும் தோள் கொடுப்போம் தோழா ! உனக்குத் துரோகம் இழைத்த எல்லையிலிருந்தே உனக்கு நான் பாடும் பரணி - 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப'. உன் போரில் தோள் கொடுக்கும் காலம் அமையுமானால், அதைவிட இப்பூவுலகில் வேறு என்ன பேறு ?

  மேற்கூறியவை வெறும் உணர்வு வடிவாய்த் தோன்றலாம். போர்க்களத்தில் உணர்வே எல்லாம் இல்லை. ஆனால் உணர்வு இல்லாமலும் இல்லை.

நல்ல விடயம்

ஆனால் இதை வைத்து என்ன செய்யலாம் - நாக்குத்தான் வழிக்கலாம்

இந்த அடையாள அட்டையை பெற்றவனே வெளியில அதை சொல்ல ம,மாட்டான்

நீங்க வேற காமடி பண்ணிக்கிட்டு 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப சோமசுந்தரன் அவர்களது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்
இளையோர்களே நீங்கள் உங்களுக்களுக்கியலுமான வழிவகையில் தமிழீழம் நோக்கிய செயற்பாட்டை எப்படிக்கொண்டுபோக முடியுமோ அப்படியே செய்யுங்கள் ஈஈசெய்தி தொடர்பாக நான் ஏற்கனவே கூறிய கருத்தையொட்டி, நான் இப்படி எழுதியது சரியானதா நாம் ஏமாற்றத்தின் காரணமாகவும் தோல்விகளின் காரணமாகவும் எதையாவதை எழுதப்போய் உங்களது மனத்தைக்  கோணப்பண்ணலாம் தயவுசெய்து அப்படியான சந்தர்ப்பங்களில் எங்களை மன்னித்துவிடுங்கள். 

எம்மை அறியாமலேயே நாம் விரக்தியின் விளிம்புக்குச் சென்றுவிட்டு ஏனையோரைக் குறைகூறுகிறோம் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் அடி ஆழம் வரை சென்று பார்த்தவர்கள் ஈழத்தமிழர்கள் 
எதை யார் தொடங்கினாலும்  100 கேள்வி வரும் அதில் தவறும் இல்லை.
கடவுள் இனி பூமிக்கு வந்தாலும் யாரும் அவரை நம்ப போவதில்லை 
கடவுளின் பெயரால் அந்த அளவில் மோசடி இருக்கிறது.

"அடையாள" அட்டை  என்பது என்னை தமிழ் ஈழத்தவனாக அடையாளம் 
காண  இனொரு படிவம்தான்.
அது எல்லா ஈழ தமிழரிடமும் இருக்கும்போது ... சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியாது 
அதை கையில் கொண்டு திரியும் ஒரு மட்டை போல் இல்லது 
டிஜிட்டல் வடிவிலேயே வைத்திருக்க முடியும்.

கேள்வி இந்த தரவுகளை எப்படி பாதுகாப்பது என்பதே?
தவிர தொடங்கியவர்கள் பற்றிய நம்பிக்கை சார்பு நிலை.

ஆனால் இனி என்ன செய்ய போனாலும் புல்லுருவிகள் ..... எப்படி 
ஈழத்துக்குள் வந்து ஊடு உருவிச்சுதுகளோ தெரியாது. எதையும் ஆக்க பூர்வமாக 
செய்யவிட போவதில்லை.

புலி ... எலி ... என்று பூச்சாண்டி காட்டி ....
காட்டி கொடுப்பில் சுகம் கண்டு வாழ்ந்து ருசித்த்வர்கள் 
சும்மா படுக்க போவதில்லை. 

Link to comment
Share on other sites

On 5/12/2018 at 2:23 PM, ஜீவன் சிவா said:

நல்ல விடயம்

ஆனால் இதை வைத்து என்ன செய்யலாம் - நாக்குத்தான் வழிக்கலாம்

இந்த அடையாள அட்டையை பெற்றவனே வெளியில அதை சொல்ல ம,மாட்டான்

நீங்க வேற காமடி பண்ணிக்கிட்டு 

 

 

தானும் படான் தள்ளியும் படான் என்று சும்மாவா சொன்னார்கள்.

f6401c0e74d3b6c8617e64c51bec074e.jpg

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.