Jump to content

எங்க ஊர் முதலாளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

எங்க ஊர் முதலாளி

D10_BEADA-_CDBA-4599-_A42_A-9_CD47_AA667 

ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது.

 முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக் கொள்ளும். அந்த விசயத்தில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உடல் உதவி செய்வதில் முதலாளி ஒரு கண்ணன்.

 நகரத்தின் பெரிய கட்டிடமே முதலாளிக்குத்தான் சொந்தம். இலங்கை வங்கி, யாழ் கூட்டுறவு ஸ்தாபனம், குமார் அச்சகம்… என்று பல கடைகள் அந்தக் கட்டிடத்தில் இருந்தன. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றை அந்தக் கட்டிடத்திலேயே முதலாளியும் தன் பங்குக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்த கட்டிடத்துடன் சேர்ந்து  வடக்குப் பக்கமாக இரண்டு சின்னக்கடைகள் இருந்தன. அந்தக் கடைகளை அகற்றி, அதன் நிலத்தை வாங்கி தன் கட்டிடத்துக்கு மேலும் அழகூட்ட முதலாளி விரும்பினார். 

 அந்தக் கடைகளில் ஒன்று யுனைற்ரெட் ஸ்ரோஸ்(புத்தகக் கடை), மற்றது ஜெமினி பன்ஸி பலஸ். இந்த இரண்டு கடைளையும் வல்வெட்டித்துறையைச் சேரந்த அண்ணன் தம்பிகளே நடத்திக் கொண்டிருந்தார்கள். வல்வெட்டித்துறையாரோடு நேரடியாக மோத முதலாளிக்குத் தயக்கமாக இருந்தது. எப்படியாவது அந்தக் கடைகளில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட வேண்டும் என பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டார். முதலாளி போட்ட கணக்கு சிக்கலாக இருந்தது. அடிமானங்கள் பல போட்டுப் பார்த்தும் அண்ணனும், தம்பிகளும் அசைந்து கொடுக்கவில்லை. தனது அடியாட்களை விட்டு ‘பீ முட்டி’ அடித்தும் பார்த்தார். பீ முட்டி’ என்றால் சிலருக்கு அது என்ன என்று புருவங்கள் மேலே எழலாம் என்பதால் அது பற்றிய ஒரு சிறு விளக்கம்.

 அப்பொழுது வாளிக் கக்கூஸ்தான் பரவலாக வீடுகளில் இருந்தன. அப்படியான கக்கூஸ்களில் இருந்து பானை (முட்டி)க்குள் மலங்களை அள்ளி வந்து வேண்டப்படாதவர்கள் வீடுகளுக்கு முன்பாகவோ, கடைகளுக்கு முன்பாகவோ எறிந்து விட்டுப் போவதுதான் ‘பீ முட்டி அடித்தல்’ என்பது.

 பீ முட்டி அடிக்கும் திருவிழா இரண்டு கடைகளுக்கும் முன்னால் ஒவ்வொரு இரவுகளும் நடந்து கொண்டிருந்தன. அண்ணன் தம்பி இருவரும்  சளைக்காமல் கூலிக்கு ஆட்களைப் பிடித்து காலையில் கடை வாசலைத் துப்பரவாக்கி சாம்பிராணி காட்டி தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘போதுமடா சாமி’ என்று ஒதுங்க நினைத்தவர்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த பிரச்சனை சிறைச்சாலைக்குப் போய் விட்டது.

 முதலாளிக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்தது. அவரின் இந்த தமிழ்ப் பற்றை ஆரம்ப கால போராளிகள் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டார்கள். (சுங்கான்) பத்மநாதன் முதலாளியின் கட்டிடத்துக்கு அருகேதான் றேடியோ திருத்தும் கடை வைத்திருந்தார். அதற்கு அடுத்ததாக இருந்த சிறீமுருகன் மெடிக்கல் ஸ்ரோஸ். அதன் உரிமையாளர், ரெலோ இயக்கத்தின் தலைவர்சிறீசபாரத்தினத்தின் அண்ணன் கந்தசாமி.

 பத்மநாதனும், கந்தசாமியும் இணைந்து என்னென்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் தாங்களே கைத்துப்பாக்கிகளை உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான பொருள் உதவிகள் முதலாளியிடம் இருந்துதான் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆயுதப் போராட்டம் பலமாக இருக்கும் போதே அச்சமில்லாமல் காட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்த போது அன்றைய காலத்தில் ‘மொட்டைக் கடுதாசி’ எழுதிப் போட ஆளில்லாமல் போகுமா? 

 சுங்கான், அவரது கடை ஊழியர் ஒருவர், கந்தசாமி  இவர்களுடன் முதலாளியும் சிஐடி பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர்களாக சிறைச்சாலைக்குப் போனார்கள். அதன்பிறகு புத்தகக் கடைக்கும் பன்ஸிக் கடைக்கும் பீ முட்டி அடிக்கப்படுவது நின்று போனது. 

 செல்வாக்குகளைப் பாவித்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர் மாளிகையில் இருந்து முதலாளி வெளியே வந்தார். ‘சிறை சென்று வந்த செம்மல்’ என்று குரல் எழுப்பிக் கொண்டே அவருக்கு மாலை போடப் போன அடிவருடிகள், “என்ன முதலாளி இப்பிடி புத்தர் மாதிரி அமைதியாப் போனார் என்று சலித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள்.

 சிறைக்குப் போய் வந்த பின்னர் எந்தவித அடிதடிகளும் இல்லாமல் அமைதியாக இருந்து கொண்டு பிரபலமான மனிதர்களை தனது கட்டிடத்துக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது, நாட்டுக்கு வந்த சீர்காழி கோவிந்தராஜனையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரையும்  தன் கட்டிடத்துக்கு கூட்டி வந்து விருந்தளித்தார். இவர் அவருக்கு பருகப் பால் கொடுக்க, அவர் இவரைப் பார்த்து, அமுதும் தேனும் எதற்கு? நீங்கள் அருகினிலே இருக்கையிலேயே எனக்கு” என்று கணீர் குரலில் முதலாளியைப் பார்த்துப் பாட, முதலாளி உள்ளம் உருகிப் போய் நின்றார்.

 தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம் இருவரது மரண ஊரவலங்களையும் அவர்களது கட்அவுட்டுகளை வைத்து நகரத்தில் வரலாறு காணாத இறுதி ஊர்வலங்களை நடத்தி எல்லோரையும் வியக்க வைத்தார். 

 „அட முதலாளிக்கு வேறு முகமும் இருப்பது இதுவரை தெரியாமல் போயிற்றே என்று பலர் பேசிக் கொண்டார்கள். அப்படி நினைத்தவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாத ஒன்று முதலாளியின் மனதுக்குள் இருந்தது.  1977ல் நடக்க இருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவது என்பதே முதலாளியின் மனதில் இருந்த ஆசை.

 சிறைக்குப் போய் வந்திருக்கிறார். தமிழ்தலைவர்களின் இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். பலருக்கு வேலை வாங்கித் தந்திருக்கிறார். போதுமான பணமும் மக்களிடத்திலான அறிமுகமும் நிறையவே இருக்கிறது. ஆகவே தேர்தலில் போட்டியிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததில் தவறு இல்லைத்தான். அவருக்குத்தான் அந்தமுறை போட்டியிட வாய்ப்பு கூட்டணியில் இருப்பதாக நகரில் பேச்சு இருந்தது. “நீங்கள்தான் எங்களது வேட்பாளர் என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் வாக்குக் கொடுத்திருந்தார். இருவரும் நெருக்கமாகவே இருந்ததார்கள்.

 இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழமையான போட்டியாளர் க.துரைரத்தினத்துக்கே போய்ச் சேர்ந்தது. ஐந்து தடவை போட்டியிட்டு நாலு தடவைகள் வென்று பாராளுமன்றம்  போய் வந்து கொண்டிருந்த க.துரைரத்தினத்தின் மேல் முதலாளிக்கு  மட்டுமல்ல, பலருக்கும் அதிருப்தி இருந்தது.  ஆனால் அதைப் பற்றி கூட்டணித் தலமை கண்டு கொள்ளவில்லை.

 அபிமானிகள்  தந்த ஆலோசனையில் ‘உண்மையே வெல்லும்’ என்று சுயேட்சையாக போட்டியிட முதலாளி முடிவு செய்தார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்துவிட்டு நகரத்தில் வடக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருந்த காந்தி சிலைக்கு மாலை போட்டு அபிமானிகளோடு ஊர்வலமாக வந்தார். அவர் நடத்திய தேர்தல் கூட்டங்களில் மேடைகளில் கதிரைகள் எதுவுமே கிடையாது. எல்லோரும் மேடைகளில் சப்பாணி போட்டே அமர்ந்தார்கள்.முதலாளியின் பேச்சும், செயலும் பலருக்கு பிடித்துப் போனது. 

 தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்று உதய சூரியன் சின்னத்தில் முதன் முதலாகப் போட்டியிட்டதாலும், இளைஞர்களிடையே அப்பொழுது இருந்த எழுச்சியும், மேடைகளிலே இரத்தப் பொட்டுகளை புன்னகையுடன் அமிர்தலிங்கம் வாங்கிக் கொண்டிருந்ததாலும், தேர்தலின் முடிவு முதலாளிக்கு முரணாகவே போனது. அந்தத் தேர்தலில் முதலாளியால் 13 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.

 தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் என்பது தன்னைவிட பெரிய பெரிய முதலைகள் வாழும் இடம் என்பதை முதலாளி புரிந்து கொண்டார். வியாபாரம், ஆன்மீகம் இரண்டும் தனக்குப் போதும் இனி அரசியலில், அடிதடிகளில் எல்லாம் இறங்க முடியாது என்று ஒதுங்கி இருந்தவரை மீண்டும் பிரச்சினை தேடி வந்தது.

 தனது கட்டிடத்தின் மேல் தளத்தில் இளைஞர்கள் கராட்டி பழகுவதற்கென முதலாளி இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். ரட்ணசோதி என்பவரே அந்த கராட்டி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த ரட்ணசோதிதான் பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கராட்டி சொல்லிக் கொடுத்தவர்.“போராளிகளுக்கு முதலாளியின் கட்டிடத்தில் பயிற்சி நடக்கிறது என யாரோ ஒருவர் மொட்டைக் கடுதாசியை புலனாய்வுத்துறைக்கு எழுதிப் போட, ஒருநாள் கட்டிடத்தைச் சுற்றி  நிறைய அதிரப்படை. 

 அதில் இருந்து ஒருவாறு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாலும் கட்டிடத்தின் தெற்குப் பக்கமாக இருந்த அச்சகத்தால் அவருக்குப் பிரச்சனை வந்தது. அந்த அச்சகத்தின் உரிமையாளரின் தம்பிதான் கிட்டு என்கிற கிருஷ்ணகுமார். ஒரு இரவு அதிரடிப்படை இராணுவத்துடன் வந்து அச்சகத்தை தீ வைத்து முற்றாக அழித்து விட்டுப் போயிற்று. இதற்குள் மாணவர் பேரவை  பகலிலேயே  கட்டிடத்தின் மேற்குப் பக்கமாக இருந்த இலங்கை வங்கியை கொள்ளை அடித்து காவலுக்கு நின்ற ரிசேர்வ் பொலிஸை சுட்டுக் காயப் படுத்திவிட்டும் போனது. 

 கட்டிடத்தின் மேலே கராட்டிப் பிரச்சினை, தெற்கே அச்சகப் பிரச்சினை, மேற்கே வங்கிக் கொள்ளை. முதலாளிக்கு ஒன்று விளங்கிவிட்டது அரசியலும், வியாபாரமும் இனிவரும் காலங்களில் தனக்கு சரிப்பட்டு வராது என்று. அரசியலும், வியாபாரமும் காலை வாரிவிட  அடுத்து அவரது கையில் இருந்தது ஆன்மீகம் மட்டுமே. இவ்வளவு பிரச்சினைகளுக்குள் முதலாளி சிக்குண்டு இருக்கையில் அவரது மகன் போராட்டக்குழுவில் போய் சேர்ந்து விட்டான்.

 இந்திய அமைதிப்படை  முற்று முழுதாக நகரத்தை ஆக்கிரமித்து இருந்த பொழுது, சமூகத்தில் மேல் நிலையில் இருந்தவர்களோடு அவர்கள் தங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் தொடர்பில் முதலாளியும் இருந்தார். முதலாளி இந்தியப்படைக்கு, போராளிகளைப் பற்றி தகவல்கள் கொடுக்கிறார் என்று யாரோ புண்ணியவான் கதையைக் கிளப்பிவிட முதலாளியின் நிலை கவலைக்கிடமாகிப் போனது. வெளி நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். 

 முதலாளிக்கு வேண்டிய ஒருவர் காலமாகிப் போன பொழுது தனது அஞ்ஞாதவாசத்தை துறந்து, அந்த மரண வீட்டுக்குப் போனார். அந்த மரண வீட்டுக்கு அவரது மகன் சைக்கிளில் வந்தான். போராடப் போன மகன் நீண்ட நாட்களுக்குப் பின் தன்னை வந்து சந்தித்ததில் முதலாளிக்கு மகிழ்ச்சி.

 “அப்பா உங்களோடை கதைக்கோணும். வாங்கோ என்று சைக்கிளில் முதலாளியை ஏறச் சொன்னான்.

 “போட்டு இப்ப வந்திடுறன் என்று முதலாளி சொல்லிப் போட்டு போனதால் உடலத்தை எடுக்காமல் மரணவீட்டில் முதலாளிக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.  

 “என்ன போனவரை இன்னும் காணேல்லை என்று காத்திருந்தவர்களுக்கு சற்று நேரத்துக்குப் பின் ஒரு செய்தி வந்தது,

 “முதலாளி செத்துப் போனார்

 ஏற்கெனவே தோண்டியிருந்த கிடங்குக்குள் படுக்கச் சொல்லிவிட்டு, அவரை அவரது மகனே சுட்டான் என்று ஒரு கதையும், மகன் கூட்டிக் கொண்டு போனது மட்டும்தான், முதலாளியைச் சுட்டது  வேறொரு போராளி என்றும் இரண்டு கதைகள் ஊருக்குள் வந்தன.

 முதலாளி முதலாளி என்று மரியாதையாக இந்தப் பத்தியில் நான் எழுதியதால் அவரது பெயரை இங்கே நான்  விழிக்கவில்லை. தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகாவிட்டாலும் தனது பெயருக்கு முன்னால் MP என்ற எழுத்துக்களைக் கொண்ட அவரது பெயர் மு.பொ.வீரவாகு. 

 அவரைப் பார்க்க  விரும்பினால் இங்கே போய்ப் பாருங்கள். 

http://www.uharam.com/2018/01/19.html

 

கவி அருணாசலம்

01.05.2018

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1970´களில்  நடந்த உண்மைச்  சம்பவங்களை மறக்காமல், ஒரு கோர்வையாக எழுதியுள்ளீர்கள்.
யாராக இருக்கும்.. என்று மனதிற்குள் எழுந்த கேள்விகளுக்கு,  விடைதேடி... தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த போது  இறுதில்  அவரின் பெயரை பார்த்து....  கேள்விப் பட்ட  பெயராக இருந்தது. கதையின் சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2018 at 3:36 PM, colomban said:

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

Colombian நான் கராட்டி விளையாட்டுப் பக்கம்  போனதேயில்லை.

குட்டிமணிக்கு கராட்டி தெரியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது

ஒருவரை ஒருவர் தாக்கும் போது வாயில் இருந்து  சிலேளைகளில்  உதிரும் வார்த்தைகள் பீமுட்டியைவிட நாத்தமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகு கட்டடம், யுனைரெட் புத்தகசாலை எல்லாம் நன்றாகத் தெரிந்த இடங்கள். ஆனால் வீரவாகுவின் முடிவு இப்படி நடந்தது தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்ல பழைய காய் போல ஊர்ல நடந்த அத்தனை கொசிப்புக்களும் தெரிந்திருக்கு. எனக்கு நீங்கள் பெண்ணாக இருப்பியங்களோ என்று ஒரு சந்தேகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகுவின் கதையை முழுமையாகத்தெரியாது ஆனால் அவருடைய மரணம் டொடர்பாக கேள்விப்பட்டிருக்கிறேன் அதன் உண்மைத்தன்மை தெரியாது, இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்ததிற்காகவே அவர் கொல்லபட்டதாகவும் , இலங்கை இந்திய ஒப்பந்த்தின் பின்னர் புலிகளும் அரச படையினரும் போர் முடிவுக்கு வந்து விட்டது என்றநிலையில் பரஸ்பரம் சந்த்தித்துக்கொள்ளும் ஒருநிகழ்வில் சிங்களத்தளபதி கொடுத்த தகவலின் அடிப்படையிலே புலிகளுக்கு தெரியவந்த்தாகவும் அதுவரை அவர் புலிகளின் ஆள் என்றநில்யிலேயே கருதப்பட்டதாகவும் ஒரு கருத்துநிலவுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, கந்தப்பு said:

முதலாளியின் மகன் இப்பொழுது எங்கே

ஏதோ ஒரு வெளிநாட்டில் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறுயாராவது கூப்பிட்டால் வீரபாகு வரமாட்டார் என்பதாலேயே மகனை கூட்டிவர சொன்னதாக கதை அடிபட்டது,

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

சேர்மன் நடராஜாவுக்கு இந்த ஆண்டு நூறாண்டு. ஏதும் நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன் மீரா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.