Jump to content

இந்த வாரம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் திரைப்படங்கள்!


Recommended Posts

இந்த வாரம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் திரைப்படங்கள்!
 
 

இந்த வாரம், பலத்த போட்டிக்கு இடையே, 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியான பெரும் வெற்றியைப் பெறவில்லை. இடையே 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக, புதிய திரைப்படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தால், தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

ஸ்ட்ரைக் நிறைவடைந்த பிறகு வெளியான 'மெர்க்குரி', 'பக்கா', 'தியா' உள்ளிட்ட திரைப்படங்களும், பெரியளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தான், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூல் அள்ளி வருகிறது.

ஸ்ட்ரைக்குக்குப் பிறகு, ஒவ்வொரு வாரமும் மூன்று திரைப்படங்கள் என வரைமுறைப்படுத்தி, புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தால் ஒழுங்குபடுத்தல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகும் திரைப்படங்கள் வெளியாவதால், கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த வார வெளியீட்டின்படி, வரும் வெள்ளிக்கிழமை (11) தமிழில் நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன.

இரும்புத்திரை

பி. எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில், விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள திரைப்படம் இரும்புத்திரை. இதில் சமந்தாஅர்ஜுன் ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், ஜோர்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில் உருவான இத்திரைப்படம், தெலுங்கில் அபிமன்யடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

image_1ccb00cafc.jpg

இரவுக்கு ஆயிரம் கண்கள்

அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில், அருள்நிதி நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை, 'எக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில், டில்லி பாபு தயாரித்துள்ளார். இத்திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தவாரம் வெளியாகவுள்ளது.

image_986913c790.jpg

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலாபோல், ரமேஷ் கண்ணா நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

image_3d2cc3ca2f.jpg

நடிகையர் திலகம்

இவை தவிர, கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் ஆகியோர் நடித்துள்ள, சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மகாநதி’, 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் வெளியாகின்றது.

நாக் அஸ்வினின் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில், வைஜெயந்தி மூவிஸின் தயாரிப்பில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில், கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடிக்க, சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மிக்கி ஜெ.மேயரின் இசையில், டேனி சென்செஸ் லோப்சின் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்டுள்ளது. 

image_694e8dd30b.jpg

http://www.tamilmirror.lk/cinema/இந்த-வாரம்-பலத்த-போட்டிக்கிடையே-வெளியாகும்-திரைப்படங்கள்/54-215636

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.